search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • திருமானூர் மேலவரப்பன்குறிச்சி மணிமேகலை பள்ளியில் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கிரீடம் சூட்டப்பட்டது

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவரப்பன்குறிச்சி மணிமேகலை மான்ய தொடக்கப் பள்ளியில் எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற கண்காட்சி விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் வட்டார கல்விஅலுவளர் பரிமளம் தலைமை வகித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வியின் பற்றிய முக்கியத்துவத்தை கூறினார். மேலாண்மை நிர்வாகி காந்திமதி முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழகிய மணவாளன் ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலு கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் பள்ளி தலைமைஆசிரியை மெரீனா செல்வராணி செய்திருந்தார். ஆசிரியர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கிடையே படைப்புகள் செய்தல், பாடல்கள் கதை கூறுதல், விலங்குகள் போல் ஒலி எழுப்புதல், ஆங்கிலம் வாசித்தல்போ ன்ற போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அப்போது பரிசு பெற்றவர்களுக்கு கீரிடம் சூட்டப்பட்டது. நிறைவில் ஆசிரியை துர்கா தேவி நன்றி உரை நிகழ்த்தினார்.


    • ஆலங்குடி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது
    • மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என பெற்றோர் பாராட்டு

    ஆலங்குடி,

    ஆலங்குடி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் விழிப்புணர்வு கொண்டாட்டம் நடைபெற்றது. மார்க்கிரேட் நிர்மலாமேரி அனைவரையும் வரவேற்றனர். இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் சூசைராஜ் தலைமை வகித்தார்.குழந்தைகள் தங்கள் கற்றல் திறனை வெளிப்படுத்த எண்ணும் எழு த்தும் கற்பித்தல் முறையில் பெற்றோர்கள் சிறந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. எண்ணும் எழுத்து கொண்டாட்டத்தில் பெற்றோர்க ளும், மாணவர்க ளும் இணைந்து வகுப்பறை செயல்பாடுகளில் பங் கேற்றுக்கொண்டனர்.பள்ளியின் இடைநிலை ஆசிரியை லூர்துமே ரி அனைவருக்கும் நன்றி கூறினார்.




    • 48 நாட்களுக்கான மண்டல பூஜையும், பங்குனி மாத அமாவசை வழிபாடு்ம் இருபெரு விழாவாக நடைபெற்றது.
    • அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகேயுள்ள வீரசோழபுரம் ஸ்ரீஅடஞ்சாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதனையொட்டி வீர சோழபுரம் நட்டாத்தி வகையறா நாட்டுவ நாடார்களின் குல தெய்வமான இக்கோவிலின் 48 நாட்களுக்கான மண்டல பூஜையும், பங்குனி மாத அமாவசை வழிபாடு்ம் இருபெரு விழாவாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மதுரை மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் குலத்தவர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்து தரிசனம் செய்தனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிகமிட்டி தலைவர் மங்கையர்கரசி சக்திவேல் தலைமையில் துணைத்தலைவர்கள் சுதா சேதுபதி, ஜோதி, சரஸ்வதி,கரூர் கூடலரசன், முருகேசன், இணைச்செயலாளர் சூலூர் காமராஜ், செந்தில் வடிவு, ஈரோடு தீனதாயளன், பார்த்திபன், தங்கவேல், குருசாமி,தம்பி என்கிற சிவகுமார், டாக்டர்கள் அகல்யா,யோகலெட்சுமி, அர்ச்சுணன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். வருகிற 26ந்தேதி கோவில் மண்டலபூஜை நிறைவு விழா நடைபெற உள்ளது.

    • சிறப்பு வழிபாட்டில் பல்வேறு அபிஷேகங்கள்
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள பெரியநாயகி உடனுறை ஏழுமலைநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் நந்திக்கு பால், தயிர், மோர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து வதிவாதரனை காட்டப்பட்டது. பிரதோஷ வழிபாட்டுக்கு ஜெயங்கொண்டம் சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டு சென்றனர்.


    • ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை.
    • அவ்வைக்கு துளசியாபட்டினத்தில் ரூ. 18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, துளசியாபட்டினத்தில் உள்ள ஔவையார் கோவிலில் தமிழக அரசு சார்பில் 49-வது அவ்வை பெருவிழா தொடங்கியது.

    3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்த அவ்வை பெருவிழா நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விழாவாகும். ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை, அவற்றை நாம் பயனுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும்.

    மேலும், ஒளவைக்கு துளசியாபட்டினத்தில் ரூ. 18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தஞ்சை கலை பண்பாட்டு துறையினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, சிறப்பு பட்டிமன்றம் ஆகியவைகள் நடந்தது.

    பின்னர், இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு வழங்கினார்.

    விழாவில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, ஊராட்சி தலைவர்கள் தமிழ் செல்வி, வனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • வணிகவியல் தின விழா நடந்தது.
    • உதவிப்பேராசிரியர் நசீர்கான் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் தின விழா நடந்தது. துறைத்தலைவர் நைனா முஹம்மது வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் சம்சுதீன் இப்ராஹிம் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர்- முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி பங்கேற்று பேசினார். பல்கலைக்கழக தேர்வில் ரேங்க் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். உதவிப்பேராசிரியர் நசீர் கான் நன்றி கூறினார். 

    • காவல்துறையில் பணியாற்ற அதிகளவில் பெண்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. அழைப்பு
    • உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது

    குன்னம்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெற்றி பெற்ற பெண்கள் என்ற தலைப்பில் பெண் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். கல்லூரி, மாணவிகளிடம் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் பேசினார். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது பெண்கள், பணிபுரியாத துறைகளே இல்லை என்றே கூறலாம். மேலும் அவர்கள் அத்துறைகளில் பல சாதனைகளும் செய்து வருகின்றனர். இன்றைய பெண்கள், மன தைரியத்துடனும் மன வலிமையுடனும், தங்களது துறைகளிளோ அல்லது வாழ்க்கையிலோ உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள முன்வர வேண்டும். கல்லூரி மாணவிகள் காவல்துறையில் சேர்ந்து அதிகம் அளவில் பணியாற்ற முன் வர வேண்டும். அவ்வாது பணியாற்ற முன்வரும் பெண்களுக்கு வழி காட்டுதல் நிகழ்ச்சியும் நடத்தப்படும். கல்லூரி மாணவிகள் அவர்களின் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இலவச உதவி எண்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.

    • பொதுமக்களுடன் கலெக்டர் உணவருந்தினார்
    • நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு சமத்துவ விருந்தில் பொதுமக்களுடன் மாவட்டகலெக்டர் ரமண சரஸ்வதி கலந்து கொண்டு உணவருந்தினார்.அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதலமைச்சர் ஆலயங்கள் தோறும் அன்னதானம் எனும் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் திருக்கோ யில்களில் அன்ன தானம் வழங்க உத்தரவி ட்டுள்ளார்.அனைத்து மக்களும் சமம் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து சமூக மக்களுக்கும் ஒன்றாக விருந்து அளிக்கும் நோக்கில் சமத்துவ விருந்து வழங்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயபாஸ்கர், தனித்துணை ஆட்சியர் (ச.மூ.பா.தி) திரு.குமார், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


    • கொன்னையூர் முத்து மாரியம்மன்கேயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்செரிதல் விழா நடைபெற்றது
    • பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    பொன்னமராவதி

    பொன்னமராவதி அருகே உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா தொடங்கியது. விழாவின் துவக்கமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் பால்குடம்,பூத்தட்டு எடுத்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி வெகு விமர்சையாக நடைபெறும். இன்றிலிருந்து திருவிழா கலைகட்ட தொடங்கியது. விழாவின் துவக்கமாக பூச்சொரிதல் விழா இதனை முன்னிட்டு பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும்பால்குடம் பூத்தட்டு போன்றவற்றை தங்களது பகுதியில் இருந்து எடுத்துச் சென்று அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருக்கும் பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இவ்விழாவையும் ஒட்டி கோவிலை சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் பாதுகாப்பு பணிகளும் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.கோவில்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் வந்து செல்லும் வண்ணம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணியிடமிருந்தும் காரைக்குடி போக்குவரத்து பணிமனையில் இருந்தும் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு அதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்ற வன்னமாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை கோவிலின் முன்பாக அக்னி காவடி நடைபெற உள்ளது.




    • அன்னதானத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
    • பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்

    புதுக்கோட்டை

    திருவப்பூர்முத்துமாரியம்மன் திருவிழா பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி உள்ளிட்டவைகளை தலையில் சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக ஆயிரக்கணக்கான நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. பானக்கம், கஞ்சி , நீர் மோர், பழங்கள் மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்கோகர்ணம் இல்லத்தில் நடந்த அன்னதானத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
    • பஸ் ஸ்டாப் திறந்து வைத்தபின்னர் அளித்த பேட்டியில் மருத்துவ கல்லூரி கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குன்னம் பேருந்து நிறுத்த புதிய கட்டடம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் ஆகியவற்றையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார்.விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொ ய்யாமொழி,மாவட்ட ஆட்சியர் க.கற்பகம்,சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் ,சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி,  கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னதாக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் வரவேற்றார்.
    • முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை திமுக சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் மூவலூரில் நடைபெற்றது.

    இந்த கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் ஆலோசனைபடி மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் எம். மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் பாலு, ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி, துணை செயலாளர்கள் சிவக்குமார், பாரதிமதியழகன், அற்புதராஜ், பொருளாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பேச்சாளர் நாகம்மை கருப்பையா கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாத னைகளை பொதுமக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக பேசினார். இந்நிகழ்ச்சியில் உயர்நிலை திட்டகுழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் குமாரசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், மாவட்ட துணை செயலாளர் கண்ணகி பன்னீர்செல்வம், கழக பேச்சாளர் கோமல் விஜி அறிவழகன், முன்னாள் நகர கவுன்சிலர் மேனகா மாரியப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காந்தி, தொ. மு. ச. மண்டல செயலாளர் ஆபிரகாம், மாவட்டம் குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் மும்தாஜ், பதர்நிஷா நஜீம், சிவக்குமார், அர்ஜுன், காமராஜ், கபிலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஐயப்பன், முஹம்மது ஹரிப், சபாபதி, தேவராஜன், ராஜேஷ், ரமணி, ஆனந்தி தர்மராஜ், மாலதி கதிரவன், உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஒன்றிய கிளை பிரதிநிதிகள் பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ×