search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233901"

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது.

    இதனை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி தஞ்சை ரயில் நிலையம் முன்பு முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் முன்னாள் பகுதி செயலாளரும் அச்சகத் தலைவருமான புண்ணியமூர்த்தி முன்னிலையில் அ.தி.மு.க. வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளர் ஐயப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஏழுப்பட்டி முத்துமாறன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், கேசவன், தெட்சிணாமூர்த்தி, காந்திமதி, மாணவரணி துணை செயலாளர் ராஜாராமன், நீலகிரி ஊராட்சி அ.தி.மு.க பிரதிநிதி சண்முகசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகேந்திரன், வட்டப் பிரதிநிதி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கே.எஸ்.தென்னரசுக்கு வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
    • 21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள் என்று எடப்பாடி கூறினார்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். வீரப்பம்பாளையம், பெரியவலசு நால்ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்குகள் கேட்டு பேசினார்.

    அவர் பேசியதாவது, "21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள். மக்களை ஏமாற்ற பரோட்டா போடுவது, வடை சுடுவது என்று ஏமாற்றுகிறார்கள். பரோட்டா போடவும், டீ போடவுமா நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த கிழக்கு தொகுதிக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதை செய்யாமல் மக்களை ஏமாற்றுகிறீர்கள்" என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


    இயக்குனர் நவீன்

    அப்போது "நீ சரியான ஆம்பளையாக இருந்தால். மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு சந்தித்து வாக்கு சேகரியுங்கள்" என்று கூறினார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 'மூடர் கூடம்', 'கொளஞ்சி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் தனது சமூக வலைதளத்தில் எடப்பாடியை விமர்சித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்" என்று பதிவிட்டுள்ளார்.


    • ஒளிமயமான ‘ஒற்றை தலைமையே , தலைமை ஏற்க வாருங்கள், என வாசகங்கள் அடங்கி உள்ளன.
    • இந்த போஸ்டர் தற்போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    வேதாரண்யம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் என ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வேதாரண்யம் வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கி முன்னாள்தலைவர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர் .

    அதில் ஒளிமயமான 'ஒற்றை தலைமையே , தலைமை ஏற்க வாருங்கள், என வாசகங்கள் அடங்கி உள்ளன. இந்த போஸ்டர் தற்போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×