search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுபடி"

    • தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.
    • சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி.

    பேராவூரணி

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் பேராவூரணி வட்டாரத்தை சார்ந்த விவசாயிகளை பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலாவிற்கு மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு பாரம்பரிய நெல் சாகுபடி இயற்கை விவசாயி ராஜா கிருஷ்ணன் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறார்.

    இவர் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.

    நீண்டகால வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் பொழுது நடவு செய்த 30 நாட்களில் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால் நெல் பயிர் பக்க கிளைகள் அதிகரிக்கிறது.

    இதனால் மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது.இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.

    பொதுவாக நீண்ட கால நெல் ரகங்கள் பயிரின் உயரம் அதிகரித்து பக்கக் கிளைகள் குறைவாகவும் காணப்படும் இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதால் பயிரின் உயரம் குறைவாகவும் பக்க கிளைகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதாக கூறினார்.

    அவர் தனது வயலில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, சொர்ண மயூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, தங்க சம்பா, சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.

    இவ்வாறு சாகுபடி செய்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் பாதுகாத்து தனது வருமானத்திலையும் அதிகப்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகளிடம் அவரது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.

    பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ள வயலினை விவசாயிகளிடம் நேரடியாக காண்பித்தார்.

    பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி பாரம்பரிய நெல் ரகங்களை ஒரு குழுவாக சேர்ந்து இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் எளிமையான முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும் கூறினார்.

    • நிலங்களை கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு சீர் செய்தல்.
    • அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசு, கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் கிராமத்தில் அட்மா திட்டதின் கீழ் 40 விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெ ற்றது. இப்பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் வீழும் அனைவரையும் வரவேற்றார்.

    வேளாண்மை உதவி இயக்குர் கூறுகையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் உள்ள குழி தட்டு நாற்றாங்கால் போதிய இடைவெளி குறைந்த ஆள் செலவு, அதிக மகசூல் போன்றவை கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் அதனை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    பயிற்சியில் தொடர்ந்து கரும்பு உதவி அலுவலர் குளஞ்சியப்பன் கூறுகையில், நிலங்களை கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு சீர் செய்வது, இயந்திரங்களை பயன்படுத்தும் வகையில் போதிய இடைவெளி உடன் பார்கள் அமைத்தல் அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்தல் விதை அரும்புகளை பூஞ்சான கொல்லி மருந்தில் விதை நேர்த்தி செய்தல் பற்றி கூறினார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறுகையில், குழிதட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து அதனை நடவுக்கு முன்பு வரை நிழல்குடிலில் எப்படி அதை பாதுகாப்பது நடவுக்கு பின் நீர் மேலான்மையில் சொட்டு நீர் பாசனைத்தை பயன்படுத்துவது சொட்டு நீர் அமைப்புடன் உரம் மற்றும் மருந்து கரைசல்களை சேர்த்து எவ்வாறு கரும்புகளுக்கு கொடுப்பது.

    களை மேலாண்மை, இயந்திர அறுவடை போன்றவைகளை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    முன்னதாக குழிதட்டில் நாற்று வளர்ப்பது பற்றி செயல்விளக்கம் காண்பித்தார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் கரும்பு முருகன் பன்னிப்பள்ளம் சேகர், செந்தில் அட்மா குழு உறுப்பினர் ஞானசேகரன் உள்ளிட்ட 40-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் மதுமனா மற்றும் அட்மா திட்ட உழவர் நண்பர் ஜெயச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவாக உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லா உணவை பயன்படுத்துவோம்.
    • இயற்கை முறையில் சாகுபடி செய்வதை பற்றி விவசாயிகளுக்கு கூறினார்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இயங்கிவரும் வேளாண்மை பாரம்பரியம் மற்றும் புதிய நெல் ரகங்களை ஊக்கப்படுத்ததுல் பயிற்சி பந்தநல்லூரில் நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் விஜயலெட்சுமி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் நளினி முன்னிலை வகித்தார்.

    கதிராமங்கலம் முன்னோடு விவசாயி ஸ்ரீராம் 75 பாரம்பரியம் புதிய நெல் ரகங்களையும் அதன் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ குணங்களையும் பற்றி மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    40 பாரம்பரியம் புதிய நெல் ரகங்கள் விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, மரதுண்டி, நிச்சிலிசம்பா, வாலஞ்சம்பா, குள்ளங்கார், பவானி, நீலஞ்சம்பர், நாட்டுப்பொன்னி சிறுமிளகு சிவப்புகவுனி, சம்பா, காளாண் நமக்1, செம்பாலை மாபாபிளாக், தூரியமல்லி, பால்குடை வாழை, திருப்பதி சாரை கருவாச்சி, மருமுமூங்கி, ஆணைகொம்பன், ஆத்தூர் கிச்க்ஷ, நவரா, ஆற்பாடு சிச்சடி, முற்றின சன்னம், கண்பாலை, ரத்த சாளி செந்நெல், சொர்ணாமகூரி, துளசி வாசனை, குதிரைவாலி சம்பா, சேலம்சென்னா, குடவாழை, கருப்பகவுனி, கருடன்சம்பா, கூப்பாலை. ஆகியவை ஆகும்.மேலும் பாரம்பரியம் நெல் ஜெயராமனின் பாதுகாப்பு மையத்திலிருந்து அசோகள இயற்கை முறையில் சாகுபடி செய்வதை பற்றி விவசாயிகளுக்கு கூறினார்.

    வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன் இந்த ஆண்டு திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் மற்றம் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகளை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மேலும் பாரம்பரியம் நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லா உணவை பயன்படுத்துவோம் என்பதை எடுத்துரைத்தார்.

    இறுதியாக அட்மா திட்ட வட்டரா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி நன்றி கூறினர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் செய்தார்.

    • பாய் நாற்றாங்கால், எந்திர நடவு போன்ற விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம்.
    • கூடுதல் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், புங்கனூர், திருவெண்காடு, கொள்ளிடம், ஆரப்பள்ளம், நல்லூர், வடகால், ஆச்சாள்புரம், கொண்டல், பெருமங்களம், ஆதமங்கலம், வள்ளுவக்குடி, திருப்புன்கூர், கற்கோயில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர் விலை நிலங்களில் சம்பா சாகுபடி பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 முதல் தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் மழையில் நனைந்தபடியே பாய் நாற்றாங்கால், நடவு பணி, எந்திர நடவு போன்ற விவசாயப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக சீர்காழி பகுதியில் இயற்கை இடர்பாடுகளால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    மேலும் விதை நெல், டீசல் விலை, உரம் விலை உயர்வு காரணங்களால் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட கூடுதல் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
    • எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகரம், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், பூமாண்டன்வலசு, வேலம்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்–பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த சாகுபடி பணிகள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகள் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தந்து கூடுதல் வருமானம் மற்றும் கூடுதல் சாகுபடி பலன் தரும் புடலங்காய் சாகுபடி செய்து உள்ளனர். வேலம்பாளையம் ஊராட்சி கிராம பகுதிகளில் விவசாயிகள் எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி செய்து உள்ளனர்.

    இதன்படி பந்தல் அமைத்து 1 ஏக்கர் புடலங்காய் சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பந்தல் அமைத்தல், அடி உரம் இடுதல், விதை ஊன்றுதல், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, களைக்கொல்லி பராமரித்தல், பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.

    இந்த புடலங்காய் செடிகளில் பூக்கள் பூத்து பிஞ்சாக காய்த்து உள்ளன. இதுபற்றி புடலங்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    பொதுவாக புடலங்காய் கோடை மற்றும் மிதமான குளிர் காலத்தில் சாகுபடி செய்தாலும் பருவ கால சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் பலன் தரக்கூடியது. மேலும் புடலங்காய் குறைந்த நீர் நிர்வாகத்தில் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி ஒரு சில பகுதிகளில் எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    புடலங்காய் பறித்து நத்தக்காடையூர், அரச்சலூர், முத்தூர், காங்கயம், சிவகிரி, கந்தசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி விற்பனை கடைகள் மற்றும் திருப்பூர், ஈரோடு, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு எடைக்கு ஏற்ப மொத்தமாகவும் அன்றைய நாளுக்கு ஏற்ப உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பனை விதைகள் 30 ஆயிரம் எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சை மாவட்டத்தில் பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தவும் தோட்டக்கலை துறை மூலம் பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23-ம் ஆண்டில் சிறப்பு திட்டமாக அறிமுகப்படு த்தப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பனை விதைகள் 30 ஆயிரம் எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    ஆர்வமுள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in./tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலர்களை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெண்ணந்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியுள்ளது.
    • ஆண்டுதோறும் சுமார் 600 ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    ராசிபுரம்:

    வெண்ணந்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெண்ணந்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 600 ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர் மழை காரணமாக வெங்காய பயிர் திருகல் நோய் தாக்குதலுக்கு உள்ளானது. சின்ன வெங்காய பயிர், நடவு செய்து 20 முதல் 30 நாட்களில் பூஞ்சான் தாக்குதலால் அடி அல்லது குமிழ் அழுகல் அல்லது திருகல் நோய் ஏற்படுகிறது. பயிர் சுழற்சி முறை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதால் பயிரை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

    நல்ல வடிகால் வசதி யுள்ள நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 1 1/2 அடி உயரம் உள்ள பார்கள் அமைத்து நடவு செய்ய வேண்டும். நோய் தாக்குதல் அற்ற தரமான விதைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். விதை நேர்த்தி செய்வதற்கு 1 கிலோ விதைக்கு 4 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி சேர்த்து 24 மணி நேரம் உலர விட்டு விதைக்க வேண்டும்.

