என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் கொள்முதல்"

    • 15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை.
    • நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.

    மதுரை:

    மதுரையில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

    15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள், கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் லஞ்சம் வேண்டுமென அதிகாரிகள் கேட்பதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

    முளைத்த நெல்லுடன் மாவட்ட ஆட்சியரிடம், நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.

    • குறுவை பருவத்தில் பெய்யும் மழையின் அளவை கொண்டு நெல்லின் ஈரப்பத சதவீதத்தை கணக்கிடலாம்.
    • மழை பெய்தபோது ஈரப்பத தளர்வு அறிவிக்காமல் அறுவடை முடியும் நேரத்தில் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது காலம் கடந்த செயல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட குறவை நெல்மணிகள் தொடர் மழையால் ஈரப்பதமாகியது. காய வைத்தும் ஈரப்பதம் குறையவில்லை.

    இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உத்தரவுப்படி மத்திய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.

    மத்திய அரசின் அறிவிப்பு குறித்து டெல்டா மாவட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன்:

    மத்திய அரசு அறிவித்துள்ள 19 சதவீத ஈரப்பத அளவு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்த பிறகு காலம் கடந்த ஏமாற்றம் தரும் அறிவிப்பாகும். இந்த ஈரப்பத உயர்வு அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அதுவும் 22 சதவீதம் கேட்டதற்கு பெயரளவிற்கு 19 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம். குறுவைக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு பலமுறை தொடர்ந்து கோரியும், மத்திய மாநில அரசுகள் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதனால் பயிர் காப்பீடும் செய்யப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார்:

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய 15 நாட்களுக்கு பிறகு தான் மத்திய குழு ஆய்வு நடத்தியது. அந்த மத்திய குழுவும் அறிக்கை தாக்கல் செய்த 10 நாட்களுக்கு பிறகு தான் 19 சதவீதம் நெல் ஈரப்பதம் தளர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இப்படி அனைத்துமே கால தாமதம் தான். ஏற்கனவே விவசாயிகள் கஷ்டப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதுவும் 22 சதவீதம் என கேட்டதற்கு 19 சதவீதத்திற்கு தான் அனுமதி கொடுத்துள்ளது. உரிய நேரத்தில் செய்யும் உதவி தான் சால சிறந்தது. அதனை மத்திய அரசு செய்யவில்லை.

    எனவே இனி ஒவ்வொரு ஆண்டும் குறுவை பருவத்தில் 22 சதவீதம் வரையிலான ஈரப்பதம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று நிலையான அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்போது தான் விவசாயிகள் பலன் அடைவர். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவக்குமார்:

    ஒவ்வொரு குறுவை பருவத்திலும் ஈரப்பத தளர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுப்பதும், பின்னர் மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாமல் பெயரளவிற்கு தளர்வு அளிப்பதும் வாடிக்கையாகி விட்டது. விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்க வேண்டும்.

    குறுவை பருவத்தில் பெய்யும் மழையின் அளவை கொண்டு நெல்லின் ஈரப்பத சதவீதத்தை கணக்கிடலாம். மேலும் ஈரப்பத தளர்வு குறித்து மாநில அரசு முடிவு எடுக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு மாநில அரசு குரல் கொடுக்க வேண்டும்.

    தற்போது அறிவித்துள்ள 19 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பே கால தாமதம் தான். அறுவடை பணிகள் கிட்டதட்ட முடியும் நேரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ஏற்று கொள்ள முடியாது.

    தஞ்சை விவசாயி ரவிச்சந்திரன்:

    மழை பெய்தபோது ஈரப்பத தளர்வு அறிவிக்காமல் அறுவடை முடியும் நேரத்தில் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது காலம் கடந்த செயல். அதுவும் விவசாயிகள் கோரிக்கையை முழுமையாக ஏற்காமல் ஈரப்பத தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் 19 சதவீதம் என்பது போதாது. எனவே உடனடியாக 22 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். சம்பா நெல் கொள்முதலுக்கு 23 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நிரந்தரமாக உலர் எந்திரங்களை அமைக்க வேண்டும்.

    • இரண்டாம் போக நெல் சாகுபடி தற்போது தீவிரமடைந்துள்ளது.
    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினரால் நெல் கொள்முதல் செய்யப்படும்.

    உடுமலை :

    உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டு கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் வாயிலாக 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அப்பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி தற்போது தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில் அரசு கொள்முதல் மையம் இல்லாததால் வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்து நஷ்டமடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மேலும் 27 கி.மீ., தொலைவிலுள்ள கண்ணாடிப்புத்தூர் கிராமத்திலுள்ள மையத்துக்கு நெல் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.

