என் மலர்
நீங்கள் தேடியது "ஓய்வூதியர்கள்"
- அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியம் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75பேர் கலந்து கொண்டனர்.
உடுமலை :
உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியம் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு டிஎன்ஜிபிஏ. வட்ட தலைவர் தாசன் தலைமை தாங்கினார்.
மடத்துக்குளம் வட்டக்கிளை நிர்வாகி மாவளப்பன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.எல்லம்மாள், உடுமலை வட்ட செயலாளர் விஜயகுமார் கோரிக்கை விளக்கம் அளித்தார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு உடுமலை வட்ட தலைவர் செல்லத்துரை வாழ்த்துரை வழங்கினார். உடுமலை பொருளாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75பேர் கலந்து கொண்டனர்.
- எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத்தொகையை வழங்க வேண்டும்.
- அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
கும்பகோணம்:
அகில இந்தியமாநில அரசு ஓய்வூதியர் சம்மேள னத்தின் அழைப்பை ஏற்றுஅனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில முடிவின்படி, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி, ஒன்றிய, மாநில அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணம், திருவிடைமருதூர் வட்டக்கி ளைகள் இணைந்து கோட்ட அளவில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வட்ட தலைவர் ஆ.துரைராஜ் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் துணைத் தலைவர் பழ. அன்புமணி துவக்கி வைத்து பேசினார்.
வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் ரங்கசாமி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் எச். உமா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் இரா.ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சொ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், கும்பகோணம் நகர செயலாளர் பக்கிரி சாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி, திருவிடைமருதூர் பொறுப்பாளர்கள் உதயகு மார், பன்னீர்செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன் நிறைவுரை உரையாற்றினார்.
நிறைவாக திருவிடைமருதூர் வட்டத் தலைவர் கே.சிவராமன் நன்றி தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும்.
எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத்தொ கையை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கிட வேண்டும்.
70 வயது முதிர்வடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12000/- ஆக வழங்க வேண்டும் நிறுத்தப்பட்ட ரயில் பயணக் கட்டணச் சலுகைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
- 75 மற்றும் 80 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு.
- குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை ரூ.1000 ஆக வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தினம், ஆண்டு விழா , 75 மற்றும் 80 அகவை நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சீனி .அய்யாகண்ணு தலைமை தாங்கினார்.
மாநில துணை பொது செயலாளர் ஜெகதீசன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் ஞானசேகர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் டாக்டர் சேதுராமன் ஆண்டு அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.
மாநிலத் தலைவர் சீதாராமன், மாநில பொது செயலாளர் மருதை ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில செயலாளர் ஜாகிர் உசேன், மாநில மகளிர் அணி செயலாளர் ரேணுகா, அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் ராஜராஜன், திருவாரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம், கருவூலர் கணக்கு துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் மகேஸ்வர், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் ராசமாணிக்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், மாநில தணிக்கையாளர் பாலசுப்ரமணியன், பட்டுக்கோட்டை வட்டக் கிளை தலைவர் ரெஜினால்டு செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவில் 75 மற்றும் 80 அகவை நிறைவு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கருவூல அலுவலர் (பொ) மீனாட்சி பரிசு வழங்கி பாராட்டினார்.
இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மத்திய அரசு 1-7-2022 முதல் வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படியை அதே தேதியில் இருந்து உடன் அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 21 மாத கால 14 சதவீத அகவிலைப்படியையும் 1-1-2022 முதல் 1-7-2022 வரை வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி நிலுவையையும் உடன் வழங்க வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்து மருத்துவ செலவு தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும். கண்புரை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் அனுமதிக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் இறந்தால் குடும்ப நல நிதியாக ரூ.2 லட்சமாக வழங்க வேண்டும்.
மத்திய அரசு வழங்குவது போல் தமிழக அரசும் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை ரூ.1000-ஆக வழங்க வேண்டும். ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும், அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருட்டிணன், எஸ்தர் தாஸ், தஞ்சை ராமதாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் வசந்தா நன்றி கூறினார்.
- தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஒய்வூதிய பண பலன் உட்பட பஞ்சப்படி என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
- இதை அடுத்து ஆத்திரமடைந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
சேலம்:
சேலம் கோட்ட போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை என்று கூறி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை.
தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஒய்வூதிய பண பலன் உட்பட பஞ்சப்படி என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதை அடுத்து ஆத்திரமடைந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதையடுத்து சாலையில் அமர்ந்து அவர்கள் தங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்த போராட்டத்தில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அடுத்து போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதை அடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அண்ணாபூங்கா அருகே உள்ள 2 திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், போக்குவரத்து கழக ஓய்வு ஊதியர்களுக்கு 7 ஆண்டுகளாக எந்த பலனும் கிடைக்காதால் நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை எனில் விரைவில் குடும்பத்துடன் டெப்போ முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
எந்த அரசு வந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
- இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் கலெக்டர் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையிலும் மார்ச் 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 21-ந்தேதி வரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இரட்டை பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பங்களில் "ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையில் உள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- அரசு ஊழியர்கள்-ஓய்வூதியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்.
- ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து போராடினர். போராட்ட களத்திற்கு வந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்-அரசு ஊழிய ர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று கூறினார். அவர் உறுதியளித்தபடி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.
முதல்-அமைச்சர் பிறந்தநாளில் நாங்கள் கேட்காத கோரிக்கைகளான அனைத்து ஆசிரியர்க ளுக்கும் கையடக்க கணினி வழங்கப்படும் என்றும், அனைத்து ஆசிரியர்க ளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.
- ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
திருச்சி மண்டல இ.பி.எப். முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.பி.எப். (வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) சார்பில் "நிதி ஆப்கே நிகத்" என்ற பெயரில் இ.பி.எப் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாகை மாவட்டத்திற்கான குறை தீர்க்கும் முகாம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 27- ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.
இந்த முகாமில் இ.பி.எப். தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
செட்டில்மெண்ட் பெறுவது, வெவ்வேறு இ.பி.எப். கணக்குகளை ஒரே கணக்கில் இணைப்பது, இ.பி.எப். சந்தாதாரர்கள் தங்களது யு.ஏ.என். கணக்கினை பயன்படுத்தும் முறை, ஆதார் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தங்களது சுய விபரங்களை தங்களது யு.ஏ.என். கணக்கில் இணைத்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
மேலும் ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய இந்த முகாமிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தாதாரர்கள் தங்களது பெயர் மாற்றக் கோரிக்கை உட்பட அனைத்து கோரிக்கைகளையும் தகுந்த ஆதாரங்களுடன், எழுத்துப்பூர்வமாக முகாமில் சமர்ப்பிக்கலாம்.
இ.பி.எப். சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்களின் முதலாளிகள், முகவர்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையில் மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- 7,200-க்கும் மேற்பட்டோர் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.
- ஆயுள் சான்றை உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழி விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு:
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலா ளர்கள் தொடர்பான 18 அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விண்ணப்பங்க ளும் tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறை இணைய தளம் வாயிலாக பெறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இந்நலவாரியங்களில் 60 வயது நிறைவடைந்த 7,200-க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியதாரர்களாக மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.
ஆண்டு தோறும் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றை உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழி விண்ண ப்பிக்க வேண்டும்.
2023–-24-ம் ஆண்டுக்காக வரும் 30-ந் தேதிக்குள் https://tnuwwb.tn.gov.in/applicationlives/applicationlive என்ற இணைய தள முகவரியில் சமர்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஓய்வூதிய உத்தரவு நகல், புகைப்படம்–1, வங்கி புத்தக நகல், நடப்பு மாதம் வரை வரவு–செலவு பரிவர்த்தனை விபரம் அடங்கிய விபரங்களை பதிவு பெற்ற தொழிற்சங்கம் அல்லது இ–சேவை மையம் அல்லது சி.எஸ்.சி. கணினி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலக தொலைபேசி எண்:0424-2275591, 2275592 மூலம் அல்லது அலுவலக மின்னஞ்சல்: losserode@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, தொழிலா ளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.
- 20 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களுக்கு அரசு காலிப்பணியிடத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சந்திரா தலைமை தாங்கினார்.
மாவட்ட அமைப்பாளர் கமலநாதன், மாநில துணைத் தலைவர் கணேசன், அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர் அஞ்சுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் துணைத் தலைவர் மதிவாணன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணி செய்த ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6750 அகவிலை படியுடன் வழங்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் 20 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களுக்கு அரசு காலி பணியிடத்தில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜோதி, சுசீலா, ஒன்றிய தலைவர்கள் சாந்தி, துரை நடராஜன், செயலாளர் ராதாகிருஷ்ணன் கணபதி, வாசுகி, சி.ஐ. டி.யு மாவட்ட துணை தலைவர் ராமானுஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிதி காப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- மூத்த குடிமக்களுக்கு ரெயிலில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உளன்ளிட்ட 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மாநில சங்க பொருளாளர் வெங்கடாச்சலம் நிதிநிலை அறிக்கை படித்தார்
தஞ்சாவூர்:
தஞ்சை சண்முகா நகரில் இன்று தஞ்சை மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநகர கிளை சங்க 29-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் கோபால் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளரும் கிளை தலைவருமான கந்தசாமி வரவேற்றார். மதுரை மண்டல தலைவர் விவேகானந்தன் நிர்வாக அறிக்கை வாசித்தார்.
மாநில சங்க பொருளாளர் வெங்கடாச்சலம் நிதிநிலை அறிக்கை படித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் தனபாண்டியன், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கூட்டமைப்பு மாநில செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னர்.இந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் மறைவிற்கு பின்னர் வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரெயிலில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உளன்ளிட்ட 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநகராட்சி கிளை துணை செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.
- கலெக்டர் அலுவலகத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்த ஓய்வூதியர்கள் இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை.
- போதிய வசதிகள் செய்யப்படவில்லை.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஓய்வூதியதாரர் களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 60 வயதிற்கும் மேற்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய நேர்காணல் மாலை வரை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்தவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை. ஒருவருக்கு நேர்காணல் நடத்த குறைந்தது 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஆனது. இதனால் நேர்காண லுக்கு வந்திருந்த வயதான வர்கள் அலுவலகத்தின் வெளியே நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக அவர்களால் நிற்க முடியவில்லை. இதனால் பலர் அங்குள்ள மரத்தடி யில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. எனவே ஓய்வூதியதாரர்களின் நேர்காணலுக்கு வருவோ ருக்கு இருக்கை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.