என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை"
- தலை, முகம் சிதைத்தபடி பிணமாக கிடந்தார்
- தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா அருகே உள்ள பாஸ்மார் பெண்டா மலைப்பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி வள்ளியம்மாள் (வயது 60).
இவர் தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி கடந்த 30-ந் தேதி ஆடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அன்று மாலை வள்ளியம்மாள் அங்குள்ள விவசாய நிலத்தில் தலை, முகம் சிதைத்தபடி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை வழக்குதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி :
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளிபட்டு ஊராட்சிக்குட்பட்ட கண்ணன் நகர் பகுதியை சேர்ந்த ரவி முள்ளிபட்டு ஊராட்சியில் டேங்க் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
பகுதிநேரமாக நெசவுத் தொழிலும் செய்து வருகின்றார். ரவிக்கு செல்வி என்ற மனைவியும் நவீன் என்ற மகனும் உள்ளனர்.
மேலும் நேற்று முன்தினம் இரவு ரவிக்கும் செல்விக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது இதனால் மனவேதனை அடைந்த செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் கூச்சலிட்டு அலறினார் அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை செல்வியை மீட்டு தீ காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் செல்வி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். செல்வின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து கணவர் ரவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்