என் மலர்
நீங்கள் தேடியது "slug 234845"
- நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
- கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தகவல்
நாகர்கோவில்:
வடகிழக்கு பருவமழையின் போது தோட்ட பயிர்களை பாதுகாப்பது குறித்து கலெக்டர் அரவிந்த் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாழை காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும்.
பல்லாண்டு பயிர்கள் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும்.
மிளகு உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதியில் முன்தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம்பு மற்றும் ஜாதிக்காய் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். காய்ந்து போன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். நிழலினை ஒழுங்குப்படுத்த கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
கொக்கோ காய்ந்து போன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். அதிகப்படியான இலைத்தளைகளை கவாத்து செய்தல் வேண்டும். மரத்தின் தண்டுப்பகுதியில் போர்டோக்கலவையை தெளிக்க வேண்டும்.
ரப்பர் சிறிய செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகளால் கயிற்றால் கட்ட வேண்டும். செடியின் அடிப்பாகத்தை சுத்தம் செய்து உள்நோக்கி சாய்வு அமைத்து வடிகால் வசதி செய்ய வேண்டும். ரப்பர் பால் வடிக்கும் பகுதியில் பாதுகாப்பு பூச்சு பூச வேண்டும். மழைப்பாதுகாப்பு கவசம் பயன்படுத்த வேண்டும்.
இதர தோட்டக்கலைப் பயிர்களுக்கான வழிமுறைகள் தோட்டக்கலைப் பயிர்களான மரவள்ளி , மிளகாய் , தக்காளி , வெண்டை , கொத்தமல்லி , கத்தரி , பூண்டு மற்றும் இஞ்சி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.
நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா வண்ணம் பாதுகாக்கவும். வயல்களில் தேவையான பயிர்ப்பாதுகாப்பு நடவ டிக்கை மேற்கொள்ளப் பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு மோகன் குமார–மங்கலம் மருத்துவமனை நுழைவாயில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வேண்டி சேலம் மாவட்டம் மருளையம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மனு அளித்திருந்தார்.
- இந்த மனுவை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் நேரில் வழங்கினார்.
சேலம்:
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டம் எண்.29 நாவலர் நெடுஞ்செழியன் சாலை அரசு மோகன் குமார–மங்கலம் மருத்துவமனை நுழைவாயில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வேண்டி சேலம் மாவட்டம் மருளையம்பாளையத்தை சேர்ந்த ஞானம்மாள் என்ற மாற்றுத்திறனாளி மனு அளித்திருந்தார். மனுவினை பரிசீலித்து ஞானம்மாளுக்கு ஆவின் பாலகம் அமைக்க அனுமதி அளித்து அதற்கான ஆணையை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் நேரில் வழங்கினார். அப்போது அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் இன்றி ஆவின் பாலகம் அமைத்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
அனுமதி ஆணை பெற்ற மாற்றுத்திறனாளி ஞானம்மாள் கூறுகையில், எனக்கு அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
- பேரிடர் மேலாண்மை மற்றும் மருத்துவமனைகள் அதை எதிர்கொள்ள தயாராகுதல் பற்றிய மாநாடு.
- விழாவில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை மற்றும் மீனாட்சி மருத்து வமனை இணைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் மருத்துவமனைகள் அதை எதிர்கொள்ள தயாராகுதல் பற்றிய மாநில அளவிலான மருத்துவ மாநாடு நடைபெற்றது.
மாநாட்டை தஞ்சை மருத்துவ கல்லூரிமுதல்வர் மருதுதுரை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார்.
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ கண்கா ணிப்பாளர் மத்தியஸ் ஆர்தர் மற்றும் மருத்துவக்கல்லூரி உரைநிலைய மருத்துவர் செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
இதில் மருத்துவ பேராசிரியர்கள் பேரிடர் மேலாண்மை பற்றி உரையாற்றினர்.
விழா ஏற்பாடுகளை தஞ்சை மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் சரவணவேல் மற்றும் மருத்துவக்கல்லூரி அவசர பிரிவு தலைவர் (பொ) வினோத் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
- இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கார் டிரைவிங் கற்று கொடுக்கப்பட்டது.
- 140-க்கும் மேற்பட்டோருக்கு லைசென்ஸ் வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் மத்திய அரசின் ஸ்வாபிமான் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி கொடுக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சை டி.பி.ஸ்கில்ஸ் மையத்தில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கார் டிரைவிங் கற்று கொடுக்கப்பட்டது. 45 நாட்கள் இந்த இலவச பயிற்சி நடைபெற்றது. முடிவில் 140-க்கும் மேற்பட்டோருக்கு இன்று சான்றிதழ், லைசென்ஸ் வழங்கும் விழா தஞ்சையில் நடைபெற்றது.
இதற்கு மகேந்திரா பைனான்ஸ் டிவிஷன் மேலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற திருச்சி சி.இ.ஓ. சுவாமிநாதன், லயன்ஸ் கிளப் மாவட்ட இரண்டாம் நிலை துணை ஆளுநர் சவரிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ், லைசன்ஸ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் டி.பி.ஸ்கில்ஸ் புராஜெக்ட் மேலாளர் ஜெய்சிங், டி.பி.ஸ்கில்ஸ் ஸ்ரீதர் , பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சை டி.பி.ஸ்கில்ஸ் சென்டர் தலைவர் ஆறுமுகம் செய்திருந்தார்.
- கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.
- நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் பணிகள் செய்யப்படஉள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள குமரன் பூங்காவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.
அதன்படி, நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகள் ஆகியன செய்யப்படவுள்ளது.
அடுத்து பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக நடைபெற்ற பூமி பூஜையில் ராஜகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
நகராட்சித் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி உறுப்பினர்கள் ராஜலெட்சுமி ராஜேந்திரன், சர்வோதயன், ரமேஷ், மணிமேகலை மணிவண்ணன் மற்றும் நகராட்சி பணி ஆய்வர்கள் ரம்யா, ராஜாராமன், ஒப்பந்தகாரர் ரிஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குளத்தில் அரசு பெண்கள் கல்லூரி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
- தொடர்ந்து மாணவிகள் அங்கேயே தங்கள் கல்வியைத் தொடரலாம் என ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் அரசு பெண்கள் கல்லூரி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடத்தில் போதிய வகுப்பறைகள் இல்லை என்பதால், கல்லூரியில் உள்ள 1000 மாணவிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளை 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணி அண்ணா மகளிர் கல்லூரிக்கு சென்று பயில கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.
ஆனால் வெகுதூரம் சென்று படிப்பதால் வீடு திரும்ப தாமதமாகும், கூடுதல் செலவினங்கள் ஏற்படும் என கூறி கடந்த 3 நாட்களாக மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி, தற்காலிகமாக கல்லூரி செயல்படும் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது அங்கேயே போதிய இடம் இருப்பதும் தொடர்ந்து மாணவிகள் இங்கேயே தங்கள் கல்வியைத் தொடரலாம் என்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து கட்டிட உரிமையாளர் டாக்டர் செந்திலிடம் இது தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி காலை, மாலை என இரு பிரிவுகளாக இங்கேயே நடைபெறும் என ஆர்.டி.ஓ. கூறினார்.
இந்த ஆய்வின் போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், மாவட்ட பிரதிநிதி சாமுவேல் ராஜா, அவைத்தலைவர் ஜோசப், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், பேரூராட்சி துணைத்தலைவர் ஜான்ரவி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாலமன் ராஜா, கணேசன், ஒன்றிய பிரதிநிதி ஆதி, கோட்டப் பொறியாளர் காளீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் ரத்தினம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- காலை உணவு திட்டத்தால் 63 அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவர்
- காலை உணவு வழங்க அதிகாரிகள் தீவிர ஏற்பாடு
ஊட்டி:
தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளி யிடப்பட்டது.
இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகிற 15-ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட வுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 63 பள்ளிகளில் பயிலும் 3415 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை குழந்தை களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் நோக்கத் திலும், ஊட்டச்சத்து நிலை உயர்த்தவும், ரத்தசோகை குறைபாட்டை நீக்கவும், பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கவும், பணிக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க ப்படும்.அதனடிப்படையில், முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 63 பள்ளிகளில் பயிலும் 3415 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருட்கள் கலக்காமலும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். உணவு சமைக்க பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள் தரமானதாகவும் , சுத்தமா னதாகவும் இருக்க வேண்டும். காய்கறிகள் தரத்தை உறுதி செய்வதுடன் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவி பயன் படுத்த வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சுகாதார மாகவும், தரமானதாகவும் அட்ட வணைப்படி உணவு தயாரித்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.தினசரி உணவு இருப்புகளின் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என சுய உதவிக்குழுஉறுப்பினர் களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உணவு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு நாளும் உணவின் தரத்தை உறுதி செய்யும் வகையில் உணவை பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ரெயில்வேதுறை ஏற்பாடு செய்தனர்.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மதுரை
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மதுரையில் இருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்தப்பட உள்ளது. இது 6 நாள் சுற்றுலா ஆகும்.
மதுரையில் இருந்து செப்டம்பர் 24-ந் தேதி சுற்றுலா தொடங்குகிறது. இதில் ஒரு நபருக்கு ரூ.39,300கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதில் விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பயண காப்பீடு ஆகியவை அடங்கும். கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறை களோடு நடத்தப்படும் சுற்றுலாவில் அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு www.irctctourism.com இணையதளம் மூலம் பயண சீட்டுகள் பதிவு செய்யலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- 7 இடங்களில் விநாயகா் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
- விநாயகா் சதுா்த்தி விழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி தினத்தில் 300 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்ட இடங்களிலேயே இந்த ஆண்டும் அமைக்க–ப்படுகிறது. விநாயகா் சதுா்த்தி பூஜைக்கு பிறகு சிலைகள் மாவட்டத்தின் 7 இடங்களில் கரைக்கப்பட உள்ளன.
ராமேசுவரத்தில் 2 இடங்களிலும், ராமநாதபுரம், பரமக்குடி, தேவிப்பட்டினம், நரிப்பையூா், மண்டபம் ஆகிய இடங்களிலும் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. வருகிற 1 மற்றும் 2-ந்தேதிகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு அளித்த விதிமுறைகளின்படி சிலைகள் தயார் செய்து வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் விநாயகா் சிலை ஊா்வலமும் அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே நடைபெறும். விநாயகா் சதுா்த்தி விழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரபுரநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
- இப்பணி 6 மாதத்தில் முடிக்கப்படும். அதற்கு பின்கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் அருகே உத்தம சோழபுரத்தில் பழமையான பெரிய நாயகி சமேத கரபுரநாதர் கோவில் உள்ளது. ராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் "நில்' என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், "கரபுரநாதர்' என்ற பெயர் வழங்கப்படுகிறது.
இந்த கோவில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே ஒளவை சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். இந்த கோவிலின் பழமையும், வரலாற்று சிறப்பும், இலக்கியங்களில் பெற்ற இடம் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளன.
குணசீலன் என்ற சிறுவன் கரபுரநாதர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மாலை போட முடியவில்லை. இதனால் சிறுவன் கதறி அழுது இறைவனை வேண்டுகிறான். அப்போது கரபுரநாதர் எழுந்தருளி, சிறுவன் உயரத்திற்கேற்றவாறு லிங்கத்தை சாய்த்து கொடுத்தார். அதனால் தான் இன்றும் இந்த கோவிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்டஇந்த கோவிலில் திருப்பணி நடத்தி குமாபிசேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி இன்று காலை பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக நேற்று கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் காலை 9 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் வீரபாண்டி டாக்டர் மலர்விழி, பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், முன்னாள் வேளாண்துறை அமைச்சர் உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
கரபுரநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக திட்ட மதிப்பீடு தயாரித்து,சேலம் மண்டல இந்து சமய அற நிலையத்துறை இணை கமிஷனரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
திருப்பணியின்போது ராஜகோபுத்தில் உள்ள சிலைகளை மராமத்து செய்து வண்ணம் பூசப்படும். சன்னதி விமானம் மராமத்து செய்து வண்ணம் பூசப்படும். திருப்பணி 80 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இப்பணி 6 மாதத்தில் முடிக்கப்படும். அதற்கு பின்கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அவசியம்.
- நுழைவு படிவம் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 6 குறு மைய அளவில் குழு போட்டிகள், தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, மெட்ரிக், நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டில் திறமையான மாணவர்கள் பங்கேற்கலாம்.மேலும் 14 வயது, 17 வயது, 19 வயது என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பிறப்பு சான்றிதழ், ஆதார் எண், 19 வயது எனில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மிக அவசியம்.நுழைவு படிவம் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மாணவர் ஏதேனும் ஒரு வயது பிரிவில் மட்டுமே பங்கேற்க முடியும்.
11 வயதுக்குட்பட்ட தொடக்க பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.திருப்பூர் தெற்கில் கோவில்வழியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியில், திருப்பூர் வடக்கில் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிநாசியில் எம்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்தில் முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 5-ந் தேதி நடக்கிறது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடுநாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.
பேச்சுப் போட்டி பின்வரும் தலைப்புகளில் நடத்தப்படும்.
1. தமிழ்நாடு உரு வான வரலாறு, 2. மொழி வாரி மாகாணமும் தமிழ்நாட்டில்நடைபெற்ற போராட்டங்களும், 3. தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், 4. பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாடு, 5. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம், 6. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், 7. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி, 8. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, 9. எல்லைப்போர்த் தியாகிகள், 10. முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு.
கட்டுரை ப்போட்டிக்கான தலைப்பு "சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம்" மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் , 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.