என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜே.பி.நட்டா"
- இந்திய தேசிய காங்கிரஸ் கூட இனி ஒரு தேசிய கட்சி அல்ல.
- பாஜக 18 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக உள்ளது.
கோட்டயம்:
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் டெல்லியில் நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது.
இந்நிலையில், கேரள மாநில கோட்டயத்தில் பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கூறியுள்ளதாவது:
அரியானாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. தேவிலால் பிறந்த நாளைக் கொண்டாட அனைவரும் ஒன்று கூடினர். அவர்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) இரண்டு விஷயங்கள் பொதுவானவை. ஒன்று, அவை அனைத்தும் குடும்ப அரசியல் செய்பவை. இரண்டாவது எதிர்க்கட்சிகள் ஊழலில் மூழ்கியுள்ளன.
அவர்களில் சிலர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர், மேலும் சிலர் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குடும்ப அரசியல் கட்சிகள் மற்றும் ஊழல் கட்சிகளிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக போராடுகிறது.
பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் தேசியக் கட்சி இல்லை, மற்ற அனைத்து தேசியக் கட்சிகளும் மாநில, பிராந்தியக் கட்சிகளாக சுருங்கி விட்டன. இந்திய தேசிய காங்கிரஸ் கூட இனி ஒரு தேசிய கட்சி அல்ல.
அது இனி இந்திய கட்சியும் இல்லை. அது சகோதர சகோதரி (ராகுல்,பிரியங்கா) கட்சியாக மாறிவிட்டது. பாஜக 18 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சீன மக்கள் கட்சிக்கு ஒன்பது கோடி உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜே.பி.நட்டாவிடம் உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு கொடுத்தனர்.
- 4 வழிச்சாலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் புதுடெல்லி, மைசூரில் இருப்பதுபோல “அண்டர் பாஸ் ரன்வே” அமைத்து விமான நிலைய விரிவாக்க பணியை நிறைவேற்ற வேண்டும்.
மதுரை
கடந்த 22-ந்தேதி மதுரை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம், செயலாளர் வேல்சங்கர் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்த னர். அதில் கூறியிருப்பதா வது:-
மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பல உணவு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால் வரி ஏய்ப்போர் கைகளுக்கு பல தொழில்கள் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாரம்பரியமாக ெதாழில் செய்து கொண்டிருந்த பலர் தங்களது ெதாழிலை இழந்து அதை தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாவதற்கு முன்பிருந்து, இந்த வரி வரவேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
உணவு பொருட்களை பேக் செய்வதற்கு பிளாஸ்டிக்கை தவிர வேறு எந்த மாற்றுப்பொருளும் சந்தையில் இல்லை. பிளாஸ்டிக்கை தவிர வேறு எந்த பொருளிலும் உணவு பொருட்களை பேக் செய்தால் வெகுவிரைவில் கெட்டுவிடும்.
எனவே பிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருள் தாராளமாக சந்தையில் கிடைக்கும் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீதுள்ள தடைகளை நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு அருகில் 4 வழிச்சாலை உள்ளது.
இதனால் விமான ஓடு பாதையை நீட்டிக்க காலதாமதமாகிறது. 4 வழிச்சாலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் புதுடெல்லி, மைசூரில் இருப்பதுபோல "அண்டர் பாஸ் ரன்வே" அமைத்து விமான நிலைய விரிவாக்க பணியை நிறைவேற்ற வேண்டும். இவை உள்பட மேலும் பல கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
- மோடி கூட்டாட்சி முறையின் வழிமுறைகளை மிகவும் நம்புகிறார்.
- கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படவில்லை.
காரைக்குடியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
தமிழகம், பிரதமரின் இதயத்தில் இடம் பெற்றுள்ள மாநிலமாகும். மோடி கூட்டாட்சி முறையின் வழிமுறைகளை மிகவும் நம்புகிறார். தமிழக அரசு கூட்டாட்சி முறைக்கு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் செயல்படவில்லை. தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதைப்பற்றி தி.மு.க. கவலைப்படவே இல்லை.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுவதையே தி.மு.க. வழக்கமாக கொண்டுள்ளது, தமிழக மக்களை தவறான பாதைக்கு தி.மு.க.வினர் திசை திருப்புகின்றனர். ஊழலை சட்டப்பூர்வமாக்குகிறார்கள். நாங்கள் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
தி.மு.க. வாரிசு அரசியல் மட்டும் செய்கிறது. இவர்களது மொத்த கலாசாரமும் குடும்ப அரசியலை மையப்படுத்தியே உள்ளது. டி என்பது வம்சத்தையும், எம் என்பது பண மோசடியையும், கே என்பது கட்ட பஞ்சாயத்தையும் குறிக்கிறது.
சிவகங்கை பல ஆண்டுகளாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ள பகுதி. ஆனால் மிகவும் பின்தங்கி உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எய்ம்ஸ் தொடர்பான முழுமையான கருத்துகளை அண்ணாமலை பிறகு தெரிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
- குடும்ப ஆட்சியால், தமிழக மக்கள் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள் என பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசினார்.
- தமிழக மக்கள் தற்போது கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
காரைக்குடி
சிவகங்கை மாவடடம் காரைக்குடி என்.ஜி.ஓ. காலனி பகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா சிறப்பு பொதுக்கூட்டம் நடை பெற்றது.
