search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228238"

    • கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.
    • 39 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடப்பணி நடைபெற உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் புறவழிச்சாலையில் தாமரை நகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட அலுவலக 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடங்களை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஜே.பி. நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தேசிய தலைமை அலுவலகத்திற்கு வந்த போது நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பா.ஜ.க. அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று அப்போதைய தேசிய தலைவர் அமித்ஷாவிடம் அறிவுறுத்தினார். கட்டிடப்பணி நான் அப்போது தேசிய பொதுச்செயலாளராக இருந்தேன்.

    தற்போது 290 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் 150 மாவட்டங்களில் கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 14 மாவட்ட அலுவலக கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாவட்டங்களுக்கு கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் 39 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடப்பணி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருதுநகரில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டு ரங்கன் தலைமையில் மாநிலச்செயலாளர்கள் பொன் பாலகணபதி, பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தனர்.

    இந்த விழாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜகோபால், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் சுப. நாகராஜன், பார்வையாளர் வெற்றிவேல், மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், கோபால்சாமி, மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரன், சீதாராமன், அழகர்சாமி ராஜா, மணிகண்டன், புஷ்ப குமார், செல்வகுமார் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
    • விவசாயிகளின் ேகாரிக்கையின்படி நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கிராமங்களில் பெரும்பாலான பகுதிகளில் நெல் சாகுபடி அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அறுவடை செய்யப்படும் நெல்லை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதோடு, பல்வேறு மோசடிகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், தங்கள் பகுதிகளில் விளையும் நெல்மணிகளை தமிழக அரசின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பல்வேறு கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அதன்படி பள்ளகாளிங்கராய நல்லூரில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

    • உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா திறந்து வைத்தார்
    • இளம் வழக்கறிஞர்கள் திறமையாக பணியாற்றி நீதிபதிகளாக வரவேண்டும் என்று அறிவுறுத்தல்

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முசிறி நகரில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் புதிதாக சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றதுதிறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா தலைமை தாங்கி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிர்மல் குமார், ஸ்ரீமதி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எந்த மாநிலத்தில் அமைதி நிலவுகிறதோ, அந்த மாநிலத்தில் நீதித்துறை செம்மையாக செயல்படுகிறது என்று அர்த்தம்அந்த வகையில் தமிழகத்தில் வசிக்கும் அனைவரின் தனி உரிமைகளையும் பாதுகாப்பதில் நீதிமன்றம் அரிய சிறப்பான பங்களிப்பை தருகிறது என்று பேசினார்.விழாவில் பேசிய தலைமை நீதிபதி ராஜா, 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சப்கோர்ட்டை துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திருச்சி மாவட்டத்திலிருந்து இளம் வழக்கறிஞர்கள் திறமையாக பணியாற்றி நீதிபதி அந்தஸ்தை பெற வேண்டும். பொதுமக்கள் நீதிமன்றத்தின் உதவியை தேடி வரும்போது, வாதாடும் வழக்கிற்காக நியாயமான கட்டணங்களை பெற்று, சிறப்பான சேவையாற்ற வேண்டும் என்று பேசினார் .விழாவில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், திருச்சி போலீஸ் எஸ்.பி. சுஜித் குமார், முசிறி கோட்டாட்சியர் மாதவன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாஸ்கர், சங்கச் செயலாளர் சந்திரசேகரன், அரசு வழக்கறிஞர் சப்த ரிசி, இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், சங்க பொருளாளர் ரங்கராஜன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி நன்றி கூறினார்.

    • அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
    • பக்கவாட்டு சுவர்களில் திருக்குறள் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது

    திருச்சி,

    திருச்சியையும், ஸ்ரீரங்கத் தையும் இணைக்கும் வகை–யில் காவிரி ஆற்றில் கடந்த 1976-ம் காவிரி பாலம் கட்டப்பட்டது. 541.46 மீட்டர் நீளமும், 19.20 மீட்டர் அகல–மும், 16 கண்கள் கொண்ட–தாகவும் பாலம் கட்டப்பட் டது.சுமார் 46 ஆண்டு காலம் இந்த பாலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் பாலத்தில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம். இதற்கிடையே பாலத்தின் 32 தட்டுகளின் இணைப்பு பகுதி மற்றும் இந்த பாலம் கட்டப்படும் போது வைக் கப்பட்ட 192 அதிர்வு தாங் கிகளின் ஆயுட்காலம் முடி–வடைந்து விட்டதாலும், பாலத்தின் ஓடுதளத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த–தாலும் அதன் விரியும் தன்மை குறைந்து விட்டது. இதனால் பாலத்தில் பள் ளங்கள் ஏற்பட்டு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.எனவே பாலத்தை புனர–மைக்கும் பணிகளுக்காக கடந்த செப்டம்பர் 10-ந் தேதி மூடப்பட்டு போக்கு–வ–ரத்தில் மாற்றம் செய்யப் பட்டது. மேலும் ரூ.6.84 கோடி ஒதுக்கப்பட்டு பேரிங் கு–கள் மாற்றுதல், இரு கண்களுக்கு இடையேயான இணைப்புகளை சீரமைத் தல், புதிய தார்ச்சாலை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந் தது.இதற்கிடையே பாலத்தில் பேரிங்குகள் மாற்றப்பட்டு, இணைப்பு பகுதிகளும் புதிததாக அமைக்கப்பட்டு, புதிய தார்ச்சாலை அமைக் கப்பட்டது. மேலும் நடை–பாலம் சீரமைத்தல், கைப்பிடி சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்து முடிந்தது. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் திருக்குறள் எழு–தப்பட்டுள்ளது.அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலை–யில் இன்று அந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட் டுக்கு திறந்து விடப் பட்டது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அதிகாலையில் காவிரி பாலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வாகன போக்குவரத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    • மாவட்ட எஸ்.பி. தொடங்கி வைத்தார்
    • குருவாடி அரசு பள்ளியில் விழா

    அரியலூர், 

    அரியலூர் அடுத்த குருவாடி கிராமத்திலுள்ளள அரசு மேல்நிலை பள்ளியில், எண்ணங்களின் சங்கமம் ஸ்வீட் டிரஸ் பாய்ஸ் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இயக்கி வைத்தார். தொடர்ந்து அவர், பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, மாணவர்கள் சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், இளவரசன், ஓய்வு பெற்ற நல்லாசிரியர் தியாகராஜன், ஊராட்சித் தலைவர் சுப்புலட்சுமி ரவி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் சாக்ரடீஸ், மனோகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அன்னவாசலில் ரூ.7 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் திறக்கபட்டது
    • கலையரங்கத்தினை, மாவட்ட கலெக்டர்கவிதா ராமு, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ஆகியோர்திறந்து வைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சி, நீலியம்மன் கோவில், ஆதிதிராவிடர்காலனியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தினை, மாவட்ட கலெக்டர்கவிதா ராமு, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்மா.சின்னதுரை ஆகியோர்திறந்து வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெ.ஆனந்தன், எம்.பிரேமலதா, வட்டாட்சியர்சக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கை.பழனிச்சாமி, ஊராட்சிமன்றத் தலைவர்ம.வேலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
    • கழனிவாசல் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்து அறுவடை செய்யப்படு நெல்லை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதோடு பல்வேறு மோசடி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் நெல்லினை தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160ம், மோட்டா ரக நெல்லிற்கு ரூ. 2115-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.கழனிவாசல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பட்டியல் எழுத்தர் கோபிநாத் , ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 20 சதவீத தள்ளுபடியில் விற்பனை
    • சப்பல்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற நியூ ஜனதா புட்வேர்ஸ் நிறுவனம் ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும். நாகர்கோவில் மற்றும் குழித்துறையில் செயல் பட்டு வரும் இந்த நிறுவனத்தில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 5 முதல் 30 சதவீதம் வரை தள்ளு படி வழங்கப்படுகிறது.

    நியூ ஜனதா புட்வேர்ஸ், தனது 3-வது புதிய ஷோரூமை குளச்சல் காந்தி ஜங்சன் அருகே அமைத்து உள்ளது. இதன் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். இதில் ஏராளமான வாடிக்கை யாளர்கள் கலந்து கொண்ட னர்.

    விழாவுக்கு வந்தவர்களை நிறுவன உரிமையாளர் கமல் நாசர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.

    நியூ ஜனதா புட்வேர்சில் அனைத்து வகையான உயர்தர சப்பல்கள், ஷூக்கள் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவி களுக்கான ஷூக்கள், ஷாக்ஸ், வாட்டர் பாட்டில், லஞ்ச் பேக் அனைத்தும் 20 சதவீதம் வரை தள்ளு படியில் விற்பனை செய் யப்படுகிறது.

