search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலங்குளம்"

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.
    • முகாமில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிச்சான்பட்டி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினர்.

    இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், குறிச்சான்பட்டி ஒன்றிய கவுன்சிலர் முரளிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர், முதல் நிலை அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு, அன்பழகன், வாடியூர் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிசாமி, குறிச்சான்பட்டி ஊராட்சி தலைவர் மகர ஜோதி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் முத்துலெட்சுமி, ஆலங்குளம் வட்டார மருத்துவர் ஆறுமுகம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி மற்றும் மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் சாலை வசதிகள் உள்ளிட்ட 45 பொருள் குறிப்புகள் நிறைவேற்றப்பட்டது.
    • காய்-கனி சந்தையில் உரிமம் புதுப்பிக்காத கடைகளை திரும்ப ஏலம் விட வேண்டும்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சி சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் சங்கரசுப்பிமணியன் பொருள் குறிப்புகள் வாசித்தார்.

    கூட்டத்தில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம், ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் வெண்கல சிலை புதிதாக திறப்பு மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி மன்றத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்கியதற்கு ஆலங்குளம் பேரூராட்சி மன்றம் சார்பாக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் பேரூராட்சி பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொது சுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் உள்ளிட்ட 45 பொருள் குறிப்புகள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து உறுப்பினர் சாலமோன் ராஜா பேசுகையில், ஆலங்குளம் பஸ் நிலைய கழிவறையை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும். காய்கனி சந்தையில் உரிமம் புதுப்பிக்காத கடைகளை திரும்ப ஏலம் விட வேண்டும் என பேசினார். உறுப்பினர் பழனிசங்கர் பேசுகையில், போலீஸ் நிலையம் அருகில் நான்கு வழிச்சாலைக்காக அமைய உள்ள பாலத்தின் அடியில் பள்ளி மற்றும் தகன எரிமேடைகளுக்கு மக்கள் செல்லும் வகையில் பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிளை வலியுறுத்த வேண்டும் என்றார்.

    உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகையில், தனியார் பள்ளிகள் மிக குறைந்த அளவே சொத்துவரி செலுத்தி வருகின்றனர். அவர்கள் கட்டிட அளவுக்கு தக்க நியாயமான சொத்து வரி வசூலிக்க வேண்டும் எனவும், உறுப்பினர் சுந்தர் பேசுகையில், பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி பன்றிகள் வளர்ப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசினர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • ஒருவருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி ஊக்கத்தொகை விழாவில் வழங்கப்பட உள்ளது.

    ஆலங்குளம்:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக நாளை அவர் ஆலங்குளம் வழியாக குற்றாலம் வருகிறார். இதையொட்டி ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு வைத்து காமராஜர் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை யிட்டு மரியாதை செலுத்து கிறார். தொடர்ந்து ஆலங்குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த சுமார் 557 இள ஞர்களுக்கு விளையாட்டு உப கரண ங்களை அவர் வழங்குகிறார்.

    அதனைத்தொடர்ந்து தென்காசி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடை பெறும் ஆய்வு கூட்ட த்தில் கலந்து கொள்கிறார். மாலை 4 மணிக்கு தெ ன்காசி இசக்கி மஹாலில் தி.மு.க. இளை ஞரணி சார்பில் நடை பெறும் ஆலோசனை கூட்ட த்தில் கலந்து கொண்டு உரை யாற்றுகிறார். தொடர்ந்து கட்சியின் மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் அவர் கலந்து கொள்கிறார். ஒருவருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. தொ டர்ந்து அதே வளாகத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி ஆலோ சனை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு முதல் முறையாக வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம்அருகே கீழ வீரானத்தில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முகமது ஆகியோர் நிதியில் இருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் சேக் முகமது, தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் அப்துல்லா, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவர் அணி ரமேஷ், இளைஞர் அணி மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணம்மாள், வெங்கடேஷ், பழனி, வள்ளியம்மாள், முருகேசன், கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சரண் வேலை பார்த்து வந்தார்.
    • ராட்சத பள்ளங்களில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து அம்பை செல்லும் சாலையில் வசித்து வருபவர் தேவதாஸ். இவரது மகன் சரண்(வயது 20). இவர் ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

