search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234570"

    • எவ்வித அரசு அனுமதியும் இன்றி செம்மண் எடுத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 2 டெம்போக்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறர்கள்.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் முப்பந்தல் அருகே ெரயில்வே ரோடு பகுதியில் ரோந்து பணி சென்றனர்.

    அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் எவ்வித அரசு அனுமதியும் இன்றி செம்மண் எடுத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்தோடு செம்மண் கடத்தப்படுவது தெரிய வந்தது. டிரைவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் செம்மண் ஏற்றிய டெம்போ மற்றும் ஏற்ற வந்த டெம்போ என 2 டெம்போக்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறர்கள்.

    • சதீஷ் டெம்போவை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
    • சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை அருகே திற்குறிச்சி தச்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (30) இவருக்குச் சொந்தமான டெம்போவில் அனுமதி இன்றி செம்மண் கடத்துவதாக பாகோடு கிராம அலுவலர் சுரேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுபற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது சதீஷ் டெம்போவை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதை அடுத்து டெம்போவை பறிமுதல் செய்த போலீசார், சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை அந்த பகுதியில் ஒரு லாரி செம்மண் இறக்க வந்துள்ளது.
    • உயர் அழுத்த மின் கம்பி மீது டிப்பர் உரசியது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே இன்று காலை மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலியானார்.

    திருவாரூர் அருகே புலிவலம் ஆர்.பி.எஸ். சாந்தாநகர் பகுதியில் சாலை பணிக்காக தஞ்சாவூர் பகுதியில் இருந்து டிப்பர் லாரி மூலம் செம்மண் இறக்கும் பணி நடை ெபற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் ஒரு லாரி செம்மண் இறக்க வந்துள்ளது. அந்த லாரியை மணிகண்டன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். பின்னர் லாரியில் இருந்த மண்ணை இறக்க டிப்பரை தூக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது டிப்பர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி மணிகண்டன் உயிரிழந்தார்.

    உடனடியாக அப்பகுதி மக்கள் இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணி கண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காலை நேரத்தில் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பி மீது டிப்பர் லாரி உரசி ஓட்டுநர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • செம்மண் கடத்தியவர்கள் தப்பி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக நல்லூர் கிராம அலுவலர் செலஸ்டின் ராஜீக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது, அங்கு செம்மண் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் செம்மண் கடத்த பயன்படுத்திய டெம்போ மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசை கண்டதும் டெம்போ டிரைவர் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே குமரன்குடியில் இருந்து செம்மன் கடத்தப்படுவதாக திருவட்டார் தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருவட்டார் தாசில்தார் குமரன்குடி கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அதிரடியாக அந்த பகுதியில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது செங்கோடி அருகே காரியமங்கலத்துவிளை பகுதியில் டெம்போவில் சிலர் செம்மண் ஏற்றிகொண்டு இருந்தார்கள்.

    போலீசை கண்டதும் டெம்போ டிரைவர் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். கிராம நிர்வாக அதிகாரி ஜெகன் அருள் டெம்போவை கைப்பற்றி திருவட்டார் போலீசில் ஒப்படைத்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • போலீசாரை கண்டதும் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து கடத்த ப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் களியக்கா விளை போலீசார் இன்று அதிகாலை மலையடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.

    போலீசாரை கண்டதும் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், டெம்போவை சோதனை செய்தபோது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கபட்டது. அதனை அனுமதி இல்லாமல் கடத்துவதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து செம்மண்ணுடன் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியில் இருந்து செம்மண் அள்ளுவதற்க்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தையும் கைப்பற்றி னர்.

    தப்பி ஓடிய டெம்போ டிரைவர் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவட்டார் போலீசார் சோதனை நடத்தினர்.
    • டிரைவர் சாலின் என்பவரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவட்டார் போலீசார் அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது 2 மினி வேன்களில் சிலர் செம்மன் ஏற்றிக் கொண்டு இருந்தனர். போலீசார் 2 வேன்களையும் பறிமுதல் செய்ததோடு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சாலின் என்பவரையும் கைது செய்தனர்.

    • அனுமதியில்லாமல் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்
    • 2 வேன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் உதவி சூப்பிரண்டு விவேகானந்த் சுக்லா தலைமையில் நேற்று மாலை தக்கலை போலீசார் திருவிதாங்கோடு திக்கணங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்பிலாவிளை பகுதியில் அனுமதியில்லாமல் மண் கடத்த படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே ஏஎஸ்பி விவேகானந்த் சுக்லா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது போலீசாரை கண்டதும் மணல் கடத்திய கும்பல் தப்பி ஓடியது. அப்பகுதியில் மண் ஏற்றி நிரம்பிய நிலையில் இருந்த 2 வேன்களை போலீஸார் பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ×