search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகற்றம்"

    • அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்க–ளில் உள்ள கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு ஸ்டிக்கர்கள் அகற்றம்.
    • டிரைவர்களிடம் வாகன குறைகளை கேட்ட–றிந்து, அவற்றை நிவர்த்தி செய்யவும் உத்தரவிட்டார்.

    சேலம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்க–ளில் உள்ள கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு ஸ்டிக்கர்களை உடனே அகற்றி மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அறிக்கை அளிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சேலம் மாவட்டத்தில் போலீசாரின் வாகனங்களில் உள்ள கறுப்பு ஸ்டிக்கர் அகற்றும் பணி ஒரு வாரமாக நடந்தது. நேற்று சேலம் மாவட்ட ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து, டிரைவர்களிடம் வாகன குறைகளை கேட்ட–றிந்து, அவற்றை நிவர்த்தி செய்யவும் உத்தரவிட்டார்.

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி செல்லும் சாலையில் டேனிஷ் பேட்டை ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
    • ரெயில்வே துறையினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய இரண்டு கட்டமாக அப்பகுதி மக்களுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி செல்லும் சாலையில் டேனிஷ் பேட்டை ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான சுமார் 50 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் பல ஆண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர் .

    ரெயில்வே துறையினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய இரண்டு கட்டமாக அப்பகுதி மக்களுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்கு முன் வராத நிலையில் மக்கள் அப்பகுதியில் இருந்து வந்தனர். இன்று தேதி குறிப்பிட்ட நிலையில் முன்னதாகவே அவரவர் தேவையான பொருட்களை எடுத்துகொள்ளலாம் என்ற நிலையில் கடந்த 2 நாட்களாக மக்கள் வீடுகளில் தேவையான பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி மேட்டூர் சப்கலெக்டர் பிரதாப் சிங் மற்றும் தாசில்தார் அருள் பிரகாஷ் மற்றும் வருவாய் துறையினர், ரெயில்வே துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நிலத்தை சமன் செய்ய ரெயில்வே துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பவத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா , தீவட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ரெயில்வே போலீஸ் அதிரடிப்படை, தீயணைப்புத் துறையினர், மருத்துவத் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மாட்டுத்தாவணியில் 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் அதிரடி அகற்றப்பட்டது.
    • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலை மற்றும் பஸ் நிலையப்பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது.

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பஸ் நிலையம் முதல் பூக்கடை பகுதிகள் வரை சாலையின் ஓரங்களில் சிறு சிறு கடைகள் அமைத்து பலர் ஆக்கிரமித்துள்ளதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன‌. இதனால் பூ மார்க்கெட் மட்டும் மாட்டுத்தாவணி பஸ் நிலையப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    புல் டோசர் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆனாலும் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பழமையான தூங்குமூஞ்சி மரத்திற்கு மர்ம நபர்கள் யாரோ வைத்த தீயால் மரம் முற்றிலுமாக எரிந்து கருகி சாய்ந்தது.
    • நீண்ட காலமாக நிழல் தரும் வகையில் இருந்த மரம் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாலுகா கோவிந்தகுடி, ஆவூர் இடையே உள்ள பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நூற்றாண்டு பழமையான தூங்குமூஞ்சி மரத்திற்கு மர்ம நபர்கள் யாரோ வைத்த தீயால் மரம் முற்றிலுமாக எரிந்து கருகி சாய்ந்தது . அம்மரத்தை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக நிழல் தரும் வகையில் இருந்த மரம் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களிடையே கவலை அடைய செய்தது.

    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது.
    • இதனை தொடர்ந்து ஏரி மறுசீரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    சேலம்:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக தீர்த்து வைத்த பெருமை இந்த ஏரிக்கு உண்டு. 1924-ம் ஆண்டு சேலம் மாநகருக்கென மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.

    அதே நேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலமாக இருந்த பனமரத்துப்பட்டி ஏரியில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்தது. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ெஜயசங்கர், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பல திரைப்படங்கள் இங்கே படமானது குறிப்பிடத்தக்கது. இப்படி சிறப்பு வாய்ந்த பனமரத்துப்பட்டி ஏரி 2137.92 ஏக்கர் பரப்பளவும், 168 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது.

    சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு சுற்றியுள்ள ஜருகுமலை, போதமலை, வரட்டாறு, கூட்டாறு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து நிரம்பும். அரசு சார்பில் ஏரி பராமரிக்கப்படாததாலும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் ஏரிக்கு நீர்வரத்து இன்றி கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. அத்துடன் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏரிக்கு தண்ணீர் வரத்துக்கு வழியில்லாமல் ஆனது.

