search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 11-ந் தேதி நடக்கிறது
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்க உள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    2022-23-ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வருகிற ஜூன் மாதத்திலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளன. பள்ளி மாணவர்க ளுக்கான போட்டிகள், விதிமுறைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    கல்லூரி மாணவர்க ளுக்கான போட்டிகளில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

    ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியில் இருந்து மொத்தம் 3 மாணவர்கள் பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் முதல்வர் ஒப்புதலுடன் விருதுநகர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, மின்னஞ்சல் – (tamilvalar.vnr@tn.gov.in) முலமாகவோ 10.4.2023 - க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்க உள்ளார். பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம்பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5ஆயிரம், என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுவார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டு வருகிறார் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 13 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு
    • உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணர இந்த போட்டி நடத்தப்பட்டு உள்ளது

    உடையார்பாளையம்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான தேன்சிட்டு மாணவர்களுக்கான மார்ச் மாத இதழ் பகுதியிலிருந்து வினாடி வினா போட்டிகள் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பாக வட்டார அளவில் நடைபெற்றது.போட்டியினை வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தலைமையேற்று துவக்கிவைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் வரவேற்றார். போட்டிகளின் நடுவர்களாக புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன், உதயநத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அறிவுச்செல்வன், உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராமலிங்கம், ஜெயங்கொண்டம் அரசினர் மகளிர் உயர் நிலைப்பள்ளி தமிழாசிரியர் விஜயலெக்ஷ்மி ஆகியோர் செயல்பட்டனர்.

    அரசு மேல்நிலை , உயர்நிலை, நடுநிலை சார்ந்த 13 பள்ளிகளிலிருந்து 26 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

    மேலகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சரண்யா, பிரசாத். உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப் மாணவிகள் விஜயலட்சுமி , பார்கவி ஆகியோர் போட்டியில் வட்டார அளவில் வெற்றி பெற்று அரியலூரில் நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளார்கள்.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.

    • தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • 216 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    ராமநாதபுரம்

    ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் தென் மாநில அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது ஆக்கி சாம்பியன் ஷிப் போட்டி ராமநாதபுரம் வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு அரங்கில் 19-ந் தேதி தொடங்கி நாளை (26-ந் தேதி) வரை நடக்கிறது.

    இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 216 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுகுறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் செயலாளர் செந்தில் ராஜ்குமார் கூறியதாவது:-

    இந்திய ஆக்கி அணியில் விளையாட திறமையான வீரர்களை கண்டறிய முதல் முதல்முறையாக இந்திய அளவில் 4 மண்டலங்களாக பிரித்து 18 வயதிற்குட்பட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது.

    ராமநாதபுரத்தில் தென்னிந்திய மண்டல அளவிலான போட்டி ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நடக்கிறது. சிறந்த வீரர்களை தேர்வு செய்து கால் இறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் நாளை (26-ந் தேதி) நடக்கிறது.தேர்வாளர் குழுவினர் 30 சிறந்த வீரர்களை அடையாளம் காணுவார்கள்.

    இவர்களுக்கு 4 மண்டல அணிகள், 2 அகாடமி அணிகள் மண்டலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும். இதில்,ஆக்கி இந்தியா தேர்வாளர்கள் 45 திறமையான வீரர்களை தேர்வு செய்து,பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்து பயிற்சி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் திருவிழாவினை முன்னிட்டு எல்கை பந்தயம் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1.10 லட்சம் பரிசு, கோப்பை

    அறந்தாங்கி,

    அறந்தாங்கி தாலுகா கடையாத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரியநாயகி அம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 47 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 7 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. அவற்றை பார்வையிட்ட பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுதினர்.பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர்.30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை கடையாத்துப்பட்டி இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.




    • ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கட்டுடலை காட்டி அசத்தினர்
    • பெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    மிஸ்டர் பெரம்பலூர் ஆணழகன் போட்டியில் பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். வயது மற்றும் எடை அடைப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்கள் கட்டுடல்களை காட்டி பார்வையாளர்களை அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும் பணமுடிப்பும் பரிசாக வழங்கப்பட்டது.


    • 10 கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு 3-ம் இடம் வென்றனர்.
    • ரூ. 2 ஆயிரத்து 500 ரொக்கம், சான்றிதழ்கள் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுஜரித்தா மாக்டலின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

    கல்லூரியில் வணிகவியல் துறையில் பயிலும் லோகேஷ்வரன், மோகன்ராஜ் மற்றும் ராம்ஜி ஆகிய மாணவர்கள் திருவாரூர் சங்கர் ஐ. ஏ.எஸ் அகாடமி நடத்திய 10 கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் வென்று 2500 ரூபாய் ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்ததை பாராட்டி வாழ்த்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வரும், வணிகவியல் துறைத் தலைவருமான அன்வர் அஹமது, முனைவர் சாவித்திரி. வணிகவியல் துறை பேராசிரியர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுஜரித்தா மாக்டலினை வாழ்த்தினர்.

