search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னங்கன்று"

    • புங்கனூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.
    • பொதுமக்கள் 1000 பேருக்கு தென்னங்கன்றுகள் வீட்டு உபயோக பொருட்கள் என நலத்திட்ட உதவிகள்.

    சீர்காழி:

    சீர்காழி தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பாக புங்கனூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் முஹம்மது இத்ரீஸ் தலைமை வகித்தார்.

    மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

    விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், பஞ்சு குமார், மலர்விழி திருமாவளவன், நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், ஜி.என்.ரவி, மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் முருகன், முத்து குபேரன், செல்வமுத்துக்குமார், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொருப்பாளர் ஸ்ரீதர், திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 1000 பேருக்கு தென்னை மரக்கன்றுகள் வீட்டு உபயோக பொருட்கள் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் தலைமை தாங்கினார்.
    • முடிவில் வட்டார அட்மா திட்ட மேலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் விவசாய கூலி தொழிலாளி குடும்பங்களுக்கு தென்ன ங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இயமையனாதன், ஒன்றிய கவுன்சிலர் அபிராமி வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக ராஜ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 300 விவசாய குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டியன், வேளாண்மைத்துறை தரக்கட்ட ப்பட்டு உதவி இயக்குனர் சிவவீரபாண்டியன், வேளாண் அலுவலர் சுவாதிகா, உதவி வேளாண் அலுவலர் சுகுமார், ஊராட்சி துணை தலைவர் ராஜா கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்டார அட்மா திட்ட மேலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.

    • மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கினர்.
    • நிகழ்ச்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் வழங்கினார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல் முன்னிலை வகித்தார். இதில் மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கினர்.

    இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் வழங்கினார்.

    • முக்கிய இடங்களில் கட்சி கொடியேற்றி மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • தொழிலதிபர்கள், பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூரில் சிவசேனா மாநில துணைத்தலைவர், காவி புலிப்படை நிறுவனத் தலைவர் மற்றும் தமிழக இந்து பரிவார் மாநில அமைப்பாளரு மான புலவஞ்சி சி. பி. போஸ் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி, தென்னங்கன்றுகள் பொதும க்களுக்கு வழங்கப்பட்டது.

    மதுக்கூரில் நேற்று முன்தினம் 23ஆம் தேதி சிவசேனா மாநில துணைத்தலைவர், காவி புலிப்படை நிறுவனத் தலைவர் மற்றும் தமிழக இந்து பரிவார் மாநில அமைப்பாளருமான புலவஞ்சி சி. பி. போஸ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புலவஞ்சி, மதுக்கூர் பேருந்து நிலையம், முக்ககூட்டுச்சாலையில் உள்ள ஒரு வழி பாதையில் ,ஆற்று பாலம் என முக்கிய இடங்களில் கட்சி கொடியேற்றி மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது .

    இதனை அடுத்து மதுக்கூர் அருகே படப்பை காட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிவசேனா மாநில அமைப்பாளர் தங்க முத்துகிருஷ்ணன், இந்து சத்திய சேனா நிறுவனத் தலைவர் மாஸ்டர் M.வசந்தகுமார், இந்து அதிரடிப்படை நிறுவன தலைவர் ராஜகுரு ,பி.ஜே.பி. ன் எஸ்.சி. எஸ்.டி. அணியின் மாநில செயலாளர் பெரம்பலூர் பிச்சை, சிவசேனாவின் தஞ்சை மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி ,பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் கார்த்திக், மதுக்கூர் ஒன்றிய விவசாய அணி தலைவர் ஆனந்தராஜ் ,மதுக்கூர் ஒன்றிய தலைவர் பிரபாகரன், மதுக்கூர் நகர தலைவர் அன்பு மற்றும் தொழிலதிபர்கள், பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.

    • 120 குடும்பங்களுக்கு மொத்தம் 360 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
    • கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு குடும்பத்திற்கு மூன்று தென்னங் கன்றுகள் வீதம் 120 குடும்பங்களுக்கு மொத்தம் 360 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகவளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி அலுவலர் தீப்சீலா தலைமை வகித்தார்.கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா முன்னிலை வகித்தார் .விழாவில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசு,ஆகியோர் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் வார்டு மெம்பர்கள், மதிமுக நகர செயலாளர் வைகோ பாலு, ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது.
    • ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

    அவிநாசி :

    அரசின் ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவிநாசி வட்டாரத்தில் கடந்த ஆண்டு , செம்பியநல்லூர், புதுப்பாளையம், நம்பியாம்பாளையம், சேவூர், பழங்கரை, ஆலத்தூர், பாப்பன்குளம் என, 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவது, நீர்வள ஆதாரங்களை பெருக்குவது, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துவது, வேளாண் விளைப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், பண்ணைக்குட்டை அமைப்பது, கிராம வேளாண் உட்கட்டமைப்பு மேம்படுத்துவது போன்ற பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராமத்திலும், 200 விவசாய குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஒரு கிராமத்துக்கு, 600 வீதம் 7 கிராமங்களுக்கு 4,200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது. தானியப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, விவசாயிகளை ஒருங்கிணைத்து, 15 எக்டர் பரப்பளவுக்கு, மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்பட்டுள்ளது.அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு மேற்பார்வையில், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், தென்னங்கன்று வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    • பிரதாபராமபுரம் கிராமத்தில் 5 அடி உயரமுள்ள கொய்யா மரக்கன்று, தென்னை மரக்கன்றுகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
    • பயனாளிகளின் வீடு தோறும் சென்று மரக்கன்றுகளை நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சரவணன், சாந்தி சரவணன் மற்றும் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் சார்பில் 100 குடும்பங்களுக்கு 6 அடி உயரமுள்ள பலா மரக்கன்று, 5 அடி உயரமுள்ள கொய்யா மரக்கன்று, தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியை பிரியங்கா ஒருங்கிணைத்தார். பயனாளி களுக்கு லெட்சுமணன், சிவாகார்த்திக், அழகேசன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கினர். சரவணன் பயனாளிகளின் வீடு தோறும் சென்று மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொள்கிறார்.

    ×