search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி"

    • விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை வெளியீடு
    • ராகுல்காந்தி கன்னி யாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியாவில் ஒற்றுமையை நிலை நிறுத்த வும், இந்திய மக்களை ஒருங்கிணைக்கவும் தலை வர் ராகுல்காந்தி கன்னி யாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற் கொண்டு உள்ளார்.

    7-ந்தேதி பொதுக்கூட்டத் துடன் குமரியில் தொடங்கிய பயணம் 8,9,10 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கெடுத்த இந்த பயணம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், நமது மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது.

    இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    என்னோடு தோளோடு தோள் நின்று அனைத்து ஒத்துழைப்பும் தந்த குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், டாக்டர் பினுலால்சிங், நவீன்குமார், வட்டார, நகர, பஞ்சாயத்து தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் அனைத்து ஒத்துழைப்பும் அளித்த போலீஸ் அதிகாரிகள், போலீசார், மாவட்ட நிர்வாகம், மாநகர, நகர பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ராகுல்காந்தியை பெருந்திரளாக கூடி வரவேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.
    • தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

    கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சரியான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் 240 டிஎம்சி காவிரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

    காவிரி நீர் வீணாவதைத் தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மதுரவாயல் பகுதியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டது வேதனை அறிக்கிறது.

    மாணவர்களின் தற்கொலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பெற்றோர்களின் அழுத்தத்தால்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    பெற்றோர் தங்களது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். மத்திய அரசு உடனடியாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    அதேசமயம் தமிழகத்தில்தான் நீட் தேர்வால் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றார்.

    அப்போது, பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன் மற்றும் விமல், காமராஜ், லண்டன் அன்பழகன் உட்பட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • கிருஷ்ணர் வேடமணிந்து மாணவ- மாணவிகள் கிருஷ்ணன் குறித்த பாடல்கள் பாடினர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ஹவுசிங் போர்டில் உள்ள பிருந்தாவனம் தியான பீடத்தில் உள்ள சந்தான கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் கிருஷ்ணர் வேடமணிந்து மாணவ- மாணவிகள் கிருஷ்ணன் குறித்த பாடல்கள் பாடினர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து பிருந்தாவன் குழுவினர் மற்றும் தனலட்சுமி குழுவினரின் பஜனைகளும், சர்மிளா, சரண்யாவின் பக்தி பாடல்களும் நடைபெற்றது. சந்தான கிருஷ்ணருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் அணி வடக்கு மாவட்டச் செயலர் சிவபெருமாள், நிர்வாகிகள் சங்கர்கணேஷ், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை ப்பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் செல்வகுமார், செண்பகமூர்த்தி, குமார், நீலகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எப்போதும் உற்சாகம், ஊக்கம், நம்பிக்கை வெற்றி போன்றவகைளையே பேசுங்கள்.
    • செயல்களில் உள்ள ஆர்வம் உங்களை முன்னிலைப்படுத்தும்.

    வெற்றியை விரும்பாத மனிதரில்லை. எந்த ஒரு மனிதனாலும் தான் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைப்பான். ஆனால் பலரும் அதற்கான வழிகளை தேடுவதில்லை. குறிக்கோள் பற்றி சொல்லும் போது குறிக்கோளுக்கு செலுத்தும் கவனத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்துவதில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது என்கிறார் சுவாமி விவேகானந்தர். அப்பாதை எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

    எந்தவொரு மனிதனாக இருந்தாலும் முதலில் எதை பற்றியாவது சிந்திக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். சிந்திக்கும் திறனை அதிகரிக்கும் போது தான் நாம் எதையாவது அடைய வேண்டும் அல்லது சாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் வெளிப்படும். படிப்பில் மந்தமாக இருந்து பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் தனியாக இருந்த நேரத்தில் பலமணி நேரம் கற்பனையில் சூழ்ந்து இருந்ததே தன் வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.

    வாழ்க்கைக்கு ஓர் இலக்கு வேண்டும் என்பதை தீர்மானித்து வெற்றி கண்டவர் நெல்சன் மண்டேலா. இவர் கருப்பின மக்களுக்கு விடுதலை வேண்டும் என்ற ஒரே இலக்கோடு பேராடி வெற்றி கண்டார். நாமும் சிந்திப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் வாழ்க்கையில் ஓர் லட்சியத்தோடு பயணித்தால் எந்த தடைகளையும் தாண்டி வெற்றியை தட்டி செல்ல முடியும். லட்சியம் இல்லா வாழ்வு-துடுப்பு இல்லாத படகு போன்றதாகும்.

    வாழ்வின் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது படிப்பானாலும் சரி, வேலையானாலும் சரி எத்தனை இடர்கள் வந்தாலும் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். யானைக்கு தும்பிக்கை மனிதனுக்கு நம்பிக்கை. பணமோ, வயதோ, படிப்போ,ஊனமோ எதுவும் வெற்றிக்கு தடையில்லை என நம்ப வேண்டும். தன்னை சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத்தை கைவிட வேண்டும்.

    நல்ல மதிப்பீடுகளை வளர்த்து கொள்வதும் ஒருவகையில் நம் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைவதுண்டு. நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளியில் தெரியும் வகையில் நாம் நல்ல மதிப்பீடுகளை கற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கற்றுத்தருவதைவிட தம் ஆன்மாவை தீமைகள் எதுவும் அணுகாமல் தூய்மையாக வைத்திருப்பதும் ஒரு வகையில் வெற்றியின் ரகசியம்தான்.

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் நாம் எடுத்த காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் விடா முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். நாம் நினைக்கும் செயலில் வெற்றி காணும் வரை விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். சிலந்தி வரை பின்னுவது போல் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் கூட தங்களுடைய விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் சாதனை படைத்து கொண்டிருப்பதை நாம் தினந்தோறும் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இருக்கிறோம்.

    உழைப்புக்கும் உயர்வுக்கும் இலக்கணம் என்றால் அது தாமஸ் ஆல்வா எடிசன் தான். உழைப்பில் தன்னை கரைத்து சமூகத்திற்கு பலவற்றை கண்டுபிடித்து கொடுத்தவர். முப்பத்தி எழு வயதில் தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவின் பணக்காரர்களில் ஒருவராகவும், 1929-ல் அமெரிக்காவின் உயர்ந்த பத்து மனிதர்களின் முதல் மனிதராகவும் திகழ்ந்தார். இத்தகைய உழைப்பு நம்மிடம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

    கற்களில் உள்ளிருக்கும் தீப்பொறி பாறையை வேகத்தோடு தரையில் தேய்ப்பதால் உண்டாகிறது. அதுபோல் நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் மனிதனுக்குள்ளே இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி அவனை அழகுப்படுத்துகிறது. ஆர்வத்தோடு செய்யும் செயலே நம் வாழ்க்கையை மிகுந்த தைரியத்துடனும் மனவலிமையுடனும் நாம் எதிர்கொள்ள உதவும். எந்த செயலை தொடங்கும் போதும் மிகுந்த ஆர்வத்தோடு தொடங்குங்கள்.

    செயல்களில் உள்ள ஆர்வம் உங்களை முன்னிலைப்படுத்தும். கற்றுக்கொள்வதை சுலபமாக்கும். போட்டியில் கலந்து கொள்வது என்பது பாதி வெற்றிக்கு சமம். எப்போதும் உற்சாகம், ஊக்கம், நம்பிக்கை வெற்றி போன்றவகைளையே பேசுங்கள். தோல்வி போன்ற வார்த்தைகளே நினைத்து கூடப்பார்க்காதீர்கள்.

    இந்த உலகமே இந்தியர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால் நாம் தாம் நம்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் என்பது தான் கொடுமை. எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள், நம்பிக்கையுடன் தொடங்குங்கள், நம்பிக்கையுமன் முடியுங்கள், நம்பிக்கை குணமாக்கும், நம்பிக்கை நம்மை செம்மைப்படுத்தும், நம்பிக்கை இப்பொழுதே வெற்றி தரும்.

    நீங்கள் மிகவும் திருப்தியடைந்த ஒரு நாளை பாருங்கள். நீங்கள் செயல் எதுவும் செய்யாமல் சுற்றி திரிந்த நாளாக அது இருக்காது. மாறாக நீங்கள் பல செயல்கள் செய்ய வேண்டியிருந்து அந்த செயல்கள் அனைத்தையும் திருப்தியுடன் செய்து முடித்திருந்த நாளாகவே அது அமைந்திருக்கும். முன்பு வானமே எல்லை என்று கூறுவார்கள். உண்மையில் வானம்கூட எல்லையில்லை.

    தேடலே வாழ்க்கை அந்த தேடலை மாணவர்களாகிய நாம் தாம் அதை தேடிக் கண்டு கொள்ள வேண்டும். ஆன்மிக வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் உட்கார்ந்து கண்களை மூடி உள்ளே தேட வேண்டும். ஒவ்வொரு செயலின் உள்ளேயும் வெற்றியின் விதை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மிகுந்த முனைப்புடன் உழைத்தால் இப்போதே வெற்றி சாத்தியமான ஒன்றுதான். விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்தால் எந்த மனிதனாக இருந்தாலும் சரி ஆணோ, பெண்ணோ, எந்த வயதிலும் சாதனை புரிந்து வெற்றிவாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம்.

    வெற்றி என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அடித்தளமாகும்

    விடா முயற்சியே வெற்றியை தரும்.

    • போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெறும் மாணவிகளுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் லீலாதேவி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிலம்பரசன் சதுரங்க போட்டியினை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பாபநாசம் அரிமா சங்க தலைவர் செங்குட்டுவன், முன்னாள் தலைவர் செந்தில் மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் மாணவிகளுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    • மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், சிறு சிறு குழப் பயிற்சியும், வீர தீர தற்காப்புக்கலைப் பயிற்சியும், வாழ்விக்கும் யோகப்பயிற்சியும் நடந்தது.
    • தடகள போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற வயோலா அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மிதுன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் 13- வது தொடக்கநிலை வகுப்பிற்கான விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், தொடக்கநிலை முதல்வர் ஏஞ்சலின் வில்லியம்ஸ், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி கலந்து கொண்டு விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், சிறு சிறு குழப் பயிற்சியும், வீர தீர தற்காப்புக்கலைப் பயிற்சியும், வாழ்விக்கும் யோகப்பயிற்சியும் நால்வண்ண மாணவர்களின் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையினையும் சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

    தடகளப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற வயோலா அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மிதுன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். டியூலிப் அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் சக்திபாலா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி யின் இறுதிச்சுற்று நடைபெற்றது.
    • பள்ளிகளைசேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டியானது பல சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப்படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி யின் இறுதிச்சுற்று நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளைசேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டியானது பல சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ முதல் பரிசினையும், ராஜன் கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி சஞ்சிதா இரண்டாம் பரிசினையும், திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விசுவநாதன் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

    நிகழ்ச்சிக்கு ஆஸ்பயர் அகாடமியின் நிறுவனர் பரணிதரன் தலைமை தாங்கினார். நடராஜன் தமயந்தி உயர்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார். நாளை அமைப்பின்ஒருங்கி ணைப்பாளர் செகுரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.

    • பரிசளிப்பு விழா வாசகர் வட்ட பொருளாளர் ரோட்டரியன் யோகா டவர்ஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது.
    • ஓவியப்போட்டியில் மாணவர்கள் கார்த்திகேயன், கமலேஷ், மாணவி சுஷ்மிதா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

    தென்காசி:

    பள்ளிக்கல்வித்துறை, வ.உ.சி வட்டார நூலகம், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் இணைந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வினை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஸ்லோகன் எழுதுதல், பேச்சுப்போட்டி தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் நடத்தப்பட்டது. இதில் 310 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முதல் மூன்று பரிசுகள் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வாசகர் வட்ட பொருளாளர் ரோட்டரியன் யோகா டவர்ஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது.

    வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். ரோட்டரியன் லெட்சுநாராயணன் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கி ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் தலைவர் மாரிமுத்து, செயலாளர் ரமேஷ் விழா பேரூரை ஆற்றினர். விழாவில் வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மின்வாரிய செயற்பொறியாளர்அருள் வாழ்த்துரை வழங்கினர். கிளை நூலகர் சுந்தர் நன்றி கூறினார்.

    ஓவியப்போட்டியில் பண்பொழி ஆர்.கே.வி. நடுநிலைப் பள்ளி மாணவன் கார்த்திகேயன் முதல்பரிசும், தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவன் கமலேஷ் இரண்டாம் பரிசும், தென்காசி இசக்கி வித்யாரம் பள்ளி மாணவி ஏ.சுஷ்மிதா மூன்றாம் பரிசும், கட்டுரைப்போட்டியில் நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவி மகேஸ்வரி முதல் பரிசும், குற்றாலம் டி.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவிஷா இரண்டாம் பரிசும், இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவி கங்காலெட்சுமி மூன்றாம்பரிசும், ஸ்லோகன் எழுதுதல் போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவிகள் ஜீவிகா முதல் பரிசும், தீபிகா இரண்டாம் பரிசும், அனுபாரதி மூன்றாம் பரிசும், பேச்சுப்போட்டியில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி மாணவி ராபிகா, இல்லம்தேடிகல்வி தன்னார்வலர் நல்லமங்கை ஆகியோர் பரிசு பெற்றனர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • பாபநாசம் ஒன்றிய அளவிலான பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் வருகிற 25-ம் தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோ. துரை சதுரங்க போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட சதுரங்க விளையாட்டு போட்டி செயலாளர் சிலம்பரசன், துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன், தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.விழாவில் பாபநாசம் ஒன்றிய அளவிலான பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் வருகிற 25 -ம் தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. முடிவில் உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • பள்ளியில் பயிலும் 190 மாணவர்கள் செஸ் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்துமேல்நிலை ப்பள்ளியில் சென்னையில் நடைபெற இருக்கும் 44-வது செஸ் ஒலிம்பி யாட் போட்டிகள் குறித்தவி ழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் 190 மாணவ-மாணவிகள் செஸ் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டியிலும், 42 மாணவ-மாணவிகள் சதுரங்க விளையாட்டு குறித்த பேச்சு போட்டியிலும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை யில் நடந்தது.

    பள்ளி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பள்ளித்து ணை ஆய்வாளர் செளந்த ரராஜன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், வரதராஜன், ஓவிய ஆசிரியர் கண்ணன், ஆசிரியர் சீனிவாசன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் முரளி நன்றி கூறினார்.

    • போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர்.
    • இறுதி போட்டியில் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதியதில் சீர்காழி அணி வெற்றி பெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லை வாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவுபகலாக மின்னொளியில் நடை பெற்று வந்தது.

    போட்டி க்கு பள்ளி தாளாளர் ராதாகிரு ஷ்ண ன்தலைமை வகித்தார். திருமுல்லை வாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார்.போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில்தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதி போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதின. இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர். சி.பி.எஸ்.இ பள்ளி செய்தி தொடர்பாளர் பிரேம் நன்றி கூறினார்.

    • 16 பதவியிடங்களுக்கு தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.
    • வெற்றிபெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாமக்கல்:

    உள்ளாட்சி இடைத்தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 16 பதவியிடங்களுக்கு தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.

    20-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 16 பதவிகளுக்கு 50 மனுக்கள் பெறப்பட்டதில் 11 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இதில் 5 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

    எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் இளநகர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக சுப்பிரமணியம், மாவுரெட்டிப்பட்டி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக பூங்கொடி கந்தசாமி, கபிலர்மலை ஒன்றியம் சிறுநெல்லிக்கோவில் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினராக ஜெய்பிரவின், பரமத்தி ஒன்றியம் செருக்கலை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக சுதா சக்திவேல், திருச்செங்கோடு ஒன்றியம் சிறுமொளசி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக கவுரி பிரபாகரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

    மீதமுள்ள 11 காலிப்பதவியிடங்களில் 34 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று நடந்தது.

    மாவட்டத்தில் உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினராக தி.மு.க. சார்பாக போட்டியிட்ட உஷாராணி ஜனார்த்தனன் 389 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சண்முகம் 3108 ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்றார்.

    நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தங்கமணி செல்வகுமார் 1407 ஓட்டுகள் வாங்கி பெற்றார். எருமப்பட்டி வடவத்தூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சகுந்தலா ராமர் 128 ஓட்டுகளுடனும், நாமகிரிபேட்டை மத்துருட்டு ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அங்கமுத்து 182 ஓட்டுகளுடனும், பள்ளிபாளையம் ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜெகதீஷ் 190 ஓட்டுகளுடனும், தட்டாங்குட்டை ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நாகராஜ் 648 ஓட்டுகளுடனும் வெற்றி பெற்றனர்.

    இதேபோல் புதுச்சத்திரம் ஒன்றியம் கதிராநல்லூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சண்முகம் 174 ஓட்டுகளுடனும், ராசிபுரம் ஒன்றியம் மேளப்பாளையம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக தாமரைச்செல்வி 138 ஓட்டுகளுடனும், சேந்தமங்கலம் ஒன்றியம் கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக சர்மிளா தமிழ்செல்வனும் வெற்றிபெற்றுள்ளார்கள். வெற்றிபெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ×