search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229611"

    • 0.80 எக்டர் செடி முருங்கை சாகுபடி செய்வதற்கு ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.
    • கால்நடை பராமரிப்பு நிபுணர் மனோகரன், செயற்பொறியாளர் சுப்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    தஞ்சாவூர்:

    உலக வங்கி நிதியின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட த்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செடி முருங்கை பரப்பு விரிவாக்கம் இனத்திற்கு புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி வேம்பரசி என்பவருக்கு 0.80 எக்டர் செடி முருங்கை சாகுபடி செய்வதற்கு ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் வேம்பரிசியின் விவசாய வயலை உலக வங்கியின் சார்பாக தோட்டக்கலை நிபுணர் சாஜன் கொரியன் (உணவு மற்றும் விவசாய அமைப்பு), தோட்டக்கலை நிபுணர் டாக்டர் வித்யாசாகர், வேளாண்மை நிபுணர் ஷாஜகான், வேளாண் விற்பனை நிபுணர் ராஜேந்திர பாண்டியன், கால்நடை பராமரிப்பு நிபுணர் மனோகரன், செயற்பொறியாளர் சுப்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்வில் தஞ்சாவூர் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ் செல்வி, துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமரன், உதவி அலுவலர்கள் ரகுபதி, கரிகாலன், ராஜேஷ் கண்ணன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100 அலகுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • மானியமாக ரூ.4 ஆயிரத்து 800 பயனாளியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 2022-23-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கயிறு மூலமாக கடற்பாசி வளர்த்தல் மற்றும் உள்ளீட்டுக்கு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100 அலகுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.1 பயனாளிக்கு 2 அலகு வீதம் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப டுகின்றன.

    இந்தத் திட்டத்தின் படி 1 அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.8000-ல் 60 சதவீதம் மானியமாக ரூ.4800 பயனாளியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.

    எனவே தஞ்சாவூர் மாவட்டமானது கடற்பாசி வளர்ப்பிற்கு உகந்த பகுதியாக அமைந்துள்ளதால் மீனவ மகளிரின் மாற்று வாழ்வாதாரமாக கடல்பாசி வளர்ப்பு மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரத்தில் உள்ள மீன்துறை சார் ஆய்வாளர் அலுவலகங்களை (தொலைபேசி எண் - 9952226545, 7339349630 ) நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் இந்த மாதம் (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • பனிக்கட்டி தொழிற்சாலை அமைக்க மானியம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • ரூ.72 லட்சமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 மற்றும் 2022-23 திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் பனிக்கட்டி தொழிற்சாலை அமைத்தல் திட்டத்தின் கீழ் 30 டன் (பொது-1, ஆதிதிரா விடர் பழங்குடியினர்-1, மகளிர்-1) மற்றும் 50 டன் (மகளிர்-1) கொள்ளளவில் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

    30 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பனிக்கட்டி தொழிற்சாலை அமைப்ப தற்கான அலகு தொகை ரூ.120.00 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பி ரிவினருக்கு செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.48 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.72 லட்சமும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    50 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பனிக்கட்டி தொழிற்சாலை அமைப்ப தற்கான அலகு தொகை ரூ.150 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டு, பொதுப் பிரிவினருக்கு செல வினத்தில் 40 சதவீதம் மானி யமாக ரூ.60 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.90 லட்சமும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்ப டையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மீனவ பயனாளிகள் சம்மந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ள கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலு வலகம், பட்டிணம்காத்தான் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணை கருவிகள் வினியோகம் செய்யப்படுகிறது.
    • இருப்பு சட்டி 1, கதிர் அறுக்கும் அரிவாள் 2 உள்ளிட்ட 5 வகையான பொருட்களின் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும்.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள் 50 சதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் கூறியுள்ளாா்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடப்பாரை1, மண் வெட்டி 1, களை வெட்டி 1, இருப்பு சட்டி 1, கதிர் அறுக்கும் அரிவாள் 2 உள்ளிட்ட 5 வகையான பொருட்களின் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும்.

    இந்த பொருட்கள் 50 சதவீத மானியம் போக ரூ.1,500 -க்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்புழு உரம் அடங்கிய தளை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
    • தளை ஒன்றிற்கு ரூ.750 பயனாளியின் பங்கு தொகையாக வசூலிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள மூலிகை செடிகளை எளிதில் வீடுகளில் வளர்க்கும் வண்ணம் தோட்டக்கலைத் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 10 வகையான மூலிகைச் செடிகள் (துளசி, கற்பூரவல்லி திருநீற்றுப்பச்சிலை ஆடாதொடை, வல்லாரை, திப்பிலி, அஸ்வகந்தா, பிரண்டை, கற்றாழை. கீழாநெல்லி) அடங்கிய தளை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.2.25 லட்சம் ஒதுக்கீட்டில் 300 தளைகள் மாவட்ட இலக்கீடாக பெறப்பட்டுள்ளது.

