search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடைகள்"

    • திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது.
    • கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகலில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது.

    இந்த மருத்துவமனைக்கு திருமருகல், கரையிருப்பு, சேகல், வள்ளுவன்தோப்பு, ஆண்டிதோப்பு, கட்டலாடி மற்றும் சுற்று வட்டா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கால்நடைக்கு மருத்துவம் பார்க்க திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவுகிறது.

    இந்தநிலையில் திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர், நிரந்தர கால்நடை பராமரிப்பு உதவியாளர், நிரந்தர கால்நடை ஆய்வாளர் இல்லாத காரணத்தால் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே உடன் நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூரில் பசு, காளை, எருமை மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
    • இந்த கால்நடைகள் பல நேரங்களில் போக்கு வரத்துக்கு இடையூறாக நடுரோட்டிலேயே உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் பசு, காளை, எருமை மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள், மேட்டூர் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் உட்பட முக்கிய பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

    இந்நிலையில், இந்த கால்நடைகள் பல நேரங்களில் போக்கு வரத்துக்கு இடையூறாக நடுரோட்டிலேயே உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    நேற்று மாலை மேட்டூர் சின்ன பார்க் அருகே, சுமார் 10-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் நடுரோட்டில் வரிசையாக சென்றது. இதனை பார்ப்பதற்கு எருமை மாடு பேரணி போன்ற காட்சி அளித்தது.

    ரோட்டின் நடுவே மாடுகள் சென்றதால், மாலை நேரத்தில் போக்குவரத்து நிறைந்து காணப்படும் அந்த சாலையில், நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    எனவே, சாலையில் சுதந்திரமாக சுற்றி வரும் கால்நடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கால்நடை வளர்ப்பவர்கள் மீது மேட்டூர் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் இறங்கி செல்பி எடுக்க கூடாது.
    • விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் அதன் கிளை ஆறுகளில் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுது போக்கு நடவடிக்கையில் ஈடுபட கூடாது.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் செல்பி எடுக்க கூடாது.

    நீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களில் குழந்தைகளை விளையாட விடக்கூடாது. விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
    • கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது/ தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாக திகழும் இந்த சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.

    இந்த சந்தையில் கர்நா டகா மற்றும் கேரளா மாநி லங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாம க்கல், கரூர், தாராபுரம், நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சத்தியமங்கலம், புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வழக்கம் போல் சந்தை கூடியது. இந்த மாட்டுசந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.55 ஆயிரத்துக்கும், சிந்து மாடுகள் ரூ.56 ஆயிரத்து க்கும், எருமை மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்பனை யானது.

    இதில் கலப்பின மாடுகள் ரூ.50 ஆயிரத்து க்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை யானது. மேலும் வெள்ளாடு ரூ.7 ஆயிரம் வரையும், மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.6 ஆயிரம் வரையும் விற்பனை செய்ய ப்பட்டது.

    இதில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்

    • ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன.
    • கால்நடைகளை ரோட்டில் விட்டால் சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம்

    ஊட்டி,

    தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாதலங்களில் குறிப்பிட்டத்தக்கது ஊட்டி, இங்கு உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு சவாரி இல்லம், காட்சி முனையம் மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகள் ஆகியவை சுற்றுலாபயணிகளை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.

    சமவெளி பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் ஊட்டியில் எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையே நிலவும். இதனால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்து, அங்கு உள்ள குளிர்ச்சியான சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவித்து செல்கிறார்கள். இதனால் அங்கு கோடைகாலம் மட்டுமின்றி எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    எனவே ஊட்டியில் எப்போதும் வாகன நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மேலும் ஒருசில மாடுகள், சுற்றுலா பயணிகளை முட்ட வருகின்றன. எனவே அவர்கள் ஒருவித அச்சத்துடன் வெளியே சென்று திரும்ப வேண்டி உள்ளது.

    ஊட்டி சாலையில் கால்நடைகளின் கழிவுகள் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. ஊட்டி குளிர்பிரதேசம் என்பதால் இங்கு மூடுபனி இருக்கும். பக்கத்தில் வந்தால் தான், எதிரில் நிற்பது யார் என்பது தெரிய வரும். ஊட்டி சாலையில் திரியும் கால்நடைகளால், வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

    கால்நடைகளும் படுகாயம் அடைகின்றன. இதுதவிர ரோட்டில் திரியும் கால்நடைகள் வேறுவழியின்றி சாலையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு வருகின்றன. இதனால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே ஊட்டி சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை போக்குவரத்து ரோட்டில் திரியவிடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளருக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

