என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயனாளிகள்"
- இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- முகாமில் 30 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நகராட்சி மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 300 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
77 நபர்களுக்கு கண் குறைபாடு கண்டறிப்பட்டு மேல் சிகிச்சசைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 30 நபர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டது.
கண் சிகிச்சை முகாமினை மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ராஜகுமார் முகாமை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை சென்ட்ரல் லயன் சங்க தலைவர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் பரமசிவம், மருத்துவர் சந்தீப் தலைமையிலான மருத்துவ குழுக்கள் பரிசோதனை செய்தனர்.
இதில் சென்ட்ரல் லயன் சங்க செயலர். மோகன்ராஜ் மற்றும் பொருளாளர் லயன்ஸ் மகாவீன் சந்த் ஜெயின், குரு.ராகவேந்திரன், கலியமூர்த்தி, சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் தலைவர் வேல்விழி, செயலாளர் மகாலட்சுமி, மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
- கண் அறுவை சிகிச்சைக்காக 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
- முடிவில் பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.
முன்னதாக செயலாளர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.
சேர்மன் தணிகாசலம் முன்னிலை வகித்தார்.
முகாமில் 90-க்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் கண் அறுவை சிகிச்சைக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் உறுப்பினர்கள் அண்ணாத்துரை, செந்தில், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.
- 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு உடனுக்குடன் சம்பளம் வழங்க வேண்டும்.
- 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் சம்பளத்தை உடனே வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஞானப்பிரகாசம், கரிகாலன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்யும் பயனாளிகளுக்கு உடனுக்குடன் சம்பளம் வழங்க வேண்டும்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்.
வறுமையில் வாடும் பயனாளிகளுக்கு தீபாவளிக்கு முன்பு கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி செல்லப்பன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பூா் மாவட்டத்தில் பல இடங்களில் பயனாளிகளுக்கு கடிதங்களை வழங்காமல் அஞ்சல் ஊழியா்கள் அலைக்கழிப்பு செய்து வருகின்றனா்.
- தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனித்தனியை வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.
திருப்பூர்:
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முதல்வா் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜிடம், தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச., மாநில இணைப் பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனித்தனியை வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.இந்தக் கடிதங்களுக்கு அஞ்சல் துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தி பயனாளிகளின் பெயா், முகவரி, கைப்பேசி எண் ஆகியவை முறையாக குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், திருப்பூா் மாவட்டத்தில் பல இடங்களில் பயனாளிகளுக்கு கடிதங்களை வழங்காமல் அஞ்சல் ஊழியா்கள் அலைக்கழிப்பு செய்து வருகின்றனா்.அதிலும் குறிப்பாக இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், மங்கலம் சாலை, கருவம்பாளையம், ராயபுரம், கொங்கு நகா், காந்தி நகா், பிச்சம்பாளையம் புதூா் கிழக்கு, கேத்தம்பாளையம், ராதாகிருஷ்ணன் நகா், வெங்கமேடு ,செட்டிபாளையம், கோவில்வழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதங்கள் கிடைக்கவில்லை. இது தொடா்பாக பயனாளிகள் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அனைத்து பயனாளிகளுக்கும் முதல்வரின் வாழ்த்துக் கடிதம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் அனைவரையும் வரவேற்றார்.
- இதில் பயிற்றுனர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனத்தில் திறன் பயிற்சி முடித்த பயனாளிகளுக்கு திறன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கவுசல்யா அன்பரசு தலைமை தாங்கினார். ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன், ஜெகன், தொழி ற்பயிற்சி நிறுவன தலைவர் கருணாநிதி, ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தாமரை செல்வி அன்பழகன், ஊராட்சி தலைவர் எழிலரசி மணிச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் அனை வரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருடா சேவகர் இளவரசு கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஹேமலதா, பாசறை ராஜேந்திரன், ராணி சேகர், கலையழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் கனக துர்கா, மீனாட்சி, திலகவதி, சத்தியவாணி, பயிற்றுனர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
- முகாமில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
- ரூ. 1 கோடி 12 லட்சத்து 23 ஆயிரத்து 425 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா, வெங்கட் சமுத்திரம் அடுத்த கண்டமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் வருவாய் துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, சுகாதார துறை, தொழிலாளர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, ஊரக வளர்ச்சி துறை (மகளிர் திட்டம்) சார்பில் 150 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி 12 லட்சத்து 23 ஆயிரத்து 425 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், திருவையாறு ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் சரிதா, ஊராட்சி தலைவர் அமுதா மற்றும் தஞ்சை மாவட்ட அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தஞ்சை ஆர்.டி.ஓ. இலக்கியா அனைவ ரையும் வரவேற்றார். முடிவில் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா நன்றி கூறினார்.
- தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட த்தின் கீழ் 509 நபர்களுக்கு ரூ.548.87 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- கூட்டுறவு சார்பதிவாளர் சித்ரா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், பள்ளபாளையம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூட்டுறவு எண்ணெய் ஆலையை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து, 60பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒரு நீண்ட பாரம்பரியத்திற்கு உரியது. விவசாய பெருங்குடி மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. மேலும் எண்ணெய் ஆலை மட்டுமில்லாமல் தொழிற்சாலை நடத்தக்கூடிய அளவில் வளர வேண்டும் என எனது வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
விவசாயத்தை மேற்கொள்ளும் அளவுக்கு இந்த சங்கம் வளர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.அரசு நடத்தக்கூடிய சங்கத்தின் மூலமாக பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய கடலை பருப்புகளை கொள்முதல் செய்து அரைத்து சுத்தமான எண்ணெய் எடுத்துவெளிபகுதி மக்களை கவரக்கூடிய வகையில் வளர்ந்து இருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு கடன் உதவிகள் வழங்கும் வகையிலும் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட த்தின் கீழ் 509 நபர்களுக்கு ரூ.548.87 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் நகைக்கடன்தள்ளுபடி திட்டத்தின் கீழ் 394 நபர்களுக்கு ரூ.190.56 லட்சம் நகைக்கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் 8 குழுக்களுக்கு 80 நபர்களுக்கு ரூ.4.68 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து, 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 மதிப்பீட்டில் கடனுதவியையும், 29 நபர்களுக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பீட்டில் கே.சி.சி பயிர் கடனுதவிகளையும், 6நபர்களுக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.
விழாவில் துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) கந்தசாமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், கூட்டுறவு சார்பதிவாளர் சித்ரா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராம சேவை மைய வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அரசுத்துறை அலுவலர்கள் அங்குள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வும் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பது ஆகும். இந்த பகுதியில் உள்ள கிராமங்களான கொழுமங்குளி, அண்ணா நகர், ராசிபாளையம், கள்ளிப்பாளையம், தம்புரெட்டிபாளையம், ஆண்டிபாளையம், பேராங்காட்டுப்பதி, கள்ளிமேட்டுபாளையம், ஓரம்பபுதூர், கம்மாளபாளையம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் கவனத்தில் எடுத்து க்கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பணியாற்றிட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்கள் இங்கு பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். மேலும் கடைகோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்று சேர்வதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தாட்கோ சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.93.36 லட்சம் மதிப்பில் லோடு வாகனம், ஆட்டோ, டூரிஸ்ட் வாகன கடனுதவி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.46.39 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி பட்டா , 15 பயனாளிகளுக்கு ரூ.18,900 மதிப்பில் முதியோர் உதவித்தொகை என மொத்தம் 170 பயனாளிகளுக்கு ரூ.1,58,30,247 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு மருந்து பெட்டகத்தினையும், கலைஞரின் கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் 3 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளையும் கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமாரராஜா, தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் கோவிந்தசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.20 லட்சத்து 78 ஆயிரத்து 290 மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
- மொத்தமாக 125 மனுக்கள் பெறப்பட்டது.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள சொக்கனாவூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, அண்ணாதுரை எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் பெரியகோட்டை சரகத்திற்கு உட்பட்ட சொக்கனாவூர், புளியக்குடி கிராமங்களுக்கு ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், கல்வி கடன், உள்ளிட்ட 125 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு தெரிவிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து அவர் வருவாய்த்துறை மூலம் விலையில்லா வீட்டு மனை பட்டா 110 நபர்கள், 10 நபர்களுக்கு பட்டா மாறுதலும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், விதவைகள், ஈமச்சடங்கு உதவித்தொகைகள் 49 நபர்களுக்கும் என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 78 ஆயிரத்து 290 மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ (பொ) வாசுதேவன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள்
இளங்கோ, கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பழனிவேல், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இளையான்குடியில் 129 பயனாளிகளுக்கு ரூ.75.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் உள்ள உதயனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக முதல் அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடி யாக வழங்கிடும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந் தேடுத்து அதில் உள்ள கிரா மங்களுக்கு சென்று பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் நடத்தப் பட்டு வருகிறது.
