என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவர்"
- 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
- பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது
உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
- பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும்மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
- திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் வரவேற்றார்.
மெலட்டூர்:
அம்மாபேட்டைஒன்றியம், திருபுவனம் ஊராட்சியில் தஞ்சை விஷ்ணு மருத்துவமனை, வசந்தம் லயன்ஸ் சங்கம் மற்றும் திருபுவனம் ஊராட்சி இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மாரிமுத்து தலைமை வகித்தார்.
அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
ஒன்றிய கவுன்சிலர் வெங்கட், சமூக ஆர்வலர், வில்லியம் ஸ்டீபன்சன், குந்தவை நாச்சியார் கல்லூரி கண்காணிப்பாளர் பாலசு ப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் வரவேற்றார்.
முகாமில் தஞ்சை விஷ்ணு மருத்துவமனை, மருத்துவ குழுவினர் சர்க்கரைநோய், ரத்த கொதிப்பு, தைராய்டு, வயிறு சம்மந்தமான பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, மார்பக நோய் பிரச்சனை, உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும்மருத்துவ ஆலோசனை வழங்க ப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் விஜய லெட்சுமி,கோகிலம், கிருஷ்ணமூர்த்தி, ஜோதியம்மாள் கலைச்செல்வன் மற்றும் வசந்தம் லயன்சங்க நிர்வாகிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருபுவனம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், மற்றும் வசந்தம் லயன்ஸ் சங்கத்தினர் செய்து இருந்தனர்.
- அரசு மருத்துவமனையில் ரூ.1.27 கோடியில் ஆக்சிஜன் பிளாண்ட்டை கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தார்.
- தலைமை மருத்துவர் செங்கதிர் நன்றி கூறினார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவ மனைக்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஏற்பாட்டில் டாடா குழுமத்தின் டி.சி.எஸ். பவுண்டேசன் மூலம் சுமார் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 500 லிட்டர் கொள்ளவில் ஒரே நேரத்தில் 100 ேபருக்கு ஆக்சிஜன் வழங்கும் வகையில் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தார். காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி முன்னிலை வகித்தார்.
பின்னர் எம்.பி. பேசுகையில், டாடா குழுமத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.4 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த பிளாண்ட். மேலும் அதிக செலவிலான ஆக்சிஜன் பிளாண்டை சரியான முறையில் பராமரிப்பு செய்து பயன்படுத்த வேண்டும். மருத்துவ மனையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
சுகாதார துறை இணை இயக்குநர் தர்மர் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர், தி.மு.க. நகரச் செயலாளர் பால முருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சபாபதி, தேவகோட்டை நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய், காங்கிரஸ் மாநில இலக்கிய அணிச் செயலாளர் சுவாமிநாதன், வட்டார காங்கிரஸ் இளங்குடி முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தலைமை மருத்துவர் செங்கதிர் நன்றி கூறினார்.
- கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று காலை 6 மணி அளவில் கார்த்திகேயன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்தார். அகரம்சேரி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததது. இதில், கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்ட பின்பு சாதாரண பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் நர்சுகள் தையல் போட்டுள்ளனர். மாலை 4 மணி ஆகியும் டாக்டர் வராததால் கார்த்திகேயன் வலியால் துடித்துள்ளார். முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் உறவினர்கள் கார்த்திகேயனை, நேற்று மாலை அரியூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கார்த்திகேயனுக்கு மீண்டும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கார்த்திகேயன் தலையில் சிக்கிக்கொண்ட நட்டு அகற்றப்பட்டது.
