search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231346"

    • இறைச்சி, மீன் கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது.
    • எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு வருகிற 22-ந் தேதி மேற்கொள்ளப்படும்.

    விருதுநகர்

    சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டு தலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது எடைய ளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரை யிடாமல் வியாபார உப யோகத்தில் வைத்திருந்த ஒரு வியாபாரி மீதும், எடைய ளவுகள் மறுமுத்திரை யிடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 19 மீதும், தராசின் எடையை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 2 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மறுமுத்திரையிடப்படாத 8 மின்னணு தராசுகள், 1 சி விட்ட தராசு, 2 மேசைத் தராசுகள் மற்றும் 20 இரும்பு எடைக்கற்கள் தெருவோர வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு சட்ட முறை எடையளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    இறைச்சி, மீன் கடைகளில் எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு மீண்டும் வருகிற 22-ந் தேதி மேற்கொள்ளப்படும். எனவே இறைச்சி மற்றும் மீன் கடை வணிகர்கள் எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவ டிக்கையை தவிர்க்க வேண்டும்.

    நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்), 1/13சி ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

    விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேஸ்வரன், செல்வராஜ், பாத்திமா, துர்கா, முருகன், சிவசங்கரி ஆகியோர் இணைந்து இந்த கூட்டாய்வை மேற்கொண்டனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்தார்.

    • பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் 3 பேர் பலியானார்கள்.
    • கேரளாவில் பயணிகள் ரயிலில் புகுந்த மர்மநபர்.

    கன்னியாகுமரி:

    கேரளாவில் பயணிகள் ரயிலில் புகுந்து மர்மநபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் 3 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபரின் வரைபடத்தை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மர்மநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் கன்னியாகுமரி, குளச்சல் என்று எழுதப்பட்டிருந்ததால் அந்த நபர் இங்கு வந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். உளவு பிரிவு போலீசாரும், தனி பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலும் சோதனை தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

    வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணி களின் உடைமை களை போலீசார் சோதனை மேற்கொண்ட னர். பாட்டில் களையும் அவர்கள் சோதனை செய்தனர்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம், குழித் துறை உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை நடந்தது.

    • பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.
    • 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள நகை கடைக்கு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய இடங்களில் பிரபல தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது.

    இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் ஒரத்தநாடு கிளையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர்.

    அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்து கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நகைகடைகளும் பூட்டப்பட்டதால் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலரை கைது செய்தனர்.

    மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து அந்த நான்கு நகைக் கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட நகைக் கடைகளில் ஏதாவது நகைகள், ஆவணங்கள் உள்ளதா என்று சோதனை செய்ய பட்டுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் இன்று தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள நகை கடைக்கு வந்தனர்.

    கடையின் உள்ளே நகைகள், ஆவணங்கள் ஏதும் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். மேலும் உரிமையாளர் ஏதாவது பொருளை மறைத்து வைத்துள்ளாரா எனவும் ஆய்வு செய்தனர்.

    மேலும் சோதனை நடைபெறும் போது உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த சோதனை முடிவடைந்த பின்னர் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அந்த நகைக்கடையில் சோதனை செய்ய உள்ளனர்.

    • நாகர்கோவிலில் ஒரே வீட்டில் 2 பேருக்கு தொற்று
    • 298 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 7 பேருக்கு கொரோனா தொற்று

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் மீண்டும் கொேரானா பரவல் அதிகரிக்க தொடங்கி யுள்ளதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை முகாமை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 298 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் நகரில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலசூரங்குடி பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அதே பகுதியில் ஒரு பெண்ணும் சின்னவண்ணின் விளை பகுதியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர்கள் 4 பேரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகர்கோவில் நகரில் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரி கள் தடுப்பு நடவ டிக்கை களில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கொசு மருந்து அடித்தல், காய்ச்சல் பரிசோதனை போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அகஸ்தீஸ்வரம் ஒன்றி யத்தில் ஒருவருக்கும் ராஜாக்கமங்கலம் ஒன்றி யத்தில் இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தை யொட்டியுள்ள கேரளாவில் முககவசம் கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எல்லை பகுதிகளிலும் சுகாதார துறை அதிகாரிகள் பரிசோ தனை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு சென்று வருப வர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடி யாக பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரி கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தைராய்டு பரிசோதனை முகாம் நடந்தது.
    • ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன் முன்னிலை வகித்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் வாலிநோக்கம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தனியார் மருத்துவமனை இணைந்து தைராய்டு பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தியது. கிளைத் தலைவர் நூர் முகம்மது தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லா, மஸ்ஜித் துல்ஹுதா ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன் முன்னிலை வகித்தனர்.

    த.மு.மு.க. தலைவர் வாவா ராவுத்தர், செயலாளர் சம்சு கனி, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். கடலாடி ஒன்றியத் தலைவர் முகமது அலி புட்டோ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஹுசைன் கனி, ம.ம.க. மாநில பிரதிநிதி- மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது முஹிதுல்லா, வாலிநோக்கம் ஊராட்சி தலைவர் பீர்முகம்மது, ஒன்றிய தலைவர் காதர் சுல்தான் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். சமூக நீதி மாணவர் இயக்கத்கின் மாவட்ட செயலாளர் ஹபீப் ரஹ்மான் நன்றி கூறினார்.

    • ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சொந்தமான வீடு
    • முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்

    திருச்சி

    வேலூர் கலெக்டர் அலுவலக அருகே ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திலிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணி–களுக்கு நிதி ஒதுக்கீடு செய் யப்படுகிறது.இதில் திட்ட இயக்குனராக ஆர்த்தி பணியாற்றி வருகி–றார். தர்மபுரியில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. குடும்பத்தினரும் அங்கு வசிப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஆர்த்தி சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் சத்துவாச் சாரியில் உள்ள ஆர்த்தி வீட்டிற்கு இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் அதிரடியாக நுழைந்தனர். வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி காஜாமலை பிச்சையம்மாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி (72). இவர் ஆர்த்தியின் தந்தை ஆவார். மகள் ஆர்த்தி மற்றும் மருமகன் ஆகிய இருவரும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு துறை–யினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆர்த்தியின் தந்தை ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான கலைமணி வீட்டில் திருச்சி மாவட்டலஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. மணிகண்டன், ஆர்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர்கள் என 3 பேர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2013 ஆம் ஆண்டு சூரியூர் பகுதியில் 72 ஏக்கரில் கோழிப்பண்ணை அமைக்க இடம் வாங்கியது உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • தீவிர வாகன சோதனை நடைபெற்றது
    • அபராதம் விதித்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க போலீசார் அறிவுரை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிராபானு தலைமையிலான போக்குவரத்து போலீசார் சிதம்பரம் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்தவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், இலகு ரக வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள், வாகனங்களின் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.


    • சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
    • அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், ராஜாஜிபுரம், விவேகானந்தர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.2.10 லட்சம் அரசு மானியத்துடன் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரசின் விதிமுறைகளை மீறி பெருமளவில் முறை கேட்டில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதனையடுத்து திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர்கள் தமிழரசி, சுமித்ரா மற்றும் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் நாராயணன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 3 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

    இந்த அலுவலகம் சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு மாற்றப்பட்டதில் கடந்த ஓராண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் சென்னையையும் சேர்த்தால் 85 ஆயிரம் வீடுகளில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சோதனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூரில் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்களிடம் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    • துணை மேலாளர் அலுவலகம் என்று பல இடங்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டது.
    • மொத்தமாக 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதன் அடிப்படையில் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலகு அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை திருவாரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் நடத்தப்பட்டது.

    திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலகு 1 அலுவலகத்தில் உள்ள துணை மேலாளர் அலுவலகம், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அலுவலகம் என்று பல இடங்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டது.

    இந்த அதிரடி சோதனை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்த தொடங்கி அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் என்பது பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோதனை பல்வேறு இடங்களில் தீவிரமாக நடத்தப்பட்டது.

    சேமிப்பு கிடங்கு மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பெட்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து மணி நேர சோதனையில் முடிவில் மொத்தமாக 1லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்த கோபால் தெரிவித்துள்ளார்.

    மேலும் இது குறித்து 7பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • திடீர் என அலுவலகத்திற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்
    • ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்தும் சோதனை நடைபெற்றது

    ஆலங்குடி.

    ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இதில், ஆய்வாளராக நல்லதம்பி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென இந்த அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜவகர் பாபு, பீட்டர் தலைமையிலான போலீசார் வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர் மேலும். அலுவலக சோதனையில், சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்ப டுகிறது.

    • ஜெயங்கொண்டம் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    • கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் பறிமுதல்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சந்திரசேகர் மற்றும் செந்துறை துணை வட்டாட்சியர் ராமலிங்கம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பவுன்ராஜ், ரவி மற்றும் போலீசார் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென நுழைந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் கணக்கில் வராத ரூ 6 ஆயிரம் தொகையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலக பொறுப்பு சார்பதிவாளர் பிரகாஷ் மற்றும் உள்ளே இருந்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோசடி தொடர்பாக 22க்கும் மேற்பட்ட வழக்கு
    • 4 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆலங்குடி ஆண்டிகுளத்தைச் சேர்ந்த நெல்லைமகன் பன்னீர் செல்வம்(வயது 60).இவர் மீது 22க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ள நிலையில் இன்று ஆண்டிக்குளத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சென்னை வீட்டிலும் சோதனை நடைபெற்றது.சென்னை குற்றப் பிரிவு உதவி காவல் ஆணையர் ஜான் விக்டர் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்ற னர். மோசடி வழக்கு தொடர்பாக இந்த, அதிரடி சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×