search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷிகர் தவான்"

    • சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.
    • நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு.

    மும்பை:

    இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பிசிசிஐ அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் தூக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று டி20 அணியில் விராட் கோலி ,ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் இலங்கைத் தொடரில் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ், முகமது சிராஜ் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளதாவது:-

    ஷிகர் தவான் குறித்து நிச்சயமாக கவலைப்படுகிறேன். அவருக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. முதலில் டி20 மற்றும் டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்தார். அதை எல்லாம் தாண்டி ஒரு நாள் போட்டியில் தவானுக்கு வாய்ப்பு கிடைத்தது.

    ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் தவான் நன்றாக விளையாடி வந்தார். ஆனால் இப்போதெல்லாம் சில போட்டிகளில் ரன் சேர்க்கவில்லை என்றால் உங்களுடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிடும். காரணம் பல இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஷிகர் தவானுக்கு மாற்றாக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.

    இதனால் ஷிகர் தவானுக்கு சிக்கல் அதிகரித்து விட்டது. இதேபோன்று இஷான் கிஷனும் தொடக்க வீரருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்காக தவான் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ஐபிஎல் தொடரில் சாதித்ததற்காக கிடைத்த வெகுமானம். கேப்டனாக ஹர்திக் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

    ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் அவர் அணியை வழி நடத்திய விதம் பாராட்டத்தக்கது. விராட் கோலியை பொறுத்தவரை டி20 போட்டியில் அவருடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அதிகம் விளையாடுவார்.

    இந்திய ஒரு நாள் அணியில் முக்கியமான வீரராக விராட் கோலி திகழ்வதால் அவர் நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் டி20 அணியில் பல இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள் என்பதால், விராட் கோலிக்கு நெருக்கடி ஏற்படும்.

    எனினும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட விராட் கோலி நிச்சயம் ஆர்வம் காட்டுவார். இதனால் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்று சொல்ல முடியாது.

    • இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இடது கை, வலது கை பேட்ஸ்மென்கள் என்ற கணக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
    • அது ஷிகர் தவானுக்கு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

    டாக்கா:

    வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் 2 அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 210 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். அதேவேளை மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் 3 ரன்களில் வெளியேறினார்.

    இந்நிலையில், ஷிகர் தவானின் மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    இலங்கைக்கு எதிரான தொடரில் ஷிகர் தவானின் நிலை என்ன?. இஷான் கிஷனை அணியில் சேர்க்காமல் இருப்பார்களா? என்பதை மிகவும் ஆச்சரியம். சுப்மன் கில்லும் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். காயத்தில் இருந்து ரோகித் சர்மா மீண்டுவிட்டால் யாராவது அணியில் இடம்பெறாத சூழ்நிலை ஏற்படும்.

    அது ஷிகர் தவானாக தான் இருக்கக்கூடும். இது மிகச்சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையின் சோகமான முடிவாக அமையும். ஆனால் புதிய தேர்வாளர்களுக்கு சில கேள்விகள் பதிலளிக்க வேண்டும். சுவாரசியம் என்னவென்றால், சுப்மன் கில் அணியில் இடம்பெற்றால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார்.

    ஏனென்றால் அவர் தேவை ஏற்படும் நேரத்தில் சிறப்பாக செயல்படுகிறார். இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இடது கை, வலது கை பேட்ஸ்மென்கள் என்ற கணக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அது ஷிகர் தவானுக்கு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கதேச தொடரில் மூத்த வீரர்கள் அணியில் இணைய உள்ளனர்.
    • வங்கதேச தொடரில் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு உதவும்.

    இந்தியா- நியூசிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்த போட்டி மழை காரணமாக ரத்தானது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை எடுத்தது. ஆடம் மில்னே, டேரில் மிட்செல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    220 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் பின் ஆலன் 54 பந்துகளில் 57 ரன்களை சேர்த்து உம்ரான் மாலிக் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து டிவோன் கான்வே 38 (51), கேன் வில்லியம்சன் 0 (3) இருவரும் விளையாடி வரும் நிலையில், மழை குறுக்கிட்டு போட்டி தடைப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இப்போட்டி முடிந்தப் பிறகு இந்திய அணிக் கேப்டன் ஷிகர் தவன் பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது:-

    மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. வங்கதேச தொடரிலும் இது தொடரக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். வங்கதேச தொடரில் மூத்த வீரர்கள் அணியில் இணைய உள்ளனர். அத்தொடரில் சிறப்பாக செயல்படுவது மிக முக்கியம்.

    இந்திய காலநிலைதான் அங்கும் இருக்கும். இதனால், அங்கு சிறப்பாக செயல்பட்டால், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் தவான் ஒருநாள் அணி கேப்டனாக பணியாற்றியுள்ளார்
    • கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியதால் தவானிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது

    இந்திய அணியின் தொடக்க இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.

    மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படும்போது ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டள்ளார்.

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் ஜிம்பாப்வே தொடருக்கான அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

    ஜிம்பாப்வே தொடர் தொடங்கும் நிலையில் கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதால் தவான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நாளை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே தொடரின்போது கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தவான் தற்போது பதில் அளித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-

    நீங்கள் நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இந்த நிலையில் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கேப்டன் பதவியும், அதன் சவால் பற்றியும் நான் சிறப்பாக உணர்கிறேன். இளம் வீரர்களை கொண்ட அணியுடன் நாம் சில சிறந்த தொடர்களை வென்றுள்ளோம்.

    ஜிம்பாப்வே தொடரின்போது, மெயின் அணியின் துணைக் கேப்டனான கே.எல். ராகுல் மீண்டும் விளையாட வரும்போது, அவர் ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறார் என்ற உண்மையை நான் கவனத்தில் கொண்டேன். ஆசிய கோப்பையின்போது ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டால், கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட கேட்டுக் கொள்ளப்படுவார். ஆகவே, ஜிம்பாப்வே தொடர் அவருக்கு சிறந்த பயிற்சியாக இருந்திருக்கும்..

    அதனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. எது நடந்தாலும், அது சிறப்பானவைக்காக நிகழும் என நினைப்பேன். தென்ஆப்பிரிக்கா தொடருக்கான கேப்டனை தேர்வு செய்யும்போது, எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தனர். நான் ஒருபோதும் மோசமானதாக உணர்ந்தது இல்லை'' என்றார்.

    • பிரபல நடிகைகள் ஹியூமா குரேசி மற்றும் சோனாக்ஷி சின்கா ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
    • ஹியூமா குரேசியுடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்து நிகழ்த்தப்பட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா பயணித்துள்ளது. அதனால் சீனியர் வீரர் ஷிகர் தவான் தலைமையில் இத்தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் சாதித்துக் காட்டியுள்ளது.

    இந்நிலையில் 36 வயதுடைய தவான் கிரிக்கெட்டை தவிர்த்து அடுத்த காட்டமாக சினிமாவில் கால் பதித்துள்ளார். ஏற்கனவே தந்தையிடம் அடி வாங்குவது முதல் ஜடேஜாவை கலாய்த்தது வரை விதவிதமாக ஜாலியான வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய அவருக்கு தற்போது "டபுள் எக்ஸ்எல்" எனும் பாலிவுட் படத்தில் முதல் முறையாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.

    உடல் பருமனான பெண் சந்திக்கும் பிரச்சனைகளை தாண்டி அந்தப் பெண்ணுக்குள் இருக்கும் ஆசைகள், கனவுகளை அந்தப் பெண் எப்படி அடைகிறார் என்ற கதை களத்தை கொண்ட அந்த படத்தை இயக்குனர் ஸட்ரம் ரமணி இயக்குகிறார்.

    அதில் பிரபல நடிகைகள் ஹியூமா குரேசி மற்றும் சோனாக்ஷி சின்கா ஆகியோர் நடிக்கவுள்ளனர். அந்த படத்தின் வாயிலாக பாலிவுட் திரையில் ஷிகர் தவான் கெஸ்ட் ரோலில் தோன்றுகிறார். வரும் நவம்பர் 4-இல் வெளியாகும் அந்த படத்தில் அவரது கேரக்டர் வெற்றி பெறும் பட்சத்தில் நாளடைவில் நிறைய திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தில் நடிப்பதற்காக ஹியூமா குரேசியுடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜூக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
    • பனிபொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என கேசவ் மகராஜூ கூறினார்.

    ராஞ்சி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 279 ரன் இலக்காக இருந்தது.

    மார்க்ராம் 79 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஹென்ட்ரிக்ஸ் 74 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் மில்லர் 35 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். முகமது சிராஜ் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 279 ரன் இலக்கை 25 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்தியா 45.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். அவர் 111 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 113 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 93 ரன் எடுத்தார்.

    இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 161 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 30 ரன் (அவுட் இல்லை) எடுத்தார்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

    பந்து ஆடுவதற்கு ஏற்ற வகையில் நன்றாக வந்தது. ஆனால் அதே நேரத்தில் அது அளவை விட மிக குறைவாகவே இருந்தது. இதனால் முதல் 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்களை வீழ்த்துவதே எங்கள் திட்டமாக இருந்தது. இந்த திட்டம் பலித்தது.

    சரியான நேரத்தில் பனிபொழிவு ஏற்பட்டது. இது பேட்டிங்குக்கு ஏற்றதாக இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜூக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

    இஷான் கிஷனும், ஸ்ரேயாஸ் அய்யரும் அபாரமாக பேட்டிங் செய்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியவிதம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.அறிமுக வீரர் ஷபாஸ் முதல் 10 ஓவர்களில் நேர்த்தியாக வீசி திருப்பு முனையை ஏற்படுத்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க தற்காலிக கேப்டன் கேசவ் மகராஜ் கூறும் போது, பனிபொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.அதனால் 'டாஸ்' வென்ற பிறகு பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பனியின் தாக்கத்தால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக மாறி விட்டது என்றார்.

    இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பழி தீர்த்துக் கொண்டது. லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

    3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் நாளை நடக்கிறது.

    • நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவறவிட்டனர்.
    • ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடினர்.

    லக்னோ:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது.

    இதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடியது. மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 40 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்தது. டேவிட் மில்லர் 75 ரன்னும், கிளாஸ்சன் 74 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணியில் ஷிகர் தவான் (4 ரன்), சுப்மன் கில் (3), ருதுராஜ் கெய்க்வாட் (19), இஷான் கிஷன் (20) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஸ்ரேயாஸ் அய்யர்-சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சஞ்சு சாம்சன் கடைசி வரை நின்று போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டது. அதில் சாம்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்னே எடுத்தார்.

    இந்தியா 40 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா 9 ரன் வித்தியாசத்தில் வென்றது. நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவறவிட்டனர். பீல்டிங் சிறப்பாக அமையவில்லை.

    தோல்வி குறித்து கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

    எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடினர். ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியது. வேகமும் இருந்தது.

    இதனால் 250 ரன் இலக்கு என்பது அதிகமானது என்று நினைத்தேன். பீல்டிங்கில் தவறு செய்ததால் சில ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். ஆனால் இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவமாகவும், கற்றலாகவும் இருக்கும் என்றார்.

    சஞ்சு சாம்சன் கூறும் போது, நடு ஓவர்களில் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி அதிக ரன் விட்டு கொடுத்தார். எனவே அவரை இலக்கு வைத்து விளையாடினேன்.

    கடைசி ஓவரை ஷம்சி வீசுவார் என்று எங்களுக்கு தெரியும். கடைசி ஓவரில் 24 ரன் எடுக்க வேண்டி இருந்திருந்தால் அதில் நான்கு சிக்சர் அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். இரண்டு ஷாட்களை அடிக்க தவறிவிட்டேன். அடுத்த முறை இன்னும் கடினமாக முயற்சி செய்வேன். ஆனால் எனது பங்களிப்பில் நான் திருப்தியடைந்தேன் என்றார்.

    3 ஆட்டம் கொண்ட தொடரில் 2-வது ஆட்டம் வருகிற 9-ந்தேதி ராஞ்சியில் நடக்கிறது.

    • ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.

    அதன்படி இன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் , ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாகர் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    இதில் முகேஷ் குமார் மற்றும் ரஜத் படிதார் அறிமுக வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி லக்னோவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
    • இந்த ஒருநாள் தொடரில் விவிஎஸ் லட்சுமன் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. இறுதி போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மோத உள்ளது. முதலில் இந்தியா 3 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது.

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா உள்பட டி20 போட்டிகளில் விளையாடும் முக்கிய வீரர்களுக்கு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.

    இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விவிஎஸ் லட்சுமன் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • வெஸ்ட் இண்டீசில் புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.
    • கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே வெற்றிகளைப் பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா இந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 113 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதில் 7 பவுண்டரியுடன் ஷிகர் தவான் 58 (74) ரன்களில் அவுட்டான போது வந்த மழை ஒரு மணி நேரம் பெய்து குறுக்கிட்ட நிலையில் மீண்டும் போட்டி துவங்கிய போது மீண்டும் ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்து சென்றது. அதனால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டி மீண்டும் தொடங்கிய போது 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் – ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினர். அதில் ஸ்ரேயஸ் ஐயர் 44 (34) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 8 (6) ரன்களில் அவுட்டானார். அதனால் 36 ஓவரில் இந்தியா 225/3 ரன்கள் எடுத்தபோது மீண்டும் வந்த மழை முதல் இன்னிங்ஸ் முடியும் நேரம் வரை வெளுத்து வாங்கியது.

    அதனால் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 98* (98) ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஹெய்டன் வால்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

    அதை தொடர்ந்து டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆடியது. இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதன் மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து சாதித்து காட்டியுள்ளது.


    அதிலும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து இந்தியா புதிய சாதனையுடன் கோப்பையை வென்றுள்ளது. மேலும் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. கங்குலி (2002) : 2 -1 (5) 2 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    2. எம்எஸ் டோனி (2009) : 2-1 (4) 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    3. சுரேஷ் ரெய்னா (2011) : 3-2 (5)

    4. விராட் கோலி (2017) : 3-1 (5) 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    5. விராட் கோலி (2019) : 2-0 (3), 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது

    6. ஷிகர் தவான் (2022): 3-0 (3)*

    மேலும் கடந்த 2006-க்குப்பின் தொடர்ச்சியாக 12 தொடர்களில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக தொடர்களில் வென்ற அணி என்ற புதிய உலக சாதனையும் படைத்துள்ளது.

    2-வது இடம் : பாகிஸ்தான் – ஜிம்பாப்வேக்கு எதிராக (11)

    • முதலில் விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்கள் குவித்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 75 ரன்கள் அடித்தார்.

    டிரினிடாட்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணியுடன் இந்தியா பங்கேற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ஷுப்மான் கில் ஆகியோர் ஆரம்பம் முதல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது. அரை சதமடித்த ஷுப்மான் கில் 64 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 54 ரன்கள் அடித்தார்.

    தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீரர் ஹோப் 7 ரன்னுக்கு வெளியேற, சிறப்பாக விளையாடி 75 ரன்கள் குவித்த கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்தார். ஷமர் ப்ரூக்ஸ் 46 ரன்களும், பிராண்டன் கிங் 54 ரன்களும் அடித்தனர். கேப்டன் பூரன் 25 ரன்கள் எடுத்தார்.

    பாவெல் 6 ரன்னுடன் வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த அகேல் ஹோசின், ரொமாரியோ ஷெப்பர்டும் அணியின் வெற்றிக்கு போராடினர். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 12 ரன்கள் அடித்தது.

    50 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததால், இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹோசின் 32 ரன்னுடனும், ஷெப்பர்ட் 38 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் சிராஜ், தாக்கூர், சாகல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

    • இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்னில் அவுட்டானார்.
    • மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 64 ரன்னில் வெளியேறினார்.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் இறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடியாக ஆடினர். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

    ஷுப்மான் கில் முதலில் அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது.

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யரும் அரை சதமடித்து 54 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 ரன், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    ×