search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ"

    • சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் உள்ள பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் 2 நாட்கள் நடந்தது.
    • இலவச மருத்துவ முகாமில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 3300 கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

    ராசிபுரம்:

    சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் உள்ள பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் 2 நாட்கள் நடந்தது. முகாமை எம்.பி. சின்ராஜ் தொழிலதிபர் ராமசாமி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தனர்.

    தி.மு.க. அயலக அணி மாநில துணைச் செயலாளர் முத்துவேல் ராமசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முகாமை ராமச்சந்திரா கல்வி நிறுவன இணை வேந்தர் செங்குட்டுவன் பார்வையிட்டார்.

    முகாமில் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் பொது மருத்துவம், நுரையீரல், குழந்தைகள் மருத்துவம், இருதய பரிசோதனை, நரம்பியல், சிறுநீரகம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண், பல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. பெண்க ளுக்கான மார்பக புற்று நோய் கண்டறியும் நவீன பரிசோதனைகளும் இலவச மாக மேற்கொள்ளப்பட்டன.

    இசிசி, ரத்த பரிசோதனை, எக்கோ பரிசோதனை செய்யப்பட்டது.காது கேளா தோர் கருவி வழங்கப்பட்டது. மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. 2 நாட்கள் நடந்த இலவச மருத்துவ முகாமில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 3300 கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஓமலூர் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
    • கரு கலைப்பு இளம் வயது கர்ப்பத்தை தவிர்த்தல் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வை வழங்கினார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஓமலூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கவுன்சிலர் அழகிரி, ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி தனசேகரன், ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணேசன் கலந்துகொண்டு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், ஸ்கேன், இ.சி.சி. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மருத்துவம், கண் பரிசோதனை மருத்துவம் தோல் மருத்துவம் பல் மருத்துவம் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவம் இதய நோய் காச நோய் தொழுநோய் சிகிச்சை சித்த மருத்துவம் யுனானி மருத்துவம் பிசியோதெரபி மருத்துவம் ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    இந்த மருத்துவ முகாமில் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தனக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தற்கால மற்றும் நிரந்தர குடும்ப நல முறையில் பற்றியும் உயர் பிறப்பு வரிசை குறைத்தல் பாதுகாப்பான கரு கலைப்பு இளம் வயது கர்ப்பத்தை தவிர்த்தல் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து இங்கு நீரிழி நோய் உள்ள முதியவர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் இறுதியாக வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் 500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வெள்ளிக்கவுண்டனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் வரவேற்றார்.

    புழுதிக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன், துணைத்தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், வாழப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    டாக்டர்கள் பேரின்பம், வெற்றிவேல், ராகுல், ராஜ்குமார், அபிராமி, சித்த மருத்துவர் இலக்குமணன் ஆகியோர் கொண்ட மருத்துவகுழுவினர், சிசிச்சை அளித்தனர். இம்மு காமில், குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டுபிடிப்பு, ஸ்கேன் பரிசோதனை, சித்த மருத்துவம், கண், தோல் மற்றும் பல் மருத்துவ சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

    அங்கன்வாடி பணியா ளர்களின் ஊட்டச்சத்து கண்காட்சி, மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்களின் காய்ச்சல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 54 கர்ப்பிணி பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. 56 பேருக்கு இருதய ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடு களை சமுதாய சுகாதார செவிலியர் ராணி, சுகா தார ஆய்வாளர்கள் செல்வம், செல்வபாபு, கோபி, ஆனந்த், கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பாற்வையாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக, சுகாதார ஆய்வாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

    மத்திய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது.

    சேலம்:

    இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் உள்ள பொது மருத்துவ அலுவலர், கோட்ட உதவி மருத்துவ அலுவலர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு -2022 அறிவிப்பு யு.பி.எஸ்.சி. கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி அறிவித்தது. இதற்கான கல்வித் தகுதி எம்.பி.பி.எஸ். படித்திருக்க வேண்டும்.

    எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்ப–தாரர்கள் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வில் தேர்ச்சி பெற்றதும் எம்.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் ரத்து செய்யப்படும்.

    சேலம், நாமக்கல்..

    இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் படித்து முடித்த டாக்டர்கள் பலர் விண்ணப்பித்தனர்.

    குறிப்பாக தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள், கூடுதல் மருத்துவ கல்வி தகுதி பெற்ற டாக்டர்கள், மருத்துவ துறைகளில் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வரும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

    ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விண்ணப்பங்களை 04.05.2022 முதல் 10.05.2022 மாலை 6 மணி வரை திரும்ப பெற வாய்ப்பும் வழங்கப்பட்டது.

    அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்வு இந்த நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைத்துள்ளது. இதனால் இந்த 2 தேர்வு மையங்களிலும் தேர்வு நாளன்று டாக்டர்கள் கூட்டம் அதிக எண்ணக்கையில் இருக்கும். விண்ணப்பதாரர்களுக்கு இ-அட்மிட் கார்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டுடன் ஒரு புகைப்பட அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் அல்லது மாநில, மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

    இந்த புகைப்பட அடையாள அட்டையின் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தபோது கொடுத்த தகவலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    ×