search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை"

    • சிவசேனா திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவருமான ஹரிஹரன் பாலாஜி முன்னிலை வகித்தார்.
    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொழுமம் ஆற்றில் கரைக்கப்பட்டது.

    உடுமலை:

    சிவசேனா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி, கொழுமம்-கொமரலிங்கம் பகுதியில் ஸ்ரீ விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

    தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்திற்கு யுவசேனா மாநில ஆலோசகரும், சிவசேனா திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவருமான ஹரிஹரன் பாலாஜி முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு யுவசேனா மாநில தலைவர் அட்சயா திருமுருகதினேஷ்கலந்துகொண்டு விசர்ஜன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொழுமம் ஆற்றில் கரைக்கப்பட்டது.விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
    • இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் சதுர்த்தி பேரவை சார்பில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக (விஜர்சனம்) நேற்று மாலை புதுவை சாரம் அவ்வை திடலிருந்து புதுவை கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்த நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையும், மதுரை வீரன் கோவில் தெருவில் வைக்கப்பட்டு இருந்த சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிலையின் முன்பு விஷ்வா ஆதித்யா (வயது 21), அருண், சஞ்சய், அய்யனார் உள்பட பலர் நடந்து சென்றனர்.

    அதுபோல் மதுரை வீரன் கோவில் தெரு விநாயகர் சிலையின் முன்பு அதே பகுதியை சேர்ந்த அசோக் (21), வசந்த் (23), சூர்யா (16) மற்றும் சிலர் சென்றனர்.

    காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர்.

    இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த விஷ்வா ஆதித்யா, அருண், சஞ்சய், அய்யனார், அசோக், வசந்த், சூர்யா ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க புதுவை கடற்கரை சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். 

    • விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
    • விநாயகர் சிலைகளை படகில் எடுத்து கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 1,519 பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

    சென்னையில் நாளை (சனி) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிறு) ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் வகையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 16 ஆயிரத்து 500 போலீசார், 2 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர்.

    மேலும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சிலைகளை கரைக்கும் பணியில் ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. விநாயகர் சிலைகளை படகில் எடுத்து கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வில் நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. எனவே இதில் சென்னை போலீசார் தனி கவனம் செலுத்தி உள்ளனர். அதன்படி, சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

    மேலும் தடையை மீறி யாரேனும் கடலில் இறங்குகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கு தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து போலீசார் 'பைனாகுலர்கள்' மூலம் கடற்கரை பகுதியை கண்காணிப்பார்கள்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், 'பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க வேண்டும்.

    கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கடந்த 40 வருடங்களாக இந்த காலனியில் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம்.
    • ஒரு தனித்துவமான கருபொருளுடன் விநாயகப் பெருமானை வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம்.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சில இடங்களில் விநாயகர் சிலைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகப் பெருமானின் பல்வேறு வடிவங்களை காட்சிபடுத்தி உள்ளனர். அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் ஜெய்ராம்பூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பந்தலில் விநாயகப் பெருமானின் 108 விதமான வடிவங்களில் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

    சங்கு, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ், சாய்பாபா, சிவன், கிருஷ்ணா மற்றும் பல வடிவங்களில் சிலைகள் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அனில் ஆகா கூறுகையில், நாங்கள் கடந்த 40 வருடங்களாக இந்த காலனியில் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம். ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கருபொருளுடன் விநாயகப் பெருமானை வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம். இந்த ஆண்டு 108 விதமான வடிவங்களில் விநாயகப் பெருமானை சித்தரித்துள்ளோம் என்றார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சிலைகளை அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு தொடங்கியது.
    • உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    உடுமலை:

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18 ம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி,இந்து சாம்ராஜ்ய மக்கள் இயக்கம், இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) மற்றும் பொதுமக்கள் சார்பில் 318 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை செய்தும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் வந்தனர்.

    அதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிலைகளை அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு தொடங்கியது.

    செண்டை வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் கல்பனா சாலை,கச்சேரி வீதி,பெரிய கடை வீதி, பழனி ரோடு வழியாக ஊர்வலம் அமராவதி ஆற்றை நோக்கி சென்றது. ஊர்வலத்தையொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    போலீசார் முன்னே செல்ல ஊர்வலம் அதைத் தொடர்ந்து சென்றது. ஊர்வலதை யொட்டி உடுமலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதியில் பிரதிஷ்டை செய்த சிலைகளை தவிர மற்ற விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வு நேற்றுடன் முடிவடைந்தது.

    • போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் பகுதியில் சுமார் 10 அடி விநாயகர் சிலை நிறுவப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது.

    இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மினி ஆட்டோ வில் விநாயகர் சிலையுடன் மேள தாளங்கள் முழங்க போலீஸ் நிலையம் அருகே 300-க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது போலீசார் அவர்களை நிறுத்தி முன் அனுமதி இல்லாமல் வந்து உள்ளீர்கள். நாளை (வெள்ளிக்கிழமை) தான் புஞ்சை புளியம்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் எந்தவித முன்அனுமதி இன்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்துள்ளீர்கள். இதற்கு அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து விநாயகர் சிலை ஆற்றில் கரைக்க எடுத்து செல்கிறோம். அனுமதிக்க வேண்டு மென பொதுமக்கள் கோரி க்கை விடுத்தனர்.

    ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதையடுத்து மாற்று வழியில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.

    இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் அவரது தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

    அதன் பிறகு சத்தியமங்கலம் தாசில்தார் சக்தி கணேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலையை மட்டும் எடுத்து சென்று ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்க ப்பட்டது.

    பொதுமக்கள் ஊர்வலமாக தாரை தப்பட்டை முழுங்க செல்ல க்கூடாது என அறிவுறுத்த ப்பட்டது. இதனால் போரா ட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • செல்வராஜ கணபதி கோவில் முன் உற்சவர் சிலையை அலங்காரம் செய்து வீதி உலா நடந்தது
    • செக்காலத்தெரு மற்றும் சுற்று வட்டார கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இரணியல் :

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இரணியல் சுற்று வட்டார கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் செல்வராஜ கணபதி கோவில் முன் உற்சவர் சிலையை அலங்காரம் செய்து வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதுபோல் இரணியல் மேலத்தெரு சித்தி விநாயகர் ஆலயம், கீழத்தெரு சிங்க ரட்சக விநாயகர், பட்டாரியர் தெரு, ஆசாரித்தெரு, செக்காலத்தெரு மற்றும் சுற்று வட்டார கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வருகிற 24-ந்தேதி குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் திங்கள்நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று மண்டைக்காடு கடலில் கரைக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

    • விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    கவுண்டம்பாளையம்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.

    கவுண்டம்பாளையம், உருமாண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், வடமதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பூஜைக்கு பிறகு நேற்று துடியலூர் பஸ் நிறுத்தத்திற்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் அங்கிருந்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அப்போது பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக துடியலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் புகார் அளித்தார்.

    அதன் பேரில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க பொறுப்பாளர் நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி துணைத்தலைவி வத்சலா, இளங்கோ, சாஜூ, கிருஷ்ணா மற்றும் பலர் மீது அனுமதியின்றி கூடியது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், சிலை எடுத்து செல்லப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சதுப்பேரி ஏரியில் கரைப்பு
    • 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கும் பணி இன்று நடைபெற்றது.

    வேலூரில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தையொட்டி வேலூர் சரக டிஐஜி முத்து சாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

    நாராயணி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீட இயக்குனர் சுரேஷ்பாபு, அரசு ராஜா, அப்புபால் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் சைதாப்பேட்டை முருகன் கோவில், சந்தா சாகிப் மசூதி, கிரு பானந்தவாரியார் சாலை, தெற்கு போலீஸ் நிலையம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய்மண்டி, பைபாஸ் சாலை வழியாக சதுப்பேரிக்கு சென்றது.

    அதேபோல், மற்றொரு ஊர்வலம் கொணவட்டத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பிற்பகல் தொடங்கியது.

    சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பிரத்யேகமான இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக கரைக்கப்படுகின்றன.

    வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் இன்று ஒரே நாளில் கரைக்கப்பட்டன.

    வேலூரில் விநாயகர் சதுர்த்தி விழா முழுவதையும் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    கேமரா காட்சி பதிவை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து தேவைப்படும் இடத்தில் அறிவிப்பு செய்தனர்.

    • விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    ஆய்வு

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள காத்தாக்கண்டர் கடைவீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் திருவள்ளுவர் சாலை, பழைய பைபாஸ் சாலை, சந்தை பகுதி, பஸ் நிலையம் மற்றும் அண்ணா சாலை, காவிரி சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    600 போலீசார் பாதுகாப்பு

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலை மையில் சுமார் 600- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தெரிவித்தார்.

    • உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் .
    • ரஜினி படங்களின் கதாபாத்திரங்களை போல களிமண்ணால் சிலை செய்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றவர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் . நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர் புதிதாக வெளியாகும் ரஜினி படங்களின் கதாபாத்திரங்களை போல களிமண்ணால் சிலை செய்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றவர். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் மற்றும் வெளிவர உள்ள லால் சலாம் ஆகிய படங்களின் ரஜினி கதாபாத்திரத்தோற்றங்களை களிமண் மூலம் சிலை வடித்துள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை செய்து அசத்தியுள்ளார்.இவரை அப்பகுதி மக்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தினர்.

    • பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
    • போலீசார் விசாரணை

    திமிரி:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குட்டை புறம்போக்கு இடத்தில் இரவோடு இரவாக சமன் செய்து கல் விநாயகர் சிலை வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×