பா.ஜனதா சிவகங்கை மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித.பழனிசாமி வரவேற்று பேசினார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா காலத்தில் பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு நமது நாட்டு மக்களை காப்பாற்றினார். அதோடு உலக நாடுகளுக்கும் உதவி செய்து உலகின் உன்னத தலைவர் ஆனார்.
சுகாதாரம், கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி அதற்காக ஏராளமான நிதி ஒதுக்கீடுகள் செய்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை
இது சம்பந்தமான பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டுக்கும் ஏராள மான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏற்கனவே வழங்கிய நிதி ஒதுக்கீடு தவிர கூடுதலாக வும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
தமிழகத்தின் ெரயில் நிலையங்கள், துறை முகங்கள், விமான நிலை யங்கள் நவீன வசதிகளோடு மேம்படுத்தப்பட்டு வரு கின்றன.விவசாயிகள் மேம்பாட்டிற்காகவும், ஏழை மக்களின் நலனுக்காகவும் பிரதமர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் தமிழகம் பயன்பெறுவது அதிகம். உற்பத்தியில் இறக்குமதி என்ற நிலையில் இருந்த இந்தியாவை தற்போது ஏற்றுமதி என்று நிலைக்கு பா.ஜனதா ஆட்சி கொண்டு வந்துள்ளது. உலகமே பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் இந்த நேரத்தில் இந்தியா பொருளாதார வளர்ச்சி யில் மிக வேகமாக முன்னேறி வருகிறது.
பா.ஜனதா, கொள்கை பிடிப்புள்ள கட்சி. பா.ஜனதா மட்டுமே தற்போது இந்தியாவில் ஒரே தேசிய கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் பிராந்திய கட்சிகளாக சுருங்கி வருகின்றன. குடும்ப ஆட்சி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலத்தில் குடும்ப ஆட்சியும், குடும்ப அரசியலும் நடைபெறுகிறது.
தமிழக மக்கள் தற்போது கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
இதை நான் நன்கு புரிந்துகொண்டேன்.
நம்பிக்கையோடு காத்திருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை பா.ஜனதா கட்சி தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவையொட்டி ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி பற்றிய நூலை நட்டா வெளியிட அதனை பா.ஜனதா பட்டியல் சமுதாய பிரிவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் விசுவநாத கோபாலன் பெற்றுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய மந்திரி முருகன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், சிவகங்கை மாவட்ட தலைவர் க.பூப்பாண்டி, மாநில செயலாளர்கள் பி.ஆர்.துரைப்பாண்டி, கல்லூர் என்.ரஞ்சித்குமார், மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட துணைத்தலைவர் பி.என்.வைரவசுந்தரம், மாவட்ட செயலாளர் மெ.மதன் உள்ட பலர் கலந்து கொண்டனர்.
- விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று அவர் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை பாஜக நிர்வாகிகள் பூரண கும்பம், மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர்.
தொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பல்வேறு துறை வல்லுனர்கள், தொழில் அதிபர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
இந்திய நாட்டை சரியான அரசு ஆட்சி செய்கிறது. தமிழகத்திலும் அதன் வளர்ச்சியை காண முடிகிறது. காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது பா.ஜ.க. ஆட்சியில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து உள்ளது.இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறி இருக்கிறது. கொரோனாவுக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. கொரோனா காலத்தை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு முந்தைய பூர்வாங்க பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் பிரிவுக்காக கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு ஒதுக்கியது.
மத்திய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்டநிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை கொடுத்தது. தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை. இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க ரூ.732 கோடி, மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு ரூ.392 கோடி, மதுரை மல்லிக்கான ஏற்றுமதி நிலை அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்களை மதுரைக்காக மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- உட்கட்சி பிரச்சினையால், காங்கிரசில் இருந்து விலகினார்.
- தனிக்கட்சி தொடங்கிய நிலையில் பஞ்சாப் தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர்சிங், உட்கட்சி மோதல் காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார். பின்னர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் அவர் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. தனது சொந்த தொகுதியான பாட்டியாலாவில் அமரிந்தர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் பாஜகவில் இணைவது குறித்து அவர் ஆலோசித்து வந்தார். அதன்படி டெல்லியில் இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து முறைப்படி அவர் பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது. தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் அவர் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- நட்டாவுடனான சந்திப்புக்கு அரசியல் முக்கியத்தும் எதுவும் கிடையாது.
- நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வந்துள்ளோம்.
டெல்லி
காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய G-23 குழுவை சேர்ந்தவர் ஆனந்த் சர்மா. இவர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஆனந்த் சர்மா கூறியுள்ளதாவது: நட்டாவை சந்திக்க தமக்கு முழு உரிமை உண்டு. அவரை சந்திக்க வேண்டும் என்றால் வெளிப்படையாகவே சந்திப்பேன். இதில் அரசியல் முக்கியத்தும் எதுவும் கிடையாது.
நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வருகிறோம். கருத்து ரீதியாக எதிப்பாளராக இருப்பதால் எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பகை இருப்பதாக அர்த்தமில்லை. நட்டாவுடன் எனக்கு சமூக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் உறவுகள் உள்ளன. இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.
எனது மாநிலம் மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த ஒருவர் ஆளும் கட்சியின் தலைவராக இருப்பதில் நான் பெருமைப் படுகிறேன். ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் என்னையும், நட்டாவையும் பாராட்ட அழைப்பு விடுத்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே நட்டாவை ஆனந்த் சர்மா சந்திக்கவில்லை என்றும், தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.
- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவின் பெயர் தேர்வு செய்யப்பட்டதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்