search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமன்னன்"

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.



    இப்படம் நாளை (29-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. வடிவேலு, உதயநிதி, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாமன்னன்' படத்துக்கு தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'மாமன்னன்' படம் குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாரி செல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிபூர்வமானது. வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர். இடைவேளை காட்சிகள் சரவெடியாக இருக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் அழகாக உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.



    • மாமன்னன் படத்தை தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் 'மாமன்னன்' வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க நடிகைகள் ஆனந்தி, பாயல் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் "ஏஞ்சல்" என்ற படத்தை தயாரித்து வருவதாகவும், 2018ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருக்கிறார்.



    இதனை தனது கடைசி படம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனால் "ஏஞ்சல்" படத்தை முடிக்காமல் "மாமன்னன்" படத்தை வெளியிட அனுமதித்தால் அது தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தரவேண்டும் என்றும் ரூ.25 கோடி இழப்பீடி தரவேண்டும் என்றும், அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பின்னர் இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதற்குள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.



    இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே 42 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இன்னும் 8 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது. இதனிடையில் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என்று உதயநிதி அறிவித்திருந்ததனால் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் வாதிட்டார். மாமன்னன் தனது கடைசி படம் அல்ல மேலும் இரண்டு படங்கள் நிலுவையில் இருப்பதாக உதயநிதி கூறியிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேலும் இந்த கதையை மாற்றி படத்தை வெளியிடவேண்டும் என்றால் படத்தின் கதாநாயகனின் ஒப்புதல் வேண்டும், அந்த ஒப்புதல் தெரிவித்து உதயநிதி தரப்பில் பிரமான பத்திரம் தாக்கல் செய்தால் அதை ஏற்று கொள்ள தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதே சமயம் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த மீதமுள்ள படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று கோரினாலும் கூட தனக்கு ஏற்பட்ட அந்த இழப்புக்கு ரூ.25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டிருக்கிறார். 2018ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இந்த வழக்கானது தாக்கல் செய்ய முடியாது என்றும் வாதிட்டார்.

    இந்த வழக்கில் எதிர்தாரராக சேர்க்கப்பட்டிருக்கும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறது. ஆனால் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டிருப்பதினால் எதிர் மனுதாரராக சேர்க்காத ஒரு நிறுவனத்திற்காக எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று மாமன்னன் படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

    • மாமன்னன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை (29-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.



    இதனிடையே மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், தாக்கல் செய்த மனுவில், "மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் திரைப்படம் கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. தற்போது வெளியாகவுள்ள மாமன்னன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.



    இப்படம் வெளிவந்தால் தேவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த ஓடிடி தளம் போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.



    இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தணிக்கை துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள், திரைப்படம் மக்கள் பார்க்கவே - இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். பேச்சு உரிமை கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படம் உதயநிதியின் கடைசி படமாக அறிவித்துள்ளார்.

    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன்பின்னர் நண்பேன்டா, கெத்து, மனிதன், சைக்கோ, கலகத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உதயநிதியின் கடைசி படமாக அறிவித்துள்ளார்.



    இந்நிலையில் உதயநிதி சமீபத்திய பேட்டியில், கமல் புரொடக்ஷன்ஸில் நான் நடிக்கவிருந்த கடைசி படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுத வேண்டியதாக இருந்தது. எதிர்பாராத விதமாக அது நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி 'மாமன்னன்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.



    இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படத்துக்கு தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து 'மாமன்னன்' படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாமன்னன் படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது, மாமன்னன் ஒரு அரசியல் படம். நான் இப்போது படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கலாம். இந்தப் படத்தில் சீரியசான கேரக்டரில் நடித்துள்ளேன். தற்சமயம் அப்படிப்பட்ட கேரக்டர்கள் தான் எனக்கு வருகிறது.


    அடுத்த படம் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் வருகிறது. ஒவ்வொரு படத்திலும் முழு அர்ப்பணிப்புடன் நடிக்கிறேன். பிரபல டைரக்டர்கள் ராஜமவுலி, சங்கர் ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை. உதயநிதி நல்ல ஜாலியான மனிதர். படப்பிடிப்பு தளத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கலகலவென்று சிரித்த முகமாகவே இருப்பார். படப்பிடிப்பே ஜாலி பயணமாகவே இருந்தது. நல்ல விஷயங்களை இந்த படத்தில் கூறியுள்ளோம். என்று பேசினார்.