    எனவே ருத்ரபாளையத்தில் அரசு நெல் கொள்முதல் மையம் துவக்க வேண்டும் என்ற எழுந்தது.இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-உடுமலை வட்டாரத்தில் காரீப் பருவத்துக்கான நெல் அறுவடை துவங்கியதும் கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

    இது குறித்த கருத்துரு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மடத்துக்குளம் தாலுகா ருத்ரபாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த மையத்தில் சங்கராமநல்லூர், குமரலிங்கம் மற்றும் கல்லாபுரம் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்து கொள்ளலாம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினரால் நெல் கொள்முதல் செய்யப்படும்.

    விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில், விற்பனை செய்யும் முன் மின்னணு நேரடி கொள்முதல் மைய இணையதளத்தில் (e---DPC) பதிவு செய்யவும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக விவசாயிகள் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றனர்.

    • தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மழைக்காலங்களில் நெல்மணிகள் நனையாமல் இருப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

    2 லட்சத்து 86 ஆயிரம் 350 மெட்ரிக் டன் அளவுக்கு நெல்மணிகளை பாதுகாக்க முடியும். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் முடிவடையும்.

    இது தவிர நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, அரசு துறை கட்டிடங்களிலும் நபார்டு சேமிப்பு கிடங்கு கட்டும் பணி நடைபெறுகிறது. அவற்றின் மூலம் 7 லட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிக்க முடியும். தற்போதைய ராபி பருவத்தில் 8 லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    வருகின்ற பருவத்தில் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரல்ரேகை மூலம் பொருள் வாங்க முடியாதவர்கள் கண் கருவிழி கொண்டு பொருள் வாங்கலாம். திருவல்லிக்கேணி, பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இது அமலுக்கு வரும்.

    மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்வதில் சிரமம் இருந்தால் அங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒருவரை நியமித்து அவர்கள் மூலம் பொருள் வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.

    தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.2,160/- ம், இதர நெல் ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி மொத்தம் ரூ.2,115 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் தங்களது நெல் அறுவடை மகசூலினை நல்ல விலைக்கு விற்பனை செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மூலமாக 11 தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட வருவாய் கிராமங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுகிறது. சிறுகாவேரிப்பாக்கம் குறுவட்டம், விஷார் கிராமத்திலும், பரந்தூர் குறுவட்டம், தொடூர் மற்றும் புரிசை கிராமங்கள், கோவிந்த வாடி குறுவட்டம், வேலியூர் மற்றும் கம்மவார்பாளையம் கிராமங்கள், சிட்டியம் பாக்கம் குறு வட்டம், சிட்டியம்பாக்கம் மற்றும் மருதம் கிராமங்களிலும், ஸ்ரீபெரும்புதூர் குறுவட்டம் (பிர்கா), நாவலூர் கிராமம் மற்றும் மதுரமங்கலம், மேல்மதுரமங்கலம் கிராமங்களிலும், படப்பை குறுவட்டம் (பிர்கா), அமரம்பேடு கிராமத்திலும், நெல் கொள்முதல் பணிகள் நடைபெறும்.

    சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.2,160/- ம், இதர நெல் ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி மொத்தம் ரூ.2,115 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய விரும்பும் விவசாய பெருமக்கள் அனைவரும் உரிய ஆவணங்களான அடங்கல் சான்று, ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் கொண்டு சென்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விவசாயிகளிடமிருந்து 3,162 மெட்ரிக் டன் நெல் ெகாள்முதல் நிலையத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது, மண்டல மேலாளர் அருண்பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழக்கண்டனி, வேம்பத்தூர், மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் வாகுடி, பீசர்பட்டினம் ஆகிய பகுதிகளில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையங்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், 2022-23-ம் கொள்முதல் பருவத்தில் 55 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 4 நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

    விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வளவு துரிதமாக கொள்முதல் செய்ய முடியுமோ? அந்த அளவிற்கு விரைந்து முடிக்க தேவையான பணிகளை திட்டமிட்டு அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

    கொள்முதல் நிலை யங்களில் பணியாற்றும், பணியாளர்களுக்கு அத்தியாவசிய தேவை களை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் அலுவலர்கள் கண்காணித்து வர வேண்டும். அதேபோல் நெல் கொள்முதல் நிலை யத்திற்கு வரும் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சாலை, வாகன, இட வசதி, போன்றவற்றை கூடுதலாக அமைக்க வேண்டும்.

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை விவசாயிகளிடம் இருந்து 3 ஆயிரத்து 162 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்ப ட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளுக்குரிய லாபம் முழுமையாக கிடைக்கும்.