    மொத்த விலை ரூ.1500-க்கு 20 மூலிகை செடிகள், 10 செடி வளர்ப்புப் பைகள், 2 கிலோ தென்னை நார் கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம் அடங்கிய தளை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

    தளை ஒன்றிற்கு ரூ.750 பயனாளியின் பங்குத் தொகையாக வசூலிக்கப்படும்.

    ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஒரு தளை பெற தகுதியுடையவர்.

    இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து www.tnhorticulture.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

    மேலும், பயனாளிகள் திட்டப் பயன்களைப் பெற அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகியும் பயன்பெறலாம்.

    தஞ்சாவூர் மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9943422198 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9488945801, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9445257303, கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் தோட்டக்கலை உதவி இயக்குநர் -7299402881, பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் 8526616956/9944340793, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் தோட்டக்கலைஉதவி இயக்குனர் 9445257303 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தருமபுரி மாவட்டத்திற்கு 5 நபர்களுக்கு 7 லட்சம் வீதம் 35 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
    • நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தருமபுரி,

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2022-2023 நிதி ஆண்டில் ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தர தருமபுரி மாவட்டத்திற்கு 5 நபர்களுக்கு 7 லட்சம் வீதம் 35 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    எனவே தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் -2022-23இல் (அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் பணிகள் மேற்கொள்ள பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில்) அரூர் வட்டம் தீர்த்தமலை குறுவட்டத்தில் வேப்பட்டி, பெரியப்பட்டி, வீரப்ப நாயக்கம்பட்டி மற்றும் பென்னாகரம் வட்டம் ஏரியூர் குறு வட்டத்தில் இராம கொண்ட அள்ளி, கோடி அள்ளி கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    எனவே, இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மானாவாரி விவசாயிகள் குறைந்தது ( 1 முதல் 5 ஏக்கர் வரை) உரிய வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட சிறு,குறு விவசாயி சான்று பெறப்பட வேண்டும். சாத்தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட் (அதிகபட்சம் 10 குதிரைத்திறன் வரை) அமைத்து தரப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தல் நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் , சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட 5 ஊராட்சிகளை சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளாக உள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன் பெறும் வகையில், பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • இறால் வளர்ப்பு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
    • மாசு கட்டுப்பாட்டு வாரிய பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறால் வளர்ப்பு சங்க கூட்டம் பைபாஸ் சாலையில் நடந்தது.

    சங்கத்தின் மாநில தலைவர் அலிஉசேன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாண்டி பாலா மாநில பொருளாளர் கிரி மாநில துணை தலைவர்கள் சேதுராமன், சங்கர் பிள்ளை, இரவிப்பாண்டியண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.

    மாநில செயற்குழு கூட்டத்தில் இறால் வளர்ப்பு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

    இறால் வளர்ப்பு தொழிலுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக லைசன்ஸ் வழங்க வேண்டும் இறால் வளர்க்கும் உரிமையா ளர்களுக்கு அரசு தரமான இறால் குஞ்சுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைந்த விலையில் தரமான இறால் தீவனம் வழங்க வேண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நாராயணசாமி மயிலாடுதுறை மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் ஞானம் அரவிந்தன் சாய் பாஸ்கரன் கார்த்திகேயன் அக்பர் சேகர் திருவாரூர் மாவட்ட தலைவர் செல்லப்பா புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் முத்துராமன், கடலூர் வெங்கடகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் கலியபெரும்ள் உட்பட பல்வேறு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட துணைத் தலைவர் சாய் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 51 எண்கள் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • முதலீட்டு மானியம் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக ஆக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சியைக் கல்வித் தகுதியாகப் பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு மூன்று வாரக் கால, தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள் (அ) தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 51 எண்கள் (மானியம் ரூ.503.00 லட்சம்) என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.500 லட்சம் வரையிலான உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (மகளிர் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்த ப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ், தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்குத் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.75 லட்சம் வரை) முதலீட்டு மானியம் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.

    சிறப்பு பிரிவினரான மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவினால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

    எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீதம் மானியம் திட்ட மதிப்பீட்டில் வழங்கப்படும். ஆர்வமுள்ள படித்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.msmeonline.tn.gov.in/needs ஆகும்.

    மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும், தொலை பேசி எண் - 04362 257345, 255318. எனவே, ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • அறுவடை இயந்திரம் மூலம் நெல்லை அறுவடை செய்தால் உளுந்தின் பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக மகசூல் பெற முடியும்.
    • நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்து அதிக பயன்பெறலாம்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொறுப்பு) வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன பகுதியான தஞ்சையில் நஞ்சை சம்பா, தாளடி சாகுபடிக்கு பிறகு நெல் தரிசில் பயறு வகை பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

    நெல் தரிசில் சம்பா, தாளடி சாகுபடிக்கு பிறகு மார்கழி, தை மாதங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளலாம். வம்பன் 8,9,10 உள்ளிட்ட உளுந்து விதை ரகங்கள் ஏற்றவையாகும்.

