search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி"

    • ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
    • நாட்டை மறு கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார்.

    அர்ஜென்டினா நாட்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜேவியர் மிலே புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தொலைக்காட்சி விவாதத்தில் நெறியாளராக பணியாற்றிய போது அரசியல்வாதிகளிடம் எழுப்பிய கடுமையான கேள்விகளால் பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராகி இருக்கிறார். இவர் பதவி ஏற்க சென்ற போது ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஹபியர் பிலேவுக்கு வளர்ப்பு பிராணிகள் மீது அதிக பாசம் உண்டு.

    பதவி ஏற்க சென்ற போது வாகனத்தை நிறுத்தி ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தனது ஆதரவாளர் ஒருவரின் வளர்ப்பு நாயை கொஞ்சி மகிழ்ந்தார். இதைத்தொடர்ந்து ஜேவியர் மிலே அர்ஜென்டினா நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாட்டை மறு கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார்.

    • 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.
    • பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்தது.

    உலக கோப்பை போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெ்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பையை வெல்லப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுகிறது. எந்த அணி உலக கோப்பையை வெல்லும்? என்பது தொடர்பாகவும், யார் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள், பந்து வீசுவார்கள், எவ்வளவு ஸ்கோர் குவிக்கப்படும் என்பது தொடர்பாக பெட் டிங் கட்டப்பட்டு வருகிறது.

    சுமார் 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.

    ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் இந்த தொகை பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் கடந்த மாதம் 14-ந் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரூ.40 ஆயிரம் கோடிக்கு பந்தயம் நடைபெற்றது. அதை மிஞ்சும் வகையில் இறுதிப் போட்டியில் ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது.

    பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன. மேலும் இவர்கள் உலக கோப்பை இறுதி ஆட்டம் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும் என்றே கருதுகின்றனா். 300 முதல் 400 ரன் வரை வரும் என்று சிறிய அளவிலான சூதாட்டதரகர்கள் பெட்டிங் கட்டி உள்ளனர்.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் மீது பெரும்பாலானோர் பந்தயம் கட்டி உள்ளனர். பந்து வீச்சை பொறுத்த வரையில் முகமது ஷமி மீது அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பும்ரா, முகமது சிராஜ் மீதும் பந்தயம் கட்டப்பட்டுள்ளது.

    • நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் ;

    கன்னியாகுமரி மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி ஒய்.எம்.சி.ஏ. மற்றும் நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆண்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் பார்வதிபுரம் ஈடன்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தினக்ஷ் குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். 2-ம் இடத்தை கிறிஸ்டோ வில்மோகன் பெற்றார்.

    பெண்கள் பிரிவில் அனிலா பானு வெற்றி பெற்றார். 19 வயதிற்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் வைஷ்ணவி, ஆண்கள் பிரிவில் தருண், 17 வயதிற்குட்பட்டோர்களில் டிரிபோன்ஸா, தருண் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஒய்.எம்.சி.ஏ.தலைவர் டட்லிபென், செயலர் ரஞ்சித் அம்பலோஸ், விஜயகுமரி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    • குமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி மேலிட பொறுப்பாளர் சின்னத்துரை பேச்சு
    • கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமை தாங்கினார். அவை தலைவர் சிவ.குற்றாலம் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் கே.ஏ.சலாம் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி மேலிட பொறுப்பாளரும், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான தூத்துக்குடி சின்னத்துரை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்பொழுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்று வெளியில் சொல்லிக் கொள்கின்றனர்.

    மகளிர் உரிமை தொகை ரூ.1000 அனைவருக்கும் கொடுப்பதாக தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது அனைவருக்கும் கொடுக்கவில்லை. மேலும் தற்பொழுது 1 அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஆய்வு செய்யப்பட்டு அதில் வருமானம் அதிகமாக இருந்தால் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆகையால் இது ஒரு மோசடி திட்டம் ஆகும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் தெளிவான பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, இளைஞரணி மற்றும் கட்சியில் இருந்து 19 பேரை ஒரு பூத்துக்கு நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். மேலும் 50 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் 810 கமிட்டிகள் உள்ளன. இதை சரியான முறையில் ஒருங்கிணைத்து நாம் திட்டமிட்டு பணியாற்றினால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். இதற்காக அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண் டும். அதன் பிறகு எடப்பாடி யார் சுட்டிக்காட்டுபவரே பிரதமராக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மேரி கமலபாய், அல்போன்சாள், ஒன்றிய செயலாளர்கள் நிமால், மணி, மெர்லியன்ட் தாஸ், ஜார்ஜ், சுதர்சன், அணிச் செயலாளர்கள் வக்கீல் அருள் பிரகாஷ் சிங், ரெஞ்சித், வினோஜ், மனோ, மகாஜி செல்வகுமார், ஜாண் மற்றும் நிர்வாகிகள் முத்தழகன், திருமலை யாண்டி பிள்ளை, முருகன், அண்ணா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சில்வெஸ்டர் நன்றி கூறினார்.

    • அண்ணா சைக்கிள் போட்டி சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.
    • முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

    13 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தீக்ஷனா, விஜயலட்சுமி, ஜெய்ஸ்ரீராம் அகாடமி மாணவி பொன்ரிகாஷினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தையும், சன்மதி 2-வது இடத்தையும், அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் அகாடமி பள்ளி மாணவி நேகா 3-வது இடத்தையும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் அஞ்சலி சில்வி, மதுமிதா, ராகவர்த்தினி ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.

    மாணவர்கள் பிரிவில் 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திருப்பூர் சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி பள்ளி மாணவர் சாம் பிரசாத் முதலிடத்தையும், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் விஸ்வா 2-வது இடத்தையும், ஜீவானந்தம் 3-வது இடத்தையும் பிடித்தனர். 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முகுந்தன் முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிஷ் 3-வது இடத்தையும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர் மணிபிரசாத் முதலிடத்தையும், பெருமாநல்லூர் அரசு பள்ளி மாணவர் கோடீஸ்வரன் 2-வது இடத்தையும், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர் முகமது இப்ராகிம் வாசிக் 3-வது இடத்தையும் வென்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், உடற்கல்வி இயக்குனர் ராஜாராம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட கபடி நடுவர் குழு தலைவர் முத்துசாமி, நேரு யுவகேந்திரா ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

    முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியே வாழ்வில் வெற்றி பெற செய்யும் என முன்னாள் டி.ஜி.பி. பேசினார்.
    • ஒரு முயற்சியே கனவாக திட்டமிட்டு செயல்படுத்தினால் கனவை நினைவாக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா அவர் படித்த தனியார் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் கலெக்டர் விஷ்ணுசந்திரன், முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு தனியார் அமைப்பின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் சைலேந்திர பாபு பேசியதாவது:-

    எண்ணற்ற தமிழர்கள் உலகளவில் சாதனை படைத்து வருகிறார்கள். அதற்குக் காரணம் கல்வி தான். அதிலும் இனிவரும் காலங்களில் அறிவியல் நிறைந்த உலகமாக மாறப்போகின்றன. அந்த அறிவியலை நாம் முழு மையாக கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் இலட்சியம், கனவு, நேரம் இவை மூன்றும் குறிக்கோளாக முன்வைத்து செயல்பட வேண்டும்.

    நேற்றைய சாதனை யாளர்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அவர்களின் தனிப்பட்ட முயற்சியே வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

    அதனால் இன்றைய மாணவர்கள் நாம் ஏழ்மையில் இருக்கிநோம். அதனால் சாதிக்க முடியாது என்று எண்ணக்கூடாது.