    அதன்பிறகும் போக்குவரத்து சாலையில் கால்நடைகளின் நடமாட்டம் குறையவில்லை. எனவே நகராட்சி ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஊட்டி ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து, மார்க்கெட் பகுதியில் கட்டி வைத்தனர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி கால்நடைகளை மீட்டு செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் எவரும் அபராதம் செலுத்த முன்வரவில்லை. இதற்கிடையே ஊட்டி மார்க்கெட் பகுதியில் அடைத்து வைத்து இருந்த கால்நடைகளை மாநகராட்சியால் சரிவர பராமரிக்க முடியவில்லை. எனவே அவை வேறுவழியின்றி திறந்து விடப்பட்டன.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊட்டியில் மார்க்கெட், பஸ் நிலையம், காபிஹவுஸ் சதுக்கம் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் நடமாட்டம் அதிகம் தென்படுகிறது. இதேபோல ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலை, ஹில்பங்க், பைக்காரா, தலைகுந்தா, பைன் பாரஸ்ட் ஆகிய பகுதிகளில் மாடுகள் உடன் குதிரைகளும் சர்வசாதாரணமாக நடுரோட்டில் ஹாயாக படுத்து கிடப்பதை பார்க்க முடிகிறது. எனவே ஊட்டியில் சுற்றி திரியும் கால்நடைகளின் தொல்லைக்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஊட்டி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டியை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆனாலும் இவற்றுக்கு அவர்களால் உரிய நேரத்தில் தீனி போட முடியவில்லை.

    எனவே கால்நடைகளை தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விட்டு விடுகின்றனர். காலை-மாலை நேரங்களில் மட்டும் பசு மாடுகளை ரோட்டில் இருந்து வீட்டுக்கு கூட்டிசென்று பால் கறந்து கொள்கின்றனர். அதன்பிறகு அவர்கள் பசுமாடுகளை கண்டுகொள்வது இல்லை.

    ஊட்டியை சேர்ந்த விவசாயிகள் மலைக்காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்காக குதிரைகளை வளர்த்து வருகின்றனர். அறுவடைகாலம் முடிந்த பிறகு, குதிரைகள் அப்படியே விடப்படுகின்றன. இதனால் அவை சாலையில் அனாதையாக திரியும் நிலை ஏற்பட்டு உள்ளது.போக்குவரத்து சாலைகளில் கால்நடைகளை திரிய விடாமல் வீட்டில் கட்டிவைத்து வளர்க்க வேண்டும். ஆனால் இங்கு வசிக்கும் பலர் அப்படி செய்வது இல்லை. எனவே அவை வேறுவழியின்றி போக்குவரத்து ரோட்டில் சுற்றி திரிகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊட்டி ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து மார்க்கெட்டில் கட்டி வைத்து அபராதம் விதிக்க முயன்றோம். ஆனால் எவரும் கால்நடைகளை மீட்க வரவில்லை. எனவே அவற்றை மீண்டும் அவிழ்த்துவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே ஊட்டி சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அங்கு கொண்டு சென்று பராமரிப்பது என்று முடிவு செய்து உள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர்.

    • அபிராமத்தில் சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் பார்த்தி பனூர், கமுதி வழியாக சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    இந்த சாலையில் உள்ள அச்சங்குளம், அகத்தாரிருப்பு, நத்தம், கமுதி, பசும்பொன் அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் அதிக அளவில் ஆடு, மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்ததுக்கள் ஏற்படுகிறது. சாலையின் குறுக்கே மாடுகள் அமர்ந்து விடுவதாலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் 85 கி.மீ வேகத்திற்கும் மேலாக செல்லும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கால்நடைகள் திடீரென ரோட்டின் குறுக்கே செல்வ தால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.

    எனவே முக்கிய சாலையான இப்பகுதியில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

    • அளவீடு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால், பல மாதங்கள் அலைகழிக்கின்றனர்.
    • முதியோர், விதவை உதவி தொகை பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் நடந்த ஜமாபந்தியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழங்கிய மனுவில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களில் பாதி பஸ்கள் இயக்கப்படுவதில்லை.சர்வே துறையில் அளவீடு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால், பல மாதங்கள் அலைகழிக்கின்றனர்.

    முதியோர், விதவை உதவி தொகை பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடுமலை தங்கம்மாள் ஓடை பகுதியில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பருவ மழைக்கு முன் முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க., சார்பில் வழங்கிய மனுவில், கபூர்கான் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்டு சார்பில், கணக்கம்பாளையம், கணேசபுரம் பகுதியில் 20 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

    மேலும் சின்ன வீரம்பட்டி பகுதி நேர ரேஷன் கடையை முழு நேர கடையாக மாற்றவும், இந்திராநகரில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்.உடுமலை, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை, அய்யம்பாளையம், மடத்துக்குளம் தாலுகா, தாந்தோணி, மைவாடி, ராஜாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு ஆண்டாக மர்ம விலங்குகள் கடித்து நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் இறந்துள்ளன. பெருமளவு விவசாயிகள் பாதித்துள்ள நிலையில் இதற்கு தீர்வு காணவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

    • கடந்த சில நாட்களாக தக்காளி விலை சந்தையில் குறைந்துள்ளது.
    • இறுதி காய்ப்பு தருணத்தில் உள்ள செடிகளை, அப்படியே அழித்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.குழித்தட்டு முறை நடவு, சொட்டு நீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள் என புதிய தொழில்நுட்பங்களால் மகசூல் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் சீசன் சமயங்களில் விலை கிடைப்பதில்லை.குறிப்பாக கோடை காலத்தில் சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை சந்தையில் குறைந்துள்ளது. விளைநிலங்களில் இருந்து பறித்து வாடகை கொடுத்து சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் செலவுக்குக்கூட கட்டுபடியாகாத விலை நிலவரம் உள்ளது.