இதனை அறிந்த கார்த்திகேயனின் உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு டாக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி கூறியதாவது:-
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். இதற்காக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு அனைத்திற்கும் விளக்கம் தெரியும். குற்றம் நிரூபனமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- ஒரு வயது குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய பேட்டரி
- உணவுக்குழாயில் சிக்கிய பேட்டரியை அகற்றிய மருத்துவர்கள்
திருச்சி,
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது ஒரு வயது குழந்தை இனியா விளையாட்டு பொம்மைகளுக்கு பொருத்தும் பேட்டரியை கடந்த 21-ந்தேதி விழுங்கியதையடுத்து நல்லதம்பியின் உறவினர்கள குழந்தையை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிேசாதித்த மருத்துவர்கள் பேட்டரியை படிப்படியாக இறங்கி உணவுக்குழர்க்கு செல்வதை அறிந்து குழந்தையை உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மறுநாள் 22-ந்தேதி அரசு மருத்துவமனை மயக்க மருந்து நிபுணர்கள் உதவியுடன் மருத்துவர்கள் ஆர்.ஆர்.கண்ணன், சங்கர், ராஜசேகரன், கார்த்திகேயன், சுதாகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் எண்டோஸ்கோபி மூலம் நீண்ட நேரம் போராடி உவ்வித உபாதைகளும் ஏற்படாத வகையில் உணவுக்குழாயில் இருந்த பேட்டரியை அகற்றினர். இந்த பேட்டரியை உடனடியாக அகற்றி இருக்காவிட்டால் ஒரிரு நாட்களில் உணவுக்குழாயில் ஒட்டை ஏற்படுத்தி குழந்தையின் வாழ்வை கேள்விக்குறியாக்கியிரு க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை இனியா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போ அந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளது.
திருச்சி மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது முதல் முறை என்பதால் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவ கல்லரி முதல்வர் நேரு பாராட்டு தெரிவித்துள்ளார்.
- கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்பு.
- மருத்துவமனையின் மேலாளர் மீனா மற்றும் வரவேற்பாளர் ரிஸ்மா கான் ஆகியோரும் கைது.
கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த மருத்துவர் மற்றும் உதவியாளர் ஆகியோர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதை அடுத்து இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்ததாகக் கூறப்படும் மருத்துவர் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை பெங்களூரு போலீஸார் கைதுள்ளனர்.
மருத்துவர் சந்தன் பல்லால் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் நிசார் ஆகியோர் ஒவ்வொரு கருக்கலைப்புக்கும் 30,000 ரூபாய் வசூலித்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த மருத்துவமனையின் மேலாளர் மீனா மற்றும் வரவேற்பாளர் ரிஸ்மா கான் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சந்தேக நபர்களை பிடிக்க அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றம்.
- ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்கள்.
சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான அறுவை சிகிச்சை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கூச்ச உணர்வைப் போக்க அவர் கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் புழு வெளியே வந்து விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சிடையந்த அந்த பெண் பயந்துபோய் உடனடியாக சீனாவின் குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார்.
ஆனால், அந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் கண்களை சோதனை செய்தபோது, இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், அவரது வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். மொத்தத்தில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் கண்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை அகற்றியதாக பெண் மிரர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
இருப்பினும், நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்து புழுக்களை தொற்றியிருக்க வாய்ப்புள்ளதாக அந்த பெண் கருதுகிறார். அவற்றின் உடலில் தொற்று லார்வாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. விலங்குகளைத் தொடுவதும், கண்களைத் தேய்ப்பதும் தொற்றுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று மிரர் கூறினார்.
எஞ்சியிருக்கும் லார்வாக்களின் சாத்தியக்கூறுகளை கண்காணிக்க அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தும்படி மருத்துவர்கள் அந்தப் பெண்ணை வலியுறுத்தியுள்ளனர்.
- எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனை மின்தூக்கியில் திடீர் கோளாறு.
- அரசு மருத்துவர் ஒரு மணி நேரம் மின்தூக்கியில் சிக்கித் தவித்த சம்பவம் அரங்கேறியது.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள மின் தூக்கியில் மருத்துவர் ஒருவர் சிக்கித் தவித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் ஏழாவது தளத்திற்கு வரும் போது மின் தூக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டு நின்றது. ஒரு மணி நேரமாக மின் தூக்கியில் சிக்கிக் கொண்ட மருத்துவர் ஒருவழியாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (டிசம்பர் 12) அரங்கேறி இருக்கிறது.

மருத்துவமனை மின் தூக்கியில் ஒரு மணிநேரமாக சிக்கி தவித்ததாக மருத்துவர் வீடியோ வெளியிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்தார். மேலும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மின் தூக்கிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
- சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
- உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார்.
அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரால் கோமாவில் இருந்து மீள முடியவில்லை. சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
அவரை கோமாவில் இருந்து குணமாக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வர அவரது தாய் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். எனினும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெனிபரின் தாய் வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார். அதை கேட்ட, ஜெனிபர் சிரித்துள்ளார். இதை கவனித்த அவரது தாய் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகன் தனது காமெடியை கேட்டு கோமாவில் இருந்து சற்று மீண்டதை அவரால் நம்பமுடியவில்லை. உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அவரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 1.5 லட்சம் லைக்குகளை குவித்தது. பயனர்கள் பலரும் தாங்கள் அந்த நகைச்சுவையை கேட்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
- இங்கிலாந்து 'சர்ரே' நகரில் வசித்து வருபவர் டேவிட் மார்ஜோட்.(வயது95)
- இவர் ஓய்வுபெற்ற மனநல மருத்துவர் ஆவார்.
