search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229611"

    • வாழைக்கன்றுகள், மிளகு, கொக்கோ செடிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
    • சொட்டுநீர் பாசனத்திற்கு 100 மற்றும் 75 சதவீதத்தில் மானியத்தில் வழங்கப்படுகிறது.

    பேராவூரணி:

    பேராவூரணி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் வட்டார பண்ணை தகவல் ஆலோசனைக் குழு கூட்டம் அட்மா திட்ட தலைவர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி வரவேற்று பேசினார். தோட்டக்கலை அலுவலர் ஹேமா சங்கரி கூறுகையில், நடப்பாண்டில் செயல்பட்டு வரும் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் காய்கறி விதைகள், பழக்கன்றுகள், வாழைக்கன்றுகள், மிளகு, கொக்கோ செடிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.

    ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாழையில் ஊடுபயிர் காய்கறிகள், தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடலாம் என்றார்.

    தெளிப்பான்கள், அலுமினிய ஏணி, பிளாஸ்டிக் கூடைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார். சொட்டுநீர் பாசனத்திற்கு 100 மற்றும் 75 சதவீதத்தில் மானியத்தில் வழங்கப்படுகிறது என்பதை எடுத்துக் கூறினார்.

    வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை கீழ் உதவி வேளாண் அலுவலர் மதியழகன் கூறுகையில் சென்னையில் ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் பற்றி எடுத்துக் கூறினார்.

    இதில் வட்டார பண்ணை தகவல் ஆலோசனை குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவி தொழில் நுட்ப மேலாளர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்பமேலாளர் சத்யா செய்திருந்தார்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
    • பயனாளிகளுக்கு 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கல்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, வடக்கு பட்டம் கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாமில் திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் ஆசீர் கனகராஜன் கலந்துகொண்டு திட்டத்தின் சிறப்புகள் குறித்து கூறினார்.

    இதில், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.

    தொடர்ந்து, பயனாளிகளுக்கு முழு மானியத்தில் தென்னங்கன்றுகள், 50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள், துத்தநாக சல்பேட், 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

    இதில் வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை அலுவலர் மகேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் வேளாண் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    • அனைத்து பிரிவினருக்கும் 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
    • ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    படித்த முதல் தலைமுறையினரை தொழில் முனைவோராக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டம் என்ற திட்டத்தினை உருவாகியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் முதலாம் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வழிவகை செய்யப்படுகிறது.

    அதன்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீதம் மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.75 லட்சம்) நிதியுதவி வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீத மானியத்துடன் கூடுதலாக 10 சதவீத மானியம் (அதிகபட்ச உச்சவரம்பு ரூ.75 லட்சம்) வழங்கப்படும். மேலும் அனைத்து பிரிவினருக்கும் 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணபிக்கும்போது பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினரான பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு வயது 45-க்குள் இருக்க வேண்டும்.

    கல்வித்தகுதியாக 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழிற்சார்ந்த பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொது பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் 5 சதவிகிதம் செலுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெற விரும்பும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அவினாசி சாலை, அனுப்பர்பாளையம்புதூர், திருப்பூர் என்ற முகவரியிலோ அல்லது 0421-2475007 மற்றும் 9500713022 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • உணவு காளான் உற்பத்தி பற்றி அறிந்து கொண்ட பிறகு மாணவிகளும், விவசாயிகளும் செய்முறை பயிற்சி.
    • உணவு காளான் உற்பத்திக்கான பல்வேறு திட்டங்கள் குறித்தும், மானியம் குறித்தும் கூறினார்.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உணவுக் காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது.

    உணவுக் காளானின் நன்மைகளை பற்றியும், அதனை உற்பத்தி செய்யும் முறைகளை பற்றியும், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் விவசாயிகள் மட்டுமல்லாமல் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகளும் கலந்துக் கொண்டனர்.

    உணவுக் காளான் உற்பத்தி பற்றி அறிந்து கொண்ட பிறகு மாணவிகளும், விவசாயிகளும் செய்முறை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இப்பயிற்சியில் கூடுதலாக, மூல வித்து, தாய் வித்து மற்றும் படுக்கை வித்து ஆகியவற்றை தயாரிக்கும் முறைகளப் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    தோட்டக்கலை உதவி இயக்குனரான இளவரசன் உணவுக் காளான் உற்பத்திக்கான பல்வேறு திட்டங்கள் குறித்தும், மானியம் குறித்தும் கூறினார். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக கண்காட்சி நடைபெற்றது.

