search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231320"

    • 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • நாகர்கோவில் மாநகர பகுதியில் 3776 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. நேற்று 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் இதுவரை 81 ஆயிரத்து 910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டது.

    முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

    18 வயதுக்கு மேற்பட்ட வர்கள் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் கழிந்தால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து மாவட்டம் முழுவதும் ஏராளமானவருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்து இருந்தது.

    இதனால் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    9 ஒன்றியங்களிலும் 410 இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செ ய்யப்பட்டது.

    குமரி மாவட்ட த்தில் குருந்தன்கோடு முன்சிறை தக்கலை ஒன்றியங்களில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த தையடுத்து அந்த பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர படுத்தினர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் முன் சிறை ஒன்றி யத்தில் அதிகபட்சமாக 4854 பேருக்கு தடுப்பூசி போடப்ப ட்டுள்ளது.

    தக்கலை ஒன்றியத்தில் 4852 பேருக்கும், ராஜாக்க மங்கலம் ஒன்றியத்தில் 3972 பேருக்கும், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 4,306 பேரு க்கும் தடுப்பூசி செலுத்தப்ப ட்டுள்ளது.

    திருவட்டாறு ஒன்றி யத்தில் 3448 பேருக்கும், அகஸ்தீஸ்வரத்தில் 3,245 பேருக்கும், தோவாளையில் 2204 பேருக்கும், கீள்ளியூரில் 2004 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் 3776 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இடைக்கோடு பகுதியில் 3,594 பேருக்கு என மொத்தம் நேற்று ஒரே நாளில் 36 ஆயிரத்து 245 பேருக்கு தடுப்பூசி போடப்ப ட்டுள்ளது.இதில் பூஸ்டர் தடுப்பூசியை அதிகமானோர் செலுத்தியுள்ளனர்.

    • தமிழகத்திலும் தொற்று தற்போது 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
    • கோவை மாவட்டத்தில் 1.35 லட்சம் பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் குறைந்த தொற்று தற்போது 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    இதையடுத்து ெகாரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அரசு சாா்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இரண்டாம் தவணை பெற்று 9 மாதங்கள் நிறைவடைந்த முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, கோவை மாவட்டத்தில் 1.35 லட்சம் பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 32-வது கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் கோவை மாவட்டத்தில் 1,515 இடங்களில் இன்று நடைபெற்றது. கிராமப்புறங்களில் 1081 இடங்களிலும், மாநகரில் 325 இடங்களிலும், நகராட்சிகளில் 109 இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டது.

    இந்த முகாம்களை பயன்படுத்திக் கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமிற்கு வந்த மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு 3-ம் தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது.
    • கோவாக்சின் பொறுத்தவரை முதல் டோஸ் செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு 2-ம் டோஸ் செலுத்தி 6 மாதங்களுக்கு பின் பூஸ்டர் டோஸ் ெசலுத்திக் கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு 3-ம் தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது. அதற்கான முகாம் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தின் பிரதான நுழைவுவாயில் அருகே வருகிற 25-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்க உள்ளது. இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசியை அலுவலர்கள் செலுத்தி கொள்ளலாம்.

    கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் ேடாஸ் செலுத்தி 84 நாளுக்கு பிறகு 2-ம் டோஸ் செலுத்தி 6 மாதம் முடிந்த அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளலாம். கோவாக்சின் பொறுத்தவரை முதல் டோஸ் செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு 2-ம் டோஸ் செலுத்தி 6 மாதங்களுக்கு பின் பூஸ்டர் டோஸ் ெசலுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆவணத்தை தவறாமல் எடுத்து வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் நாளை 32-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற உள்ளது.
    • இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்க ளுக்கு 15 லட்சத்து 15 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 13 லட்சத்து 10 ஆயிரத்து 72 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி யும் 10 லட்சத்து 62 ஆயிரத்து 524 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. சதவீத அடிப்படையில் முதல் தவணை தடுப்பூசி 86.47 சதவீதம்பேரும், 2-ம் தவணை தடுப்பூசி 70.13 சதவீதம் பேரும் போட்டுள்ளனர்.

