search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்கள்"

    • பருவம் தவறி பெய்த மழையால் பயறு, எள், கடலை பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.
    • தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பின் படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடன் திறந்து விட வேண்டும்.

    கடந்த 2 மாதங்களாக கூட்டு குடிநீர் சரிவர வராத காரணத்தினால் அவதிப்படும் கிராம மக்களை பாதுகாத்திட பருவம் தவறி பெய்த மழையால் பயறு, எள், கடலை மற்றும் பாதிப்படைந்த பயிர்களுக்கு தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை உடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் சிவகுரு.பாண்டியன் சிறப்புரையாற்றினார். விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகானந்தம், மாவட்டக்குழு கருணாநிதி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் அருள்ஒளி, நகரச் செயலாளர் ராஜேந்திரன்.

    இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளா் பழனியப்பன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூதலூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முடிவடைந்து உள்ளது.
    • பருவம் தப்பிய கடும் வெயில் காரணமாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    பூதலூர்:

    பூதலூர் வட்டார பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் கடுமையான வெயில் அடித்து வருகிறது.

    வெயிலுடன் அவ்வப்போது கடுமையான காற்றும் வீசுகிறது.

    பூதலூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முடிவடைந்து உள்ளது.

    இந்த வாரத்தில் குறுவை சாகுபடி முழுமையாக முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

    தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரில் ஆடிப் பருவத்தில் வீசும் காற்று, பருவம் தப்பிய கடும் வெயில் காரணமாக புது விதமான பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    வேளாண்துறையினர் குறுவை சாகுபடி வயல்கள் உன்னிப்பாக கவனித்து விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி நல்ல நிலையில் குறுவை பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

    • 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மேலபனையூர் ஊராட்சி கமலாபுரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 2 மாதங்கள் ஆகியும், இதுவரை இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் மனமுடைந்த விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை வயல்களுக்கு கொண்டு வந்து, அவற்றை நெற்பயிர்களை மேயவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் வேனுகோபால், சரவணன் ஆகியோர் கூறியதாவது,கமலாபுரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விளைநிலங்கள் அய்யனாற்றில் இருந்து பிரிந்து கூழையாறில் வரும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த கூழையாறு தூர்வாரப்படாததாலும் போதுமான அளவில் தண்ணீர் திறந்து விடாததாலும் கமலாபுரம் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

    மேலும், மதகுகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் கூழையாறில் இருந்து வரும் தண்ணீர் பொண்ணு கொண்டான் வடிகாலில் சென்று விடுகின்றன. எங்கள் பகுதி விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி பல ஆண்டுகளாக எட்டாக்கனியாகி உள்ளது.இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் எங்கள் கிராமத்திற்கு காலத்தோடு தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் குறுவை சாகுபடியை தொடங்கினோம்.

    ஆனால் தண்ணீர் இன்றி பயிர்களை மேயவிட்டு கால்நடைகளுக்கு உணவாக்கும் அவலநிலை ஏற்படும் என நினைத்து கூட பார்க்கவில்லை. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசின் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும்.
    • கருகும் குறுவை பயிர்களை காப்பாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டி உரிய நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும்.

    மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசின் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும் .

    கருகும் குறுவை பயிர்களை காப்பாற்ற வேண்டும்.

    அரசியல் மற்றும் சட்ட ரீதியான அழுத்தத்தை கொடுத்து உரிய நீரை பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

    அகில இந்திய இணை செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட பொருளாளர் பழனிஅய்யா, துணைத் தலைவர் முனியாண்டி , ஒன்றிய செயலாளர் ராம், ஒன்றிய தலைவர்கள் கருப்பையன், சௌந்தரராஜன், கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக காவிரி நீர் சென்றடையவில்லை.
    • ஆற்றில் இருந்து வரும் நீரை பாசன வாய்க்கால் மூலம் வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக காவிரி நீர் சென்றடையவில்லை.

    இந்நிலையில் காவிரி நீரை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள சித்தாய்மூர் ஊராட்சி கீரம்பேர் பாசன வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களுக்கு இதுவரை காவிரி நீர் சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது.

    வெள்ளையாற்றிலிருந்து பிரிந்து வாசன வசதி பெறும் இக் கால்வாய் தூர்வாரி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது.

    இதனால் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் தேங்கியும், தேவையற்ற செடிகள் வளர்ந்தும் நீர் பாய்வதற்கு ஒரு தடையாகவே இருந்து வருகிறது.

    இதனால் இப்பாசனத்தை நம்பி சுமார் 1000 ஏக்கருக்கும் வயலில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விதை நெல்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது.

    இதனால் ஆற்றில் இருந்து வரும் நீரை பாசன வாய்க்கால் மூலம் வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

    பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் வாய்க்கால் தூர்வாரப்படாததால் விவசாயிகளே சொந்தமாக வாய்க்காலை தூர்வாரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சுமார் 7கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்காலை விவசாயிகளே தங்களது நிதி பங்களிப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆகவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஜூன் 15-க்கு முன்பு நாற்று நட்டு 24 நாட்கள் நடவுப்பணி மேற்கொள்ளலாம்.
    • தென்மேற்கு மழையால் ஏற்படும் பயிர் சேதத்திலிருந்து தங்களது நெல் பயிரை பாதுகாத்து கொள்ளலாம்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ராணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிய தாவது:-

    குறுவை சாகுபடிக்கு தேவையான சான்று பெற்ற விதைகள், நெல் நுண்ணூட்டம், திரவ உயிர் உரங்கள் யாவும் பேராவூரணி, திருச்சிற்றம்பலம் மற்றும் சீதாம்பாள்புரம் விரிவாக்க மையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தரமான சான்று பெற்ற விதைகளை விதைநேர்த்தி செய்து ஒற்றை நாற்று நடவு முறையில் நடவுப்பணி மேற்கொள்ளவும் நடவு வயலில் கடைசி உழவிற்கு பிறகு நெல் நுண்ணுட்டம் இட்டு நடவு செய்திடவும், திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை இலைவழி உரமாக பயன்படுத்தவும், பேரூட்டசத்துக்களில் ஒன்றான தழைச்சத்தை மூன்று கட்டங்களாகவும் பொட்டாஸ் உரத்தை இரு கட்டங்களாகவும் பிரித்து நெல்பயிருக்கு கொடுக்க வேண்டும்.

    நெல் நடவு வயலில் நடவுக்கு முன்பாக தக்கைபூண்டு, பசுந்தாள் உரத்தை ஏக்கருக்கு 20கிலோ வீதம் விதைத்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் 25சதவீதம் தழைச்சத்தை மிச்சப்படுத்தலாம். குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகளை விரிவாக்க மையங்களில் உடனடியாக பெற்று வரும் ஜூன் 15க்கு முன்பாக நாற்றுநட்டு சரியாக 24 நாட்களில் நடவுப்பணி மேற்கொள்ள லாம். தென்மேற்கு மழையினால் ஏற்படும் பயிர் சேதத்திலிருந்து தங்களது நெல் பயிரினை பாதுகாத்துக் கொள்ளலாம்.

    விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அல்லது தொழில்நுட்பங்களை பெறுவதற்கு அந்தந்த தொகுதி வேளாண்மை உதவி அலுவலர்கள், வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம்.

    பேராவூரணி பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை விரைவில் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெற உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

    • 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
    • வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையன் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சொந்த கிராமத்தில் 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.

    எங்களுக்கு வேறு இடமோ, வீடோ இல்லை. பனைத் தொழில் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இந்த இடத்திற்கு எங்களுக்கு 2சி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பனை மரங்களுக்கு வரியும் நிலத்திற்கு கந்தாயர் ரசிதும் செய்து வருகிறோம்.

    ஆனால் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை இடித்தும் விவசாயத்தை அழித்தும் எங்கள் இடத்தை காலி செய்ய சொல்லியும் மிரட்டி வருகின்றனர். எனவே 3 தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் மற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • சுமார் 60 அடி முதல் 78 அடி வரை வருவாய்த்துறை பதிவேட்டின் படி அகலம் கொண்டு செல்கிறது.
    • சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, நிலக்கடலை, தானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த குளிச்சப்பட்டு கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் வட்டம் சூரக்கோட்டை கிராம எல்லையில் ஓடும் வடிகால் குளிச்சப்பட்டு கிராம எல்லையில் உள்ள பொன்னேரியில் இருந்து வடியும் மழை நீரை தொடக்கமாகக் கொண்டு ரூ.18,00000 மதிப்பில் 5 கி.மீ. தூரம் ஜம்புகாபுரம் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் கடந்த 13-ந் தேதி நடைபெற்றது.

    இந்த வடிகால் வாய்க்கால் சுமார் 60 அடி முதல் 78 அடி வரை 16.9 மீட்டர் முதல் 24 மீட்டர் வரை வருவாய்த்துறை பதிவேட்டின் படி அகலம் கொண்டு செல்கிறது.

    இதில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பிலும், மேடு பகுதிகளாகவும் உள்ளது.

    இதற்கு முன் இரு கரைகளும் வண்டியில் செல்லும் அளவுக்கு பாதியாக இருந்து பயன்பாட்டில் இருந்தன.

    நாளடைவில் வயல் பகுதியாக ஆக்கிரமிப்பு உள்ளன.

    தற்போது இந்த வடிகாலை வருவாய்த்துறை பதிவேட்டின் படி தூர்வாராமல் மிகக் குறைந்த அளவில் இருக்கும் படியே தூர்வாரும் பணி நடைபெற்றது.

    அன்றைய தினமே குளிச்சப்பட்டு கிராம மக்கள் அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தோம்.

    அதன்படி அந்த அதிகாரிகள் சர்வே செய்த பிறகு தூர்வாரும் பணிகள் செய்கிறோம் என கூறிவிட்டனர்.

    ஜம்புகாபுரம் வடிகால் பகுதியான வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு, நிலக்கடலை, தானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.

    இந்த பகுதிக்கு சாலை வசதி கிடையாது.

    இந்த வடிகாலை வருவாய்த்துறை பதிவேடு படி தூர்வாரி கரையை உயர்த்தினால் அறுவடை செய்யும் அறுவடை இயந்திரங்கள், உழவு டிராக்டர்கள், விவசாய இடு பொருட்கள் கொண்டு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே இந்த வடிகால் தூர்வாரும் பணிகளை பொன்னேரி பாயிண்டில் இருந்து குளிச்சப்பட்டு சாலை அல்லது வாளமர் கோட்டை சாலை பகுதி வரை தூர்வாரும்படியும், கரைகளை உயர்த்த ஆவணம் செய்யும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.
    • தண்ணீர் செல்வது தடைபட்டு மழை காலங்களில் பயிர்கள் மூழ்கி விடுகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பூதலூர் தாலுகா சொரக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

    எங்கள் கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.

    வெண்டையம்பட்டி வருவாய் கிராமத்தில் ஊமத்தன் ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் வடிகால் வாரியானது தூர்ந்து போய் புதர் மண்டி உள்ளது.

    இதனால் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.

    மழை காலங்களில் பயிர்கள் மூழ்கி விடுகின்றன.

    எனவே வடிகால் வாரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பூதலூர்:

    காவேரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12க்கு பதிலாக மே மாதம் 24 ம் தேதி திறக்கப்பட்டது.

    பருவம் தப்பிய மழையால் நடவு பணிகள் சற்று தாமதம் ஆகியது இதனால் கல்லணையில் தலைப்பு பகுதியான பூதலூர் தாலுகா பகுதிகளில் பல இடங்களில் இன்னும் சில வாரங்களுக்கு வயல்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

    இந்நிலையில் ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது.

    இதனால் தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது

    இதனால் உடனடியாக மேலும் சில வாரங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி இன்று காலை பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் விவசாயிகள் சங்கத்தினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் தஞ்சை மாவட்ட விவசாய சங்க செயலாளர் கண்ணன், தஞ்சை மாவட்ட அனைத்திந்திய மாத சங்க செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முக்கியமான இடத்தில் சாலை மறியல் நடைபெற்றதால் இரண்டு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துநின்றன. பூதலூர் தாசில்தார் பெர்ஷியா திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதை அடுத்து சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

    இதனால் இந்த தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்வள த்துறை அதிகாரி உடன் பேசி நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி கூறியது அடிப்படையில் சாலை மறியல் போரா ட்டம் தற்காலிகமாக கைவி டப்பட்டது.

