search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227127"

    • வருகிற 2-ந் தேதி மாநகராட்சி குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
    • தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

     மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    வருகின்ற 2-ந் தேதி (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலம் 4 அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

    (மண்டலம் 4 (தெற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.29, செல்லூர், வார்டு எண்.30 ஆழ்வார்புரம், வார்டு எண்.41 ஐராவதநல்லூர், வார்டு எண்.42 காமராஜர் சாலை, வார்டு எண்.43 பங்கஜம் காலனி, வார்டு எண்.44 சேர்மன் முத்துராமய்யர் ரோடு, வார்டு எண்.45 காமராஜபுரம், வார்டு எண்.46 பழைய குயவர்பாளையம், வார்டு எண்.47 சின்னக்கடை தெரு, வார்டு எண்.48 லெட்சுமிபுரம், வார்டு எண்.49 காயிதேமில்லத் நகர், வார்டு எண்.53 செட்டியூரணி, வார்டு எண்.85 கீழவெளிவீதி, வார்டு எண்.86 கீரைத்துறை, வார்டு எண்.87 வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.88 அனுப்பானடி, வார்டு எண்.89 சிந்தாமணி, வார்டு எண்.90 கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகள்)

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது.
    • கூட்டதிதல் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதற்கு எதற்கு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது. துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருளையும் கூறினார். அதனைத் தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக நடத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேப்போல் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரும் பல்வேறு பணிகள் குறித்து 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதன் பின்னர் அ.தி.மு.க மாநகராட்சி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ் பேசும்போது, 31-வது வார்டில் ஏற்கனவே 11 போர்வெல்கள், மாநகராட்சி சார்பில் 4 போர்வெல்கள் என மொத்தம் 20 போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவற்றுக்கு முறையான டேங்க் ஆப்ரேட்டர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் கூட்டத்தொடரில் கவுன்சிலர்கள் பேசுவது பதிவு செய்யப்படுகிறதா? என்று தெரியவில்லை.

    ஏற்கனவே கவுன்சிலர்கள் புகைப்படம் எங்கு வைக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். அதை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் போதுமான தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று பேசினார்.

    அப்போது இடையில் தி.மு.க. கவுன்சிலர் பேசினார். இதனால் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இடைய காரசார விவாதம் நடைபெற்றது.

    தொடர்ந்து அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசுகையில், மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழு நேரமும் டாக்டர்கள் நியமிக்கப்படாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாக்கடைகள் முறையாக தூர்வரப்படுவதில்லை, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறினார்.

    மேலும் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த மின் கட்டண அறிவிப்பு மக்களை பாதிக்கும். எனவே இதற்கு நாங்கள் எதற்கு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

    அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், கவுன்சிலர்கள் தங்கவேல், நிர்மலா தேவி, ஹேமலதா, பாரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகளை குறித்து விரிவாக பேசினர்.

    • அனைத்து மண்டலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • பெருநகர சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்கு படுத்துதல், சட்டம் 2014ன்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.

    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    களப்பணியாளர்கள் மூலம் இணையதள இணைப்புடன் கூடிய கைபேசி தரவு மூலம் தெருவோர வியாபாரி மற்றும் விற்பனை புகைப்படம், சுய விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேவையான இதர தகவல்கள் ஆகியவற்றை பெற்று பதிவு செய்யும் பணி தற்பொழுது கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வருகிறது.

    இதனைத் தொடர்ந்து, அனைத்து மண்டலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை மற்றும் விற்பனை சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும்.

    தெருவோர வியாபாரிகள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பெறவும் வழிவகை செய்யப்படும்.

    மேலும், தெருவோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார நிதியிலிருந்து பல்வேறு மேம்பாட்டு வசதிகளை பெறவும், உணவு விற்பனை கடைகள் நடத்திட தமிழக உணவு பாதுகாப்பு துறையின் தரச் சான்றிதழ் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக, இஸ்ராம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் மத்திய அரசு நிறுவனத்தின் களப்பணியாளர்கள் மூலம் பதிவு கட்டணமின்றி தெருவோர வியாபாரிகளை பதிவு செய்யவும், அவ்வாறு பதிவு செய்யும் வியாபாரிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கு மருத்துவ, விபத்து காப்பீடு வசதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே, மாநகராட்சியின் சார்பில் தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளர்களிடம் வியாபாரிகள் தங்களுடைய சுய விவரங்கள், விற்பனை பற்றிய தகவல்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை காண்பித்து இலவசமாக பதிவு செய்து கொண்டு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மதுரை மாநகராட்சி 2-வது மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 19-ந் தேதி(செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் 2-வது அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இதில் 2-வ மண்டலத்திற்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம்.

