என் மலர்
நீங்கள் தேடியது "ஆய்வுக்கூட்டம்"
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் லட்சுமணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- திருப்பூர் வடக்கு கே.என்.விஜயகுமார் , மடத்துக்குளம் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் , உடுமலைப்பேட்டை உடுமலை கே.ராதாகிருஷ்ணன் , திருப்பூர் வடக்கு கே.என்.விஜயகுமார் , மடத்துக்குளம் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், அவிநாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய முக்கிய 10 திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி, திருப்பூர்சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் லட்சுமணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நடந்தது
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் காஞ்சி கூட்ரோடு ஆஷா ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கே ரமேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, மாவட்ட பார்வையாளர் தசரதன், மாவட்டத் தலைவர் கே.ஆர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் நடந்தது.
- பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்ததிற்கான படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கலையொட்டி பெறப்பட்ட மனுக்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் ஷோபனா தலைமையில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவ லரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2023ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணிகள் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்ததிற்கான படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இது குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, 1.1.2023ம் தேதியினை தகுதி நாளாகக்கொண்டு நவம்பர் 9-ந் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 8-ந் தேதி வரை 1880 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடந்தது.
இச்சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் குறித்து மொத்தம் 75,824 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, வருகிற 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
மேலும், பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு, பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.
- துறையூர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்
- ஆய்வின்போது காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
துறையூர்:
தமிழக காவல்துறையில் சம்பந்தப்பட்ட காவல் துறை சரகத் துணைத் தலைவர்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வட்ட காவல் நிலையத்தை ஆய்வு செய்வது வழக்கம். இதனை ஒட்டி திருச்சி சரக துணை தலைவர் சரவண சுந்தர் துறையூர் வட்ட காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கைதியறை, கணினி அறை, வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். மேலும் ஆய்வின்போது காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்த ஆய்வின்போது முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், துறையூர் வட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரகாந்த், முத்துசாமி உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்.
- தாழ்வு நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்கம்பங்கள் குறைந்தது 15 அடிக்கு மேல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
- மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தாழ்வு நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்கம்பங்கள் அனைத்தையும் குறைந்தது 15 அடிக்கு மேல் இருப்பதை மின்வாரியத்துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைப்பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள அயல் தாவரங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
சமீபத்தில் நடைபெற்ற 4 யானைகள் இறப்பு விபத்து போன்ற விபத்துகள் எதிர்வரும் காலங்களில் ஏற்படாமல் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் வெடி விபத்துகள், பட்டாசு கிடங்கு விபத்துகள், கல்குவாரி விபத்துகள் போன்றவை நடைபெறாத வண்ணம் உரிமம் வழங்குதல், உரிமம் மறுபதிவு செய்தல், ஆய்வு நடவடிக்கைகள், போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, கனிமவளத்துறை அலுவலர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொண்டு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கும், உரிய பாதுகாப்பான சூழ்நிலை இருப்பதற்குமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கோடை காலங்களில் நகராட்சி, பேரூராட்சி, 251 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அந்தந்த பகுதிகளில் போதுமான குடிநீர் கிடைப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
மேலும், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும். வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடுகளை தகுதியான விவாசயிகளுக்கு கால தாமதமின்றி வழங்குவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் தாராணி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ராஜசேகரன், தருமபுரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சாந்தி, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் வளைய பூக்குளம் ஊராட்சியில் 53 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்க ளுக்கான குடிநீர் தேவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
இதில் கமுதி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி பேசுகையில், கமுதி யூனியனில் குடிநீர் தேவைக்கான ஆய்வுக் கூட்டம் நடத்திய கலெக்டரை பாராட்டு கிறேன். இந்த யூனியனில் நீர் ஆதாரங்களை தூர்வாரி மழைநீர் கடலில் கலக்காமல் சேமித்தாலே குடிநீர் பிரச்சினை தீரும்.கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.
மேலும் ஊராட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். அனை வரும் காவிரி குடிநீர் திட்டத்தை அதிகாரிகள் முறையாக மராமத்து செய்வ தில்லை என்றும், உடைப்பு ஏற்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இதில் பயிற்சி கலெக்டர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, காவிரி குடிநீர் திட்ட பொறியா ளர்கள், கமுதி யூனியன் ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், யூனியன் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பெரியசாமி தேவர் உள்பட பலரும் தங்களது கருத்து களை தெரிவித்தனர். வளையபூக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நன்றி கூறினார்.
- சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் தெரிவித்ததாவது,
திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள்,
நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் மேம்பாட்டு திட்டம், மழை நீர் சேகரிப்பு, வருவாய் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் எண்ணும், எழுத்தும் திட்டம், பள்ளி கட்டமைப்புகள், சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வின் அடிப்படையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் இராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் சங்கீதா, மன்னார்குடி கீர்த்தனா மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உள்ளிட்ட அரசு அலுவல ர்கள், அனைத்துதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மதுரையில் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை பொழி வின் போது மேற்கொள்ளப் பட வேண்டிய முன்னேற் பாடுகள் தொடர்பாகவும், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் தொடர் பாகவும் அனைத்துத் துறை அலுவர்களுடன் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநக ராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீரோட்ட பாதைகளை சரி செய்து தும்புகளில் சேர்ந்துள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்,
இடியும் நிலை யில் உள்ள கட்டிடங்கள், சேதமடைந்த கட்டிடங்களின் அருகே பொது மக்கள் அணுகாத வண்ணம் தேவை யான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் துறை வாரியாக சிறப்பு குழுக்கள், சிறப்பு பணிகள் ஏற்படுத்தவும், மீட்பு வாகனங்கள் மற்றும் மீட்பு கருவிகள் தயார் நிலை யில் வைத்திருக்கவும், மழை யினால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுக்காப்பான இடங்களில் தங்கும் வைக்கும் சிறப்பு முகாம்களில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளனவா என்று ஆய்வு செய்யவும், மலேரியா/டெங்கு காய்ச்சல் முதலிய பருவகால நோய்கள் பரவாத வண்ணம் தேவை யான முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
தனியார் மருத்துவமனை கள் பட்டியல் மற்றும் அம்மருத்துவமனையில் உள்ள மருந்து வகைகள் மற்றும் இதர வசதி விபரம் அடங்கிய பதிவேடு பரா மரிக்கப்பட வேண்டும். கன மழையில் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றிடவும், வெள்ளத்தினால் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க வும் 24 x 7 கால அளவிலும் தயார் நிலையில் இருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும், கடந்த மழைக்காலங்களில் ஏற்கனவே பாதிப்படைந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது,
இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலத்தில், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வாக்குசாவடி அமைவிடம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- இதில் மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஈரோடு:
மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வாக்குசாவடி அமைவிடம் குறித்த ஆய்வுக்கூட்டம் தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் நடந்தது.
தேர்தல் துணை தாசில்தார் அறிவ ழகன் முன்னிலை வகித்தார். இதில் மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 277 பூத்கள் உள்ளன. இந்த பூத்களில் 15-ல் இருந்து 20 பூத்களை ஒருங்கிணைத்து அந்த பூத்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் கூட்டம் நடத்த வேண்டும்.
வாக்களர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்.
பூத்களில் வாக்குசாவடி அலுவலரின் அலைபேசி எண்ணை குறிப்பிட்டுள்ள அறிவிப்பினை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
- விருதுநகரில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்பட பலர் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
சாலைகளில் உரிய அனுமதியின்றி அமைத்துள்ள வேகத் தடைகளை அகற்றவும், சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டது. பள்ளிகளில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதம் முதல் வெள்ளிக் கிழமை அன்று தொடர்ந்து காவல்துறை மூலம் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை பணியாளர்கள் தக வல் தெரிவிக்க வேண்டும், போதை பொருள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்தல் தொடர்பாக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் குழு கண்கா ணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், கோட்டப் பொறியாளர்(நெடுஞ்சாலை மற்றும் கட்டிட பராமரிப்பு) பாக்கியலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொறுப்பு) அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக தரம் உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) வில்வசேகரன் தலைமை தாங்கினார். இதில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தேனி மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் ஜீவா, மதுரை மற்றும் தேனி மாவட்ட துணைப்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கே.நாட்டாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை எந்திரத்திற்கான ரூ.27 லட்சத்து 73 ஆயிரத்து 826 மதிப்புள்ள கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.
- மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மாநகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- பாதாள சாக்கடை திட்டப் பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மதுரை, நெல்லை, தூத்துக் குடி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகள். நகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டப் பணிகள், அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகள், விரிவாக் கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.
மேலும் நெல்லை, நாகர் கோவில், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள், குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகளில் குடிநீர் விநியோக பணிகள், முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப் பட்டது.
முன்னதாக அவனியா புரம் வெள்ளைக்கல்லில் செயல்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையத்தில் அரசு முதன்மை செயலர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஐராவத நல்லூர் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பெரியார் பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையாளர்கள் பிரவீன்குமார், (மதுரை), சிவகிருஷ்ணமூர்த்தி, (நெல்லை), ஆனந்தமோகன், (நாகர்கோவில்) தினேஷ் குமார், (தூத்துக்குடி) நக ராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் முஜிபூர் ரகுமான், விஜயலட்சுமி, மதுரை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.