search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிடம்"

    • இன்று பவுர்ணமி.
    • திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோவில் தேரோட்டம்

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 7 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: சதுர்த்தசி காலை 7.44 மணி வரை. பிறகு பவுர்ணமி.

    நட்சத்திரம்: கேட்டை இரவு 8.58 மணி வரை. பிறகு மூலம்.

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பவுர்ணமி. சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருக்கோளக்குடி ஸ்ரீசிவபெருமான் வெள்ளி விருஷப சேவை. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி தெப்பம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவில் தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் குசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-நலம்

    கடகம்- நன்மை

    சிம்மம்-பக்தி

    கன்னி-தனம்

    துலாம்- சோர்வு

    விருச்சிகம்-சாதனை

    தனுசு- புகழ்

    மகரம்-சிந்தனை

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-திறமை

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-6 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி காலை 7.40 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: அனுஷம் இரவு 6.25 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராமர் கோவில்களில் சுவாமி புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் தங்க கைலாச வாகனத்திலும், அன்னை ஸ்ரீ காந்திமதியம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி வெண்ணைதாழி சேவை. திருக்கோளக்குடி கண்டதேவி, காணாடுகாத்தான் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் தேரோட்டம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-திறமை

    சிம்மம்-தேர்ச்சி

    கன்னி-பொறுமை

    துலாம்- கடமை

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- பொறுப்பு

    மகரம்-சாந்தம்

    கும்பம்-தாமதம்

    மீனம்-முயற்சி

    • இன்று பிரதோஷம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-5 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி காலை 6.58 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: விசாகம் மாலை 5.20 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி ஸ்ரீ சொக்கநாதர், திருப்பரங்குன்றம் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் சந்திர பிரபையிலும் பவனி. கானாடுகாத்தான் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரசூசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கவனம்

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-உண்மை

    கடகம்-சுகம்

    சிம்மம்-பரிவு

    கன்னி-பாசம்

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-அலைச்சல்

    தனுசு- ஆதரவு

    மகரம்-வரவு

    கும்பம்-விவேகம்

    மீனம்-முயற்சி

    • 21-ந்தேதி பவுர்ணமி.
    • 19-ந்தேதி கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    18-ந்தேதி (செவ்வாய்)

    * சர்வ ஏகாதசி.

    * திருக்கோளக்குடி சிவபெருமான் கயிலாய வாகனத்தில் உலா.

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.

    * திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (புதன்)

    * கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா. இரவு புஷ்ப சப்பரம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் ஊஞ்சல் சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (வியாழன்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கங்காளநாதர் காட்சி.

    * திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடு காத்தன் தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (வெள்ளி)

    * பவுர்ணமி.

    * காரைக்கால் அம்மை யார் மாங்கனி திருவிழா.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ உற்சவம்.

    * திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம்.

    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (சனி)

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்தில் உலா.

    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (ஞாயிறு)

    * திருத்தங்கல் அம்பாள் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா.

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக் கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (திங்கள்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்தி லும். தாயார் பூப்பல்லக் கிலும் பவனி.

    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    • மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ஊஞ்சலில் காட்சி.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-4 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி காலை 5.56 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: சுவாதி பிற்பகல் 3.47 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் பாற்குடக் காட்சி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ஊஞ்சலில் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-பரிவு

    மிதுனம்-கவனம்

    கடகம்-கடமை

    சிம்மம்-கண்ணியம்

    கன்னி-கட்டுப்பாடு

    துலாம்- தாமதம்

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- விவேகம்

    மகரம்-வரவு

    கும்பம்-முயற்சி

    மீனம்-நன்மை

    • சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
    • இன்று சர்வ ஏகாதசி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-3 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி (முழுவதும்)

    நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 1.48 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. சுப முகூர்த்த தினம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்பாள் ஸ்ரீ நெல்லையப்பர் வெள்ளி விருஷப சேவை. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் விழா தொடக்கம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-உயர்வு

    கடகம்-களிப்பு

    சிம்மம்-கருணை

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- ஆக்கம்

    விருச்சிகம்-சாதனை

    தனுசு- நிம்மதி

    மகரம்-நற்செயல்

    கும்பம்-பரிவு

    மீனம்-சாந்தம்

    • ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    • சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 2 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி நாளை விடியற்காலை 4.28 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: அஸ்தம் காலை 11.29 மணி வரை. பிறகு சித்திரை.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம், சோழவந்தான் ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உழைப்பு

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-மகிழ்ச்சி

    கடகம்- ஆதரவு

    சிம்மம்-களிப்பு

    கன்னி-தனம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-சிரமம்

    தனுசு- உழைப்பு

    மகரம்-லாபம்

    கும்பம்-வெற்றி

    மீனம்-இன்பம்

    • திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் குசாம்பிகை புறப்பாடு.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-32 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி நள்ளிரவு 12.46 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: பூரம் காலை 6.23 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் கோவில்களில் ஊஞ்சல் உற்சவ சேவை. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் குசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-நற்செயல்

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-பெருமை

    சிம்மம்-இன்பம்

    கன்னி-பரிவு

    துலாம்- செலவு

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- ஆதரவு

    மகரம்-உழைப்பு

    கும்பம்-உண்மை

    மீனம்-கடமை

    • பூழக்குற்றியில் செயல்பட்டு வந்த ஒரு கூட்டுறவு வங்கியில் 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    • 4 தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு கிணற்றினுள் போடப்பட்டுள்ளதாக ஆணித்தரமாக தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் கேரள காவல் துறை பணியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து சமூக வலைத்தளம் மூலமாக பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் அவர் கண்ணூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது நடந்த ருசிகர சம்பவம் குறித்து கூறியதாவது:-

