என் மலர்
நீங்கள் தேடியது "கடையடைப்பு"
- கூடுதல் ஊழியர்கள் இல்லாததால், இ-பாஸ் சோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
- இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஊட்டி:
மலைகளின் அரசியான ஊட்டிக்கு சாதாரண நாட்களில் வரும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் கோடை விடுமுறை சீசனில் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
தற்போது கோடை சீசன் தொடங்க உள்ளதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.
இந்த கட்டுப்பாடு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கல்லாறு, குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் சோதனை செய்கிறார்கள். இதன் பின்னரே மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள கூடலூர் நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்டவயல், நம்பியார் குன்னு, கக்கநல்லா ஆகிய சோதனை சாவடிகளிலும் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.
இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இ-பாஸ் நடைமுறையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 24 மணி நேர கடையடைப்பு உள்பட பொது வேலைநிறுத்தம் இன்று நடைபெறுகிறது.
- கப்பலூர் சுங்கச்சாவடியை கண்டித்து கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைப்படி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிகளை மீறி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம், கல்லுப்பட்டி ,பேரையூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி வாகன ஓட்டிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகம் கடந்த 1-ந்தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க போவதாக கூறி மாதாந்திர கட்டணமாக 331 உள்ளூர் வாகனங்கள் செலுத்த வேண்டும் என அறிக்கை விடுத்து கட்டண வசூலில் இறங்கியது இதற்கு திருமங்கலம் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுெதாடர்பாக கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக உள்ளதை கண்டித்தும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை கண்டித்தும் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அன்றைய தினம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் முன் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதற்கும் மேலாக சுங்கச்சாவடி தரப்பில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூல் செய்ய முற்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
- ஜெயின சமூக புனிதத் தலங்களை, சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு எதிர்ப்பு
- சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினரின் கடைகளை அடைத்து சிதம்பரம் சப் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கடலூர்:
சிதம்பரத்தில் ஜெயின் சங்கத்தினர் கடை அடைப்பு அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஜெயின் சங்க நிர்வாகிகள் கமல் கிஷோர் ஜெயின், தீபக்குமார், சர்ஜன்ராஜ், சூரஜ்மல், ஜினேந்திரகுமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில் ஜார்கண்ட் மாநிலம் சிக்கர்ஜி மஹா தீர்த்தம் (பரஷ்வநாதர்) மற்றும் குஜராத் மாநிலம் சத்துருஞ்சை மஹா தீர்த்தம் (ஆதிநாதர்) ஆகிய ஜெயின சமூக புனிதத் தலங்களை, சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 6-1-2023 ஒரு நாள் மட்டும் சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினரின் கடைகளை அடைத்து சிதம்பரம் சப் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர்.
- புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான, சம்மேத சிகர்ஜி, பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
- அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தரங்கம்பாடி:
ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து, அமைதி பேரணியாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சம்மேத சிகர்ஜி, குஜராத் மாநிலம் பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்த அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடு–துறை, சீர்காழி, செம்ப–னார்கோயில், குத்தாலம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயின் சங்கம் சார்பில் ரமேஷ் ஜெயின் தலைமையில் விபின் ஜெயின், ராஜூவ் ஜெயின், ரஞ்ஜித் ஜெயின், ரௌனிஸ் ஜெயின், உள்ளிட்ட ஜெயின் சமூகத்தினர் அமைதி பேரணி நடத்தினர்.
மயூரநாதர் தெற்கு வீதியில் இருந்து துவங்கிய அமைதி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜியிடம் மனு அளிக்கப்பட்டது.
பேரணியில் பங்கேற்ற–வர்கள் தங்கள் கோரிக்கைகளை வலி–யுறுத்தியும், பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் கலந்து கொண்டனர்.
- சாலை சீரமைப்பு பணியில் தொய்வு கண்டித்து
- பொதுமக்கள் உண்ணாவிரதம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி தாலுகா திரு–வரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சி. இந்த பகுதியில் சாலை–கள் சீரமைப்பு பணி நடை–பெற்று வருகிறது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெற–வில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தது. எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும், பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின் றனர். எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவ–தாக அப்பகுதியில் போஸ் டர் ஒட்டப்பட்டது. அதன்படி இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். நூற் றுக்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத் தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர்கள் தங்கள் கோரிக்கை நிறை–வேறும் வரை உண்ணா–விரத பந்தலை விட்டு வெளியே செல்ல–மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது–மக்க–ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு–பட்டுள்ளனர். இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத் தன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தை ஊராட்சி பொதுமக்கள் புறக்கணிப்போவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
- விசாகப்பட்டினம் கடற்கரை சாலை ஓரம் இருந்த மரங்களும் வெட்டப்பட்டன.
