search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228775"

    • ஓட்டலில் வாடிக்கையாளரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டன்.
    • வாடிக்கையாளர் சாப்பிட்ட 2 தோசைக்கு ரூ.80-யை பில் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் சங்ககிரி அருகே குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் வந்த கண்ணன், அங்குள்ள ஓட்டலில் உணவருந்தினார்.

    இதையடுத்து கடை ஊழியர்கள் ரூ.80-க்கு பில் கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி–யடைந்த கண்ணன், 2 தோசைக்கு ரூ.80 கட்டணமான ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதில் கண்ணனுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அங்கிருந்த நாற்காலியால் கண்ணனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த கண்ணன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கண்ணனை தாக்கிய வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த அப்துல் ரஹீம் (39), விழுப்புரம் சூரி நாய்க்கன்பட்டியை சேர்ந்த ஆனந்த் (27) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது .இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகை மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.

    நேற்று நகை மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- விவசாயம் செய்ய வேண்டி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றோம். நகைகளை மீட்க வந்தபோது மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம், கடந்த 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர். ரசீது இருந்தும், வங்கியில் உள்ள நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளோம். இதனால், கடன் மீதான வட்டியும் அதிகரிக்கிறது. வட்டிக்கு வட்டி போடுகின்றனர். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேசி வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை எடுப்பது குறித்து நாளை தெரிவிப்பதாக கூறினர் .இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    • விருதுநகர் மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • ஓரே இடத்தில் அனைத்து வங்கிகளும் உள்ளதால் தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கடன் பெற வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) அன்று மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள் இணைந்து மாபெரும் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தநிகழ்ச்சியில் கடன் வழங்குதல், புதிய கடன் விண்ணப்பம் பெறுதல், பிரதமரின் காப்பீடு மற்றும் பென்ஷன் திட்டத்தில் புதிதாக இணைத்தல், நிதிசார் கல்வி மற்றும் வங்கி சார்ந்த சந்தேகங்களை வங்கி அதிகாரிகளிடம் நேரடியாக தீர்த்துக்கொள்ளும் வகையில் விருதுநகரில் உள்ள கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.30 மணி முதல் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

    இதில் வேளாண்கடன், தொழில்கடன், கல்விக்கடன், வீடு மற்றும் வாகன கடன் போன்ற கடன் வேண்டுவோர் நேரடியாக பங்குபெற்று பயன்பெறலாம்.

    ஓரே இடத்தில் அனைத்து வங்கிகளும் உள்ளதால் தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கடன் பெற வாய்ப்பு உள்ளது. இதில் ஏற்படும் சந்தேகங்களை போக்கி எளிதில் கடன்பெறவும் பயனுள்ளதாக அமையும்.

    எனவே புதிய தொழில் தொடங்கவும், தொழிலை அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நமது மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் படித்த இளைஞர்கள் இந்த முகாமில் நேரடியாக பங்கேற்று இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×