என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பலாப்பழங்கள்"
- ஒரு கடையில் கெட்டுப்போன சுமார் 500 கிலோ பலாப்பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- செயற்கை ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி பகுதியில் கெட்டுப்போன பலாப்பழங்கள் விற்கப்படுவதாக கடலூர் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள பழக்கடைகளில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சந்திரசேகரன், சுந்தரமூர்த்தி ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் கெட்டுப்போன சுமார் 500 கிலோ பலாப்பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 500 கிலோ பலாப்பழங்களை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.
அதனை தொடர்ந்து ஓட்டல்களில் நடத்திய ஆய்வில் குளிர்பதன நிலையில் வைக்கப்பட்டிருந்த பரோட்டா 5 கிலோ, சிக்கன் கிரேவி 2 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 5 கிலோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கெட்டுப்போன பழங்களை விற்ற 4 கடைகளுக்கும், குளிர்பதன நிலையில் வைத்து உணவு பொருட்களை விற்பனைசெய்த 2 ஓட்டல்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் மாம்பழ கடைகள் மற்றும் மாம்பழக் குடோன்களில் ஆய்வு செய்ததில், கெட்டுப்போன 25 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், செயற்கை ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
- குன்னூர் பகுதியில் பலாப்பழங்களை ருசிக்க யானைகள் முகாமிட்டுள்ளன.
- யானைகள் விளையாடி மகிழ்வது சுற்றுலாபயணிகளை கவர்ந்துள்ளது.
ஊட்டி, ஜூன்.10-
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகள், வனத்தில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. கூடலூர், குன்னூர் பகுதிகளில் யானைகள் மற்றும் கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
தற்போது பலாப்பழ சீசன் நடப்பதால் யானைகள் பலாப்பழத்தின் வாசனை அறிந்து அவற்றை தேடி வந்து உட்கொள்கின்றன. குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பலா மரங்கள் உள்ளன. இவற்றில் காய்த்து தொங்கும் பலாப்பழங்களை ருசிக்க யானைகள் முகாமிட்டுள்ளன. குட்டியுடன் முகாமிட்டுள்ள யானைகள் கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு பகுதியில் சுற்றித்திரிகின்றன.
சாலையை ஒட்டியுள்ள மண்மேட்டில் புரண்டு அந்த யானைகள் உற்சாகத்தில் திளைக்கின்றன. மேலும் ஒரு யானையை மற்றொரு யானை விரட்டியும் விளையாடிய படி உள்ளன. இந்த காட்சிகளை சுற்றுலாபயணிகள் ரசித்தபடி பார்த்து செல்கிறார்கள்.
அவ்வப்போது அந்த யானைகள் சாலையையும் கடந்து வந்து விடுகின்றன. எனவே வாகன ஓட்டிகள் அந்த சாலையை கவனத்துடன் கடக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சுற்றுலாபயணிகள் ஆர்வத்தில் செல்போனில் படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், யானைகளுக்கு தொந்தரவு அளிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்