    கடைசி உழவின்போது ஏக்கருக்கு 1 கிலோ டிரைக்கோவிரிடி, 1 கிலோ சூடோமோனாஸ், 5 கிலோ வேம் ஆகியவற்றை 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து 7 நாட்கள் நிழலில் வைத்திருந்து நிலத்தில் இட லாம். இதனால் மண்ணில் உள்ள நோய் ஏற்படுத்தும் பூஞ்சானம் குறைவதுடன் நோய் பாதிப்பும் குறையும்.

    தாக்குதல் தீவிரமானால் செடிகள் அழுகிவிடும் ஆகையால் பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அப்புறப்படுத்தி விட்டு கார்பெண்டாசிம் என்ற பூஞ்சான் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாரம்பரிய நெல் ரகங்கள், பஞ்ச கவ்யம், பூச்சு விரட்டி தயாரிப்பின் முக்கியதுவத்தை பற்றி பேசினர்.
    • மரபு சார்ந்த முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய், கனி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு வேளாண்மை துறை விதைப் பண்ணையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசார்பில் மரபு சார் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், துணை இயக்குனர் மதியழகன், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மணிமாறன், மாவட்ட ஊராட்சிகவுன்சிலர் துளசிரேகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் அனைவரையும் வரவேற்றார். பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர் செல்வம், ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    வேளாண் வல்லுநர்கள், மூத்த விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு விவசாயி களுக்கு தேவையாள தொழி ல்நுட்பம், பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல், பஞ்ச கவ்யம், பூச்சு விரட்டி தயாரிப்பின் முக்கியதுவத்தை பற்றி பேசினர்.

    முன்னதாக கண்காட் சியை நிவேதா முருகன் எம். எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார்.

    இதில் பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், மரபு சார்ந்த முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய், கனி வகைகள் உள்ளிட்ட பல் வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுர்த விஜயகுமார், மயிலாடுதுறை தி.மு.க. ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும்மான இளைய பெருமாள், ஒன்றியக்குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் செந்தில் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • உணவு தானியங்களை முழுஉருவத்தோடு பார்த்தவர்கள் அரிதிலும் அரிதாகவே உள்ளனர்.
    • தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் குறித்த அடையாளம் கூட இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியாது.

    திருப்பூர்:

    உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு கீரைகள், காய்கறிகளுக்கு அடுத்தபடியாக தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுகுறித்து திருப்பூர் இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-

    தானியங்கள் பாரம்பரிய அரிசி வகைகளின் பயன்பாட்டால் நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் 3 தலைமுறைகளை (ஒரு தலைமுறை என்பது 33 வருடம்) காணாமல் இறப்பை எய்ததில்லை. ஆனால் இன்றோ போதிய ஓய்வின்மை, தூக்கமின்மை, காலம் தவறிய உணவு, முறையற்ற உணவு பழக்கவழக்கங்களால் 2 தலைமுறைகளை கூட காண்பதே அரிதாக உள்ளது. மிக முக்கியமாக தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் குறித்த அடையாளம் கூட இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியாது. காசு கொடுத்தால் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் பொருள் கிடைக்கிறது அவ்வளவுதான். அது மரத்தில் அல்லது செடியில் இருந்து காய்க்கிறதா? பூமிக்குள் விளைகிறதா? எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என எதுவும் தெரியாது.உணவு தானியங்களை முழுஉருவத்தோடு பார்த்தவர்கள் அரிதிலும் அரிதாகவே உள்ளனர்.

    கேழ்வரகு, கோதுமை, கம்பு, சோளம், திணை, சாமை உள்ளிட்டவை அரைக்கப்பட்டு மாவாக மட்டுமே கிடைக்கிறது.பயிறு வகைகளில் உளுந்து, துவரை, பாசிப்பயறு போன்றவை எந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டதே கிடைக்கிறது. இதனால் பயிறு வகைகள் தானிய வகைகள் முழு உருவத்தை இளம் தலைமுறைகள் அறிவதிலும் அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இளம் தலைமுறையினருக்கு தானியங்கள், பயிறு வகைகளை அடையாளப்படுத்தி அதன் மகத்துவத்தையும் மருத்துவ குணத்தையும் உணர்த்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.இல்லை என்றால் உணவில் பாரம்பரிய அரிசி வகைகளின் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருவது போன்று தானியங்கள் பயிறு வகைகளும் பயன்பாடும் குறைந்து விடும்.