    தவறி விழுந்து பலி

    நேற்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த சரண், மீண்டும் மார்க்கெட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ஆலங்குளம் ஊர்மடை பகுதியில் சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் சரண் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், சரண் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம் பஜார் பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் புகார் கூறி வருகின்றனர். ஆலங்குளத்திற்கு மேல்புறம் மலைக்கோவில் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை சாலைப்பணி முடிவடைந்து விட்ட நிலையில் ஊர்மடை பகுதியில் இருந்து தொட்டி யான்குளம் வரையிலான சாலை அப்படியே கிடக்கிறது.

    இந்த சாலையில் ராட்சத பள்ளங்கள் உள்ளது. அதில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது. தினமும் அந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் சாலையின் இருபுறமும் கடை வைத்திருப்பவர்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமம் அடைகின்றனர் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே காலம் தாழ்த்தாமல் சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
    • மாநில சுற்றுச் சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா மாணவ- மாணவிகளுக்கு வினா, விடை போட்டி நடத்தி பரிசளித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மரம் நடும் விழா மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.

    விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் சபி சுலை மான், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாநில சுற்றுச் சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா சிறப்புரையாற்றி மரம் நடும் விழாவை தொடங்கி வைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வினா, விடை போட்டி நடத்தி பரிசளித்தார். விழாவில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன் அறிவழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், மாஞ்சோலை துரை, நெட்டூர் கிளைச் செயலாளர் கணேசன், மகேஷ் பாண்டியன், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • செந்தில்குமாருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செந்தில் குமார் பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வேலாயுதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை திடீரென செந்தில்குமார் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே செந்தில் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்பத்தகறாறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழாவின் 2-ம் நாள் காலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்திலும், இரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.
    • வருகிற 28-ந் தேதி முக்கிய நிகழ்வான தேர் வீதி உலா நடைபெறுகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி காலை சிம்ம லக்கனத்தில் கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டது.

    தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனையும், இரவில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    விழாவின் 2-ம் நாள் காலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாச னத்திலும், இரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.

    தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாரா தனை, மண்டகப்படி தீபாராதனை, சுவாமி வீதி உலா நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    விழாவின் 10 -ம் திருநாளான வருகிற 28-ந் தேதி முக்கிய நிகழ்வான தேர் வீதி உலா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.

    11 -ம் நாள் சுவாமி, அம்பாள் ரிஷப வாகன காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சுப்பிரமணிய உமாபதி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆலங்குளம் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • ஆலங்குளம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு, ஆலங்குளம் வந்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியம், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவரிடம், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில், தரம் உயர்த்தப்பட்ட ஆலங்குளம் அரசு வட்டார தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    அப்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது.
    • ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணி 30 நாட்களுக்குள் தொடங்கும்.

    ஆலங்குளம்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 15-வது நிதி குழு சுகாதார மானியத் திட்டம் 2021-22 மற்றும் தேசிய நகர சுகாதார மையம் 2021-22 நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ்குமார், தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலர் ஜெயபாலன், மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் வாழ்த்தி பேசினார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார கட்டிடம், கரிவல ம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சம் செலவில் வட்டார பொது சுகாதார கட்டிடம், மடத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் செலவில் புதிய கட்டிடம், மேலக் கடையநல்லூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 லட்சம் செலவில் புதிய கட்டிடம், மேலப்பாவூர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம், பொட்டல்புதூர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம் உள்ளிட்ட மொத்தம் ரூ.3.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்துப் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடி, நாய்க்கடி மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றிற்கான மருந்துகளை எப்போதும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் அரசு மருத்துவ மனையை மேம்படுத்தும் பணி 30 நாட்களுக்குள் தொடங்கும் என்றார்.

