search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்முதல்"

    • பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 1,642 டன்களும் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
    • மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரை செய்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயி கள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழக அரசு அனைத்து உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது அரவை கொப்ப ரையின் விலை குறைந்து ள்ளதால்,

    தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்சஆதரவு விலையில் அரைவை கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்தது.

    இதைத்தொடா்ந்து தஞ்சாவூா் விற்பனை க்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தின் மூலம் 853.180 டன்களும், பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 1,642 டன்களும் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.

    மத்திய அரசால் அறிவிக்க ப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்று க்கு ரூ. 105.90 விலையில் அரைவை கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    கொப்பரை கொள்முதல் காலம் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை என நடைமுறையில் இருந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். கொப்பரைக்கான கிரையத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரை செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் அரவை கொப்பரையின் குறைந்தபட்ச தரம் அயல் பொருட்கள் 1 சதவீதமும், பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதமும், சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதம், சில்லுகள் உடைபாடு 10 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 6 சதவீதம் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அக்டோபர் 31-ந்தேதி வரை, நேபட் வாயிலாக கொப்பரை கொள்முதல் செய்ய காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
    • ‘சிண்டிகேட்’ அமைத்து வெளி மார்க்கெட்டில் விலை உயராமல் பார்த்துக்கொள்கின்றனர்.

    காங்கயம்:

    தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர், காங்கயம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டது.

    கடந்த,பிப்ரவரி 1-ந் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பந்து கொப்பரை கிலோ 110 ரூபாய்க்கும், அரவை கொப்பரை கிலோ 105.90 ரூபாய்க்கு, கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இம்மையங்கள் ஜூலை, 31 வரை செயல்பட்டன.கொப்பரை மற்றும் தேங்காய்க்கு வெளி மார்க்கெட்டில் விலை உயராத நிலையில் கடும் பாதிப்பை தென்னை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.எனவே கொப்பரை கொள்முதல் காலத்தை நீடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அக்டோபர் 31-ந்தேதி வரை, நேபட் வாயிலாக கொப்பரை கொள்முதல் செய்ய காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