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி
    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவிகள் சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மாணவிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்க்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி புதுக்கோட்டையில் உள்ள சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இதில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பிரியதர்ஷினி, ஜெ.ரித்திகா ஆகியோர் தங்கப்பதக்கமும், பி.துர்காதேவி வெள்ளிப்பதக்கமும் மற்றும் சிவரஞ்சனி வெண்கலப்பதக்கமும் பெற்று ஒட்டுமொத்தமாக இரண்டாம் (ரன்னர்அப்) இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.மேலும், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கு பெரம்பலூர் மாவட்டம் தடகள சங்கம் சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் எம்.ஜி.ஆர். மைதானத்தில் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் முதல் கடந்த 5-ந்தேதி வரை போட்டிகள் நடைபெற்றது.இப்போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பங்கேற்று ரூ.1,58,000 பரிசு தொகையை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து மற்றும் வளைகோல்பந்து போட்டிகளில் முதல் இடமும், கபாடி போட்டியில் இரண்டாம் இடமும், கால்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் மூன்றாம் இடமும் பெற்றது.குறிப்பாக இதில் தடகள போட்டிகளில் சி.சாருமதி 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் இடமும், செ.வினோதினி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், செ.தனலெட்சுமி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் மற்றும் சர்மிளா சிலம்பம் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர் .மேலும் ஒவ்வொரு வெற்றிபெற்ற அணியில் இருந்தும் 32 மாணவிகள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.அகிலா, துணை உடற்கல்வி இயக்குனர்கள் ப.சிவரஞ்சனி, டேக்வாண்டோ பயிற்சியாளர் பரணிதேவி, முதல்வர் முனைவர் உமாதேவி பொங்கியாவைம், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    • கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
    • கல்லூரியில் பயின்று வரும் மாற்று திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திர வதனம் மலர்கள் அனைத்தும் மலர்ந்து மனம் வீசுவது போல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல அவர்களும் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று கூறி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் கல்லூரியில் பயின்று வரும் அனைத்து துறையை சேர்ந்த 20 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் முனைவர் சுலோக்சனா தமிழ் துறை தலைவர் ரவி ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் கிருஷ்ணசாமி உடற்கல்வி இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் தமிழ்ச்செல்வி சத்தியமூர்த்தி உமா மகேஸ்வரர் பாண்டி மாரியம்மாள் சுதாகர் மற்றும் அனைத்து துறை மாணவ மாணவியர்கள் கல்லூரி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • அரசு பள்ளி மாணவியர் சிறப்பிடம்
    • சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

    கரூர், 

    கரூர் பாலிடெக்னிக் கல்லுாரியில் விரைவு சதுரங்கப் போட்டி நடந்தது. இதில், அரவக்குறிச்சியைச் சேர்ந்த, 27 பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 9, 11, 13 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் அரவக்குறிச்சி மாண வியர் சிறப்பிடம் பெற்றனர். இதையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவியர், அவர்களின் பயிற்சியாளர்கள் வீரமலை, நாகலட்சுமி ஆகியோரை ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

    • விளையாட்டு தின விழாவில் பல்வேறு போட்டிகள் நடந்தன.
    • 3 ஆண்டுகள் போட்டிகள் நடைபெறாமல் இந்த ஆண்டு நடந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு தினவிழா போட்டிகள் நடந்தன. தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பாட்டிலில் நீர் நிரப்புதல், தவளை ஓட்டம், நொண்டி அடித்து ஓட்டம், மியூசிக்கல் சேர், ஓட்டப் பந்தயம், ஊசி நூல் கோர்த்து ஓட்டம், சாக்கு ஓட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், லெமன் ஸ்பூன் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை மேடையில் நிறுத்தி கை தட்டி பாராட்டினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் போட்டிகள் நடைபெறாமல் இந்த ஆண்டு நடந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தடகள போட்டிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் வயது வரம்பின்றி நடத்தப்பட்டன.
    • வருகிற 18-ந் தேதி பெண் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடகள போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

    தஞ்சாவூர்:

    பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. அதேபோல் 2022-2023 ஆம் ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    பெண்களின் நல்வாழ்வுக்கு விளை யாட்டு, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி பங்களிக்கிறது என்றும் இது சம்பந்தமாக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கையில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்முறை மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வயதினருக்கும் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றது.

    அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இன்று காலை மாவட்ட அளவிலான மகளிருக்கான தடகள போட்டிகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் வயது வரம்பின்றி நடத்தப்பட்டன.

    இப்போட்டியினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை போட்டிகள் நடத்தப்பபட உள்ளது. 15-ந் தேதி மகளிருக்கு வாலிபால் விளையாட்டுப் போட்டிகளும், 18-ந் தேதி பெண் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடகள போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

    இன்று நடந்த நிகழ்ச்சியில் பயிற்றுனர்கள் நீலவேணி (தடகளம்), தாரணி (பளு தூக்குதல்), ரஞ்சித் குமார் (நீச்சல்) மற்றும் மாவட்ட அளவிலான உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் நிறைவில் தஞ்சாவூர் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுநர் பாபு நன்றி கூறினார்.

    • மாணவர்கள் தீய பழக்கங்களில் இருந்து மீட்டு எடுக்கும் வகையில் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி காவல்துறை சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா திறந்துவைத்தார்.

    மாணவர்களை தவறான பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சியில் சீர்காழி காவல்த்துறை சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மன்றம் தொடக்கவிழா நடைபெற்றது.

    சீர்காழி டிஎஸ்பி.லாமெக் தலைமை வகித்தார்.

    காவல்ஆய்வாளர் சிவக்குமார், எழுத்தர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா மன்றத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு விளையாட்டு உபகரண பொருட்களை வழங்கினார்.

    மாணவர்கள் தீய பழக்கங்களில் இருந்து மீட்டு எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மன்றத்தில் பொது நூலகம், விளையாட்டு பொருட்களை பயன்படுத்தும் வகையில் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் திறக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட திருக்குறள் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×