    இந்த நிலையில் பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைப்பது தொடர்பாக அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ஏரி மறுசீரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    முதற்கட்டமாக ஏரியில் பரந்து விரிந்து காணப்படும் சீமை கருவேல மரங்கள் மற்றும் பல்வேறு வகை விலை உயர்ந்த மரங்களை அகற்றும் வகையில் டெண்டர் விடப்பட்டது. இந்த மரங்களை வெட்டி எடுத்துக்கொள்ள சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சுமார் ரூ.1.84 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

    இதையடுத்து அந்த நிறுவனம், ஏரியில் உள்ள மரங்களை வெட்டி எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது. நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து மரங்களை வெட்டி, அவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக மரங்கள் வெட்டும் கருவி, அரிவாள், கத்தி, கோடாரி, வாள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. பெரிய மரங்கள் கயிறு கட்டி வெட்டி சாய்க்கப்படுகின்றன.பின்னர் அங்கு வைத்தே நீளமாக அளவீடு செய்து, மரங்கள் துண்டு துண்டாக வெட்டி, லாரிகளில் ஏற்றப்படுகின்றன.

    குறிப்பாக விறகுகள் மற்றும் வீட்டு உபயோகத்துக்கு பயன்படும் மர கட்டைகள், பலகைகள் என தனித்தனியாக தரம் பிரித்து லாரிகளில் ஏற்றப்படுகிறது. தினமும் ஏராளமான லோடுகள் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் மரங்கள் நிறைந்து பசுமையாக காணப்பட்ட ஏரி, கொஞ்சம், கொஞ்சமாக வெட்ட வெளியாக மாறி வருகின்றன.

    • பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்படுவதால் ரோடுகள் முற்றிலும் மறைக்கப்படுகிறது.
    • 15க்கும் மேற்பட்ட பேனர்களை, நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் அகற்றினர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தளி ரோடு, தாராபுரம் ரோடு சந்திப்பு பகுதிகளில், விதிமீறி ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதனால் ரோடுகள் முற்றிலும் மறைக்கப்படுகிறது.எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், கவனச்சிதறல் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள், காற்றுக்கு தாங்காமல் பொதுமக்கள், வாகனங்கள் மீது விழுந்தும் விபத்தை ஏற்படுத்தி வருகிறது.விதி மீறல் பேனர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நகராட்சி சார்பில் அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. பஸ் நிலையம், அனுஷம் ரோடு, பைபாஸ் மற்றும் கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட பேனர்களை, நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் அகற்றினர். நகராட்சி சார்பில், பஸ் நிலையத்தை சுற்றிலும் இருந்த பிளக்ஸ் பேனர்கள் மட்டும் அகற்றப்பட்டன.தளி ரோடு, தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, கொல்லன் பட்டறை, பழநி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், இன்னும் அதிக அளவு பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல், ஆபத்தான முறையில் உள்ளன. அவற்றையும் முழுமையாக அகற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.விதி மீறி கட்டடங்கள் மீதுள்ள விளம்பரத்தட்டிகளையும் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 30-ந் தேதிக்குள் பிளக்ஸ் பேனர்கள், ரோடுகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகள், ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் அகற்றப்படும் என்றனர்.

    • போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் விதத்தில் மேயர் மகேஷ் மற்றும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகரில் சாலையோரங்களில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் விதத்தில் மேயர் மகேஷ் மற்றும் போக்குவரத்து போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பார்வதிபுரம், வடசேரி, கோட்டார் பகுதிகளில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் செட்டி குளத்தில் இருந்து மேல ராமன்புதூர் செல்லும் சற்குண வீதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்ப தாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து நேற்று மேயர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. அவற்றை அப்புறப்படுத்த மேயர் மகேஷ் அறிவுறுத்தினார்.

    மேலும் அந்த சாலையில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் வந்த புகாரை தொடர்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சற்குணவீதி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. கடைகள் முன்பு போடப்பட்டிருந்த கொட்டகைகள் மற்றும் படிக்கட்டுகள் இடித்து அகற்றப்பட்டது.

    மேலும் சாலையில் நிறுத்தப்ப ட்டிருந்த இருசக்கர வாகனங்களை கடையின் உரிமையாளர்களே அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் சற்குண வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பூங்கா திறக்கப்படாமல் உள்ளது.
    • பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி எல்லையில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் மாநகராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.இதன் அருகே சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, வெற்றி அமைப்பு உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் முயற்சியால் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பூங்கா திறக்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குளத்தின் கரையில், தூய்மை காக்கும் உறுதிமொழியேற்பு நடந்தது.மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர். மண்டல குழு தலைவர், கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து குளத்தின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி சுத்தம் செய்யும் பணி துவங்கியது.நீண்ட நாள் திறக்கப்படாமல் உள்ள சிறுவர் பூங்காவை மேயர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். சீரமைப்பு பணிகள் செய்து பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • வேலூர் - ஜேடர்பாளையம் செல்லும் போத்தனூர் பகுதியில் உள்ள தார் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமங்களை அதிகாரிகள் அகற்றினார்கள்.
    • அதே போல் பல்வேறு வகையான சிமெண்ட் குழாய்கள் தயாரிக்கும் சிமெண்ட் பைப் கம்பெனியும் உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் -ஜேடர்பா ளையம் செல்லும் சாலையில் உள்ள பொத்தனூரில் தார் சாலையின் இருபுறமும் மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள், பழக்கடைகள், காய்கறி கடைகள், பிளாஸ்டிக் கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. அதே போல் பல்வேறு வகையான சிமெண்ட் குழாய்கள் தயாரிக்கும் சிமெண்ட் பைப் கம்பெனியும் உள்ளது.

    இந்த சிமெண்ட் பைப் கம்பெனி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு கடைக்காரர்களும் தார் சாலையின் இருபுறமும் ஓரத்தில் தங்களது விளம்பர போர்டுகளை வைத்துள்ளனர். அதேபோல் கடைக்காரர்கள் பலர் தார் சாலை வரை ஆக்கிரமித்து இருந்தனர். இது குறித்து அப்பகுதி சேர்ந்தவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பால கிருஷ்ணன் தலைமையில் சாலை ஆய்வாளர்கள் சங்கர், சிவகாமி மற்றும் சாலை பணியாளர்கள் கொண்ட குழுவினர் வேலூர் - ஜேடர்பாளையம் செல்லும் போத்தனூர் பகுதியில் உள்ள தார் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமங்களை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
    • விவசாய கடன் அட்டை அனைத்து விவசாயிகளும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    எம்.எஸ்.எம்.இ. திட்டத்தினை விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு பிரதமரிடமிருந்து முதல் பரிசு பெற்றமைக்கு கலெக்டருக்கு, மாவட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றிடும் திட்டத்தின் கீழ், விருதுநகர் வட்டாரத்தைச் சேர்ந்த மணிமாறன், ஸ்ரீநாத் பிரகதீஸ்குமார் ஆகியோருக்கு அக்ரி கிளினிக் அமைக்க தலா ரூ.1லட்சம் மானியமாக வழங்கும் செயல்முறை ஆணையை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் மரங்கள் நடுவதற்கு தகுதியான இடங்களை கண்டறிந்து வனத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சிதுறையின் மூலம் மரக்கன்றுகளை நட விவரம் சேகரிக்கப்பட உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தில் தற்போது பெரும் மாற்றம் செய்யப்பட்டு விவசாயிகளின் ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் நில விபரங்களை பதிவு செய்து நல்ல முறையில் நடைபெற்று வருவதால் பதிவு செய்யாதவர்கள் விரைவில் பதிவு செய்ய வேண்டும்.

    விவசாய கடன் அட்டை அனைத்து விவசாயிகளும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    விவசாய கடன் அட்டை விரும்புவோர் சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் விண்ணப்பித்து விவசாய கடன் அட்டை பெறலாம். சர்க்கரை ஆலை நிறுவனத்தினர் உறுதியளித்தவாறு கொள்முதல் கிரைய தொகையினை விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது.
    • தரைப்பாலத்தின் அடியில் இருந்த ஆகாயத்தாமரை கள், செடிகொடிகள்,முட்செடிகள் அகற்றப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி-அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் இருந்து வடுகன்காளிபாளையம் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நொய்யலில் அடித்து வரப்படும் செடிகொடிகள் ,ஆகாயத்தாமரைகள்,முட்செடிகள் போன்றவையால் தரைப்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது . இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இது குறித்து அக்ரஹாரப்புத்தூர் பொதுமக்கள் மங்கலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பாலத்தின் அடியில் இருந்த ஆகாயத்தாமரைகள், செடிகொடிகள்,முட்செடிகள் அகற்றப்பட்டது.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என திருமங்கலம் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம், கிராம ஊராட்சி சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் லதா ஜெகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை என குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து முறையான தகவல் தெரிவிக்கப்படாததால் அதிகாரிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுவ தாகவும் கவுன்சிலர்கள் கூறினர். கூட்டத்தில் பா.ஜனதா கவுன்சிலர் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டம் திருமங்கலம் பகுதியில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என கூறினார்.

    மேலும் இத்திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது அதிகாரிகள் ஜல்ஜீவன் திட்டத்திற்கு போதுமான நிதி இருந்தால் மட்டுமே அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் வழங்க முடியும் என தெரிவித்தனர். தமிழக அரசு அறிவித்துள்ள அக விலைப்படி உயர்வுக்கு நன்றி தெரிவித்து கவுன்சிலர் முத்துப்பாண்டி பேசினார்.

    திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடி யாக அகற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் செல்வம், மின்னல் கொடி ஆண்டிச்சாமி ஆகியோர் வலியுறுத்தினர்.

    அ.தி.மு.க. ஒன்றிய தலைவர் லதா ஜெகன், துணை சேர்மன் வளர்மதி அன்பழகன் மற்றும் அனைத்து கவுன்சிலர் களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடி யாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம், கிராம ஊராட்சி சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×