    தென்னை மரங்கள், வழக்கமாக, ஏப்ரல்- மே மாதங்களில் மகசூல் குறைவாகவும், பருவ மழை துவங்கியதும், ஜூன், ஜூலை மாதங்களில் மகசூல் அதிகரித்தும் காணப்படும். கொப்பரை கொள்முதலில், மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ஈரப்பதம், பூஞ்சானம் தாக்குதல் உள்ளிட்டவற்றோடு ஒரு ஏக்கருக்கு, 216 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது.இதன் வாயிலாக ஒரு ஏக்கரில் உற்பத்தியாகும் கொப்பரையில் 20 சதவீதம் மட்டுமே அரசு கொள்முதல் மையங்களில் விவசாயிகள் விற்க முடியும்.மீதமுள்ள 80 சதவீதம் கொப்பரையை, வெளி மார்க்கெட்டில் விற்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் தென்னை விவசாயிகளிடமிருந்து ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்வதால், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கும். அரசு கொள்முதல் காரணமாக வெளி மார்க்கெட்டில் விலை உயரும் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்து வருகிறது.ஆனால் தற்போது ஏக்கருக்கு 216 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு காரணமாக மீதமுள்ள கொப்பரை விற்பனைக்கு வரும் என்பதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, குறைந்த விலைக்கு மட்டுமே வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்து வருகின்றனர்.அரசு கொப்பரை கொள்முதல் துவக்கியும், வெளி மார்கெட்டில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கு விலை உயரவில்லை. மாறாக அரசு நிர்ணயித்த ஆதார விலையை விட குறைவாகவே கிலோ 76 ரூபாய் என்ற அளவில் வெளிமார்க்கெட் விலை உள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது: -விவசாயிகளுக்கு பயன் மற்றும் வெளி மார்க்கெட்டில், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் என்ற அடிப்படையில், மத்திய அரசு கொப்பரைக்கான ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது.தற்போது ஒரு ஏக்கரில் 60 முதல் 70 தென்னை மரங்கள் உள்ளன. ஒரு தென்னை மரத்தில் சராசரியாக ஆண்டுக்கு 150 முதல் 200 காய்கள் கிடைக்கும்.இவ்வாறு ஒரு ஏக்கரில் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் காய்கள் வரை மகசூல் இருக்கும். 100 தேங்காயில் 13 முதல் 18 கிலோ வரை கொப்பரை உற்பத்தியாகும்.இவ்வாறு ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் 1,300 முதல் 1500 கிலோ வரை கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.ஆனால் விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் தென்னை இருந்தால் 216 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரையில், 80 சதவீதம் வரை வெளி மார்க்கெட்டில் விற்க வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான கொப்பரை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து விடுவதால் அவர்களுக்குள் 'சிண்டிகேட்' அமைத்து வெளி மார்க்கெட்டில் விலை உயராமல் பார்த்துக்கொள்கின்றனர்.தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மட்டை உள்ளிட்ட உப பொருட்களும் விற்பனையாகாமல் தேங்கி வருகிறது.எனவே தென்னை மகசூல் அடிப்படை கணக்கீட்டை மாற்றி அமைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து கொப்பரைகளையும் அரசு கொள்முதல் செய்வதோடு கொப்பரைக்கான ஆதார விலையையும் உயர்த்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • விவசாயிகளின் 13 மாதம் கால போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி ஒன்றிய அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.
    • தேங்காய்களுக்கு கிலோ ரூ. 50 நிர்ணயம் செய்யவும், கொப்பரை ஒரு கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி காமராஜ் சிலை அருகில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் டார்ச் லைட் ஒளி வீச்சில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாநிலச் செயலாளர்பி.எஸ். மாசிலாமணி,விவசாய சங்கம் உலகநாதன் முன்னாள் எம்.எல்.ஏ, பிவி.சந்தர ராமன், மாவட்ட நிர்வாக குழு கோ. ஜெயபால், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் டி.பி. சுந்தர், விவசாய சங்க நகர செயலாளர் முருகேசன், பக்கிரிசாமி, பி எச் பாண்டியன், பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    விவசாயிகளின் 13 மாதம் கால போராட்டக் கோரிக்கைகளை ஒப்புதல் அளித்த படி ஒன்றிய அரசு உடனே அமல்படுத்தவும், கோவில் மடம் அறக்கட்டளை வக்போர்டு குத்தகை விவசாயிகளை தொடர் பேரிடர் பாதிப்பில் கால குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்யவும், தேங்காய்களுக்கு கிலோ 50 ரூபாய் நிர்ணயம் செய்யவும், கொப்பரை ஒரு கிலோ 150க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு சம்பா, தாளடி பருவ காப்பீடு திட்ட இழப்பீட்டை வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஒழுங்குமுறை கமிட்டியில் கடந்த சில மாதங்களாக பருத்தி கொள்முதல் நடைபெற்று வருகிறது.
    • குடோன்களை சுற்றிலும் ஏராளமான முட்புதர்கள் மண்டிய நிலையில் உள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டமும் நாளுக்கே நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு வேளாண் ஒழுங்குமுறை கமிட்டி வளாகம் கடந்த சில வருடமாக பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்களை சுற்றி தண்ணீர் தேங்கிய நிலையிலும், முட் புதர்கள் மண்டிய நிலையிலும் காணப்படுகிறது. ஒழுங்குமுறை கமிட்டியில் கடந்த சில மாதங்களாக பருத்தி கொள்முதல் நடைபெற்று வருகிறது. பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர், சாலியமங்களம், அம்மாபேட்டை அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாரந்தோறும் பருத்தி கொள்முதலுக்காக பாபநாசம் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு இரவு, பகல் என ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

    பருத்தி தாட்டுகள் வைக்கப்பட்டுள்ள குடோன்களை சுற்றிலும் ஏராளமான முட்புதர்கள் மண்டிய நிலையில் உள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டமும் நாளுக்கே நாள் அதிகரித்து கொண்டே வருகிறது அதனால் பருத்தி கொள்முதலுக்கு வரும் விவசாயிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

    எனவே அரசு பாபநாசம் ஒழங்குமுறை கமிட்டி வளாகத்தில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 7 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யவேண்டும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவைக்கு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் ஆலையில் அரவை துவங்கியது.இந்நிலையில் ரெட்டிபாளையம் விவசாயிகள், கொமரலிங்கம் சர்க்கரை கட்டுப்பாட்டு பகுதியில் அலுவலர்கள் நடவடிக்கையால் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். கரும்பு வெட்ட முன்னுரிமை பட்டியலை பின்பற்றவில்லை.

    குறித்த நேரத்தில்அறுவடை செய்யாமல், கரும்பு சக்கையாக மாறி கரும்பை தீயிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர். இதையடுத்து, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் பால்பிரின்சிராஜ்குமார், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் ரெட்டிபாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு பதிவு செய்த விவசாயிகளிடம் அறுவடை குறித்து, அலுவலர்கள் எவ்வித தகவலும் தரவில்லை. வெட்டு ஆட்கள் அனுப்புவதிலும் குளறுபடி இருந்தது. ஓராண்டு கரும்பு சாகுபடிக்கு வாங்கிய கடனைக்கூட திருப்பிச்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.கூ ட்டுறவு சங்கத்தில் சாகுபடிக்காக பெறப்பட்ட கடனை ரத்து செய்ய வேண்டும் என்றனர். பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி 2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு 2,010 ஏக்கர் கன்னி கரும்பும், 1,000 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது.

    இதன்மூலம் 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவை செய்யக்கூடிய அளவிற்கு பிழிதிறன் கொண்டது. ஆனால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுவதால் அரவை நிறுத்தப்பட்டு, அவை சரி செய்யப்பட்ட பிறகு இயக்கப்பட்டு வருகிறது.

    கரும்பு வெட்டும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெட்டப்படும் கரும்பின் அளவு குறைந்து கரும்பு அரவை நிறுத்தப்பட வேண்டியதாகிறது. இந்த அரவைப்பருவத்தில் தற்போது வரை 80 ஆயிரத்து 451 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் முதிர்ச்சியடைந்த கரும்புகளை வெட்டி ஆலை அரவைக்கு அனுப்புவதற்கு 13 மாதங்களுக்கு மேலாகிறது.

    இந்த நிலையில் 2022-2023-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு தேவையான கரும்பிற்கு 2021-2022நடவு பருவத்தில் 4 ஆயிரம் ஏக்கர் கன்னி கரும்பும், 3 ஆயிரம் ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 7 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யவேண்டும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கரும்பு வெட்டப்படாமல் காலதாமதம் ஆகியவற்றால் இந்த ஆண்டு நடவு பருவத்தில், ஆலைக்கு கரும்பு பதிவு மந்தமாக உள்ளது. அதனால் இதுவரை கன்னி கரும்பு 110 ஏக்கர், கட்டை கரும்பு 610 ஏக்கர் என மொத்தம் 720 ஏக்கர் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஆலையின் கரும்பு பிரிவு களப்பணியாளர்கள் கரும்பு விவசாயிகளை தொடர்ந்து நேரில் சந்தித்து, ஆலைக்கு கரும்பு பதிவு செய்யும்படி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் கரும்பு பதிவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

    • கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.
    • கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலைக்கு கரும்பு கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்து அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.நடப்பாண்டு கரும்பு பதிவு அதிகரித்து ஆலை அரவைக்கு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது. ஆனால் பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து குறித்த நேரத்தில் கரும்பு கொள்முதல் செய்யாதது, முன்னுரிமை பட்டியல்படி வெட்டு ஆட்கள் அனுப்பாமல், பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரெட்டிபாளையம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கொமரலிங்கம் சர்க்கரை கட்டுப்பாட்டு பகுதியில் பல்வேறு குளறுபடிகளால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.கரும்பு வெட்டுவதற்கான முன்னுரிமை பட்டியலை பின்பற்றாமல், கவனிப்பு அடிப்படையில் கரும்பை கொள்முதல் செய்தனர்.

    இதனால் சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களில் குறித்த நேரத்தில் அறுவடை செய்யாமல் கரும்பு சக்கையாக மாறியது.வெளியிலும் விற்க முடியாமல் ஓராண்டு உழைத்து வளர்த்த கரும்பை தீயிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், கூட்டுறவு சர்க்கரை ஆலை மீதான நம்பிக்கையையும் இழந்துள்ளோம்.இது குறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கொமரலிங்கம் கரும்பு கட்டுப்பாட்டு பகுதியில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • பாக்கெட்டுகளில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரும் முறை அமல்படுத்துவதாக உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
    • வாணிப கழகம் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்குமான சிறப்பான சேவையை செய்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க மாநில பொதுச் செயலா ளர் சந்திரகுமார் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமைதூக்கும் பணிகள் மற்றும் திறந்த வெளி சேமிப்பு நிலைய வேலைகளுக்கு டெண்டர் விடப்பட்டு பல இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் டெண்டர் எடுத்துள்ளனர்.

