search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்கேற்பு"

    • செஞ்சி சத்திர தெருவில் உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லீம்களின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி சத்திர தெருவில் உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லீம்களின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சையத் அன்வர் தலைமை தாங்கினார். செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் அப்துல் மஜீத் மற்றும் அனைத்து பள்ளிவாசல் பட்டேல்கள், முத்தவல்லிகள் முன்னிலை வகித்தனர். ஆபீஸ் ஜாஹீர் ஆலம் இறைவணக்கம் செய்தார். சித்திக் ஹஸ்ரத் மன்பா வரவேற்றார். முகமது அஷ்ரப் தொகுத்து வழங்கி னார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ,பேரூராட்சி கவுன்சிலர் சங்கர் ,தி.மு.க. நகர செயலாளர் காஜா நசீர், ஆதில் பாஷா, அம்ஜத் பாண்டே மாவட்ட பிரதிநிதி ஜெ.எஸ்.சர்தார், தொண்டர் அணி பாஷா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர். சையத் சாதுல்லா நன்றி கூறினார்.

    • விருதுநகரில் இன்று மாலை பா.ஜ.க. ஆன்மீக பாதயாத்திரை நடக்கிறது.
    • ராம.சீனிவாசன் தலைமையில் 2000 பேர் பங்கேற்கின்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். இதன் அடிப் படையில் தேசிய அளவில் முதலாவதாக 'பி.எம்.மித்ரா' மெகா ஜவுளிப் பூங்கா விருதுநகரில் அமைய உள்ளது.

    இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. விருதுநகரில் சுமார் 1052 ஏக்கர் பரப்ப ளவில், ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங் களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பொதுமக்களிடம் வர வேற்பை பெற்றுள்ளது.

    இந்தநிலையில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளர் ராம. சீனிவாசன், மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யில், விருதுநகரில் பாத யாத்திரை நடத்த முடிவு செய்தார்.

    அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் சாத்தூர் பத்திரகாளி அம்மன் கோவி லில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரை ஆன்மீக பாதயாத்திரை நடைபெறு கிறது.

    ராம.சீனிவாசன் தலை மையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் மெகா ஜவுளி பூங்கா தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்து வார்கள் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

    இந்த யாத்திரையில் மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் 200 கார்களில் விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலை மையில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பாபுராஜா, உசிலம்பட்டி மண்டல தலைவர் கீரிப்பட்டி வி. போஸ் மற்றும் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் நாகராஜ், காளிதாஸ், ஓ.பி.சி. அணி வேல்முருகன், வெற்றி வேல்முருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் ஆகியோர் செய்துள் ளனர்.

    ராம சீனிவாசன் தலை மையில் நடைபெற உள்ள இந்த ஆன்மீக பாதயாத்திரை தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தும் என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மதுரை கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா நாளை (25-ந்தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
    • மதுரை மாவட்ட கோர்ட்டில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் மதுரை மாவட்ட கோர்ட்டு வளா கத்தில் நாளை (25-ந்தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கி றது.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.ராஜா வரவேற்று பேசுகிறார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை தாங்கி மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி தொடக்கவுரை ஆற்றுகிறார்.

    பின்னர் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்ஸ் கோர்ட்டுகளை மதுரையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகிறார். மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜு தொடங்கி வைத்து பேசுகிறார்.

    பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ராம சுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன், சென்னை, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

    முடிவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறுகி றார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை கோர்ட்டு கூடுதல் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ப தற்காக நாளை சென்னை யில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9 மணி அளவில் மதுரை வருகிறார்.

    விமான நிலையத்தில் அவரை கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்ற னர். பின்னர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் மதுரை மாவட்ட கோர்ட்டு வளா கத்துக்கு காரில் செல்கிறார்.

    இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொடங்கு கின்றன. இதில் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு மதுரை சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை நகரில் 1,500 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மதுரை மாவட்ட கோர்ட்டில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • தனிநபருக்கு தடகள போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    • அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி கடந்த 11ந்தேதி துவங்கி ஒரு வாரமாக நடந்து வருகிறது. குழு போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் தனிநபருக்கு தடகள போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    முன்னதாக சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார்.

    முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், முதல் மண்டல தலைவர் உமா மகேஷ்வரி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவினர், அரசு ஊழியர் என 4பிரிவினருக்கு ஒரே நேரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள் பிரிவில் 876 பேர், கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில், 250 பேர், அரசு ஊழியர் பிரிவில் 263 பேர், பொதுப்பிரிவில் 132 பேர் என மொத்தம் 1,521 பேர் தடகள போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாவட்ட தடகள பயிற்சியாளர் திவ்யநாகேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் தடகள போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.

    போட்டியை துவக்கி வைக்க வந்த திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மைதானத்தில் களமிறங்கி குண்டு எறியும் இடத்துக்கு வந்தார். வட்டத்துக்குள் நின்று குண்டை தோளில் வைத்து எறிந்தார். சிறிதுதூரம் சென்று குண்டு விழுந்தது. 

    • சிவகங்கையில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கிபடிக்கும் மாணவ- மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

    கடந்தாண்டும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் வாயிலாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் உயர்கல்வியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.

    மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மாணவர்கள் மேல்நிலை கல்வி படிப்பது தொடர்பாகவும், பின்னர் உயர்நிலைக்கல்விக்கு பயனுள்ள வகையிலும், அதனைத்தொடர்ந்து, வேலைவாய்ப்புகள் குறித்தும், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற்று சுய தொழில்கள் தொடங்கி பயன்பெறும் வகையிலும், திறன்மிக்க கருத்தாளர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்து ரைக்க ப்படும் கருத்துக்களை மாணவர்கள் உள்வாங்கி தங்களுக்கான வாழ்க்கை வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதற்கு இதனை அடிப்படையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேசுவரி, கடற்சார் பொறியியல் அதிகாரி மற்றும் உயர்கல்வி வழிகாட்டி கலைமணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முகநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • அரசு பள்ளி ஆண்டு விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசும்போது, கணபதி சுந்தர நாச்சியார்புரம், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜர் நகர் மற்றும் கோதை நாச்சியார்புரம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுள்ளது என்றார். விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வித்யா, தலைமை ஆசிரியர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன், கிளை செயலாளர்கள் கருணாகரன், பாலமுருகன், கனகராஜ், மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 17-வது பாரதிய திவாஸ் மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பங்கேற்றார்.
    • இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    மத்திய பிரதேசம் இண்டூரில் நடந்த 17-வது பாரதிய திவாஸ் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக கயானா நாட்டு ஜனாதிபதி இப்ரான் அலி, சுரினாம் நாட்டு ஜனாதிபதி சான் சந்தோகி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கையின் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னதாக இந்த மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    • சுற்றுலாத்துறை சார்பில் 14-ந்தேதி நடக்கிறது
    • கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் சுற்றுலா விழா கன்னியாகுமரி அருகே உள்ள கிராமப்புறங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்று பொங்கல் இடும் நிகழ்ச்சியை காண செய்வார்கள்.

    அப்போது கிராமப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அதேபோல இந்த ஆண்டு குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா வருகிற 14-ந்தேதி காலை 6 மணிக்கு கொட்டாரம் அருகே உள்ள சந்தையடி கிராமத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழக பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி சேலை அணியச் செய்து அந்த கிராமத்துக்கு சுற்றுலாத் துறையினர் அழைத்துச் செல்வார்கள்.

    அங்கு ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பானைகளில் கிராம மக்கள் பொங்கல் இடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒரே இடத்தில் 100 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அப்போது ஆர்வமிகுதி யால் ஒருசில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொங்கல் பானையில் பொங்கல் இடுவார்கள். கரும்புகளை கடித்து ருசிப்பார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பாட்டம், மகுட ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறு கின்றன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தலையில் கரகம்எடுத்து ஆடுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி மற்றும் சுற்றுலா துறையினர் செய்து வருகிறார்கள்.

    • மாநில போட்டிகளில் 300 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • இப்போட்டியானது இன்று முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாநில அளவில் நடைபெற உள்ள கலை திருவிழாவில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளிக் கல்வித்துறையின் மூலம் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவி களுக்கான பல்வேறு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற 300 மாணவ, மாணவிகள் மாநில அளவில் மதுரை, கோயம்புத்தூர், திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடை பெறுகின்ற கலைப்போட்டிகளில் பங்கேற்ப தற்காக செல்கின்றனர்.

    இப்போட்டியானது இன்று முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகின்றன. போட்டியில் பங்கேற்கின்ற மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளியில் இருந்து பயிற்சி ஆசிரியர்கள் அழைத்து செல்கின்றனர். இவர்கள் சென்று வர அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவில் பங்கேற்றுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கள் பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகள் செல்கின்ற பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பத்மகுமார், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைப்பு அலுவலர் கர்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. பொருளாதார பிரிவு ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா பங்கேற்றார்.
    • 25 அல்ல 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையோடு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

    மதுரை

    பா.ஜ.க. மாநில பொருளாதார பிரிவின் சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் பேரில் கேசவ விநாயகம் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் வக்கீல் முத்துக்குமார் ராஜா தலைமையில் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. பொருளாதார பிரிவின் மாநில தலைவரும், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரி நிறுவனத் தலைவருமான எம்.எஸ்.ஷா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், உலகம் எங்கும் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் வல்லரசாக பிரதமர் மோடி காட்டியுள்ளார்.

    பா.ஜ.க. குடும்ப கட்சி இல்ைல. இங்கு தாத்தா, மகன், பேரன்-பேத்தி, என்று கட்சி தலைவர்கள் கிடையாது. பா.ஜ.க.வில் மட்டும் அனைவரையும் ஜி என்ற மரியாதையோடு அழைக்கப்படுகிறார்கள்.

    2024 பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போதே சட்டமன்றத் தேர்தலும் வரலாம். அதற்குண்டான ஆயத்தப் பணிகளில் பொரு ளாதாரப் பிரிவு சிறப்பாக செயல்பட வேண்டும். மாநிலத் தலைவர் அண்ணாமலை நாம் 25 தொகுதிகளில் வெற்றி வாகை சூடுவோம் என்று சூளூரைத்தார்.

    25 அல்ல 39 தொகுதி களிலும் பா.ஜ.க. வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையோடு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இதில் மாநில துணைத்தலைவர்வர்கள் பிரவீன் பால், ரமேஷ், மாநில செயலாளர் முத்துராமலிங்கம், கிருஷ்ண பிரபு, வக்கீல் கவுரிசங்கர், வெங்கடேசுவரன், சிவகாந்தன், ஷீலா ரமணி, தீபா, ராதிகா, துர்கா, ஜோஸ் மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • இக்கூட்டத்தில் வார்டு செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகர் தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    வருகிற 8-ந் தேதி ராஜபாளையத்திற்கு வரும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம், நகர் செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர் இளங்கோவன், துணை சேர்மன்கள் துரைகற்பகராஜ், கல்பனா குழந்தைவேலு, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி ராஜை, கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கர் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கிளை மற்றும் வார்டு செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • திருப்புல்லாணியில் நடந்த கலை திருவிழாவில் 900 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • ஓவியப்போட்டி, நடனம், நாடகம், மொழி திறன் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    கீழக்கரை

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார்.

    திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி போட்டியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார்.

    திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலைவி கஜேந்திரமாலா ஒன்றிய கவுன்சிலர் கலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3 நாட்கள் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகளின் ஓவியப்போட்டி, நடனம், நாடகம், மொழி திறன் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் கர்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா, திருப்புல்லாணி தலைமை ஆசிரியர் (பொ) பிரேமா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் முருகவேல், செந்தில் குமார் மற்றும் ஆசி ரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஏராள மானோர் விழாவில் கலந்து கொண்டனர். இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் செய்தார்.

    ×