இந்த முகாமினை முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக 233 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி யுடைய 130 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு கூட்டு குடிநீர் திட்டம் ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட் டங்களின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம் பாட் டிற்கு மகளிர் திட்டம் கூட்டு றவு சங்கங்களின் மூலம் கிஷான் அட்டை, கால்நடை பராமரிப்பு, கடன் பயிர் கடன் மற்றும் கருவேலை மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்து பயன் பெறுவதற்கென ஒரு ஹெட் டருக்கு ரூ. 7,500 தொகை என அரசின் பல்வேறு திட் டங்களின் கீழ் பொதுமக்க ளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அரசால் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களை அணு பயன்பெற வேண்டும்.
மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான நபர்களை தவிர நிரா கரிக்கப்பட்ட மனுக்களுக்கு அதற்கான காரணங்களை இணையதளத்தின் வாயி லாக தெரிந்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை மேல் முறையீடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும். குறிப் பாக அவர்கள் உயர் கல்வி கற்பதற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோக னச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை வரு வாய் கோட்டாட்சியர்சுகிதா, இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, உதயனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரிட்டோ, இளையான்குடி வட்டாட்சியர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
- கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள புல்லக்கடம்பன் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வருவாய்த்துறையின் மூலம் 41 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூ தியம், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், இயற்கை மரண உதவித்தொகை என ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல் உட்பிரிவு, பட்டா மாறுதல் முழுப்புலம் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.53 ஆயிரத்து170 மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக் கலைத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பழமரத் தொகுப்பு ரூ.22 ஆயிரத்து 700 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தார்பாய், தெளிப்பான் ரூ.9 ஆயிரத்து 640 மதிப்பீட்டி லும், தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் 2 பயனாளிகளுக்கு பயணியர் ஆட்டோ, துணிக்கடை ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 326 மதிப்பீட்டிலும் என மொத்தம் 146 பயனாளி களுக்கு ரூ.18 லட்சத்து 62 ஆயிரத்து 836 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கி னார்.
பின்னர் அவர் பேசிய தாவது:-
மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக் களுக்கு அரசின் நலத் திட்டங்கள் இன்று வழங்கப் படுகின்றன. மக்கள் தொடர்பு முகாமில் அனைத்துத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.
இப்பகுதியை பொருத்த வரை விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் விவசாயம் பணிகளுக்கு தேவையான திட்டங்கள் வேளாண்மைத் துறையின் மூலம் செயல் படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ராமநாத புரம் வருவாய் கோட்டாட் சியர் கோபு, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முகம்மது முக்தார், திருவாடனை வட்டாட்சியர் கார்த்திகேயன் , புல்லக் கடம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் மாதவி கண்ணன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விடுப்பட்டவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- தஞ்சை மாவட்டத்தில் 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அரங்கத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வங்கி பற்று அட்டைகள் (ஏ.டி.எம் அட்டைகள்) வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.
அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழநிமா ணிக்கம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது :-
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.
குடும்பத்திற்காக வாழ்நா ளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.
ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியா தையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
தஞ்சை மாவட்டத்தில் 549869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதில் பெண்களுக்கு அவரவர் கொடுத்த வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது.
விடுப்பட்டவர்களுக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கிடைக்காதவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் அணுகி மேல்முறையீடு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்யாண சுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி .கே .ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) உமா மகேஸ்வரி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தவவளவன் மற்றும் அலு வலர்கள், வங்கியாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்