என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவி கற்பழிப்பு"
- பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
- தெரியாத நபர்களிடம் அளவோடு பழகவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் கலா மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு மகன் ராமலக்கன் (வயது 23). இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் பாடாலூர் அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்புடன் பழகியபோதும், நாளடைவில் அதுவே காதலாக மாறியது.
செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட அவர்கள் மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராமலக்கன் மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அவரிடம் விரைவில் நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசமும் அனுபவித்து உள்ளார். இதற்கிடையே மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் மகளை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த பள்ளி மாணவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளிடம் கேட்டபோது, அவர் நடந்ததை கூறி அழுதுள்ளார். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.
மாணவயிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கர்ப்பமாக்கிய ராமலக்கனை கைது செய்தார். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், தெரியாத நபர்களிடம் அளவோடு பழகவேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் கலா மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
- பிளஸ்-2 மாணவியை யாரோ வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
- சம்பவம் குறித்து இண்டூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த புகார் அனைத்து மகளிர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், மிட்டாசின்னஅள்ளி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி.
இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
தினமும் பள்ளிக்கு அந்த மாணவி சைக்கிளில் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று பள்ளியை விட்டு புறப்பட்ட மாணவி குறித்த நேரத்துக்கு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் மாணவியின் உறவினர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் மாணவி வழக்கமாக வீட்டுக்கு வரும் பாதையில் சென்றுள்ளார்.
அப்போது ஒரு புதர் அருகே மாணவியின் சைக்கிள் மட்டும் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் தேடி பார்த்த போது சற்று தொலைவில் மாணவி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை அங்கிருந்து தூக்கி சென்று பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த மாணவியை யாரோ வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
இது தொடர்பாக இண்டூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த புகார் அனைத்து மகளிர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை வழிமறித்து பலாத்காரம் செய்தது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மாணவி, ஆஸ்பத்திரியில் இருந்து கழிவறைக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.
- கழிவறையில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர், அவரை கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் மாணவி, ஆஸ்பத்திரியில் இருந்து கழிவறைக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.
கழிவறையில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்றனர். அவர்கள் அங்கு வலியால் துடித்து கொண்டிருந்த மாணவியை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கும், குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவியிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இதில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 53) என்ற தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மொடக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கவின்ராஜை கைது செய்தனர்.
- கவின்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள முத்து கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் கவின்ராஜ். கறிக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் செல்போன் மூலம் கவின்ராஜுக்கு லக்காபுரத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவின்ராஜ் அடிக்கடி அந்த மாணவியுடன் செல்போனில் பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கவின்ராஜ் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த கல்லூரி மாணவி கர்ப்பமானார். தற்போது அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை கவின்ராஜ் ஈரோடுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் மொடக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கவின்ராஜை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- மாணவியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய சிவாவை நேற்று கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள நல்லபாடி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் இந்த மாணவிக்கும், பர்கூர் அடுத்த மூலமகுடு பகுதியை சேர்ந்த சிவா (வயது26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சிவா ஆசை வார்த்தை கூறி மாணவிஏமாற்றப்பட்டு தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். அந்த மாணவியை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய சிவாவை நேற்று கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
- பரிசோதனையில் மாணவி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
ஊட்டி:
ஊட்டியைச் சோ்ந்தவா் சேகா்(50). இவா் தனியாா் நா்சரி உரிமையாளராக உள்ளாா்.
இவரது வீட்டின் அருகே 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சேகா் அந்த மாணவியை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்போது மாணவியை அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
அங்கு பரிசோதனையில் மாணவி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் இதுகுறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
போலீசாா் விசாரணையில், சேகா் அந்த மாணவியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஊட்டி அனைத்து மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சேகா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தாா். பின்னா் ஊட்டி மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் அவரை ஊட்டி கிளை சிறையில் அடை க்கப்பட்டார்.
- பார்த்திபன் மீது மேலும் 2 பெண்கள் கோவையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து புகார் செய்தனர்.
- வீடியோவில் தான் குற்றமற்றவன் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
கோவை:
கரூர் மாவட்டம் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). சினிமா தயாரிப்பாளராவும், அரசியல் கட்சி ஒன்றில் மாநில நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர் மீது சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் சினிமாவில் கதாநாயகியாக தன்னை நடிக்க வைப்பதாக பார்த்திபன் ஆசைவார்த்தை கூறியதாகவும், பொள்ளாச்சியில் நடிகை தேர்வுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை அவர் கற்பழித்து விட்டதாகவும் புகார் தெரிவித்தார்.
இதனால், தான் கர்ப்பமானதாகவும் குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது எனவே கர்ப்பத்தை கலைத்து விடும்படி கூறி கர்ப்பத்தை கலைத்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே பார்த்திபன் மீது மேலும் 2 பெண்கள் கோவையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து புகார் செய்தனர். அவர்களும் பார்த்திபனால் பாலியல் பாதிப்புக்குள்ளானதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தனர். அந்த புகார்களின் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தலைமறைவாக உள்ள பார்த்திபன் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் குற்றமற்றவன் என தெரிவித்துள்ளார்.
மேலும் என் மீது புகார் கொடுத்த பெண்கள் பலமுறை உதவி கேட்டனர். அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் நான் நான் பண உதவி செய்துள்ளேன். ஆனால் அவற்றையெல்லாம் மறந்து என் மீது வேண்டுமென்றே புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் என்னிடம் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போது பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறி உள்ளார். சுமார் 3 நிமிடம் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை போலீசாரும் கைப்பற்றி உள்ளனர். பார்த்திபன் கூறுவதில் ஏதும் உண்மை உள்ளதா என்பதை விசாரிக்கும் அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- மைனர் பெண் என்று தெரிந்தும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கற்பழித்த பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- தயாரிப்பாளரை பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை:
சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி.
இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்தேன்.
அப்போது பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன். அதில் டி.என்.41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என இருந்தது.
இதனையடுத்து நான் அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பேசிய நபர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள விடுதியில் நடிகைகள் தேர்வு நடப்பதாக கூறினார். இதனையடுத்து நான் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் அவர் கூறிய விடுதிக்கு சென்றேன்.
அங்கு இருந்த கரூர் நல்லியாம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 34) என்பவர் தன்னை படத்தின் தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் அவர் அரசியல் அமைப்பு ஒன்றில் மாநில செயலாளராகவும் இருந்தார். பார்த்திபன் ஒவ்வொரு பெண்களாக அறைக்குள் அழைத்து நடிகை தேர்வு செய்தார்.
என்னை அழைத்த போது நான் உள்ளே சென்றேன். அங்கு இருந்த பார்த்திபன் எனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதனை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கினேன். சுயநினைவு இல்லாமல் இருந்த என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். கற்பழித்தார்.
மயங்கம் தெளிந்த பின்னர் நான் இது குறித்து கேட்ட போது உனக்கு தற்போது 17 வயது தான் ஆகிறது. 18 வயது நிறைவடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி அளித்தார். மேலும் அவர் என்னை படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
இவ்வாறு ஆசை வார்த்தை கூறி அவர் என்னை பலமுறை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக நான் கர்ப்பமானேன். இது குறித்து நான் அவரிடம் தெரிவித்தேன். மேலும் உடனடியாக திருமணம் செய்யும் படி கூறினேன்.
அதற்கு அவர் நீ குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது என கூறி சில மாத்திரைகளை வாங்கி கொடுத்து எனது கர்ப்பத்தை கலைத்தார். அதன் பின்னர் அவர் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்தி விட்டார். மேலும் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பார்த்திபன் என்னை ஏமாற்றி விட்டார்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் மைனர் பெண் என்று தெரிந்தும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கற்பழித்த பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
- போலீசாரின் விசாரணையில் ஆட்டுப்பட்டி ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பனை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செம்மேடு கிராமத்தை சேர்ந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம்வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் ஈரோட்டில் தங்கி கூலிவேலை செய்துவருகின்றனர்.
நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட அதேபகுதியில் உள்ள ஆட்டுபண்ணையில் கூலி வேலை செய்துவரும் நாகப்பன்(வயது55) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. உடனடியாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், மகளிர் இன்ஸ்பெக்டர் வள்ளி, காடாம்புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் பூவராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர விசாரணை தீவிர நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியில்ஆட்டுப்பட்டி ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பனை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
- பகவதி கடந்த 21-ந் தேதி மாணவியை அழைத்து சென்று கிணத்துக்கடவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்தார்.
- புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய பகவதியை கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சொக்கனூரை சேர்ந்தவர் 17 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பகவதி (வயது19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 4 வருடங்களாக செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த மே மாதம் 20-ந் தேதி மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பகவதி அங்கு சென்றார். அங்கு மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மாணவி 3 மாத கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தான் கர்ப்பமான விஷயத்தை தனது காதலனிடம் தெரிவித்தார். இதனையடுத்து பகவதி கடந்த 21-ந் தேதி மாணவியை அழைத்து சென்று கிணத்துக்கடவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்தார்.
பின்னர் மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மாணவியை மீட்டனர். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய பகவதியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 26). வேலைக்கு செல்லாமல் உள்ளூர் ரோமியோவாக வலம் வந்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசினார். அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு செய்கைகளையும் வாலிபர் செய்து மாணவியை தனது வலையில் வீழ்த்தினார்.
இதில் பருவ வயதை எட்டிய அந்த மாணவியும் சிக்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் காதலியின் வீட்டிற்கே செல்லும் அளவுக்கு தமிழரசன் நெருக்கத்தை ஏற்படுத்தினார். கடந்த ஓராண்டாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக உறுதி அளித்து மூளைச்சலவை செய்தார். காதலனின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட மாணவி அவரை கணவராகவே எண்ண தொடங்கினார். இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட தமிழரசன் மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார்.
அதன் பின்னர் படிப்படியாக மாணவியை சந்திப்பதை தமிழரசன் தவிர்த்து வந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே தமிழரசன் பலாத்காரம் செய்ததில் அந்த மாணவி கர்ப்பம் தரித்துள்ளதாக கூறப்பட்டது. 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் அந்த மாணவி தமிழரசனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதனால் செய்வது அறியாமல் திகைத்த அந்த மாணவி, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமண ஆசை காட்டி தமிழரசன் தன்னை பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிவிட்டதா க புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அனுபல்லவி போக்சோ சட்டத்தின் கீழ் தமிழரசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி. மாணவி காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக இருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாணவியை பால்ராஜ் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்தார்.
- சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி மாணவியை அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
கோவை:
கோவை மதுக்கரை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவியின் பக்கத்து வீட்டில் பால்ராஜ் (வயது 33). லாரி டிரைவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பால்ராஜ் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
அப்போது மாணவியை பால்ராஜ் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்தார். இதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி மாணவியை அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இந்த தொல்லை அத்துமீறி போகவே மாணவி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 9-ம் வகுப்பு மாணவியை நிர்வாண படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் பால்ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கருப்பையா கவுண்டர் வீதியை சேர்ந்த கன்னியப்பன் (31). ஆட்டோ டிரைவர். மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த விவகாரம் கன்னியப்பன் மனைவிக்கு தெரிய வரவே அவர் தனது கணவரை கண்டித்தார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் மாணவியின் கன்னத்தில் அடித்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் 12-ம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கன்னியப்பன், அவரை தாக்கிய அவரது மனைவி மகாலட்சுமி (25) ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்