search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசு மாடுகள்"

    • மாலையில் மாடுகள் திரும்பியபோது வரும் வழியில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 9 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து விழுந்தன.
    • மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெற்பயிர்கள், நெல்குவியல்கள் உள்ளன.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் ஏராளமானோர் மாடுகள் வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம் போல் ஏராளமான மாடுகள் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. மாலையில் மாடுகள் திரும்பியபோது வரும் வழியில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 9 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து விழுந்தன. மேலும் 4 மாடுகள் மயக்கமடைந்து உள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெற்பயிர்கள், நெல்குவியல்கள் உள்ளன. அதை மாடுகள் சேதம் செய்ததால் மாடுகளுக்கு ஏதேனும் பூச்சி மருந்து கலந்த உணவை அளித்திருக்கலாம் என்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் வாலாஜாபாத் வட்டாட்சியர் சதீஷ் , வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் விரைந்து வந்தனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் மாடுகள் இறப்புக்கான காரணம் குறித்து பரிசோதனை செய்தனர்.

    • பழுதடைந்த ரேஷன் கடை சுவர் இடிந்து விழுந்து 4 பசு மாடுகள் இறந்து கிடந்தன.
    • நேற்று இரவு பெய்த மழையால் ரேஷன் கடை கட்டிடம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பழைய பல்லகச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே ரேஷன் கடை கட்டிடம் அமைந்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அகற்றப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் ரேஷன் கடை கட்டிடம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ரேஷன் கடை அருகே கட்டப்பட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 65) என்பவரின் நான்கு பசுமாடுகள் மீது விழுந்ததில் மாடுகள் சம்பவ இடத்தில் இறந்து போனது. இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பசு மாடுகளை மீட்டனர். பழுதடைந்த ரேஷன் கடை இடிந்து விழுந்து நான்கு மாடுகள் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×