72 ஆண்டுகளுக்குப்பிறகு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து 'நவீன ஐரோப்பிய தத்துவத்தில்' எம்.ஏ முதுகலைப்பட்டத்தை தற்போது பெற்று உள்ளார்.
95 வயதில் மிகப் பழமையான பட்டதாரி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். மேலும் முனைவர் பட்டம் பெற படிக்கவும் பரிசீலனை செய்து வருகிறார்.
இதுகுறித்து மார்ஜோட் கூறும் போது, "பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் மனநல மருத்துவத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், தத்துவம் மற்றும் நவீன தொழிலில் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்வதற்காக மீண்டும் கல்விக்குச் செல்ல முடிவு செய்தேன்."
"நான் வாழும் காலநேரத்தை சரியாக பயன்படுத்த தெரிந்தவன். உள்ளூர் பேப்பர் ஒன்றில் கிங்ஸ்டன் பல்கலைக்கழக படிப்புக்கான விளம்பரத்தைப் பார்த்தேன். அதை தொடர்ந்து விண்ணப்பம் செய்தேன்."
"பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் எனக்கு படிக்க மிகவும் உதவியாக இருந்தனர். இது ஒரு அற்புதமான பாடமாக இருந்தது. மற்றும் கற்பித்தல் சிறப்பாக இருந்தது. அதனால் எளிதில் முதுகலைப்பட்டம் பெற முடிந்தது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. மேலும் முனைவர் பட்டம் பெற படிக்கவும் ஆசை இருக்கிறது," என்று தெரிவித்தார்.
டாக்டர் மார்ஜோட் தனது பட்டமளிப்பு நாளில் அவரது மகன் மற்றும் மருமகனுடன் மேடையைக் கடக்கும்போது அவரது நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு, கைத்தட்டலை பெற்றார்.
- பிரசவத்திற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டது.
- ஹாசன் கான் பிரசவம் பார்த்திருக்கிறார்.
ஜார்டனில் இருந்து லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விமானத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு மருத்துவர் ஹாசன் கான் பிரசவம் பார்த்திருக்கிறார்.
சுமாராக இரண்டு மணி நேர விமான பயணத்தின் போது விமானத்திற்குள் மருத்துவ அவசர நிலை உருவானது. இதையடுத்து விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஹாசன் கானிடம் விமான குழுவினர் உதவி கோரினர். உடனே உதவ முன்வந்த மருத்துவர், பெண் ஒருவருக்கு பனிக்குடம் உடைந்து பிரசவத்திற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டது.
இதை பார்த்த மருத்துவர், உடனே பிரசவ பணிகளை துவங்கினார். மருத்துவரின் உதவியால் 38 வயதான பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. வர்த்தக விமானம் ஒன்றில் பிறந்த 75-வது குழந்தை இது என கூறப்படுகிறது. குழந்தை பிறந்ததை அடுத்து விமானம் அருகாமையில் உள்ள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
அங்கிருந்து குழந்தையை பெற்றெடுத்து பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து பேசிய மருத்துவர், "விமானம் வேறு பாதையில் திருப்பப்பட்டதால், எனது பணிக்கு செல்ல தாமதமாகி விட்டது. தாமதத்திற்கான காரணத்தை அறிந்த எனது உயரதிகாரி என்னை பாராட்டினர்," என்று தெரிவித்தார்.
- குழந்தைக்கு மாதங்கள் அதிகரிக்கும் போது மூக்கு அல்லது தொண்டை காற்றுப்பாதையில் சில அடைப்புகள் இருக்க கூடும்.
- குழந்தை வாய் வழியாக சுவாசிக்கும் போது அது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்க கூடும்.
குழந்தை விழித்து கொண்டிருப்பதைவிட தூங்கும் போது தான் அம்மாக்கள் அதிகமாக கவனிப்பர்கள். எல்லா அம்மாக்களுக்கும் இது பொருந்தும். குழந்தையின் கை விரல்கள் கால் விரல்கள், கால்கள், குட்டி கண்கள், மூக்கு துவாரங்கள், சிறிய காதுகள் என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்க தோன்றும்.
