search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி"

    • செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
    • இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

    '8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பம்பர்'. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.



    கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.



    • நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என மாபா பாண்டியராஜன் கூறினார்.
    • தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது.

    விருதுநகர்

    விருதுநகரில் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டிய ராஜன் கூறியதா வது:-

    மத்திய அரசு மின் கட்ட ணத்தை உயர்த்த வில்லை மானியத்தை தான் திரும்ப பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக் கும் தகவல் பரிமாற்றத்தில் உள்ள இடைவெளி காரணமாக பிரச்சினை ஏற்பட் டுள்ளது.

    ஏற்கனவே தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டது. தமிழக நிதி அமைச்சர் மானியங்களை பெறுவதில் அக்கறை கொண்டு மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசி தீர்வு காண வேண்டும். விருதுநகரில் அம்மா உணவகம் பூட்டப்பட்டுள் ளது. இதனை உடனடியாக திறக்க கோரி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அடை யாளம் காட்டும் வேட்பா ளரை வெற்றி பெறச்செய்வோம்.

    இலங்கை தமிழர் பிரச்சி னையில் அ.தி.மு.க. என்றுமே அரசியல் செய்த தில்லை. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணா மலை குறிப்பிட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் செய்த சில அரசி யல் கட்சிகளை பற்றி தான்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மற்றும் மாபா பாண்டிய ராஜன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மான்ராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஒன்றிய செய லாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    '8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பம்பர்'. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.



    கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



    இந்நிகழ்ச்சியில் நடிகர் வெற்றி பேசியதாவது, முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன். தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன். இயக்குனர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர் நினைத்தது போலப் படம் வந்துள்ளது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

    • தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் சஎன்று சுதாகர்ரெட்டி உறுதி கூறினார்.
    • மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    தமிழகத்திற்கான பா.ஜ.க. மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மோடி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து தரப்பினருக்குமான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நாங்கள் மக்களிடம் இதை தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் நடத்தி வருகிறோம். வர இருக்கின்ற நாடாளு மன்ற தேர்தலில் தொடர்ந்து பிரதமர் மோடி நீடிக்க ஆதரவு தருமாறு கேட்டு வருகிறோம்.

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக பல்வேறு தகவல்களை சொல்லி வருகிறார். நாங்களும் வாக்கு வங்கிக்காக தான் பேசி வருகிறோம். ஆனால் செய்த சாதனைகளை சொல்லி ஆதரவு கேட்கிறோம்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. விருதுநகர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும்.

    விருதுநகர் அருகே பட்டம் புதூரில் அறிவிக்கப் படட ஜவுளி பூங்கா திட்டமும் நடைமுறைக்கு வரும். சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தை பொறுத்தமட்டில் அமித்ஷா அறிவித்தபடி வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க. தலைமைக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை.

    செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் இருக்கும் போது அவர் மீது மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணை கோரினார். ஆனால் தற்போது அதனை எதிர்க்கிறார். தி.மு.க.வில் சேர்ந்தால் ஊழல் மாயமாகி விடும் என்பது முதல்வரின் கருத்தாக உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள்.
    • தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

    கோவை:

    கோவை சின்னியம்பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கூட அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும்.

    எனவே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் மவுனம் காத்து இருக்காமல் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த அறிவிப்பானது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. எனவே அரசு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டும்.

    தமிழகத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல வழிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி கிடக்கிறது. அதனை சீர் செய்ய வேண்டும். கொங்கு மண்டல பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த வாழை பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    மேலும் தென்னை விவசாயிகள் நீண்ட நாட்களாக கேட்டு வரும் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

    பொதுமக்கள் நடமாடும் இடங்களில் விளம்பர பேனர்களை வைப்பதை அனைத்து கட்சிகளும் தவிர்க்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

    அவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அடுத்த மாதம் 15-ந் தேதி மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சையில் மிக பிரமமாண்டமாக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துகட்சி தலைவர்களும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள், வைத்தியலிங்கம் இல்ல திருமணவிழாவில், டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் சந்தித்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க, த.மா.கா மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே அணியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம் என்றார்.

    • ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 48 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன.
    • ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கிங்ஸ் கிளப் 62-31 என்ற புள்ளி கணக்கில் முகப்பேர் கிளப்பை தோற்கடித்தது.

    சென்னை:

    மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 19-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்குபிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நேற்று தொடங்கியது. அமெட் பல்கலைக்கழக இணைவேந்தர் திருவாசகம், மீஞ்சூர் யூனியன் சேர்மன் ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

    போட்டி அமைப்பு குழுவை சேர்ந்த டாக்டர் ஏ.எம்.எம். செல்வராஜ், கே.எத்திராஜ், மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் எம்.எம்.டி.ஏ. கே.கோபி, செயலாளர் எம்.கனகசுந்தரம், துணைத் தலைவர் எஸ்.எஸ்.குமார், பொருளாளர் கே.ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 48 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன. நேரு ஸ்டேடியத்திலும் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கிங்ஸ் கிளப் 62-31 என்ற புள்ளி கணக்கில் முகப்பேர் கிளப்பை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் எம்.ஆர்.எம். கூடைப்பந்து கிளப் 52-40 என்ற கணக்கில் ஒய் கூடைப்பந்து கிளப்பை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் சாம் கிளப், சென்னை கிளப், விக்னேஸ்வரா கிளப் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    • இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
    • கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-–ம் ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20–-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    4-வது நாளான இன்று நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. அப்போது இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது.

    இதில் இந்திய கப்பல் படை அணி 73–- 35 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 96 –- 51 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    • சிவகாசி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
    • தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் ராம்கோ கிளப் சார்பில் தென்னிந்திய அளவிலான ராம்கோ டிராபி 2023- 24-ம் ஆண்டு டி-20 கிரிக்கெட் போட்டிகள் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் மைதா னத்தில் ராம்கோ கிரிக்கெட் கிளப் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. ராம்கோ கிரிக்கெட் கிளப் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து 32 அணிகளும், 480-க்கும் மேற்ப்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.

    முதல் மற்றும் 2-ம் பரிசுக்கான போட்டி நேற்று மாலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சிவகாசியைச் சேர்ந்த சிவகாசி ஸ்டார்ஸ் அணியும், விருதுநகரைச் சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிவகாசி ஸ்டார்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி விருதுநகரை சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சிவகாசி ஸ்டார் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முதல் பரிசையும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் பெற்றது.

    போட்டியில் சிவகாசி ஸ்டார் அணி முதல் பரிசையும், விருதுநகர் அக்குவா கிங்ஸ் அணி 2-ம் பரிசையும், ராஜபாளையம் ராம்கோ குரூப் அணி 3-ம் பரிசையும் தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராம்கோ நூற்பாலை பிரிவுகளின் தலைவர் மோகனரங்கன், முன்னாள் கூட்டுறவு வங்கியின் மேலாளரும், ராஜபாளையம் தி.மு.க. தெற்கு நகர செயலாளருமான பேங்க்ரா மமூர்த்தி, சரஸ்வதி அகாடமி நிறுவனர் மணிகண்டன், 36-வது வார்டு கவுன்சிலர் குணாகோபிநாத், 37-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் மற்றும் தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

    • புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 'லீக்' ஆட்டங்களும், 'பிளேஆப்' சுற்றின் 2 போட்டிகளும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி 'லீக்' ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டியில் வெற்றி பெற்றன. மூன்றில் தோற்றது.

    'பிளேஆப்' சுற்றின் 2 ஆட்டங்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) 23-ந்தேதியும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) போட்டி 24-ந்தேதியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-இரண்டாவது இடத்தை பிடித்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். குஜராத் அணிக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும்.

    புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன. லக்னோ 3-வது இடத்தை பிடித்து உள்ளது. 4-வதாக நுழையும் அணி இன்று இரவு தெரியும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத் தில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    • போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
    • 8-வது லீக் ஆட்டத்தில் யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ் டல் ஆப் எக்ஸலன்ஸ்- எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகள் மோதுகின்றன.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்ட ளையின் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறு கிறது.

    3-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் கஸ்டம்ஸ் புனே அணியும், இந்தியன் பேங்க் சென்னை அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் கஸ்டம்ஸ் புனே அணி வெற்றி பெற்றது.

    8-வது லீக் ஆட்டத்தில் யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ் டல் ஆப் எக்ஸலன்ஸ்- எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகள் மோதுகின்றன.

    9-வது லீக் ஆட்டத்தில் ரெயில் வீல் பேக்டரி பெங்களுரு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சென்னை அணியும், 10-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க், நியூ டெல்லி மற்றும் நிஸ்வாஸ் ஹாக்கி டீம் பாம்போஸ் அணிகளும் மோதுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடை பெறும் இப்போட்டிகளின் தமிழ் நாடு போலீஸ் சென்னை- சாய்-எஸ்.டி.சி. பெங்களூரு அணிகள் மோதுகின்றன,

    இதேபோல் பெட்ரோ லியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோ மோஷன் போர்டு -சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை அணிகளும் காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா, நியூ டெல்லி - ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகளும், சவுத் சென்ட்ரல் ரயில்வே, செகந்திராபாத் - இந்தியன் பேங்க் சென்னை அணிகளும் மோதுகின்றன.

    • சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.
    • மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    வாழ்க்கை எனும் அழகான பயணத்தில் பொருளாதாரம், குடும்பம் அல்லது சூழ்நிலையின் காரணமாக நாம் விரும்பிய செயலையோ அல்லது வேலையையோ செய்ய முடியாமல் போகலாம். பலர் பொருளாதார மேம்பாட்டிற்காக தனக்கு பிடித்த, இயல்பாக வரக்கூடிய வேலையை செய்யாமல், வேறு வேலையை முழுமனம் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

    பல வருடங்கள் கழித்து, நாம் வாழ்ந்த வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், நமக்கு பிடித்ததை செய்யவில்லையே, வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவிக்காமல் இருந்துவிட்டோமே என்ற கவலை ஏற்படும்.

    ஒருசில நேரங்களில் பொருளாதாரம் அல்லது சூழ்நிலைக்காக சில விஷயங்களை செய்யாமல் இருப்பதோ அல்லது தள்ளிப்போடுவதோ நல்லதுதான், ஆனால் எல்லா நேரத்திலும் அவ்வாறு செய்தால், ஒரு கட்டத்தில் 'ஏன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தோம்? யாருக்காக வாழ்ந்தோம்? என்ற கேள்வி தோன்ற ஆரம்பிக்கும்.

    வாழ்க்கையை உங்களுக்காக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் செய்கிற வேலையை செய்தால், நாமும் அவர்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய மகிழ்ச்சியை வேறு யாராலும் வரையறுக்க முடியாது.

    எது உங்களுக்கு திருப்தியானது அல்லது நிறைவானது என்று யாராலும் சொல்ல முடியாது. அதை உங்களால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு எந்த வேலை பிடித்து இருக்கிறதோ, அந்த வேலையை தேர்ந்தெடுத்து முழுமையாக மன நிம்மதியுடன் செய்யுங்கள்.

    மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    எப்போதாவது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பது நல்லது. ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து யோசிக்கக்கூடாது. நீங்கள் எப்படி இருந்தாலும், எவ்வளவு விசித்திரமாக இருந்தாலும், உங்களை நீங்களே பாராட்டுங்கள்! ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்.

    பெண்களே உங்களுக்கு இருக்கும் தனித்துவத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். அவ்வப்போது பிடித்தவற்றை வாங்குங்கள். பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். பிடித்த உணவை பிடித்த இடத்தில் சாப்பிடுங்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.

    நீங்கள் இதுவரை பிடிக்காத வேலையை செய்து கொண்டிருந்தால், இனி உங்களுக்கு பிடித்தவாறு அதை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசியுங்கள். இடைவேளை நேரத்தில் உங்களுக்கு பிடித்த செயலில் உங்களை ஈடுபடுத்துங்கள். புதிய வேலையை செய்யத் தோன்றினால் தயக்கமின்றி செய்யுங்கள்.

    'வயதாகி விட்டது, இனி நாம் என்ன செய்து என்ன நடக்கப் போகிறது?' என்று எண்ணாதீர்கள். இதுவரை உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை பற்றி யோசிப்பதை விடுத்து, இனி உங்களுக்கு பிடித்தவாறு எப்படி வாழலாம் என்று யோசியுங்கள்.

    • கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • போட்டியில் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    தென்காசி:

    இந்திய வலு தூக்கும் சங்கம் மற்றும் தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுக்கான தேசிய வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

    மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வலு தூக்கும் சங்க மாநில தலைவர் ராஜா எம்.எல்.ஏ., மாநில செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் 24 மாநிலங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியானது வருகிற 17-ந்தேதி வரை நடைபெறும். நேற்று 53, 59 கிலோ உடல் எடை பிரிவில் நடைபெற்ற போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பரிசுகளை வென்றனர். ஏற்பாடுகளை தேசிய வலுதூக்கும் சங்க செயலாளர் ஜோசப், தேசிய வலுதூக்கும் சங்க தலைவர் சதீஷ்குமார், நெல்லை மாவட்ட தலைவர் சிவராமலிங்கம், செயலாளர் சண்முகசுந்தரம், தென்காசி மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முருகன், ரவிக்குமார், குத்தாலிங்கம் சரவணகுமார், ஜோதிமாணிக்கம், ஹிரா அப்துல் ரசாக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    ×