    மேலும், இங்கு மண மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சப்பல்களும், கால்வலி, மூட்டுவலி ஆர்த்தோ சப் பல்களும் கிடைக்கும்.

    விகேசி, வாக்கரூ, ஏரோ வாக், இந்துஸ், பாரகான், ஸ்மார்ஸ், நெக்ஸோ போன்ற கம்பெனி சப்பல்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படு கிறது. இதுபோல் சில கம்பெனி பேன்சி சப்பல்க ளுக்கு தள்ளுபடி வழங்க ப்படுகிறது.

    எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப் பது உங்கள் வருகையே. புதிய ஷோரூமிலும் உங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என நியூ ஜனதா புட்வேர் உரிமையாளர் கமல் நாசர் தெரிவித்துள்ளார்.

    • குமாரபாளையம் காவல்துறை சார்பாக சிறுவர்கள் மன மகிழ் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பட பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படுகிறது.
    • இதையொட்டி சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல்துறை சார்பாக சிறுவர்கள் மன மகிழ் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பட பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இதையொட்டி சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் காவல்துறை சார்ந்த லோகநாதன், மற்றும் விடியல் பிரகாஷ், ராணி, தனலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அகரம்சீகூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
    • மோட்டா ரக நெல்லிற்கு ரூ. 2115ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய கிராம விவசாயிகள் தங்கள் பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த வருடத்திற்கான நெல் கொள்முதல் நிலையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160ம், மோட்டா ரக நெல்லிற்கு ரூ. 2115ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பட்டியல் எழுத்தர் தாமரைகண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சுப்புரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வன், உதவியாளர் கோபிநாத், ராமசாமி, வரதராசு, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், தனபால் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அகரம்சீகூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இடைக்காட்டூர் ஊராட்சியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு கடந்தாண்டு நெல் அறுவடையின்போது கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடை களை விவசாயிகள் கொள்முதல் செய்தனர்.

    இந்தாண்டு மீண்டும் கொள்முதல் நிலையம் திறக்காததால் இடைக்காட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான சிறுகுடி, பெரிய கோட்டை, பதினெட்டாம்கோட்டை, அருளானந்தபுரம், செட்டி குளம், தெக்கூர், காளிபட்டி உள்பட ஏராளமான கிராமங்களில் இருந்து பல ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

    ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தாண்டு நெல் அறுவடை பணி முடிந்த நிலையில் தற்போது நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் விவசாயிகள் விளைவித்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல்மூடைகளை திறந்த வெளியில் ஆங்கா ங்கே விவசாயிகள் இறக்கி அடுக்கி வைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் இந்த நெல் மூடைகள் மழையில் நனையும் அவல நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இனி வரும் நெல்லை பாதுகாக்க உடனடியாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் விவசாயிகள் இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அமைச்சர் பெரியகருப்பனிடம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் உடனடியாக இடைகாட்டூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து உடனடியாக நேற்று இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் தலைமையில் நெல்கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பிராந்தநேரி குளத்திற்கு தண்ணீர் வராததால் பயிர்கள் கருகும் அவலம்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தோவாளை கால்வாயில் இருந்து ராதாபுரம் பகுதி பாசனத்திற்கு அரசு நிர்ணயித்த அளவை விட மறைமுகமாக கூடு தல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அஞ்சுகிராமம் கடைவரம்பு பகுதிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் கன்னிப் பூ சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். போதுமான தண்ணீர் கிடைக்க வேண்டுமானால், நிலப்பாறை கால்வாயில் தண்ணீர் திறந்து விடவேண்டும். இதன் மூலம் பிராந்தநேரி குளம் நிரம்பும்.

    மேலும் எம்.பி. கால்வாய் வழியாக மேட்டு கால்வாயில் தண்ணீர் வந்தால்தான் புதுக்குளம், முதலியார்குளம், மேல கருங்குளம் போன்ற குளங்கள் நிரம்பி அஞ்சுகிராமம் கடைவரம்பு பகுதி விவசாய நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் கன்னிப் பூ சாகுபடியினை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி உடனடியாக நிலப்பாறை கால்வாயில் தண்ணீரை திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×