    கண்ணூர் மாவட்டத்தில் இருட்டி என்ற இடத்திற்கு அருகே பூழக்குற்றியில் செயல்பட்டு வந்த ஒரு கூட்டுறவு வங்கியில் 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கண்காணிப்பு கேமரா உள்பட தொழில் நுட்ப வசதி இல்லாத காலம் என்பதால், சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகியும் கொள்ளை போன நகைகளை மீட்க முடியவில்லை. கொள்ளையர்கள் குறித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இதனிடையே, கொள்ளையர்களுக்கு போலீசார் உதவுவதாக கூறி பொதுமக்களும், வங்கி வாடிக்கையாளர்களும் போராட்டத்தில் குதித்தனர். கொள்ளை சம்பவம் குறித்து எந்த துப்பும் துலங்காததால் ஜோதிடத்தை நாட முடிவு செய்தேன்.

    இதற்காக பய்யனூரில் ஜோதிடர் வி.கே.பி.பொதுவால் என்பவரை ரகசியமாக சந்தித்து வங்கி கொள்ளை குறித்தும், அதுவரை நடந்த விசாரணை மற்றும் தொடர் விசாரணை தோல்வி குறித்தும் விளக்கினேன். அப்போது அவர், நகைகள் கொள்ளை போன வங்கி மேலாளரின் ஜாதகத்தை கொண்டு வரும்படி கூறினார்.

    அதனை பெற்று அவரிடம் கொடுத்தேன். அந்த ஜாதகத்தை படித்து பார்த்த ஜோதிடர், வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம், அதே வங்கியில் வேலை பார்த்து வரும் ஊழியரின் உதவியுடன் நடந்துள்ளது என கூறினார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கியில் இருந்து கிழக்கு திசையில் 4 கி.மீ தூரத்தில் சாலையோரம், 4 தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு கிணற்றினுள் போடப்பட்டுள்ளதாகவும் ஆணித்தரமாக தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து இரவோடு இரவாக அந்த பகுதிக்கு போலீஸ் படையுடன் சென்றோம். அங்கு ஜோதிடர் கூறியதை போல் தென்னை மரங்களுக்கு நடுவே ஒரு கிணறு இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தோம். பின்னர் அதில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வற்ற வைத்தோம்.

    இறுதியில் கிணற்றில் ஒரு இரும்பு பெட்டி (லாக்கர்) கிடந்தது. அதனை மீட்டு வெளியே கொண்டு வந்து திறந்து பார்த்த போது, கொள்ளை போனதாக கூறப்பட்ட 100 பவுன் நகைகள் அப்படியே இருந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்திருந்தது.

    பின்னர் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர் மற்றும் கொள்ளையர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த கொள்ளை வழக்கு தொடர்பான டைரி குறிப்பில், ஜோதிடம் பார்த்து கொள்ளையர்கள் பிடிபட்டதாக எழுதவில்லை. இவ்வாறு எழுதினால் சிரிப்பார்கள் என கருதி அந்த விவரத்தை எழுதவில்லை. ஆனால் ஜோதிடம் பார்த்து நகையை மீட்டது தான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-31 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி இரவு 10.44 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: பூரம் (முழுவதும்)

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், ராஜபாளையம் சமீபம் பெத்தவநல்லூர் ஸ்ரீ மாயூரநாதர் கோவில்களில் விழா தொடக்கம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஊஞ்சல் உற்சவ விழா தொடக்கம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலை சாற்று வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-நற்செயல்

    கடகம்-ஆசை

    சிம்மம்-நற்சொல்

    கன்னி-பொறுப்பு

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- பெருமை

    மகரம்-ஆதரவு

    கும்பம்-பரிசு

    மீனம்-பணிவு

    • இன்று சஷ்டி விரதம்.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 30 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி இரவு 8.56 மணி வரை. பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: மகம் பின்னிரவு 3.51 மணி வரை. பிறகு பூரம்.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுப முகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் யாளி வாகனத்தில் பவனி. திருக்கோளக்குடி கண்டதேவி, கானாடுகாத்தான் தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருத்தணி, திருப்போரூர் முருகப் பெருமான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உழைப்பு

    ரிஷபம்-சிரமம்

    மிதுனம்-நன்மை

    கடகம்- சுகம்

    சிம்மம்-கவனம்

    கன்னி-கடமை

    துலாம்- செலவு

    விருச்சிகம்-களிப்பு

    தனுசு- உறுதி

    மகரம்-ஆதரவு

    கும்பம்-லாபம்

    மீனம்-தெளிவு

    • 13-ந்தேதி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.
    • 16-ந்தேதி திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    11-ந்தேதி (செவ்வாய்)

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * குரங்கணி முத்துமாரியம்மன் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவாளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    12-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வியாழன்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.

    * திருக்கோளக்குடி சிவபெருமான் புறப்பாடு.

    * திருமயம் ஆண்டாள் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (வெள்ளி)

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் திருவீதி உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (சனி)

    * கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு.

    * சாத்தூர் வேங்கடேசபெருமாள் திருவீதி உலா.

    * திருக்கோளக்குடி சிவபெருமான் கேடய சப்பரத்திலும், இரவு பூத வாகனத்திலும் உலா,

    * மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * பக்ரீத் பண்டிகை.

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனத் தில் பவனி,

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    ×