search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது.
    • ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, தேவார, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    சென்னிமலை, 

    சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழாவை முன்னிட்டு நேற்று நடந்த ஸ்ரீ சுப்பிரமண்ய ஜெப பாரா யணம் ஹோமம் பூஜை களில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40 -– வது ஆண்டாக நடந்த மூன்று நாள் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது.

    அதை தொடர்ந்து வேதிகா அர்ச்சனையும், 1008 கலச அபிஷேகம் மற்றும் ஸ்ரீ மஹா ஜெய விஜய ஸ்ரீ சுப்பிரமண்ய ஜெப பாராயணம் ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, தேவார, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும், அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி புறப்பாடும் நடை பெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு சுப்புசாமி அருள் பிரசாதம் வழங்கினார், அன்னதான மும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். 

    • வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது .

    இந்த கூட்டுறவு சங்கத்தில் சுமார் 8000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

    விழாவில் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டை சேர்ந்த மரிக்கொழுந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி நகர கூட்டுறவுவங்கி தலைவர் (பொறுப்பு) அன்பரசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் கண்ணன், மகாராஜன், நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி முப்பெரும் விழா நடந்தது.
    • கேக் வெட்டி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம், செவிலியர்கள் தினம் மற்றும் நர்சிங் பயின்ற மாணவர்களின் நிறைவு நாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

    முதல்வர் சுரேஷ் பிரபாகர் தலைமை தாங்கினார். இந்த கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு காரைக்குடி, திருப்புத்தூர், மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    மாணவ-மாணவிகள், செவிலியர்கள் தின விழா, நிறைவு நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • ஆம்புலன்சுக்கு வழி விட்ட மாரியம்மன் பக்தர்கள்
    • தங்கு தடையின்றி பெருங்கூட்டத்திற்குள் வந்து சென்ற ஆம்புலன்ஸ்

    திருச்சி மாவட்டத்திலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் பிரமாண்ட திருவிழா என்றால் அது மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழா தான். மணப்பாறை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களும் வந்தும் அம்மனுக்கு காப்பு கட்டி பால்குடம் எடுப்பார்கள். இந்த திருவிழாவில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொண்ட நிலையில் எங்கு திரும்பினும் மனித தலைகளாக காட்சி அளித்தது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக சிலருக்கு மூச்சு திணறலும், சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை பார்த்ததும் சற்று மிரண்டு போயுள்ளனர். இத்தனை பெரும் கூட்டத்திற்குள் எப்படி ஆம்புலன்சை செலுத்துவது என்று அவர்கள் மலைத்து நிற்பதை புரிந்து கொண்ட பக்தர்கள். யாருடைய வழிகாட்டுதலும் இன்றி தாமாக வழி ஏற்படுத்தினர். சிலரோ பாதிக்கப்பட்டோர் உள்ள இடத்திற்கு ஆம்புலன்சை விரைந்து அழைத்து சென்றனர். உடல் உபாதைக்குள்ளானவர்களும், விரைந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    ஆயிரம் தான் சாமி, பக்தி என்று சொன்னாலும், உயிர்காக்க செல்லும் ஆம்புலன்ஸ்சுக்கு டக்குன்னு வழி ஏற்படுத்தி கொடுத்த, அந்த வேப்பிலை மாரியம்மன் பக்தர்களின் மனித நேயம் மிக்க....

    `அந்த மனசு தான் சார் கடவுள்'

    • கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா நடைபெற்றது
    • இன்று கம்பம் வழங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

    கரூர்,

    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா வருகிற 31-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கம்பம் வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.முன்னதாக மாரியம்மன் மூப்பன் வகையறாவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் கனவில் மூன்று நாட்களுக்கு முன்பு அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முக்குலை கம்பம் பாலம்மாள்புரம் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டு பாலம்மாள் புரத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் கம்பத்திற்கு சிறப்பு சிறப்பு ஆராதனை நடைபெற்று பின்னர் கம்பம் ஊர்வலம் தொடங்கியது. வேலம்மாள் புரத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலமானது ஐந்து ரோடு வழியாக ஜவகர் பஜார் அடைந்து பின்னர் கோவிலை வந்தடைந்தது. அப்போது கோவிலில் அறங்காவலர் முத்துக்குமாரிடம் முக்கலை கம்பம் மூக்கன் வகையறாக்களால் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் கோவிலில் கம்பம் செதுக்கப்பட்டு பின்னர் மாலையில் அமராவதி ஆற்றில் சிறப்பு ஆராதனை நடைபெற்று தொடர்ந்து கம்பம் அமராவதி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்டு கோவில் முன்பாக நடப்பட்டது. கோவில் முன்பாக கம்பத்திற்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றிய வழிபட்டனர். தொடர்ந்து வருகிற 31-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடும் விழா நடக்கிறது. இன்று நடைபெற்ற கம்பம் வழங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • கந்தர்வகோட்டை அருகே மது எடுப்பு விழா நடைபெற்றது.
    • இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே நெப்புகை கிராமத்தில் சூலபிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நெப்புகை, முள்ளிக்காய்பட்டி, வேலாடிப்பட்டி, உரியம்பட்டி, ஒத்த வீடு, பெரியமனை கொல்லை, சிவன் தான் பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் தங்கள் வீடுகளில் கடந்த ஒரு வார காலமாக விரதம் இருந்து பூஜை செய்து வந்த மது குடங்களை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக சூலபிடாரி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு குலவை போட்டு, கும்மி அடித்து, கோலாட்டம் ஆடி நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திடவும், உலக மக்களின் அமைதிக்காகவும் சூலப்பிடாரி அம்மனிடம் வேண்டிக் கொண்டனர். இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது
    • மாணவர்களுக்கு வேந்தர் சீனிவாசன் அறிவுரை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமை வகித்து, பணி நியமன ஆணைகளை மாணவர்களுக்கு வழங்கினார். அப்போது பேசியதாவது:-இந்த முக்கியத்துவம் வாய்ந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    மேலும் இன்று பணி நியமன ஆணைகளை பெறும் அனைவருக்கும் தன்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்து எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்.இன்று உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாத்திற்கான முக்கியமான நாள். நீங்கள் பணிபுரியும் இடத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கத்தை கடைபிடித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு இந்த கல்லூரிக்கும், உங்கள் ஆசியர்களுக்கும், மற்றும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    கடவுளை தேடி எந்த கோவிலுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம் கண் முன்னே வாழும் கடவுள் நமது பெற்றோர்கள். எனவே அவர்களின் கடின உழைப்பையும், தியாகத்தையும் நாம் உயிர் உள்ளவரை மறக்கக்கூடாது. அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது நமது கடமையாகும்.எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம். இந்த உலகமே அன்பினால் பிணையப்பட்டது. எனவே அன்பை மட்டும் விதைப்போம், அதையே அறுவடை செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் டி.சி.எஸ், நிசான் டெக்னாலஜி, லூமினஸ், அல்ட்ராடெக், பெகட்ரான், இ-கான், லோட்டி, எபி சோர்ஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் ஜோஹோ கார்ப்பரேஷனின் தொழில் நுட்ப இயக்குனர், ராஜேந்திரன் தண்டபாணி, விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் மண்டல தலைவர், ஆனந்தகிருஷ்ணன் தேவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விழாவில் அவர்கள் பேசுகையில், பணி நியமன ஆணைகளை பெரும் மாணவர்களுக்கு தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.மேலும் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அதி நவீன ஆய்வக வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கண்டு பெருமை படுவதாகவும், அவைகள்தான் இதுபோன்ற தரமான மாணவர்களை உருவாக்கியிருக்கிறது என்றும் கூறினர்.

    விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில் நிறுவங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தரமான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.முன்னதாக துணை முதல்வர் ஸ்ரீதேவி வரவேற்றார். புல முதல்வர் (பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு) முனைவர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார். இதில் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வேல்முருகன், புல முதல்வர் (அகாடெமிக்) முனைவர் அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) முனைவர் சிவராமன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • மகா மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது
    • தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்த பிரம்மதேசத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதுபோன்று இந்தாண்டும் கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி 25 அடி உயர தேரை பூக்களால் அலங்கரிக்கும் தலை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமியை தலையிலும், தோளிலும் சுமந்து வந்து தேரில் எழுந்தருள செய்தனர். இதைத்தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் பிரம்மதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    கரூர் :

    கரூர் நொய்யல் அருகே முத்தனூரில் வருண கணபதி கோவில் உள்ளது. நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சுவாமிக்கு பால், இளநீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது
    • பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    புதுக்கோட்டை.

    புதுக்கோட்டை விராலிமலை தாலுகா ஆம்பூர்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மதியம் மற்றும் இரவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் பக்தர்கள் ஊரணி கரையிலிருந்து பால்குடம், காவடி, அக்னிசட்டி, எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.பின்னர் அம்மன் பாதத்தில் பாலை ஊற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றது.இரவு 10 மணியளவில் கோவில் முன்பு உள்ள கலையரங்கில் பாண்டிசாமி என்னும் புராண நாடகம் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் ஆம்பூர்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆம்பூர்பட்டி கிராமமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

    • பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை
    • கோரிக்கை நிறைவேறாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தேர்தல் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் ராஜாவும், மாவட்ட செயலாளர் பாக்கியராஜும், மாவட்ட பொருளாளர் துரை.நந்தகுமார், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் புதிதாக பதவியேற்றனர். கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், கிராம நிர்வாக ஊழியர்களுக்கு பணி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், ஐந்தாண்டுகள் பணி முடித்து பயிற்சி முடித்தும் தகுதிக்கான பருவம் முடிக்காத கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உள்ளனர். இதனால் உரிய பணப்பயன்கள் பெற முடியாமல் உள்ளனர். இரண்டு வார காலத்திற்குள் அனைத்து பணப்பயன்களையும் பெற மாவட்ட வட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அனைத்து வட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில பிரச்சார செயலாளர் பொய்யாமொழி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்றிரவு சித்திரை முழு நிலவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான பூம்புகாரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை முழு நிலவு விழா (இந்திர விழா) நடைபெறுவது வழக்கம்.

    பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த இவ்விழா மழைக்கு தலைவனான இந்திரனை வணங்குவதாக ஐதீகம். பண்டைய காலத்தில் இவ்விழா தடைபட்டதால் பூம்புகார் கடல் கோளால் அழிந்ததாகவும் வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

    அதனைத் தொடர்ந்து அரசின் சார்பாக நடைபெற்று வந்த இந்திர விழா பல ஆண்டுகளாக தடைபட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திர திருவிழாவை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி நேற்று இரவு சித்திரை முழு நிலவு (இந்திர திருவிழா) வெகு விமர்சையாக நடைபெற்றது.

    கொற்றவை பந்தலின் அருகே நடைபெற்ற விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செ ல்வம் ஆகியோர் பங்கேற்று சிறப்புறை யாற்றினர்.

    தப்பாட்டம்,நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, சிலப்பதிகார நாட்டிய நாடகம், பொம்மலாட்ட கலைஞர்களின் சிலப்பதிகார கதை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திரளான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ்களுடன் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    ×