search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பாளர்"

    • வேட்பாளர் தேர்வு ரகசியமான முறையில் நடந்து வருகிறது.
    • வரும் நாட்களில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டப்படும் என்று தெரிகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை இந்த தடவை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நிர்பந்தமான நிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. 138 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு கொண்ட காங்கிரஸ் கட்சி கடந்த 2 பாராளுமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

    அதில் இருந்து கட்சியை மீட்டு புத்துணர்ச்சி கொடுக்க ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இன்னமும் 100 சதவீத பலன் கிடைக்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செயல்பாடு ராகுலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பாக நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மிகவும் அசட்டையாக இருந்ததாக ராகுல் கருதுகிறார். இதையடுத்து காங்கிரசில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரவும் பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தவும் ராகுல் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 23-ந் தேதி நடந்தபோது ராகுல்காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றும் அவர் புதிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

    இதையடுத்து பாராளுமன்ற தோ்தலுக்கான பணிகளை எந்தவித தாமதமும் இல்லாமல் உடனடியாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. பாராளுமன்ற தோ்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளா்களை விரைந்து இறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

    அதற்காக வேட்பாளா் பரிசீலனைக் குழு இம்மாதமே அமைக்கப்பட உள்ளது. தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல மற்ற முக்கிய குழுக்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ராகுல் காந்தியை இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற் கொள்ளுமாறு செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டனா். அதை ராகுல் பரிசீலிப்பதாக கூறி உள்ளார்.

    தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில் பாத யாத்திரை சென்றால் பலன் கிடைக்குமா? என்ற சந்தேகம் ராகுல் மனதில் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் ராகுல் பாத யாத்திரை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேரதலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக 'இந்தியா' கூட்டணியை வலுவான அணியாக உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்வது என்று காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்து உள்ளனர். ஆனால் செல்வாக்கு உள்ள மாநில கட்சி தலைவர்களிடம் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துவது கஷ்டம் என்பதால் அந்த சிக்கலை தீர்ப்பது பற்றியும் ராகுல் ஆலோசித்து வருகிறார்.

    பா.ஜனதா கட்சி தேர்தலை சந்திக்க முழுவீச்சில் தயாராகி விட்டதால் அதற்கு முன்னதாக அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும் என்பதில் ராகுல் உறுதியாக உள்ளார். அதன்படி முதல் கட்டமாக 250 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

    வேட்பாளர் தேர்வு ரகசியமான முறையில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட ராகுல் தீர்மானித்து இருக்கிறார்.

    எனவே வரும் நாட்களில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டப்படும் என்று தெரிகிறது.

    • ஒரே நாடு என்றால் ஏன் காவிரியிலும், முல்லை பெரியாரிலும் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.
    • இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் காங்கிரஸ் அல்லாத தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறேன்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். தொடர்ந்து நேற்று இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் பல குற்றச் செயல்களுக்கு மூலகாரணமாக இருப்பது மதுப்பழக்கம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அவசியமற்றது. ஒரே நாடு என்றால் ஏன் காவிரியிலும், முல்லை பெரியாரிலும் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.

    அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. தி.மு.க. அரசியல் கட்சி கிடையாது. அது ஒரு குடும்ப சொத்து. கள்ளுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்தால் சாராய ஆலைகள் முடங்கிவிடும் என்பதால் கள்ளுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் காங்கிரஸ் அல்லாத தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறேன்.

    2024-ம் தேர்தலில் வென்று மீண்டும் மோடி வந்தால் இந்தியாவே இருக்காது. காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் நாட்டை விற்பதில் போட்டி. இதில் மோடி நன்றாக வியாபாரம் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரையும் அறிவித்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சுரேஷ் போட்டியிடுவார் என அவர் தெரிவித்தார்.

    • வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக செயலாளாற்றினார்.
    • சோமசுந்தரம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் முன்னாள் எம்.எல்.ஏ. சித்தமல்லி ந.சோமசுந்தரம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    இவர் 1971-ல் நடைபெற்ற தேர்தலில் அப்போது இருந்த வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    மேலும் தி.மு.க. மாவட்ட அவை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு சோம.நடேசமணி, சோம.செந்தமிழ்செல்வன் என்ற இரண்டு மகன்களும் மற்றும் ராணி சேகர் என்ற மகளும் உள்ளனர்.

    இதில் சோம.செந்தமிழ்செல்வன் நீடாமங்கலம் பெருந்தலை வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பில்லை.
    • குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பிறகே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்.

    குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து மம்தா பானர்ஜி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை என தெரிகிறது.

    குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பிறகே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.


    ×