    விவசாயிகள் இதுபோன்ற அரசு கொள்முதல் நிலையங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மண்டல மேலாளர் அருண்பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழையால் நனைந்துபோன நெல்மணிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
    • 22 சதவீத ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதலுக்கு சிறப்பு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழையால் நனைந்துபோன நெல்மணிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயலை மறுநாள் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் டி.ஆர்.பாலு, மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு அது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், 22 சதவீத ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதலுக்கு சிறப்பு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

    • 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
    • அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மாலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    அப்போது அவர் தெரிவிக்கையில்,

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கி 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட துவங்கி உள்ளது. தொடர்ந்து திட்டமிட்டபடி மேலும் 20 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்படும். இதன் நோக்கம் இடைத் தரர்களை தடுத்து நேரடியாக அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து அதிக லாபம் பெற வேண்டும் என்பதே ஆகும்.

    அந்த வகையில் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அந்தந்த பகுதி விவசாயிகள் பதிவு செய்து தங்களது நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்திடும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் 125 டன்னுக்கு மேல் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து பெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நடப்பாண்டிற்கு விவசாயிகளிடமிருந்து 50,000 மெட்ரிக் டன் நெல் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். வியாபாரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி உரிய விலைக்கு விற்பனை செய்து சரியான லாபத்தை பெற்று பயனடைய வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஜோதி பாசு, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர் செல்வம், துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 1-ந் தேதி முதல் தொடங்குகிறது
    • ஆவணங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல் கொள்முதல் செய்வதற்காக 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்படுகிறது.

    அதன்படி தப்பூர், மேல் வீராணம், கீழ் வீராணம், பாணாவரம், சூரை, கொடைக்கல், செங்காடு, கூராம்பாடி கரிக்கந்தாங்கல், அனந்தாங்கல், திருமால்பூர், ஜாகீர் தண்டலம், ரெட்டி வலம், அகவலம், நெமிலி, பனப்பாக்கம், கீழ்களத்தூர், சயனபுரம், மகேந்திரவாடி, கீழ்வீதி, சிறுகறும்பூர், பெரும்புலிபாக்கம், வேடந்தாங்கல், சிறுவளையம், எஸ்.கொத்தூர், அத்திப்பட்டு, துரைபெரும்பாக்கம், அருந்ததிபாளையம், செய்யூர், எஸ்.என்.கண்டிகை ஆகிய 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா, வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் அசல் அடங்கல் ஆவணங்களுடன் சென்று முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள்.

    நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவு கள் மேற்கொள்வார்கள். பதிவு உறுதி செய்ததும் சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும்.

    ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு செல்ல வேண்டும்.

    நெல் விற்பனை செய்ய வரும் போது நேரடி கொள்முதல் மையத்தில் பதிவுகள் மேற்கொண்ட ஆவணங்களுடன் சென்று இதற்கான நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இடைதரகர்கள் மூலம் வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து விசாரித்தனர்.
    • கையூட்டு கேட்பது உள்ளிட்ட தவறுகள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாராபுரம், அலங்கியம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    விவசாயிகளிடம் இருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா அல்லது பணம் கையூட்டு பெறப்படுகிறதா அல்லது இடைதரகர்கள் மூலம் வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து விசாரித்தனர்.

    இதுதவிர, நெல்கொள்முதல் நிலைய அலுவலர்களின் கலந்தாய்வு கூட்டத்தில், சட்டத்துக்கு புறம்பாக விவசாயிகளிடம் இருந்து கையூட்டு கேட்பது உள்ளிட்ட தவறுகள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யார் ஒன்றியம், கடுகனூர் கிராமத்திலும், அனக்காவூர் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்து 2 இடங்களிலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    திறந்து வைத்து பேசுகையில்:-

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்தாண்டை போலவே தற்போது முதல் கட்டமாக செய்யாறு தொகுதி முழுவதும் 20 இடங்களிலும், அடுத்த வாரத்தில் இன்னும் கூடுதலாக 10 இடங்களிலும் என 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.

    இதனை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி அரசின் நியாயமான விலையை பெற்று பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் என்று பேசினார். 

    • விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.
    • நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கடலூர் மண்டலத்தில் நடப்பு பருவத்துக்கு நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3-ம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனைக்காக இணைய வழியில் பதிவு செய் யும்போது பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.

    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும். பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறு வதன் மூலமும் விவசாயி களின் விவரத்தை துல்லிய மாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயி களின் சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா? என கொள்முதல் நிலை யங்களிலேயே சரிபார்த்துக் கொண்டு நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×