அவர்கள் தூங்கும் போது குழந்தையை உற்று நோக்கும் அம்மாக்கள் குழந்தை வாயை திறந்த நிலையில் தூங்குவதையும் கவனித்திருப்பார்கள். இது அடிக்கடி நிகழ கூடியதுதான் ஆனால் குழந்தை வாய் திறந்து தூங்கினால் அது கவனிக்க வேண்டிய விஷயம் தான்.
பிறந்த குழந்தை 3 முதல் 4 மாதங்கள் வரை வாயால் சுவாசிக்கமாட்டார்கள். அதே நேரம் குழந்தைக்கு மாதங்கள் அதிகரிக்கும் போது மூக்கு அல்லது தொண்டை காற்றுப்பாதையில் சில அடைப்புகள் இருக்க கூடும். அதனால் தான் வாய்வழியாக சுவாசம் நடைபெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இது பொதுவானது என்றாலும் இது சிக்கலான நிலைமைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது தொடரும் போது வாய் வழியாக சுவாசிப்பது குழந்தைக்கு பழக்கமாகிவிடும்.

ஆனால் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கும் போது அது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்க கூடும். மூக்கு சுவாசம் போன்று இது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் மூக்கு வழியாக குழந்தை சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செல்வதற்கு முன்பு அதில் இருக்கும் மாசு வடிகட்டப்படுகிறது. நாசி சுவாசம் நுரையீரலில் ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை அதிகரிக்க செய்கிறது. குழந்தையின் உடலில் ஆக்ஸிஜன் அதிகரித்தால் அது குழந்தையின் உயிர் ஆற்றலை மேம்படுத்த செய்யும். மேலும் இது நுரையீரலுக்கு சுவாசம் சீராக கிடைக்கும். ஆனால் வாய் வழியாக சுவாசித்தல் நல்லதல்ல.
குழந்தைக்கு சுவாச பிரச்சனை இருக்கும் போதும் இது நிகழலாம். அதனால் குழந்தை தூங்கும் போதெல்லாம் இதை கவனியுங்கள். இது குழந்தைக்கு சுவாச பிரச்சனை இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாகவும் இருக்கலாம். குழந்தை வாய் திறந்து தூங்கும் போது மூச்சுத்திணறல் மூச்சு விடுதலில் சிரமம் இருந்தாலும் இந்நிலை உண்டாகலாம்.
குழந்தைக்கு சளி உண்டாகும் போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் அல்லது சளியால் சுவாசம் தடைபடலாம். அதனால் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கலாம். அல்லது ஏதேனும் ஒவ்வாமையால் இது உண்டாகியிருக்கலாம்.எனினும் சளி இருக்கும் போது குழந்தைக்கு உடனே சரியாக்க முடியாது என்பதால் அவர்கள் வாய் வழியாகத்தான் நிம்மதியான சுவாசத்தை பெறுவார்கள்.
வாய் வழியே சுவாசம் என்பது குழந்தைக்கு உண்டாகும் மூச்சுத்திணறல் அறிகுறியாகவும் இருக்கலாம். குழந்தை மல்லாந்து படுத்திருக்கும் போது குழந்தையின் காற்றுப்பாதை ஏதேனும் சிறு வகையில் அடைப்புக்கு உள்ளாகியிருக்கலாம். இதற்கு டான்சில் அல்லது அடினாய்டு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

குழந்தைகள் குறட்டை விடுகிறார்களா என்று நினைக்காதீர்கள். அம்மாக்களுக்கு தெரியும் குழந்தையின் குறட்டை சத்தம். குழந்தை தூங்குவதில் சிரமம் இருக்கும் போது, இருமல் வரும் போது, மூச்சுத்திணறல் இருக்கும் போது உண்டாக கூடும்.
சில குழந்தைகள் வேறு நோய் தாக்குதல் காரணங்களாலும் மூக்கு வழியாக சுவாசிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கலாம். அதனால் குழந்தை வாய் வழியாகவே எப்போதும் சுவாசித்தால் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் குழந்தைக்கு சுவாசப்பாதை தொற்றுடன் வேறு அறிகுறிகள் இருந்தால் அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
குழந்தை வாயை திறந்து தூங்கினாலே அது ஏதோ குறைபாடாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். சாதாரணமாக சளி பிரச்சனை இல்லாத நேரத்திலும் வாய் வழி சுவாசம் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.