    • உதயநிதி ஸ்டாலின் 'மாமன்னன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, மாமன்னன் முழுக்க முழுக்க அரசியல் படம். அப்பா பையன் கதை. அப்பா கேரக்டரில் வடிவேலு நடித்துள்ளார். கதைப்படி வடிவேல் தான் ஹீரோ. நடிகர் வடிவேலை வைத்து படம் எடுக்க மாரி செல்வராஜ் மிகவும் பயந்தார். காரணம் அவர் வடிவேலுவின் தீவிர ரசிகர் ஆவார். நான்தான் சமாதானப்படுத்தி வடிவேலுவுடன் பேசி படத்தில் நடிக்க ஒப்புதல் பெற்றேன்.

    இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். ஜாதி மறுப்பு உள்ள படம். தேவர் மகன் படத்தோடு இந்தப் படத்தை ஒப்பிட்டு பேசுவது தவறு. நல்ல விஷயங்கள் நிறைய இந்தப் படத்தில் கூறியுள்ளோம். கால சூழ்நிலைகள் மாறும். முதலில் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றேன். பின்பு நடித்தேன். அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். அரசியலுக்கு வந்து அமைச்சராகிவிட்டேன். எனக்கான மக்கள் பணி காத்திருக்கிறது.

    இது எனது கடைசி படம். இதற்குப் பிறகு படம் நடிப்பது பற்றி யோசிக்கக்கூட எனக்கு நேரமில்லை. மாமன்னன் படத்திற்கு பிறகு நடிகர் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் உருவாக இருந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். சூட்டிங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. திடீரென முதல்-அமைச்சர் என்னை கூப்பிட்டு அமைச்சர் பதவியை ஏற்க சொன்னார்.

    இந்த தகவலை உடனடியாக கமல் சாரிடம் பயந்து பயந்து சொன்னேன். உடனடியாக அவர் இதைவிட முக்கியம் உங்களுக்கு அமைச்சர் பதவிதான். உங்களுக்கான கதை என்றும் காத்திருக்கும். நீங்கள் அமைச்சராகுங்கள் என்று சொன்னார். கடைசி படமான மாமன்னனில் மன நிறைவுடன் நடித்துள்ளேன். நான் ஆசைப்பட்டு பண்ணிய படம் மாமன்னன்.

    தாத்தா கலைஞரை பார்த்து நிறைய வியந்து உள்ளேன். எவ்வளவு பிசியாக இருந்தாலும் தினமும் அதிகாலை எழுந்து பேப்பர் படித்து, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அந்த செய்தி பற்றி கேட்பார். அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவார். மாவட்ட செயலாளர்களிடம் பேசுவார். உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார். உடன் பிறப்பே என்று கடிதம் எழுதுவதுடன், அவரை பார்க்காத அரசியல் தலைவர்களே இல்லை. அவர் சாதித்ததில் ஒரு சதவீதமாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை பின்பற்றியது இல்லை.

    அரசியல் வருகை குறித்து விஜய் இன்னும் தெளிவாக சொல்லவில்லை. அதை முதலில் அறிவிக்கட்டும். அரசியல் கொள்கைகளை தெரிவித்தால் விஜய்யை ஆதரிப்பதா? வேண்டாமா என்று முடிவு செய்வோம். எனது மகன் இன்பநிதிக்கு இப்போதுதான் 18 வயது ஆகிறது. 18 வயதில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவது வராதது அவரது விருப்பம். அவரது சுதந்திரத்தில் நானும் எனது மனைவியும் தலையிடுவதில்லை. தற்போது அவர் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

    • மாமன்னன் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • மாமன்னன் படத்தை தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் 'மாமன்னன்' வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க நடிகைகள் ஆனந்தி, பாயல் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் "ஏஞ்சல்" என்ற படத்தை தயாரித்து வருவதாகவும், 2018ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருக்கிறார்.

    இதனை தனது கடைசி படம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனால் "ஏஞ்சல்" படத்தை முடிக்காமல் "மாமன்னன்" படத்தை வெளியிட அனுமதித்தால் அது தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தரவேண்டும் என்றும் ரூ.25 கோடி இழப்பீடி தரவேண்டும் என்றும், அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில் இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதற்குள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

    • படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் 'மாமன்னன்' வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. படத்தின் டிரைலர் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். அத்துடன் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ஏஞ்சல் என்னும் திரைப்படம் 80 சதவீதம் முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள 20 சதவீத பட சூட்டிங்கிற்கு, ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
    • இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.



    'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும் 'மாமன்னன்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.



    இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் டிரைலர் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் யூடியூப்பில் முதலிடம் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
    • இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் 'மாமன்னன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் டிரைலரை பாராட்டி இயக்குனர் பா. இரஞ்சித் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உன் திரைமொழியின் வளமையும், கதையும், கதையின் மாந்தர்களும் உண்மையை கேட்ககூடியவர்களை சென்றடையட்டும்! சிறப்பான முன்னோட்டத்தை தந்த தம்பி மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.




    ×