    சமீபத்தில் தஞ்சைக்கு வருகை தந்த உணவு அமைச்சர் அர. சக்கரபாணி அரசு நவீன அரிசிஆலையில் தனியாரை பயன்படுத்தி அரைவை செய்துபாக்கெ ட்டுகளில் அரிசி விற்பனைக்கு கொண்டு வரும் முறை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். அதேபோல திறந்த வெளி சேமிப்பு நிலைய ங்கள் அனைத்து பொறுப்பு களையும் தனியாருக்கு விட்டு லாரி மூலம் ஏற்றி செல்வது, சேமிப்பது, பாதுகாப்பது, தார்ப்பாய் போடுவது, பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது என அனைத்து பொறுப்புகளும் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவ டிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    நேரடியாக சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர்களை வெளியேற்றுவதுஅல்லது தற்போது பெறுகின்ற கூலியை விட குறைந்த கூலியில் ஒப்பந்தக்கா ரர்களுக்கு அடிமைகளாக பணிபுரிய செய்வது என்பது ஏற்கத்தக்கது அல்ல. நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளுக்கும், பொதும க்களுக்குமான சிறப்பான சேவையை செய்து வருகிறது. அரசு நெல் கொள்முதலிலும் பொது விநியோக முறை செயல்படுத்துவதிலும் இந்தியாவிலேயே முன்மா திரி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசு நுகர்பொரு ள்வாணிபக் கழகத்தை தனியார்மயமா க்கும் நடவடி க்கையை மேற்கொண்டு வருவது வருந்ததக்கது. எனவே இந்த முடிவை கண்டித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வருகிற 24ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூரில் விவசாயிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோடை பருவத்தில் பம்புசெட் உதவியுடன் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
    • நெல்லை அருகில் உள்ள நெடுஞ்சாலையில் நன்கு உலர வைத்து பின்னர் உலர்ந்த கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதியில் கோடை பருவத்தில் பம்பு செட் உதவியுடன் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்கள் தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ள நிலையில் விவசாயிகள் தற்போது அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்யக்கூடிய நெல்லை அருகில் உள்ள நெடுஞ்சாலையில் நன்கு உலர வைத்து பின்னர் உலர்ந்த நெல்லை சாலியமங்களம் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    சாலியமங்களம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்லை கொட்டி வைக்க இடமில்லாததால் அருகில் நெடுஞ்சாலையில் கொட்டி வைத்து விற்பனைக்காக காத்து கிடக்கின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரக்கூடிய நெல்லை உடனுக்கு உடன் கொள்முதல் செய்யாமல் 4 அல்லது 5 நாட்கள் காத்திருக்க வைத்து தான் கொள்முதல் செய்வதாகவும் தற்போது திடீர் மழை பெய்துவருவதால் காய்ந்த நெல்மணிகள் நனைந்து போகும் என்பதால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை தாமதம் இன்றி உடனுக்கு உடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேங்காய் விலை குறைந்து வருவதை கட்டுப்படுத்த பேராவூரணி பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும்.
    • கூலி தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டைகளை மாற்றி தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் கிராம கணக்குகளை ஆய்வு செய்து ஜமாபந்தி நிறைவு குடிகள் மாநாடு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. அசோக்குமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். முன்னதாக தாசில்தார் சுகுமார் வரவேற்றார்.

    கடைமடை பகுதி ஏரி, குளங்கள் நிரப்பி தர வேண்டும். தேங்காய் விலை குறைந்து வருவதை கட்டுப்படுத்த பேராவூரணி பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதி செய்து தரப்பட வேண்டும். தடையில்லா பேருந்து சேவை செய்து தர வேண்டும். கூலித் தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் அனை த்தும் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டைகளை மாற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் சார்பாக கருப்பையா, நைனா முகமது, சீனிவாசன் ஆகியோர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

    இதில் மாற்றுத்தி றனாளிகள், முதியோர், விதவை உதவித்தொகைகள், பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு, குடும்ப அட்டை 112 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர்பேசியதாவது,

    கடந்த 23 ந்தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பெருமகளூர் உள்வட்டம், குருவிக்கரம்பை உள் வட்டம், ஆவணம் உள் வட்டம், பேராவூரணி உள் வட்டத்திற்குள் 800 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 120 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. குடும்ப அட்டைகளை மாற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் 10 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி தவமணி, சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, பேரூரா ட்சி செயல் அலுவலர்கள் பேராவூரணி பழனிவேல், பெருமகளூர் புனிதவதி, மண்டல துணை வட்டாட்சி யர்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் தரணிகா நன்றி கூறினார்.

    • ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படுகிறது
    • இக்கொள் முதல் மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் 2022-ம் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் ஈரோடு விற்பனைக்குழுவில் செயல்படும் சத்தியமங்கலம், அவல்பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட வுள்ள கொப்பரையானது அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தில் இருக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ பந்து கொப்பரை ரூ.110 மற்றும் அரவை கொப்பரை ரூ.105.90 வீதம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த ப்படும்.

    எனவே இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார்அ ட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முகப்பு, சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் சத்திய மங்க லம், அவல்பூ ந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்க ப்படுகிறது.

    இக்கொள் முதல் திட்டத்தில் ஈரோடு மாவட்ட த்தை சேர்ந்த தென்னை சாகுபடி செய்துள்ள வேளாண் பெருங்குடி மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம் தொடங்கப்பட்டது.
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வத்திராயிருப்பு,

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு கொள்முதல் நிலையம் உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாலுகா பகுதியில் கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

    தற்போது அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருந்தோம். இந்தாண்டு தொடர் மழையின் காரணமாக நல்ல விளைச்சலை சந்தித்து தற்போது நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகளின் கோரிக்கை ஏற்று தற்போது நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் வரவேற்கிறோம். தற்போது கொள்முதல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×