என் மலர்
நீங்கள் தேடியது "நெற்பயிர்"
- வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.
- வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
நீடாமங்கலம்:
வேளாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குநர் குடவாசல் மற்றும்வ லங்கைமான் (பொ) கோ.ஜெயசீலன் லெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது.
வேளாண் இணை இயக்குனர் கனகராஜன் வழிகாட்டலின் படி கீழ்கண்ட ஆலோசனைகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான் இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள்நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால்,நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும்.
துார் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரி க்கலாம் முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம் (அல்லது) நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.
நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால்ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன்18 கிலோ ஜிப்சம்4 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும்.
போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்டபிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.
இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
குலைநோயின் சிறு புள்ளிகள் காணப்ப ட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டசிம் பூசணக்கொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களைஅணுகி விபரம் தெரிந்து கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருவாலி, நாராயணபுரம்,மங்கைமடம், புதுப்பட்டினம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேரில்பா ர்வையிட்டு பாதிப்பு குறித்து விசாயிகளிடம் கேட்டறிந்தார்.
எடமணல், வேட்டங்குடி, அகர வட்டாரம், புதுப் பட்டினம் ஆகிய பகுதிகளில் கனமழை பாதிப்பை பார்வையிட்டு புதுப்பட்டினத்தில் 300 குடும்பங்களுக்கு, அரிசி , சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,சீர்காழி பகுதியில் பெய்த44 சென்டிமீ ட்டர் கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவசர கால நிவாரணம் வழங்க வேண்டும்.
தொடர் மழையால் வீடுகள், மீனவர்கள், இரால் குட்டைகள் அழிவு ஏற்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரண தொகை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும்.
நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு பருப்பு,சர்க்கரை,கோதுமை இலவசமாக பொருட்கள் வழங்க வேண்டும்.
பழையார் துறைமுகத்தில் 300 விசைப்படைகள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் முடங்கியு ள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்டத் தலைவர் சங்கர்,மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
- சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் மேஸ்வரபுரம், வீரமாங்குடி, தேவன்குடி ஆகிய கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
மேலும், தேவன்குடி அண்ணாமலை நகர் பகுதியில் சுமார் 20 குடிசை வீடுகளில் மழைநீர் புகுந்ததால், சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டுஉரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், வீரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கனகம், சோமேஸ்வரபுரம் சாந்தி கார்த்திக், விவசாய சங்க தலைவர் விக்ரமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், வேளாண்மை துறை அதிகாரிகளும் உள்ளனர்.
- நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
- மண், நீர் மற்றும் காற்று மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.
தரங்கம்பாடி:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமம் அகரகீரங்குடி பகுதியில் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் தர கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்கு சுபவீரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.
நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
நானோ யூரியா உரத்தின் பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது. மண் நீர் மற்றும் காற்று மாசு அடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.
500 மில்லி நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கிறது. ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மி.லி நானோ யூரியா மற்றும் 20 மி.லி ஒட்டுப்பசை தேவைப்படுகிறது.
அனைத்து வகையான உதவி பயிர்களுக்கும் யூரியா மேலுறத்திற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம் என்று அட்மா திட்ட வட்டார தொழிற்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறினார்.
பின்னர் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வேளாண்மை உதவி அலுவலர் சுகுமார், அட்மா திட்ட உதவி மேலாளர்கள் விஜய் மற்றும் மதுமனா ஆகியோர் நிகழ்ச்சி செயல் விளக்க ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.
- பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் ஜேக்கப்பிளாக் புரவு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
- உடனடியாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணை தண்ணீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த அணைகளில் இருந்து நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய், தோவாளை கால்வாய், புத்தனாறு கால்வாய், அனந்தன் கால்வாய் உள்பட பல கால்வாய்களில் விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதில் தோவாளை கால்வாயின் கடை வரம்பு பகுதி யான கொட்டாரம் ஜேக்கப் பிளாக் புரவு பகுதி யில் உள்ள கொட்டாரம், பொட்டல்குளம், பெரிய விளை, சுந்தரபுரம் போன்ற பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் கும்பப்பூ சாகுபடிக்கான நெல்பயிரிடப்பட்டு உள்ளது. தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியில் உள்ள நிலப்பாறையில் இருந்து கூண்டு பாலம் வழியாக செல்லும் கிளை கால்வாய் மூலம் இந்த ஜேக்கப் பிளாக் கடை வரம்புபகுதியில் உள்ள வயல்களுக்கு தினமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்த பிறகும் இந்த கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு ராதாபுரம் கால்வாயில் திறந்து விடப்பட்டுஉள்ளது. ஜேக்கப் பிளாக் புரவு பகுதியில் நெற் பயிர்கள் பயிரிடப்பட்டு 40 நாட்கள்ஆகிவிட்டன. இதனால் இந்த நெற் பயிர்கள் கருநடவு பருவத்தை கடந்துவிட்ட நிலையில் உள்ளது. சில இடங்களில் இந்த நெற் பயிர் தற்போது பொதியும் கதிருமான பருவத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஜேக்கப் பிளாக் புரவின் கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால் வயல்வெளிகள் தண்ணீரின்றி வெடிப்பு விழுந்து வறண்டு காணப் படுகிறது.
அதுமட்டுமின்றி தண்ணீர் இல்லாமல் பொதியும் கதிருமான பருவத்தை எட்டிஇருக்கும் சூழ்நிலையில் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.இதனால் விவசாயிகள்கவலை அடைந்துள்ளனர். விவசாயி கள் தினம் தினம் தங்களது வயலுக்கு சென்று தண்ணீர் வராதா! தண்ணீர் வராதா! வாடிய பயிரை காப்பாற்ற முடியாதா? என்று எதிர் பார்த்தபடி காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
பேச்சிப்பாறை அணை யில் போதிய அளவு தண்ணீர் இருந்த பிறகும் தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் ஜேக்கப்பிளாக் புரவு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடாமல் ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது ஏன்? அதுவும் சுழற்சி முறையில் வாரத்துக்கு ஒருமுறை இந்த பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடுவதன் மர்மம் என்ன? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன் பிறகும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள நெல் பயிரை காப்பாற்றஉடனடி யாக தண்ணீர் திறந்து விடா விட்டால் போராட்ட களத்தில் குதிப்பதற்கும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
- மத்திய அரசு குழு அனுப்பி ஈரப்பதத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நெற்பயிர் பாதிப்புகளை அமைச்சர் ஆய்வு செய்து விவசாயி–களிடம் கேட்டறிந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்ட சம்பா சாகுபடியில், 20 ஆயிரம் ஏக்கர் அறுவடை முடிந்த நிலையில், கடந்த 3 நாட்கள் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து கடுமையான சேதம் அடைந்தது.
இதையடுத்து முதல்வர் உத்தரவின்பேரில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்யும் வகையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று மாலை திருமருகல் பகுதிக்கு வந்தார்.
பின்னர் அவர் திருமருகல் அருகே ஆலத்தூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை பார்வைட்டார்.
அப்போது விவசாயிகள் பாதித்த நெற்பயிர்களை அமைச்சரிடம் காண்பித்து பாதிப்பு குறித்து தெரிவித்தனர்.
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி:-
தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு குழு அனுப்பி ஈரப்பதத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீரில் நனைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய விவசாயிகளுக்கு கூடுதல் செலவினங்கள் ஆவதால், இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தண்ணீர் வடியும் தன்மையை கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரிடர் காலங்களில் தொடர்ந்து தமிழக அரசுக்கு நிதி கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
நாகை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து கீழ்வேளூர் அருகே உள்ள சாட்டியகுடி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர் பாதிப்புகளை அமைச்சர் ஆய்வு செய்து விவசாயி–களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநாவாஸ் எம்எல்ஏ, வேளாண் இணை இயக்குனர் அகண்டராவ், திருமருகல் வட்டார ஆத்மா குழுத்த லைவர் செங்குட்டுவன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறுவட்ட சேரி, ஏனோதி மேல்பாக்கம், சின்னசோழியம்பாக்கம், பெரியசோழியம் பாக்கம், ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்ட 110 ஏக்கர் நெற்பயிரில் மஞ்சள் குருத்து புழு மற்றும், பச்சை பாசி வளர்ச்சியினால் பயிர்களின் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக வேளாண் துணை இயக்குனர் தேவேந்திரன், திருவள்ளூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் துறை துணை பேராசிரியர் விஜயசாந்தி, பொன்னேரி வேளாண் துணை இயக்குனர் டில்லி குமார், ஆய்வாளர் உமா ஆகியோர் நேரில் சென்று பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் மஞ்சள் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி தெரிவித்தனர்.
- திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
- 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக. நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.
கடலூர்:
திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர், மருதாத்தூர், ஆதமங்கலம், மேலூர், தொளார். புத்தேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசனத்தை கொண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.அதன்படி அறுவடை எந்திரங்கள் விவசாய நிலங்களில் நிற்கும் நிலையில், 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. மேலும், இந்த மழையினால் நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.
இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடி பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழையை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டிய விவசாயிகள் வேதனை அடைய வேண்டிய அவல நிலை தொடர்கிறது.
- தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
- உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும்.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடைகால நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அதிலும் குறிப்பாக கண்டிதம்பட்டு, புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கருக்கும் மேல் கோடைகால நெற்பயிர்கள் வயலிலே தண்ணீர் தேங்கி சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் சாய்ந்த நெற்பயிர்களின் ஏக்கர் அளவு அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் குறைந்தது மூன்று நாட்களுக்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை ஓரளவாது காப்பாற்ற முடியும். தற்போது தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
- தொடர்மழை காரணமாக தண்ணீர் வடியாமல் உள்ளதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு:
தமிழக பகுதியில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்கிறது.
இதேபோல் செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன.
கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வடகால் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 60 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தொடர்மழை காரணமாக தண்ணீர் வடியாமல் உள்ளதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.
- ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர்,சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, அணையிலிருந்து கடந்த ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியை துவக்கினர். தற்போது இப்பகுதிகளில் நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.கணியூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து கடத்தூர், கண்ணாடிபுத்தூர் பகுதிகளிலும் அறுவடையை துவக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் பற்றாக்குறையால் எந்திர அறுவடைக்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், மடத்துக்குளம் வட்டார பகுதிகளில் பருவ மழையும் துவங்கியுள்ளது.
இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் பாதித்து வருகின்றன. நெல் வயல்களில், தாள்கள் தலைசாய்ந்து, நெல் மணிகள் வயல்களிலேயே உதிர்ந்து, பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
எனவே பருவ மழைக்கு முன், விளைந்த நெல் அறுவடை செய்யும் வகையில் தேவையான அளவு நெல் அறுவடை எந்திரங்களை கொண்டு வர வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது.இங்கு நெல்லுக்கான ஆதார விலை சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ. 2,203 மற்றும் ஊக்கத்தொகை ரூ.107 என ஒரு குவிண்டால் 2,310 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.அதே போல் பொது ரகம் ஆதார விலை, ரூ.2,183, ஊக்கத்தொகை ரூ.82 என ஒரு குவிண்டால் நெல் 2,265 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது, அறுவடை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் கொள்முதல் மையத்தில் பதிவு செய்து வருகின்றனர். கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, சோழமாதேவி பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தற்போது மழை வெள்ளத்தால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
- காவிரி நீர் வராமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாகை ஒன்றியம் பாலையூர் பகுதியில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ நேரடி ஆய்வு செய்து விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். மேலும், திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி, விற்குடி, வடகரை, கீழப்பூதனூர் ஆகிய பகுதிகளிலும் வயல்களில் இறங்கி பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
மழை பாதிப்புகள் குறித்து ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது, ஏற்கெனவே, காவிரி நீர் வராமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. தற்போது மழை வெள்ளத்தால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
வறட்சி என்றாலும் வெள்ளம் என்றாலும் அதிக பாதிப்பை சந்திக்கும் நாகையின் மீது அரசு சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன், இளஞ்செழியன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.