    அதில் காளான் வளர்ப்பு குடில், காளான் உருளை, படுக்கை காளான், வித்துக்கள் மற்றும் நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கான பொருட்களும் இடம் பெற்றிருந்தன.

    இந்த பயிற்சியில் கலந்துக்கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. .பயிற்சியை நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.

    • பறிமுதல் செய்த மண்எண்ணையையும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • இந்த மண்எண்ணை மீன் பிடி வள்ளங்களுக்கு அரசு மானியமாக வழங்கப்படும் மண்எண்ணை என கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் உத்தர வுப்படி சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்றிரவு மணவா ளக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    முட்டம் சோதனைச் சாவடியில் செல்லும் போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு சொகுசு கார் வந்தது.அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.அப்போது காருக்குள் 22 பிளாஸ்டிக் கேன்களில் 700 லிட்டர் மண்எண்ணை கடத்தி செல்ல முயற்சித்தது தெரிய வந்தது. இதையடுத்து மண்எண்ணையை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த மண்எண்ணை மீன் பிடி வள்ளங்களுக்கு அரசு மானியமாக வழங்கப்படும் மண்எண்ணை என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த சாமியார்மடத்தை சேர்ந்த ஸ்டாலின் (வயது 37) மற்றும் அவருடன் வந்த கிரிபிரசாத் (47) ஆகியோரையும், பறிமுதல் செய்த மண்எண்ணையையும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • சோயா எண்ணையை அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்.
    • ஒரு எக்டருக்கு டிரைக்கோ டிராமா விரிடி என்ற பூஞ்சான் மருந்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    கும்பகோணம்:

    சோயா சாகுபடி மற்றும் நெல் தரிசில் உளுந்து சாகுபடி முனைப்பு இயக்கம் சார்பில் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் கிராமத்தில் உளுந்து சாகுபடி குறித்து விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    முகாமிற்கு சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயக்குனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் கலைவாணன் வரவேற்றார்.

    முகாமிற்கு வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி கலந்துகொண்டு பேசுகையில் சோயா பீன்ஸ் முக்கியத்துவம் அதன் பயன்கள், ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், சாகுபடி தொழில் நுட்பங்கள், பற்றியும் குறைந்த நாட்களில் குறைந்த செலவில் குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிகம் லாபம் தரக்கூடிய பயிர் என்பதால் சோயாவில் 18 முதல் 20 சதவீத எண்னெய் உள்ளது, சோயா எண்ணையை அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம் மேலும் சோயாவில் புரத சத்து 38 முதல் 40 சதவீதம் உள்ளது.இந்த புரத சத்து உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது.

    நெல் சாகுபடிக்கு பிறகு சோயா சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும், மண் வளமும் மேம்படும்.

    இந்த ஆண்டு கும்பகோணம் வட்டத்திற்கு சோயா சாகுபடி செய்ய 100 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் சோயா தொகுப்பு செயல் விளக்கத்திற்காக ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 5000 மானியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் ஒரு எக்டருக்கு டிரைக்கோ டிராமா விரிடி என்ற பூஞ்சான மருந்து 50 சத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    சோயா பீன்ஸ் விதைகள் கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள சுவாமிமலை, கொத்தங்குடி, சோழபுரம், கும்பகோணம், கொற்கை, ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக விவசாயிகளுக்கு மானிய விலையில் சோயா விதைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் சோயா கல அலுவலர் வெங்கடாசலம் உதவி அலுவலர் விவேக், உதவி வேளாண்மை அலுவலர் கீர்த்திகா, முன்னோடி விவசாயி சந்திரசேகர் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காளான் உற்பத்திக்கு ரூ.1 லட்சம் மானியம் பெறலாம் என தோட்டக்கலை துறையினர் அறிவித்துள்ளனர்
    • தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் விருப்பமுள்ள மகளிர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

    மணப்பாறை:

    மணப்பாறை வட்டார தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை மூலம் கிராமப்புற மகளிர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடம் அமைக்க கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. மணப்பாறை வட்டாரத்தில் நடப்பாண்டிற்கான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கிராமங்களான செட்டியபட்டி, சாம்பட்டி, சித்தாநத்தம் மற்றும் கலிங்கப்பட்டி வருவாய் கிராம மகளிர்களுக்கும் கடந்த ஆண்டிற்கான கருப்பூர், புத்தாநத்தம், பண்ணப்பட்டி, பொய்கைப்பட்டி, கண்ணுடையான்பட்டி, எப்.கீழையூர் மற்றும் கே.பெரியப்பட்டி வருவாய் கிராம பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் விருப்பமுள்ள மகளிர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலை துறையின் அதிகார்பூர்வ இணையதளமான www.tnhorticulture.tn.gov.in/tnhortinet/registration new.php மூலம் பதிவு செய்தும் அல்லது மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகியும் பயன்பெறலாம் என மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


    • கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காளான் குடில் அமைக்க ஒரு லட்சம் மானியம் வழங்கபடுகிறது
    • பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறலாம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காளான் குடில் அமைக்க ஒரு லட்சம் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்திட 20 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது பெரம்பலூர் மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கீழமாத்தூர், அல்லிநகரம், இரூர், காரை, நக்கசேலம், நாரணமங்கலம், எளம்பலூர், எசனை, வடக்குமாதவி, மலையாளப்பட்டி, அன்னமங்கலம், வி.களத்தூர், பிரம்மதேசம், சிறுமாத்தூர், அகரம் சிக்கூர், எழுமூர், கீழப்புலியூர், கிழுமத்தூர், ஓலைப்பாடி, பரவாய் ஆகிய 20 கிராமங்களில் காளான் குடில் அமைக்க பொருள் இலக்காக 2 எண்கள் மற்றும் நிதி இலக்காக ரூ.2 லட்சமும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 600 சதுர அடி அளவுள்ள காளான் வளர்ப்பு கூடாரம் அமைக்க அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையதளத்தில் பதிவு செய்தோ பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


    • காளான் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படுகிறது.
    • அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்

    கரூர்

    கரூர் தாந்தோணி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கவிதா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2022-23ம் ஆண்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாந்தோணி வட்டாரத்தில் மணவாடி, பள்ளபாளையம் மற்றும் கோயம்பள்ளி ஆகிய கிராமங்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி தோட்டக்கலை துறை சார்பில் கிராமங்களில் காளான் வளர்ப்பு மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டலாம். காளான் வளர்ப்பில் ஈடுபடுபவருக்கு 600 சதுர அடியில் காளான் வளர்ப்பு குடில் அமைக்கவும், தேவையான பொருட்கள் வாங்கவும் தோராயமாக ரூ.2 லட்சம் செலவாகும். இதில் 50 சதவீதம் பின் ஏற்பு மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். விவசாயிகள் மட்டுமின்றி நில மற்றவர்களும் 50 சதவீத மானியத்துடன் தங்கள் வீட்டின் பின்புறத்தில் காளான் பண்ணை அமைத்து இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
    • நலத் திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதி யோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    பொதுமக்களிட மிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அர விந்த் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் சமூக நலத்துறையின் சார்பில் 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு மானியத் தொகையினை வழங்கினார். இதில் துணி வியாபாரம் செய்திட 17 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8.50 லட்சம் மானியமாகவும், ஆடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாகவும், மாடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலுள்ள கால்நடைகள் கொள்மு தல் செய்யவும், ரூ.15 ஆயி ரத்திற்கு தீவனம் மற்றும் மேற்கூரை அமைத்தல் என 6 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட் சம் மானியமாகவும், மீன் வியாபரம் செய்துவரும் 4 நபர்களுக்கு தொழில் விரிவு படுப்படுத்திட தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியமாகவும், புதிதாக காய்கறி வியாபரம் மற்றும் கிராமிய கலை மற்றும் பூ கட்டுதல் செய்திட தலா ஒரு நபருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் 2 நபருக்கு ரூ. 1 லட்சம் மானியம் என மொத்தம் 30 திருநங்கைகளுக்கு மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்பிலான மானியத்தொகையினை யும், வருவாய்துறையின் சார்பில் ஒரு நபருக்கு விதவை உதவித்தொகை ஆணையினையும் கலெக் டர் அரவிந்த் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித் துணை கலெக்டர் திருப்பதி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி மற்றும் அனைத் துத்துறை அரசு அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

    தாலுகா, வட்டார வளர்ச்சி அலுவலகங்க ளில் முதல்வரின் முகவரித் துறை சிறப்பு கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இது தொடர்பாக கலெக்டரின் அறிவிப்பில், 'முதல்வரின் முகவரித் துறை சிறப்பு குறைதீர்வு வாரமானது இன்று (20-ந் தேதி) தோவாளை வட் டாட்சியர் அலுவலகம், அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகங்க ளிலும், 21-ந் தேதி அகஸ்தீஸ்வரம் வட் டாட்சியர் அலுவலகம், ராஜாக்கமங்கலம் மற்றும் குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகங்க ளிலும், 22-ந் தேதி கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம், தக்கலை மற்றும் திருவட்டார் வட் டார வளர்ச்சி அலுவல கங்களிலும், 23-ந் தேதி கிள்ளியூர் மற்றும் திருவட்டார் வட்டாட்சி யர் அலுவலகம், கிள்ளியூர் மற்றும் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களி லும், 24-ந் தேதி விள வங்கோடு வட்டாட்சியர் அலுவலகம், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலு வலகங்களிலும் நடைபெற வுள்ளது.

    பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வரின் முகவ ரித்துறை சிறப்பு குறைதீர்வு வாரத்தில் கொடுத்து பயன் பெறலாம்' என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

    • ஆந்தை பந்தல் அமைத்து எலிகளை இரவு நேரங்களில் கட்டுப்படுத்தலாம்.
    • உளுந்து விதை போன்றவை பற்றிய மானிய விவரங்களை கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் ஆதனூர் கிராமத்தில் விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    பயிற்சியில் விதை சான்று துறை, விதை சான்று அலுவலர் அசோக் கலந்து கொண்டு பேசுகையில், விதை தேர்வு, வயல் பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப் பின் விதையின் ஈரப்பத அளவு போன்றவை பற்றியும் தரமான விதைகளை உற்பத்தி செய்வது குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    மேலும் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பதிவு செய்தல் பற்றியும் மற்றும் விதைகளின் நிலைகள் பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு விளக்கினார்.

    வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் பேசுகையில், நடப்பு சம்பா தாளடி பருவத்தில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் அதன் மேலாண்மை பற்றியும் மற்றும் எலி ஒழிப்பு மேலாண்மை பறவைக்குடில் ஆந்தை பந்தல் அமைத்து எலிகளை இரவு நேரங்களில் கட்டுப்படுத்தலாம் என்றும் ப்ரோமோ டைலான் மருந்தினை பயன்படுத்தி எலிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி ஆத்மா திட்ட செயல்பாடுகள் பற்றி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் ரவி பேசுகையில், வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பில் உள்ள உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள், உளுந்து விதை போன்றவை பற்றிய மானிய விவரங்களை கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    பயிற்சியில் உதவி விதை அலுவலர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அகல்யா மற்றும் ஆதனூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மகேஷ் செய்திருந்தார்.

    • சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்க விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படும்.
    • இந்த தகவலை வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். விவசாயி தெய்வப் பெருமாள் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் மாசானம், தோட்டகலை உதவிஅலுவலர் குமரேசன், ஊராட்சி துணைதலைவர் சித்தாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேளாண் பொறியியல்துறை உதவி பொறியாளர் மோகன் ராஜ் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆண்டுக்கு 2500 கிராமங்களை தேர்தெடுத்து 17 துறை சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி தற்சார்பு கிராமமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் வேளாண் பொறியியல்துறை மூலம், சோலார் மின்உற்பத்தி மையம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மின்மோட்டாருக்கு 70 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது.

    மேலும் வேளாண் உற்பத்திபொருள் மதிப்பு கூட்டு சேமிப்பு கிடங்கு அமைக்க 50 சதவீதம், பண்ணை குட்டைகளுக்கு 100 சதவீதமும் மானியம் அளிக்கப்படுகிறது.

    இது போன்ற திட்டங்க ளால் வேளாண்மையில் எந்திரமாக்கல் இலக்கை அடைய முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வாடிப்பட்டி தோட்டக்கலை துறைஉதவி இயக்குனர் சண்முகபிரியா பேசுகையில்,

    விவசாயிகளுக்கு தேன்கூடு பண்ணை, மாவுமில் மற்றும் சொட்டு நீர்பாசன வசதி மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார்.

    விதை இடுபொருள் மற்றும் கைதெளிப்பான் உள்ளிட்ட விவசாய உபகரணங்களும் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண் உதவி அலுவர் விக்டோரியா தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் உழவன் செல்போன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

    ×