    எனவே இறுதி காய்ப்பு தருணத்தில் உள்ள செடிகளை, அப்படியே அழித்து வருகின்றனர். மேலும் சிலர் விளைநிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு தக்காளி செடிகளை தீவனமாக வழங்குகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் முக்கிய சீசனில் தக்காளி விலை வீழ்ச்சியடைவது தொடர்கதையாக உள்ளது. இருப்பு வைத்து விற்பனை செய்யவும் வசதியில்லை. போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் அறுவடை செலவும் அதிகரித்து விட்டது.எனவே கட்டுப்படியாகாது என்ற நிலை ஏற்படும் போது தக்காளி அறுவடையை நிறுத்தி விட்டு செடிகளை அழித்து விடுகிறோம். தக்காளியை மதிப்பு கூட்டி விற்பதற்கான தொழில்நுட்பங்கள் எளிதானால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றனர். 

    • கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் காயல்குடி பேரூராட்சியில் சேர்மன் மாரியப்பன் தலைைமையில் செயல் அலுவலர் சேகர் முன்னிலையில் செல்ல பிராணிகளுக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் மாரியப்பன், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் நேரு குமார், கால்நடை மருத்துவர் அரவிந்தன், மணி, கால்நடை ஆய்வாளர்கள் இளமதி, கோதை நாயகி கால்நடை பராமரிப்பு உதவியாளர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கால்நடைகளுக்கு 21 நாட்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் 3-வது சுற்று தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கால்நடைகளின் நலன் காத்திடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சார்பில் கால்நடை பரா மரிப்புத்துறையின் மூலமாக 3-வது சுற்று (கோமாரி) தடுப்பூசி போடும் பணி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்க ளுக்கும் இலவசமாக 21 நாட்கள் தொடர்ச்சியாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் தொடங்கி உள்ளது.

    இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பசுக்கள் 2 லட்சத்து11 ஆயிரத்து 458 மற்றும் எருமை மாடுகள் 742 என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 200 மாடுகள் பயன்பெற உள்ளன. இதற்கான தடுப்பூசிகள் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 57 குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை கால்ந டைகளுக்கு செலுத்து வதனால், இதன் வாயிலாக தங்களது கால்நடைகளை, கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி) நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்திட முடியும்.

    இதனால் கறவை மாடுகள் பால் உற்பத்தி, எருதுகளின் வேலைத்திறன், கறவை மாடுகளின் சினை பிடிப்பு போன்றவைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும். இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாமை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசியினை செலுத்தி, உங்கள் கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பேணி பாதுகாத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், துணை இயக்குநர் முகமதுகான், துணைப்பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர், ஆவின் (காரைக்குடி) சாமமூர்த்தி, கண்டாங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மந்தக்காளை, உதவி இயக்குநர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பொமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மாதாக்கோட்டை சாலையில் இன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்இந்த முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார் .

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 2 லட்சத்து 92 ஆயிரம் கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

    ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    விடுதல் இன்றி அனைத்து கிராமங்களிலும் இந்த பணி நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் நர்மதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தமிழ்செல்வம், உதவி இயக்குனர் சையத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், தாசில்தார் சக்திவேல், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், எஸ்.பி.சி.ஏ அலுவலர் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், முகமது ரபி, விஜயலட்சுமி பாரதி, முனைவர் சதீஷ்குமார், ஆடிட்டர் ராகவி, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்கின்றனர்.
    • விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை பகுதி கிராமங்களில் மாட்டுப் பொங்கலன்று, விவசாயிகள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டுக் காளைகள், எருதுகள் மட்டுமின்றி, கறவை பசுக்கள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் குளிப்பாட்டி, வண்ணப் பொடித் துாவியும், வண்ண அச்சுகளை வைத்தும் விவசாயிகள் அழகுபடுத்துவதும், கொம்புகளை சீவி வண்ணம் தீட்டுவதோடு, கால்நடைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, கழுத்துமணி , கொம்பு கொப்புச் சலங்கை, கால் சலங்கை, தலைக்கயிறு, கழுத்துச் சங்கிலி, நெற்றிப்பட்டை ஆகிய அணிகலன்கள் மற்றும் பலுான், ரிப்பன் ஆகியவற்றை வாங்கி அணிவித்து அலங்கரிப்பதை ஊர்வலமாக அழைத்து செல்வதை பெருமையாக கருதுகின்றனர்.

    இதனால், வாழப்பாடி அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை, தும்பல் வாரச்சந்தை களிலும், கிராமங்கள் வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளிலும் கால்நடை அணிகலன்கள் விற்பனை அமோகமாக நடந்தது. பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்வதோடு மட்டுமின்றி, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.

    ×