    இன்னும் 2 லட்சத்து 4 ஆயிரத்து 928 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும்ம், 2 லட்சத்து 47 ஆயிரத்து 548 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 31 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 8,93,463 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதேபோல் நாளை( ஞாயிற்றுக்கிழமை) 32-ம் கட்டமாக 2766 முகாம்கள் மூலமாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனாநோய் "சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது. இம்முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.சுமார் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசிகூட போடாதவர்களும் முதல் தவணை தடுப்பூசி போட்டு முடித்து 2-ம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஊக்குவிப்பு தடுப்பூசியாக 3-ம் தவணை தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 

    • அரசு தடுப்பூசி மையங்களில் சுகாதார பணியாளர்கள், முன் களபணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
    • 14.7.2022 வரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் உரிய கட்டணத்துடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் பொருட்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் , அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை 19,98,458 பயனாளிகளுக்கு முதல் தவணையும் 18,74,807 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணையும், 39,983 பயனாளிகளுக்கு ஊக்குவிப்பு தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. அரசு தடுப்பூசி மையங்களில் சுகாதார பணியாளர்கள், முன் களபணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    14.7.2022 வரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் உரிய கட்டணத்துடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    தற்போது 15.7.22 முதல் 30.9.22 தேதி வரையிலான 75 நாட்களுக்கு 18 வயதிற்கு மேல் 59 வயதிற்குள்ளான பயனாளிகளுக்கு இலவசமாக அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் , துணை சுகாதார நிலையங்கள் , அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    பொது மக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் நடைபெற உள்ள 32-வது மெகா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தகுதியுள்ள அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துகொள்ள வேண்டுமாய் கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கப்பலூரில் சிட்கோ தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • 2-ம் தவணை ஊசி போடாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ சென்னைக்கு அடுத்தப்படியான பெரிய சிட்கோ ஆகும். இங்கு 16 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலா ளர்களுக்கு ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிட்கோ சார்பில் 2 தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது பூஸ்டர் தடுப்பூசி போட சிட்கோ தொழில் அதிபர்கள் சங்கம் முடிவு செய்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட தொழில்மையம் மற்றும் கப்பலூர் தொழில்அதிபர்கள் சங்கம் இணைந்து நேற்று முதற்கட்டமாக 1000 தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமை கப்பலூர் தொழில்அதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கணேசன், டான் சிட்கோ மேலாளர் கணேசன், மடீசியா முன்னாள் தலைவர் அரவிந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    செக்கானூரணி அரசுஆரம்பசுகாதார நிலைய மருத்துவமனை டாக்டர்கள் ஆர்த்தி, திவ்யா தலைமையிலான மருத்துவக்குழுவினர் தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை போடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு வாரமும் இந்த பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் எனவும், கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2-ம் தவணை ஊசி போடாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும் தொழில்அதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா தெரிவித்தார்.

    • கடந்த சில நாட்களாகவே தினசரி 15-க்கு மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்
    • ஆறு மாதம் இடைவெளி இருந்தாலே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நேற்று மாவட்ட முழுவ தும் 959 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 60 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தற்பொழுது நாகர்கோவில் பகுதியில் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி 15-க்கு மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இன்றும் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 21 ஆயிரத்து 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தடுப்பு ஊசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

    2-டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒன்பது மாதங்கள் கழிந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட முடியும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆறு மாதம் இடைவெளி இருந்தாலே பூஸ்டர் தடுப்பூசி செலுத்த லாம் என்று கூறப்பட்டு இருந்தது.

    மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.குமரி மாவட்டத்திலும் அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

    நேற்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.நேற்று ஒரே நாளில் சுமார் 1500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராள மான இளைஞர்கள், இளம் பெண்கள் ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் வந்து தடுப்பூசியை செலுத்தி சென்றனர். குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாமலும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாமல் ஏராளமான உள்ளனர். அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த சுகாதா ரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.
    • அவசியமாக போட்டு கொள்ள வேண்டும்

    பெரம்பலூர்:

    தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு பயிலும் 8,335 மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான், ரண ஜென்னி, கக்குவான் இருமல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளிகளில் 5 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மொத்தம் 17,583 மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான், ரணஜென்னி ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை மேற்கண்ட மாணவ-மாணவிகள் தவிர்க்காமல் அவசியமாக போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • முகாமில் 84 ஆயிரம் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று 31-வது மெகா தடுப்பு முகாம் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடந்து முடிந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இன்னமும் ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்பட 3,194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் 60 வயது கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் 4,260 பணியாளர்கள் ஈடுபட்டனர். 71 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தினர்.