    விவசாயத்தை முழுமையாக இயற்கை முறைக்கு மாற்றுவதற்கு முழுமூச்சில் ஈடுபடுவதுடன் அதிக அளவில் தானியங்கள் பயிறு வகைகள் சாகுபடி செய்வதற்கும் முன்னுரிமை அளித்து வழிகாட்ட வேண்டும். மேலும் இளம் தலைமுறையினர் பாரம்பரிய அரிசி, தானியங்கள், பயிறு வகைகளின் முழுஉருவத்தை தெரிந்துகொள்ளும் வகையில் அவற்றின் புகைப்படங்களை பாடபுத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். மேலும் வேளாண் துறையினர் மூலமாக அவற்றை அடையாளப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • ஒரு போக சம்பா சாகுபடி செய்யும் நிலையில், பலர் தாளடி சாகுபடியில் இறங்கி உள்ளனர்.
    • நாற்று நன்றாக வளர்ந்துள்ள நிலையில் ஆட்களை விட்டு பறித்து கட்டும் பணி நடக்கிறது.

    வல்லம்:

    தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு முன்கூட்டியே மே மாதத்திலேயே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் மும்முரம் காட்டினர்.

    இதனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி குறுவை சாகுபடி நடந்தது.

    மழையால் பாதிப்புகள் இருந்தாலும் குறுவை அறுவடையை முடித்துள்ளனர் விவசாயிகள்.

    நெல்லை காயவைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அவ்வபோது பெய்யும் மழையால் நெல் நனைந்தாலும் தொடர்ந்து காயவைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் தாளடி சாகுபடிக்காக நாற்று விட்டு அதை பறித்து கட்டும் பணிகளில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தீவிரம் காட்டினர். ஒரு சில விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடி செய்யும் நிலையில், பலர் தாளடி சாகுபடியில் இறங்கி உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, குறுவை நெல் போட்டு இப்போதுதான் அறுவடை முடிந்து விற்பனை செய்தோம். அடுத்ததாக தாளடி சாகுபடிக்காக 50 குழியில் விதை தெளித்து நாற்று விட்டோம்.

    இது மூன்று ஏக்கருக்கு நடலாம். நாற்று நன்றாக வளர்ந்துள்ள நிலையில் ஆட்களை விட்டு பறித்து கட்டும் பணி நடக்கிறது. பின்னர் வயலில் தாளடி நாற்றுக்கள் நடப்படும்.

    140 நாட்கள் வயதுடைய ரகத்தை சாகுபடி செய்துள்ளோம். தை மாதம் இறுதியில் அறுவடைக்கு தயாராகி விடும். மாசியில் அறுவடை செய்வோம் என்றனர்.

    • 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் செண்டிப்பூ சாகுபடி.
    • ஒரு கிலோ விலை கிலோ ரூ. 120 முதல் ரூ. 150வரை விற்பனையாகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர் பஞ்சநதிக்குளம் நெய்விளக்கு குரவப்புலம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் செண்டிபூ சாகுபடி நடைபெறுகிறது.

    நாள் தோறும் இங்கு விலையும் செண்டி பூக்கள் கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை, மற்றும் உள்ளூர் பூ வியாபரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இத்தொழிலில் ஏரளமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்கமாக இங்கு விளையும் சென்டி பூ ஒரு கிலோ 20 முதல் 40 வரை விற்பனையாகும் நேற்று தீபாவளியை முன்னிட்டு சென்டிபூக்களின் ஒரு கிலோ விலை கிலோ ரூபாய் 120 முதல் முதல் 150வரை விற்பனையாகிறது.

    நேற்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு செண்டி பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28-ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.
    • தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தகவல்

    நாகர்கோவில்:

    தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் சாகு படி செய்யப்பட்டுள்ள முக் கிய பயிர்களான வாழை மற் றும் மரவள்ளி போன்ற பயிர் களில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. சுமார் 5,063 ஹெக்டர் பரப் பளவில் வாழை மற்றும் 1,437 ஹெக்டர் பரப்பளவில் மர வள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிர்கள் சாகுபடி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை. மழைபொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்டநிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை மற்றும் புயல் ஆகியவற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங் கப்படுகிறது. குத்தகை விவசா யிகளுக்கும் இத் திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன் பெறலாம். வாழை விவசாயி கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,182 பிரீமியமாக செலுத்தி ரூ.83,650 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரிமியமாக ரூ.1,420 செலுத்தி ரூ.28,400 இழப்பீடாகவும் பெறலாம்.

    கடன் பெறும் விவசாயிக ளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங் கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்து காப் பீடு நிறுவனங்களுக்கு செலுத்தலாம். கடன் பெறா விவசாயிகள் தங்களது அரு காமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் மற் றும் பொது சேவை மையங் கள் மூலம் பிரீமியம் செலுத்த லாம். இதற்கு தேவையான ஆவணங்கள் நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு விவரம் ஆகும். வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28-ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்களது பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயிர் காப் பீடு செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×