    காவிரி ஆற்றுப் பாசன பகுதியில் நெல் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ள போது, உளுந்தை ஏக்கருக்கு 8 கிலோ விதை என்ற அளவில் மண்ணில் ஈரப்பதம் 33 சதவீதம் முதல் 38 சதவீதம் இருக்கும் பொழுது விதைத்து, பின் மூன்றில் இருந்து நான்கு நாட்களில் செயின் பொருத்திய அறுவடை இயந்திரம் மூலம் நெல்லை அறுவடை செய்தால் உளுந்தின் பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக மகசூல் பெற முடியும்.

    பயறு வகை பயிர்களில் இலை வழி உரம் இடுதல் ஒரு முக்கிய தொழில் நுட்பமாகும். நெல் தரிசில் அடியுரம் இட முடியாத நிலையில் இலைவழி உரமாக தெளிப்பது மகசூலை அதிகரிப்பதற்கு வழி கோலுகிறது.

    காய்கள் அதிகம் பிடித்து மகசூல் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது. ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கை தெளிப்பான் கொண்டு இலைகளின் நன்கு படும்படி காலை, மாலை வேளையில் பூக்கும் தருணத்தில் (விதைத்த 25ஆம் நாள்) ஒரு முறையும் மற்றும் 15 நாட்கள் கழித்து அதாவது காய்கள் பிடிக்கும் தருணத்தில் (விதைத்த 40ம் நாள்) மறுமுறையும் தெளிக்க வேண்டும்.

    90 சதவீதம் அதிகமான காய்கள் முதிர்ச்சி அடைந்தவு டன் செடிகளை தரை மட்டத்திற்கு அறிவாளால் அறுவடை செய்து கட்டி வைத்து பின்பு வெயிலில் காயவைத்து மணிகளை பிரித்து எடுக்க வேண்டும் என்றும் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்து அதிக பயன்பெறலாம்.

    மேலும் குருவிக்கரம்பை மற்றும் பெருமகளூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வம்பன் 8 ரக உளுந்து விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகள் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படும்.
    • மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாட்டில் இறால் உற்பத்தினை அதிகரிக்கவும் மற்றும் புதியதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புவோர் பயன்பெறும் வகையில் உவர் நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    உவர் நீர் இறால் வளர்ப்பி ற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 1 ஹெக்டேர் பரப்பிற்கு மொத்த செலவினம் ரூ.8 லட்ச த்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.3.20 லட்சமும் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.4.80 லட்சம் வழங்கப்படும்.

    மேலும் இக்குளங்களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.2.40 லட்சமும் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படும்.

    மேற்படி திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 6 ஹெக்டேர் மற்றும் பெண்களுக்கு 2 ஹெக்டேர் என மொத்தம் 8 ஹெக்டேர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்ப ங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    எனவே விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் எண்.873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 77 பயனாளிகளுக்கு ரூ. 167 லட்சத்து 55 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.
    • 7 பயனாளிகளுக்கு ரூ. 106 லட்சத்து 33 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கிய வகையில் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் வரை மயிலாடுதுறை மாவட்டம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி), படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாயப்பு உருவாக்கும் திட்டம், (யு.ஒய்.இ.ஜி.பி.), புதிய தொழில் முனைவோர் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டம் (நீட்ஸ்) மற்றும் பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்க ளுக்கான முறைப்படுத்தும் திட்டம்;-

    (பி.எம்.எப்.எம்.இ) ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.இ.ஜி.பி,) திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 114 பயனாளிகளில் 176 பயனாளிகளுக்கும், இதன் நிதி இலக்கீடான ரூ. 331.50 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ. 361.27 லட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 77 பயனாளிகளுக்கு ரூ.167.55 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

    படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாயப்பு உருவாக்கும் (யு.ஒய்.இ.ஜி.பி.), திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 42 பயனாளிகளில் 32 பயனாளிகளுக்கும் இதன் நிதி இலக்கீடான ரூ.34 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ.32.9 லட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 30 பயனாளிகளுக்கு ரூ.29.59 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

    புதிய தொழில் முனை வோர் வேலைவாயப்பு உருவாக்கும் (நீட்ஸ்) திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 17 பயனாளிகளில் இதுவரை 13 பயனாளிகளுக்கும் இதன் நிதி இலக்கீடான ரூ.168 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ.456.95 இலட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 7 பயனாளிகளுக்கு ரூ.106.33 இலட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.எப்.எம்.இ.) திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.20.94 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் சிறப்பாக கடனுதவி வழங்கிய 33 வங்கி மேலாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.இ.ஜி.பி.) திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கிய வகையில் மாநிலத்திலேயே மயிலாடுதுறை மாவட்டம் ஜனவரி மாதம் வரை 3-வது இடத்தை பெற்றுள்ளது.

    மேலும், இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    மேலும், தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், பொதுமேலாளர் மாவட்டதொழில் மையம், 2-ம் தளம், செந்தில் பைப்ஸ் வளாகம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை அல்லது தொலைபேசி எண்: 04364-212295, கைபேசி எண்: 9788877322 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம் என்றார்.

    ×