    • 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    5 ஆயிரம் ஏக்கர் இலக்கு தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    உளுந்து மற்றும் பச்சைபயறு பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை ஆகியவை மானிய விலையில் கொத்தங்குடி, நீர்முளை, பனங்காடி, தலைஞாயிறு ஆகிய வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    குறைந்த நாட்களில் அதிக மகசூல் விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

    இதை சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது. தலைஞாயிறு பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் நிறைவு பெறும் நிலையில், உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு
    • விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, மரச்சீனி, மிளகு, கத்தரி, பயறு வகைகள் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டணம் கால்வாய்க்கு சிற்றாறு அணையில் இருந்து சிற்றாறு பட்டணங்கால் பிரிவு பிரதான கால்வாய் குலசேகரம், தும்பகோடு பகுதியில் தொடங்கி மாத்தூர், திருவட்டார், பள்ளியாடி வழியாக முள்ளங்கினாவிளை வந்து சேரும். அங்கிருந்து கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட புதுக்கடை பிரிவு, கருங்கல் பிரிவு என இரண்டாக பிரிகிறது.

    பட்டணம் கால்வாயின் கிளை கால்வாய்களில் வரும் தண்ணீரால் அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் பயன்பட்டு வருகின்றனர். தற்போது சிற்றாறு பட்டணம் கால்வாயின் கிள்ளியூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட கடைவரம்பு பகுதிகளான கருங்கல், பாலூர், சுண்டவிளை, தேவிகோடு, பூட்டேற்றி, மீறி, தேங்காப்பட்டணம் வரையும் உள்ள சிற்றாறு பட்டணம் கால்வாயில் மேற்கண்ட பகுதிகளில் கால்வாயில் கடைவரம்பு பகுதிகளில் கடந்த பல வருடங்களாக பொதுப்பணித்துறை நீராதார அமைப்பு அதிகாரி களின் அலட்சியத்தால் கடைவரம்பு பகுதிகளில் சரியான முறையில் தூர்வாரமல் கால்வாய்க ளில் சுமார் 2 அடிக்கும் மேல் மண் நிறைந்து காணப்படுகிறது.

    மேலும் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட மத்திகோடு ஊராட்சி, பாலப்பள்ளம் பேரூராட்சி போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் திக்கணங்கோடு திருவிதாம்கோடு கிளை கால்வாய் வழுதலம்பள்ளம் வரை பல ஆண்டுகளாக சரியான முறையில் தூர்வாரமல் மண் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. சிற்றாறு பட்டணங்கால் வாய் மற்றும் திக்கணங் கோடு கால்வாய் ஆகிய 2 கால்வாய்களிலும் கடந்த 2 மாதங்களாக திடீரென்று தண்ணீர் நிறுத்தப்பட் டுள்ளது.

    இதனால் இப்பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, மரச்சீனி, மிளகு, கத்தரி, பயறு வகைகள் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாய்க்குட்பட்ட பகுதிகளில் உள்ள 100 -க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் இல்லாமல் கணப்படுகிறது.

    ஆனால் பட்டணம் கால்வாய் மற்றும் திக்க ணங்கோடு கால்வாய்களில் தண்ணீர் திறப்பது பற்றி பொதுபணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் சரியான பதிலை தரவில்லை. ஆகவே உடனடி யாக பட்டணம் கால்வாய் மற்றும் திக்க ணங்கோடு கால்வாய் பகுதிகள் மற்றும் இடிந்து விழுந்த திக்கணங்கோடு கோட்ட விளை பகுதியையும் மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து கரையில் உடைப்பு ஏற்பட்ட இடங்க ளையும் சரி செய்து மேற்குறிப்பிட்ட 2 கால்வாய்களிலும் கடைவரம்பு பகுதிகள் வரை தூர்வாரி சீரமைத்து 5 தினங்களுக்குள் 2 கால்வாய்களி லும் கடைவரம்பு பகுதிகள் வரை தண்ணீர் விட மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதனை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்.தவறும்பட்சத்தில் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி எனது தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×