என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயனாளிகள்"
- திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
- 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி தலைமை தாங்கினார்.
வட்டாச்சியர் ரமேஷ், தனி வட்டாச்சியர் (சமூக பாதுகாப்பு) கவிதாஸ்,வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் ஆய்வாளர் புனிதா வரவேற்றார்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை,இலவச வீட்டுமனை பட்டா,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 776 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி வழங்கினார்.
இதில் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயசெல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் செல்லபாண்டியன்,சரவண அய்யப்பன்,வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் நன்றி கூறினார்.
- விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க கருவிகள் வழங்கப்பட்டது.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரத்தி ல் வேளாண்மை –உழவர் நலத்துறை சார்பில் அட்மா, மாநில விரிவாக்க திட்டங்க ளுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் 2023-24 செயல்விள க்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சாக்கோ ட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 2 பயனாளிகளுக்கு கை தெளிப்பான்கள், 5 பயனாளிகளுக்கு தார்பா ய்கள், 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க கருவிகள், 1 பயனாளிக்கு பருத்தி கருவி ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கும்பகோ ணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கரிகாலன், கும்பகோணம் அட்மா குழு தலைவர் ஆலமன்குறிச்சி குமார், வேளாண்மை அலுவலர் அசோக்குமார், துணை வேளாண்மை அலுவலர் சாரதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ், உதவி தொழில்நுட்ப மேலாள ர்கள் தனசேகரன், இளமதி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
- சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து, கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.
முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் கவுரவித்தார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும், பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்த 125 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும், போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியமாக 15 பேருக்கு ரூ.3 லட்சம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மின்கல இயங்கு வாகனம் ரூ.4.24 லட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு மற்றும் 2-ம் பரிசு பெறும் பயனாளிகள் 4 பேருக்கு ரூ.40 ஆயிரம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ.4.11 லட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ. 1.01 கோடி மதிப்பில் 57 பயனாளிகளுக்கு என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
பின்னர், பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஐ.ஜி. ஜெயச்சந்திரன், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், கோட்டாட்சியர், தாசில்தார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
- முகாமில் 400 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
- முகாமை டாக்டர் பன்னீர்செல்வம் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
சீர்காழி:
சீர்காழி தாலுக்கா அண்ணன் கோயில் கிராமத்தில் சீர்காழி ரோட்டரி சங்கம், தனலட்சுமி மருந்தகம் மற்றும் பரிசோதனை மையம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மருந்தாளுநர் சடகோபன் கல்யாணராமன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பாஸ்கரன், சாமிசெழியன், சுப்பி ரமணியன், பழனியப்பன், கணேஷ், கேசவன் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருந்தகத்தை மருத்துவர் முருகேசன் திறந்து வைத்தார் மருத்துவ பரிசோதனை மையத்தை டாக்டர் முத்துக்குமார் திறந்து வைத்தார்.
மருத்துவ மையத்தை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வீரராகவன் திறந்து வைத்தார்.
மருத்துவ முகாமை மருத்துவர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மருத்துவர்கள் முத்துக்கு மார், முருகேசன், குருமூர்த்தி, தாரணி ஸ்ரீதர் கனிமொழி அக்ஷயா அருண்குமார் சௌந்தர்யா சிந்துஜா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் செல்வகுமார், சண்முகசுந்தரம், சிவகுரு, திருநாவுக்கரசு ராஜேந்திரன் அப்துல் கலாம் நர்சிங் கல்லூரி தாளாளர் மதியழகன் ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர்கள் கந்தசாமி பாலமுருகன் சண்முகம் நடராஜன் சரவணன் முருகன் அப்துல் நாசர் ராஜ்பரிக் குமார் கண்ணன் கோவிந்தராஜ் சேகர் கணேசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜமாத்தார்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
400 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினார்கள் ரோட்டரி சங்க செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
- முதிர்வுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- அடுத்த மாதம் 8-ந் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகம் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடுதல் ஜூன் 2023 முதல் ஜூன் 2024 வரை முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாது காப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளின் வயது 18-ஐ கடந்தும் முதிர்வுத்தொகை வழங்கப்படாமல் உள்ளவர்களின் விபரங்களை தொடர்ந்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று அவர்களுக்கு முதிர்வுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள முதிர்வுத்தொகை பெறாத பயனாளிகளை கண்டறியும் முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து பயனாளிகளும் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 769 அங்காடி களுக்கு 1523 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மகளிர் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கு மற்றும் சிறு கூட்டரங்கில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளின் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது குறித்த மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சரியாக செயல்படுத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நியாவிலைக் கடைகளில் 500-க்குட்பட்ட குடும்ப அட்டை கொண்ட 200 அங்காடிகளுக்கு 200 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், 501 முதல் 1000 குடும்ப அட்டை கொண்ட 395 அங்காடிகளுக்கு 790 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், 1001 முதல் 1500 குடும்ப அட்டை கொண்ட 163 அங்காடி களுக்கு 489 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார் வலர்களும், 1501 முதல் 2000 குடும்ப அட்டை கொண்ட 11 அங்காடிகளுக்கு 44 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும் என மொத்தம் 769 அங்காடி களுக்கு 1523 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டமானது மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதை யோடு வாழ்வதற்கு இத்திட்டத்தினை சிறப்பாக செயல் படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
குறிப்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் நடைபெறும் இடங் களில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் பணியாளர்களை தேர்வு செய்வது அவர்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட ஒட்டுமொத்த பணியினையும் மேற் கொள்ள வேண்டும்.
மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள், ஊராட்சிகள்) முகாம் நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி மற்றும் நக ராட்சி ஆணையர்கள் இத்திட்டம் குறித்து பொது மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். தன்னார்வலர்கள் மேலாண்மையினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.
கூட்டுறவு துறையின் இணைப்பதிவாளர் அனைத்து நியாவிலைக் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட மின் ஆளுமை மேலாளர் பயோ மெட்ரிக் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் வழங்கிட வேண்டும். முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் அஞ்சலக வங்கி பொறுப்பாளர், மகளிர் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அலு வலர்களும் தினந்தோறும் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படுவதோடு, அனைத்து பணிகளையும் எவ்வித தொய்வுமின்றி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வருவாய் அலு வலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திட்ட இயக்குநர்கள் பாபு (வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது. பொது மக்களிடமிருந்து 351 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் வருவாய் துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரண காசோலை, 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.87 ஆயிரத்து 500- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவிதொகை காசோலைகள், முதல்-அமைச்சர் பொது நிவாரன நிதியின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகள், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி, தொழிலாளர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.55 ஆயிரம் வீதம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை காசோ லைகள் என மொத்தம் 27 பயனாளி களுக்கு ரூ.15 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 14- வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
- அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு துவங்கி 14-வது தவணையை சரியாக பெற்று பயன் பெறலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது :-
மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ளது.
14- வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் இன்றுக்கு ள் பதிவு செய்ய வேண்டும். இதை செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதே போல வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு துவங்கி 14-வது தவணையை சரியாக பெற்று பயன் பெறலாம்.
முதல் வழிமுறையாக ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் pmkisan.gov.in என்ற இணையத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் சரிபார்க்கலாம்.
ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலை தளத்தில ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம்.
இ.கே.ஒய்சி பதிவு செய்திடாத விவசாயிகள் விபரங்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.
- எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கும்பகோணம்:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
முகாமை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகளையும், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டக ங்களையும், காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.
முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்த பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது.
மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துசெல்வம், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம், உதவி இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலாராணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன், சசிகுமார், திப்பிராஜபுரம் ஊராட்சி தலைவர் முருகையன், கட்சி நிர்வாகிகள் எஸ்.வி.எஸ்.இளங்கோவன், பழனி, கீழச்சேத்தி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்.
- வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டயரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார். அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆதிதிராவிட நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா , ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தாட்கோ ஆணையர் கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை (மத்திய தொழிற் பணி), மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்கள் தொகை, முதல்வரின் முகவரி துறையில் இருந்து வரப்பெற்ற மனுக்களின் நிலுவை விவரம், ஆதிதிராவிட நலப் பள்ளியில் எண்ணிக்கை, நான்கு மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விபரம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம், ஆதிதிராவிடர் நல விடுதிக ளின் எண்ணிக்கை, கடந்தாண்டு விடுதிகளில் தங்கி கல்வி பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரம், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு பொருளடக்கம் இக்கூட்ட த்தில ஆய்வு செய்யப்பட்டது.
ஆதித்திரா விடர்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு நலத்திட்ட ங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தங்கு தடையின்றி பயனாளிகளுக்கு சென்று நேர அலுவலர்கள் முனைப்பு டன் செயல்பட வேண்டும்.
மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.1224235 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.4355786 மதிப்பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
மேலும் மகளிருக்கான சுய உதவிக்குழுக்களின் கீழ் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 குழுக்களுக்கு 120 மகளிருக்கு தாட்கோ மானியமாக ரூ.2500000 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.7447000 மதிப்பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயன்பாட்டிற்கென மின் இணைப்பு 25 விவசாயிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.5790000 மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.6480000 மதிப்பீ ட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்ப ட்டன.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகரன் , டி.கே.ஜி.நீலமேகம் , கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்) , ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மற்றும் நான்கு மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
- முகாமிற்கு வரும் பயனாளிகள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வரவேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-முன்னாள் முதல்வர் கருணாநிதி 100-வது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் பூதலூர் தாலுக்கா வெண்டையம்பட்டி ஊராட்சியில் ராயமுன்டான்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கும்பகோணம் தாலுகா திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா அதிராம்பட்டினம் துர்காசெல்லியம்மன் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம் காசநோய் மற்றும் தொழுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோ தனை மேற்கொள்ளப்பட உள்ளது.அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை, மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் முகாமில் பங்கேற்க உள்ளனர்.
மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும். முகாமிற்கு வரும் பயனா ளிகள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வந்து பய ன்பெறு மாறு கேட்டுக் கொ ள்ள ப்படுகி றது. இதே போல் காப்பீ ட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமும் நடை பெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- இளங்கோ மனைவி அருள்மதிக்கு 4 சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
- நிவேதா முருகன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் முன்னிலையில் அனைத்து துறையை சார்ந்த அதிகபட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மீனவ பயனாளிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.8 லட்சம் மானிய தொகையில் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோ மனைவி அருள்மதிக்கு வழங்கப்பட்டது.
இதனை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் ராஜேஷ்குமார், ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயனாளியின் பயன்பாட்டிற்கு வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்