- விஜயவாடா மற்றும் கண்ணாபுரம் பகுதியிலும் மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டி உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விழா நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக விசாகப்பட்டினத்தில் சீனமுசிடி வாடா, கவுடாவில் இருந்து சாரதா பீடம் செல்லும் சாலையில் நடுவில் இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டும் பணி நடந்தது.
இதேபோல் விசாகப்பட்டினம் கடற்கரை சாலை ஓரம் இருந்த மரங்களும் வெட்டப்பட்டன.
பச்சை பசேலென காட்சியளித்த சாலைகள் எல்லாம் தற்போது மரக்கிளைகள் வெட்டப்பட்டு மொட்டையாக காட்சியளிக்கின்றன.
இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டும் பணிக்கு அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்தனர்.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்திற்கு முதலமைச்சர் வருகை ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே விஜயவாடா மற்றும் கண்ணாபுரம் பகுதியிலும் மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டி உள்ளனர். அதே பாணியில் விசாகப்பட்டினத்திலும் பணிகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
- தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கியது. 1 லட்சம் வாக்காளர்களை கொண்ட நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை களை கொட்ட ரஸ்தா சாலையில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் குப்பைகளை கொட்ட அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக குப்பை களை கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது:-குப்பைகள் கொட்டும் விவகாரம் தொடர்பாக கலெக்டர், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. கடந்த 6 மாதங்களாக தேவகோட்டை நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு உருவாகி உள்ளது.
நகராட்சிக்கு ஒதுக்கப் பட்ட தேவகோட்டை ரஸ்தா பகுதிகளில் குப்பைகளை ஒதுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அந்த இடத்தை தயார் செய்து தரவில்லை.
இதை கண்டித்து தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) கடையடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்பும் தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் ரெயில் மறியல் நடத்துவோம் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
- முதியவர்களால் நடக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
திருப்பரங்குன்றம்
மதுரை திருப்பரங்குன்றத் தில் முருகப்பெருமானின் முதற்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருப்ப ரங்குன்றத்தில் சாலை, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலம் அமைக்கப்பட்ட போது இப்பகுதியில் மேம்பாலம் தேவையில்லை சுரங்கப்பாதை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் அதனை மீறி மேம்பாலம் கட்டப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோவில், காய்கறி சந்தை, திருநகரில் உள்ள பள்ளி களுக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவி கள் ெரயில்வே தண்ட வாளத்தை கடந்து சென்று வந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும், ரயில்வே தண்டவாளம் மற்றும் மேம்பாலத்தை கடந்து வந்து சென்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பாதுகாப்பு கருதி ெரயில்வே நிர்வாகம் தண்டவாளத்தை கடக்க முடியாத வகையில் தடுப்பு அமைத்துள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொது மக்கள் அனைவரும் மேம்பாலத்தில் ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும், முதியவர்களால் நடக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இதையடுத்து இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.இதனை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு,
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், வியாபாரி கள் சங்கத்தினர், பொது மக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களின் நலன்கருதி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி கடையடைப்பு போராட்டம், 19-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
- பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கோவில் இணை ஆணையர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- ராமேசுவரம் பகுதியின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அவ்வாறு கோவிலுக்கு வருகை தரும் உள்ளூர் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கோவில் இணை ஆணையர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து கோவில் இணை ஆணையரை கண்டித்து ராமேசுவரம் பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்ட மக்கள் நல பாதுகாப்பு பேரவை சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவில் இணை ஆணையர் தொடர்பான பிரச்சினையை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும் வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவில் இணை ஆணையர் மாரியப்பனை மாற்றக்கோரி ராமேசுவரம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் போராட்டம் நடந்து வருகிறது.
இதற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் நகர் முழுவதும் இன்று காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் நகரில் ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம் பகுதியின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த பொதுவேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பால் வெளியூர் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
- பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
- வணிக வளாகம் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகின்றது. இங்கு 240 தினசரி கடைகளும், 720 வார சந்தை கடைகளும் உள்ளன. வாரந்தோரும் செவ்வாய்க்கிழமை ஜவுளி சந்தை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனி மார்க்கெட் வளாகத்தில் புதிய வணிக வளாகம் சுமார் ரூ.60 கோடி செலவில் 4 தளங்களுடன் 292 கடைகள் கட்டப்பட்டன. பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
கடைகள் ஒதுக்குவதற்காக ஏலம் விடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு கடைக்கும் சராசரியாக ரூ.8 லட்சம் வரை டெபாசிட் தொகையும், வாடகையாக ரூ.31 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் கடை வாடகை மற்றும் வைப்புத்தொகை அதிகமாக இருந்ததால் கடைகளை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் யாரும் முன் வரவில்லை. இதனால் வணிக வளாகம் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
வாடகையை குறைத்து ஏற்கனவே உள்ள ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கனி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிம ன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தோடு தற்போது புதிய வணிக வளாகத்தை சுற்றி உள்ள கடைகளை வியாபாரிகள் 60 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து கடைகளை காலி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
இதை கண்டித்து கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் நேற்று நடைபெற வேண்டிய வாரச்சந்தை நடைபெறவில்லை.
இதனால் வெளியூரிலிருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இதனிடையே இதுதொடர்பாக ஜவுளி வியாபாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது புதிய வணிக வளாகத்தில் வியாபாரிகள் ஏலம் எடுக்க வசதியாக டெபாசிட் தொகையை குறைப்பது தொடர்பாகவும், வாடகை அதிகமாக உள்ளதால் கடையை இரண்டாக பிரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் மற்றும் மாநகராட்சி தரப்பில் உறுதியளித்தனர்.
ஆனாலும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அடுத்து இன்று 2-வது நாளாக கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து உள்ளனர். இதனால் இன்றும் துணி எடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:- புதிய வணிக வளாக கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே கடைகள் அமைந்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் வணிக வளாகம் திறக்கப்பட்ட பிறகு பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அதிகமான வாடகை, வைப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டதால் எங்களால் கடைகளை வாடகைக்கு எடுக்க முடியவில்லை.
இந்நிலையில் கடைகளை திடீரென காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக கனி மார்க்கெட் மட்டுமே எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்கு தீபாவளி வரை வியாபாரம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தோம்.
அதேபோல் மாற்று இடம் தந்தாலும் நாங்கள் அங்கே செல்ல தயாராக இருக்கிறோம். சங்க கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி தீர்வு கிடைக்கவில்லை.
- வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முழு கடை அடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சமீபத்தில் தமிழக அரசு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து புதிய வாணாபுரம் தாலுகாவை அறிவித்துள்ளது.
இதில் உள்ள முரண்பாடுகளை கலைந்து சங்கராபுரத்திற்கு அருகில் உள்ள மூங்கில் துறைப்பட்டு, புதுப்பட்டு, வடபொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் சங்கராபுரத்தில் இணைத்து அப்பகுதி மக்கள் வாணாபுரம் சென்று வருவதில் உள்ள சிரமங்களை நீக்க வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி தீர்வு கிடைக்கவில்லை.
ஆகவே சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொது சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுமக்கள் நலன் வேண்டி வாணாபுரம் தாலுகாவை மறுவரையறை செய்து வடபொன்பரப்பி பிர்க்காவை மீண்டும் சங்கராபுரம் தாலுகாவுடன் சேர்க்க வேண்டி அரசின் கவனத்திற்கு கொண்டுவர பொதுமக்கள் ஆதரவுடன் செப்டம்பர் இன்று (5-ந் தேதி) சங்கராபுரத்தில் முழு கடை அடைப்பு, சாலை மறியல் செய்ய ஏக மனதாக முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை சங்கராபுரத்தில் உள்ள பொது சேவை அமைப்புகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முழு கடை அடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சிவகங்கையில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு-ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுநல அமைப்பினர், கவுன்சி லர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ரெயில்வே கோரிக்கைகள் தொடர்பாக 30 ஆண்டு களாக மனு கொடுத்தும் ரெயில்வே நிர்வாகம் அதனை நிறைவேற்ற செவி சாய்க்காமல் உள்ளது. மாவட்டத்தின் தலைநகராக உள்ள சிவகங்கையை கடந்து செல்லும் 11 ரெயில் களில் ஒரு சிலவற்றை தவிர மற்ற ரெயில்கள் நிலையத் தில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி வரை மட்டும் இயக்கப்பட்டு வரும் பல்லவன் ரெயிலை சிவகங்கை, மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தியும் ரெயில்வே நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை.
இதை கண்டித்தும், ரெயில்வே தொடர்பான கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், சிவகங்கை நகரில் வருகிற 23-ந்தே தி சனி க்கி ழமை அனை த்துக் கட்சி சார்பில் கடை யடைப்பு போராட்டம், ரெயில் மறியல் நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்ப ட்டது. இதற்கு வர்த்தக சங்கத்தினர், வியா பாரிகள், பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.