    முயற்சி தான் ஒவ்வொருவருக்கும் வெற்றி. ஏழை மீண்டும் ஏழையாக வர முடியாது. ஆனால் முயற்சித்தால் வசதி படைத்தவர்களாக மாறிவிட முடியும். அதற்கு தேவை முயற்சி அந்த ஒரு முயற்சியே கனவாக திட்டமிட்டு செயல்படுத்தினால் கனவை நினைவாக்கலாம்.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சாதனையாளர்கள்தான்.அதை சரித்திரமாக்குவது தான் உங்கள் லட்சியமாக இருக்க வேண்டும். இன்றைய நாள் நமது லட்சியத்திற்கு ஏற்ற நாள் என உணர்ந்து செயல்பட்டு ஒவ்வொரு வரும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, எக்ஸ்போரியா குலோப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் சசிநாயர், நாகா, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக நிர்வாகி செஞ்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்பழ கன் தலைமை தாங்கினார்.
    • முடிவில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த செஞ்சி சட்டமன்ற தொகுதி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சி- திருவண்ணா மலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக நிர்வாகி செஞ்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்பழ கன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக் தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்வரும் நாடாளு மன்ற தேர்தலை சந்திக்க தொகுதியில் உள்ள பாக முகவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் பணியில் பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.  நாம் முதல்-அமைச்சர் செய்துள்ள அனைத்து திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தால் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியினர் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழ் செல்வன், மாசிலாமணி, மாநில தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர் அமுதா ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, செல்வி ராம. சரவணன், மாவட்ட மகளிர் .அணி திலகவதி, மாவட்ட மாணவர் அணி பிரசன்னா, அனைத்து ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • ஒவ்வொரு தொகுதி யிலும் ராகுல்காந்தி தான் வேட்பாளர் என்று நினைத்து நீங் கள் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசியில் காங்கிரஸ் கட்சியின் விருதுநகர், தென்காசி பாராளுமன்ற தொகுதிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு நடை பெற்றது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், எம்.பி. கலந்து கொண்டு பேசிய தாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கிய மானது. ஒவ்வொரு தொகுதி யிலும் ராகுல்காந்தி தான் வேட்பாளர் என்று நினைத்து நீங் கள் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்குசாவடி யிலும் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக வாக்கு பதிவாகி இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்.

    இந்த தேர்தல் இந்தியா கூட்டணிக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் நடக்கும் தேர்தல் ஆகும். பா.ஜ.க. மக்க ளிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் ராகுல் காந்தி பாதையாத்திரை மேற்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கருத்து கணிப்பில் 70 சதவீதம் மக்கள் ராகுல்காந்தி பிரத மராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள் ளனர். வருகிற ேதர்தலில் அதிக இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் விஜய் வசத்த் எம்.பி., தமிழ்நாடு சிறு பான்மை ஆணை யத்தின் தலைவர் பீட்டர் அல் போன்ஸ், முன்னாள் எம்.பி விஸ்வநாதன், அசோகன் எம்.எல்.ஏ.க்கள் ராதா கிருஷ்ணன், பழனி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், சிரஞ்சிவி, காமராஜர், ஸ்ரீராஜாசொக் கர், ரங்கசாமி, அம்மாபட்டி பாண்டியன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாணவர் காங்கிரஸ் தலை வர் சின்னதம்பி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

    தென்காசி:

    நெல்லை பிரான்சிஸ் சேவியர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, செயல்திட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர், ரோஸ்மேரி, பிரான்சிஸ் சேவியர், டான்பாஸ்கோ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர்கள் நித்திஸ், ஜெயதர்ஷன், ஸ்ரீஜித் ஆகியோர் கழிவறை தொட்டியை சுத்திகரிக்கும் வேளையில் ஏற்படுகின்ற உயிரிழப்பைத் தடுக்கும் விதமான செயல்திட்டத்தை வடிவமைத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரான்சிஸ் சேவியர்ஸ் கல்லூரி சார்பாக பாராட்டு சான்றிதழும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    • போட்டியில் மாணவி சிவமுத்துலெட்சுமி முதலிடம் பிடித்தார்.
    • மாணவன் அருண், மாணவி ராமலெட்சுமி ஆகியோரும் போட்டியில் வெற்றி பெற்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் முன்னாள் சபாநாயகர்கள் ஆவுடையப்பன், செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    கருத்தரங்கில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் பேசிய தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி சிவமுத்துலெட்சுமி முதலிடம் பிடித்தார். இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் சக்தி 2-வது இடமும், முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் முகம்மது சிராஜ் 3-வது இடமும் பிடித்தனர்.

    மேலும் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் அருண், பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி பிளஸ்-2 மாணவி ராமலெட்சுமி ஆகியோரும் போட்டியில் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாருமான ஆவுடையப்பன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியல் பழனிநாடார் எம்.எல்.ஏ., சட்டப் பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணை செயலாளர் சாந்தி, துணை செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் வரதராஜன். தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பாஸ்கர், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சதீஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.
    • 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார்.

    மாலத்தீவு:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராக அறியப்படும் அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.

    கடந்த 9-ந்தேதி அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை. அந்நாட்டை பொறுத்தவரை அதிபராக 50 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும்.

    இதையடுத்து இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார். அதிபர் முகமது சோலி தோல்வியை தழுவினார். அவர் தான் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மூயிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 61 வயதான முகமது சோலி நவம்பர் மாதம் 17-ந்தேதி வரை புதிய அதிபர் பதவியேற்கும் வரை தற்காலிக அதிபராக பதவி வகிப்பார்.

    சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

    ஏனென்றால் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அதிபர் சோலி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தனது ஆட்சியில் இந்தியாவுக்கு அளவுக்கு அதிகமாக இடமளிப்பதாகவும், மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.

    மேலும் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய ராணுவத்தினரை மாலத்தீவில் இருந்து திருப்பி அனுப்பப் போவதாக அறிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டை அதிபர் முகமது சோலி மறுத்தார். மாலத்தீவில் நடந்து வரும் கட்டமைப்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • கட்சியினர் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் 3 தொகுதி களிலும் நாம் வெற்றி பெறலாம்.

    நாகர்கோவில் :

    முன்னாள் முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆரல் வாய்மொழி நகர பூங்காவில் வைத்து நடைபெற்றது. தோவாளை ஒன்றிய செயலாளர் மகராஜ பிள்ளை தலைமை தாங்கி னார். ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலா ளருமான முத்துக்குமார், மாவட்ட இணைச்செயலா ளர் சாந்தினி பகவதியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தள வாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி கிழக்கு மாவட்டத்தில் கட்சியினர் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் 3 தொகுதி களிலும் நாம் வெற்றி பெறலாம். வாழ்க்கை நெறிமுறை தேவையில்லை என ஒரு அமைச்சர் பேசி கொண்டிருக்கிறார். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வாழ்க்கை நடத்துவதற்கு நெறிமுறை கள் தேவை. ஆனால் தமிழக முதல்-அமைச்சரின் மகன் அந்த நெறிமுறையை அழிக்க முயற்சிக்கிறார். அவர், அவருடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்.

    தி.மு.க. கடந்த 2½ ஆண்டு ஆட்சியில் குமரி மாவட்டத் திற்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. விவசா யிகளுக்கு தேவையான விதை கிடைக்கவில்லை, விவசாயத்திற்கு தேவை யான தண்ணீர் இல்லை. இது மாவட்ட நிர்வாகத்தின் திறமையின்மையை காட்டு கிறது.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அவரது பத்மநாபபுரம் பகுதியில் நான்கு பால் சொசைட்டி களை ஆரம்பித்தார். இது தேர்தல் நேரத்தில் ஆரம் பிக்கப்பட்ட பால் சொசைட்டி. இப்போது அங்கு யாரும் பால் கொடுப்பதில்லை. பாலே கொடுக்காத சொசைட்டி அங்கே தான் உள்ளது.

    குமரியில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாவட்டத்தின் உச்ச அதிகாரி சட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டுள்ளார், ஒழுங்கை யும் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார். அவர் நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் பாதுகாப்போடு கட்டிடம் கட்ட பாதுகாப்பு வழங்குகிறார். தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டனர். அவர்கள் வைத்திருக்கும் கூட்டணி யின் பெயர் இந்தியா. அதன் கதாநாயகன் ஸ்டாலின். அந்த கட்சியே ஊழல் கட்சி ஊழலுக்காக இரண்டு முறை தி.மு.க. டிஸ்மிஸ் செய்யப்பட் டுள்ளது. தி.மு.க.வினர் தேர்தல் நேரத் தின் போது அனைவருக்கும் நகைகடன் தள்ளுபடி என்று கூறி னார்கள். ஆனால் அது அனைவருக்கும் கிடைக்க வில்லை. அனைத்து மக ளிர்க்கும் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படும் என்றனர். இப்போது அதுவும் அனைவருக்கும் இல்லை தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் மக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், தலைமை கழக பேச்சாளர் பட்டணம் (எ) நைனா முகம்மது, அணி செயலாளர்கள் மனோகரன், சுகுமாரன், சுந்தரம், மாவட்ட வக்கீல் அணி துணைச்செயலாளர் பரமேஸ்வரன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர்நாத், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, ஆரல் வாய்மொழி பேரூராட்சி கவுன்சிலர் நவமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சண்முகநாதன் நன்றி கூறினார்.

    ×