    சின்னசொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், 5 பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    • போக்கு வரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தங்குதடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், வருங்கால போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும் மாநகரின் முக்கிய மற்றும் போக்கு வரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ரூ.73.84 கோடி மதிப்பில் புதியதாக 3 மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார்.

    அதன்படி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-41, மணலி சாலையில் ரெயில்வே சந்திக்கடவு குறுக்கே, வடிவமைப்பு, பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமானம் முறையில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணா நகர் மண்டலம், வார்டு-98, ஓட்டேரி நல்லாவின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2-வது தெரு மற்றும் கீழ்பாக்கம் தோட்டம் தெரு இணைத்து அமைந்துள்ள பாலத்தை இடித்துவிட்டு புதியதாக பாலம் அமைக்கும் பணி மற்றும் ஆலந்தூர் மண்டலம், வார்டு-161ல் ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ஜீவன் நகர் 2-வது தெரு மற்றும் மேடவாக்கம் பிரதான சாலையை இணைத்து பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது.

    இப்பணிகள் முடிவுற்றால் மாநகரின் மேற் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சேலம் மாநகராட்சியில் மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கல்வி நிலைக்குழு மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

    சேலம் மாநகராட்சியில் 51 துவக்கப்பள்ளிகள், 29 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகள், 7 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இப்பள்ளிகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டுதல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், கணினி உபகரணங்கள் வாங்குதல், ஆய்வகங்கள் வசதி ஏற்படுத்துதல், தளவாட சாமான்கள் வாங்குதல், பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிப்பிட வசதி, நூலகங்கள் ஏற்படுத்துதல், விளையாட்டு மைதானங்கள், சுற்றுசுவர் போன்ற கல்வி மேம்பாட்டு பணிகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது குறித்து ஆலோசிக்கபப்ட்டது,

    மேலும் மேற்குறிப்பிட்ட மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி நிதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு, சமூக பொறுப்பு நிதி, நமக்கு நாமே திட்டம் மற்றும் அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றில் இருந்து மேற்கொள்ளுவது குறித்தும், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர கோருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது:

    மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்வது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

    அனைத்து பள்ளிகளிலும் மாணவமாணவியர்களுக்கு கழிப்பிட வசதியும், நூலக வசதியும் சுற்றுசுவர் அமைத்தலும் மிக முக்கியமானதாகும். மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் மாணவமாணவியர்களுக்கு கல்வியை கற்று தருகிறார்கள்.

    அந்த பள்ளிகளுக்கு மிக முக்கிய தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதை நோக்கமாக கொண்டு புது பொலிவுடன் கூடிய மாநகராட்சி பள்ளியாக மாற்றி அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    கல்வி நிலைக்குழு உறுப்பினர்கள் மாநகராட்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்து கூறியுள்ளிர்கள். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் நிறைவேற்றி தரப்படும்.

    • இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர்.
    • கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் அய்யப்பன் பேசுகையில், தனது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடைப்பை சரிசெய்ய வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் பத்மகுமரேசன் பேசுகை யில், தாராசுரம்பகுதி கும்பகோணம்மாநகரா ட்சியால் புறக்கணிக்க ப்படுகிறது என்றே நினைக்க தோன்றுகிறது. தாராசுரம் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் ஆதிலட்சுமி பேசுகையில், கூட்டத்தில் முக்கியமான பொருளை விவாதத்திற்கு கொண்டு வந்துள்ள போது அது குறித்து விவாதிக்காமல் கூட்டத்தை முடித்து தீர்மானங்களை நிறைவேற்றுவது கண்டிக்க த்தக்கது என்றார்.

    இதேபோல, கவுன்சி லர்கள் பலர் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். கூட்டத்தில் நகர் நல அலுவலர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஆனையூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் 12-ந் தேதி நடக்கிறது
    • மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 12-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    கிழக்கு மண்டலத்திற்கு (எண் 1) உட்பட்ட ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூர்து நகர், ஆத்திக்குளம், கோ.புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • பூங்காக்களை சீரமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களின் பொழுது போக்கு, உடற் பயிற்சிக்காக சுமார் 56 பூங்காக்கள் உள்ளன.

    இவற்றில் பெரும்பாலானவை போதிய பராமரிப்பு இன்றியும், தண்ணீர் வசதி, மின் விளக்கு, கழிவறை வசதி உள்ளிட்டவை இல்லாமல் உள்ளன. இதனால் பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பூங்காக்களை சீரமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை சீரமைக்க அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் தனி நபர்கள் முன்வர வேண்டும் என்று மாநகராட்சி அழைப்பு விடுத்து உள்ளது.

    இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறும்போது, "இந்த பூங்காக்களை பொது மக்களிடம் ஒப்படைத்தால் முறையாக திறந்து மூடப்படும். மேலும் பூங்காக்களும் சரியாக பராமரிக்கப்படும்.

    அதன் உள்கட்டமைப்புகளை சரி செய்ய அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அவர்கள் கண்காணிப்பு பணிகளையும், செடிகளை வெட்டியும் பராமரித்து கொள்ளலாம். துப்புரவு பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும். ஏற்கனவே 4 பூங்காக்கள் குடியிருப்பாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

    மாநகராட்சியின் இந்த முடிவுக்கு தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கூறும்போது, பூங்காக்களை அரசு நிதியில் தான் பராமரிக்க வேண்டும். இதற்காக சென்னை மாநகராட்சி போன்று டெண்டர் விடலாம். மோசமான பராமரிப்பில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

    பூங்காக்களை பொது மக்களை பராமரிக்க செய்யும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அதன் பொறுப்புகளைக் கைகழுவும் நோக்கத்தில் உள்ளது. தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டதில் இருந்து இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களின் முன்னேற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

    • பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் உள்ள பயன்படுத்தாத நிலையில் உள்ள பேட்டரி, கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இந்த முகாமில் கொடுத்து பணமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தரம் பிரித்து அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் அதனை பணமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின்னணு கழிவுகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் ஒருசேர சேகரிக்கும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது . திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பு மூலம் துவங்கப்பட்ட இத்திட்டம் இன்றைய தினம் இரண்டாவது முறையாக சிறப்பு முகாமாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது . பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் உள்ள பயன்படுத்தாத நிலையில் உள்ள பேட்டரி ,கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இந்த முகாமில் கொடுத்து பணமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது .

    குப்பைகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தரம் பிரித்து அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் அதனை பணமாகவும் மாற்றிக் கொள்வதோடு இயற்கைக்கு கேடு விளைவிக்காத வகையில் அமைத்துக் கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் ,நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்படுத்தப்படாத மின்னணு கழிவுகளை இன்று மாநகராட்சியில் ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொண்டனர் .இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி , துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது.
    • சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் டயர்கள் புதையும்படி சாலை அமைக்கப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதில் பேரி காளியம்மன் கோவில் பகுதியில் பழுதாகி நிறுத்தப்பட்ட பைக்கை அகற்றாமல் அதன் டயர்கள் மேல் சிமெண்ட் கலவைகள் பதிந்தவாறு சாலை போடப்பட்டது.

    இதே போல சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் டயர்கள் புதையும்படி சாலை அமைக்கப்பட்டது.

    இது குறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்தில் மேயர் சுஜாதா ஆனந்த குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். பைக் மற்றும் ஜூப்பை அகற்றிவிட்டு அங்கு சாலை அமைக்க உத்தரவிட்டனர்.

    இந்த 2 பணிகளுக்கும் பொறுப்பாளராக இருந்த 3-வது மண்டல உதவி என்ஜினியர் பழனி சஸ்பெண்டு செய்யட்டுள்ளார். சத்துவாச்சாரி கணபதி நகர் பூங்கா அருகே சாலையில் நடு பகுதியில் மின் கம்பம் அமைந்துள்ளது. அதை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதி குறித்து தெரியாதவர்கள் யாராவது இரவு நேரத்தில் பைக்கில் வந்தால் அவர்கள் நேரடியாக மின்கம்பத்தில் மோதி பெரும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.

    இதேபோல பல இடங்களில் மின் கம்பங்கள் அப்புறப்படுத்தாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் இந்த பணியை செய்த தனியார் நிறுவனங்களுக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணிக்க தனியார் நிறுவனம் சார்பில் ஓய்வு பெற்ற என்ஜினியர்களைக் கொண்ட திட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.ஆனால் தற்போது நடந்த சாலை பணிகளை பார்க்கும்போது இவர்கள் எந்த அளவுக்கு கண்காணித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த திட்ட கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டு புதிய ஆட்களை நியமிக்க தனியார் நிறுவனத்திற்கு கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் மாநகராட்சி பகுதியில் மின் கம்பங்களை அகற்றாமல் சாலை போடப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் ரோடு பணி நடைபெற்று வருகிறது.
    • ரோடு போடும் பணியை துரிதப்படுத்தி பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் அணைப்பாளையம் முதல் மணிய காரபாளையம் வரை ரோடு பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று காலை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அதிகாரிகளிடம் ரோடு போடும் பணியை துரிதப்படுத்தவும், தனியார் சொந்தமான இடத்தை உரிய இழப்பீடு கொடுத்து அதனை சரி செய்து பணியை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதேபோல் திருப்பூர் மாநகராட்சி மாட்டு கொட்டகையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தூய்மைப் பணி வாகனங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டார்

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் காந்தி குமார், உதவி கமிஷனர் வாசுகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×