    தொடர்ந்து பெண்க ளுக்கு சஞ்சீவி பெட்டகம், பேறுகால ஊட்டசத்து பொருள்கள் வழங்கினார். முன்னதாக ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் மருதபுரத்தில் சிறப்பாக அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்பு பஸ் நிலையத்தில் கழக கொடி யினை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், ஆலடி எழில்வாணன், ஒப்பந்த தாரர் கணேஷ் பாண்டியன், மருத்துவர்கள் தண்டாயு தபாணி, குத்தால ராஜ், தேவி உத்தமி, சற்குணம், மோஹினா, அர்ச்சனா, சித்ரா, மாவட்ட நலக்கல்வி யாளர் ஆறுமுகம், மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, சித்த மருத்துவர்கள் ஜெபநேசம், சரஸ்வதி, தமிழ் முதல்வி, கமர் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கங்காதரன் மற்றும் செவிலி யர்கள், மருத்துவ பணியா ளர்கள், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, அன்பழகன், சீனிதுரை , சிவன் பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் வரவேற்றார். வட்டரா மருத்துவ அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    • கை.முருகன் உருப்படத்தினை தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
    • ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் கை.முருகன் படத்திற்கு மாலை அணிவித்தனர்.

    ஆலங்குளம்:

    கீழப்பாவூர் யூனியன் கழுநீர்குளம் பஞ்சாயத்து தலைவரும், முன்னாள் தி.மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான கை.முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி கல்லூத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

    கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன் தலைமை தாங்கினார். கை.முருகன் உருப்படத்தினை தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு, கை.முருகனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவியினை நிர்வாகிகள் முன்னிலையில் கை.முருகன் குடும்பத்தினரிடம் வழங்கினார். பின்னர் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், துணை செயலாளர்கள் தமிழ்செல்வன், கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அன்பழகன், அழகு சுந்தரம், ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருள், ராஜேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பொன்செல்வன், சமுத்திரபாண்டி, முத்துராஜ், பழனிசாமி, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம். எஸ்.ராஜன், பெத்த நாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், இளைஞரணி கோமு,மாவட்ட இளைஞரணி கிருஷ்ணராஜ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி சிவராஜன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன், குறும்பலாப்பேரி இளங்கோ, சுரேஷ் கண்ணா, தினேஷ், தங்கச்சாமி, தளபதி முருகேசன், தங்கேஸ்வரன், நாராயண சிங்கம், பாண்டி, காசிபாண்டி, சீனி நம்பியார், ராஜசேகர், ஜெகன், சீதாராமர், காளி முத்து, லிங்கம் திருமலைகுமார், அழகுதமிழ், மாறன், சுதன் ராஜா, ராம்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓடைப்பகுதியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி நூற்றுக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
    • அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களை பன்றிக் கூட்டங்கள் அச்சுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டத்தில் நகராட்சிக்கு இணையான மக்கள் தொகை கொண்டது ஆலங்குளம். மேற்கு பகுதியில் தாசில்தார் அலுவலகம் தொடங்கி அதனையொட்டி, கிழக்கு வரிசையில் சார்பதிவாளர் அலுவலகம், அஞ்சல் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டி.எஸ்.பி. அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, அரசுக் கருவூலம், பீடித் தொழிலாளர் நல மருத்துவமனை பஸ் நிலையம் என சுமார் 500 மீட்டர் தொலைவுக்குள் 15-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

    இந்த அலுவகங்களை யொட்டியும், அருகிலும் ஓடை செல்கிறது. மழைநீர் ஓடையாக இருந்து இது தற்போது கழிவு நீரோடையாக மாறிவிட்டது.

    இந்நிலையில் இந்த ஓடைப்பகுதியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி நூற்றுக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவை பெரும்பாலும் அனைத்து அலுவக வளாகத்திலேயே சுற்றித் திரிகிறது.

    குறிப்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே பழைய வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் மற்றும் கால்நடை மருந்தக வளாகம் ஆகியவற்றில் சுற்றித்திரிவதால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. முக்கிய பணிக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களை இப்பன்றிக் கூட்டங்கள் அச்சுறுத்துவதாக புகார் கூறுகின்றன.

    இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, பன்றிகளை அப்புறப்படுத்தி அவற்றை வளர்ப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் பன்றிகள் வளர்ப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் ஆலங்குளத்தின் மேற்குப்பகுதி துர்நாற்றத்து டனேயே காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×