    நேற்று நடந்த முகாமில் 84 ஆயிரம் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • 1,905 மையங்களில் 34,237 பேருக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
    • 6,321 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

    கரூர்:

    தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேருந்து, ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி கரூர் மாவட்ட த்தில் 1,905 மையங்களில் நடைபெற்றது. இதில் 1,629 பேர் முதல் தவணையும், 26,287 பேர் 2ம் தவணை தடுப்பூசியும், 6,321 பேர் பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 34,237 பேர் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டனர்.

    • குன்னூர் அரசு லாரி மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
    • மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு மருந்துகளின் தேதி சரியாக உள்ளதா? நோயாளிகளுக்கு சரியாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.

    குன்னூர்:

    குன்னூர் பகுதிகளான இன்கோசர்வ், குன்னூர் நகர மன்ற அலுவலகம் மற்றும் குன்னூர் அரசு லாரி மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு மருந்துகளின் தேதி சரியாக உள்ளதா? நோயாளிகளுக்கு சரியாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? எத்தனை மருத்துவர்கள் உள்ளார்கள் எனவும் ஆய்வு செய்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், குன்னூர் அரசு லாரி மருத்துவமனையை மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் தனியார் மருத்துவமனைக்கு இணை–யாக வைத்துள்ளார்கள்.

    மாவட்டத்தில் மருத்துவர்கள் குறைவாக உள்ளனர். சம்பந்தப்பட்ட சுகாதா–ரத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். விரைவில் மாவட்டம் முழுவதும் மருத்துவர்களுக்கு புதிதாக தங்கும் குடியிருப்புகள் கட்டி ஒதுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது அவருடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், குன்னூர் சப்-கலெக்டர் தீப விக்னேஷ்வரி, குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தினமும் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது
    • 2100 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான குருந்தன் கோடு, முஞ்சிறை ஒன்றியத்தில் பலரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதைத் தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை உள்பட மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிக ரித்தது.பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து கொரோனா சோதனையை தீவிர படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் தினமும் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று மாவட்டம் முழுவதும் 371 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்க ப்பட்டதில் 19 பேர் ஆண்கள் 28 பேர் பெண்கள் ஆவார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 20 ஆயிரத்து 822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து தடுப்பூசி முகாமை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க ப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    2100 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள குருந்தன் கோடு, முன்சிறை, ஒன்றி யங்களில் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத் துறை அதிகாரிகள் முடுக்கி விட்டனர்.

    இதையடுத்து அங்கு அதிகமான இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குருந்தன்கோடு ஒன்றி யத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 232 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு ள்ளது.

    முன்சிறை ஒன்றியத்தில் 5 ஆயிரத்து 742 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் தோவாளை ஒன்றியத்தில் 2,217 பேருக்கும், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 3 ஆயிரத்து 27 பேருக்கும், ராஜாக்கமங்கலம் ஒன்றிய த்தில் 3,812 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

    கிள்ளியூர் ஒன்றியத்தில் 2248 பேருக்கும், மேல்புறம் ஒன்றியத்தில் 3590 பேருக்கும், திருவட்டார் ஒன்றியத்தில் 3,261 பேருக்கும், தக்கலை ஒன்றியத்தில் 4572 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது .

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 2475 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதே போல் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 172 பேருக்கும், குலசேகரம் ஆஸ்பத்திரியில் 13 பேருக்கும், குளச்சல் ஆஸ்பத்திரியில் 10 பேருக்கும், கருங்கல் ஆஸ்பத்திரியில் 11 பேருக்கும், சேனவிளை ஆஸ்பத்திரியில் 15 பேருக்கும், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் 6 பேருக்கும் தடுப்பூசி செலுத்த ப்பட்டுள்ளது.

    நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 36,403 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ெமகா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசியை அதிகமானோர் செலுத்தியுள்ளனர். 16,831 பேருக்கு நேற்று ஒரே நாளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    மேலும் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 7587 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட வர்களில் 7557 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 36 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    ×