search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சவுந்தர்யா (வயது20 )என்ற கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உத்தரப்பள்ளி-தம்மாண்டரப்பள்ளி பஸ் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாது.

    இதில் கம்பைநல்லூரைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்திபன் (41), அவருடன் சென்ற உதவியாளர் சந்தியா (25), மூக்காண்டப்பள்ளியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    ஆம்புலன்சில் வந்த கர்ப்பிணி சவுந்தர்யாவுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்தவர்களை வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார், முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பண்ருட்டிக்கு நேற்று வந்தனர். இவர்கள் முத்தாண்டிகுப்பம் கருப்பசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நள்ளிரவு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.

    பின்னர் இன்று அதிகாலை முத்தாண்டிக்குப்பத்தில் இருந்து பண்ருட்டிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம் கிராமம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது சிதம்பரத்திலிருந்து பண்ருட்டிக்கு வந்து கொண்டிருந்த காரின் டயர் திடிரெனவெடித்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கவுரி (வயது 56), பண்ருட்டி சூரகுப்பத்தை சேர்ந்த அஞ்சாபுலி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி (65), பண்ருட்டி திருவள்ளுவர் நகர் நிலவழகி (45), பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த மணிகண்டன் (35), ஆட்டோ டிரைவர் பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (63), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த லில்லி (52) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

    அவ்வழியே சென்றவர்கள் படுகாயமடைந்து கிடந்த 5 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.

    விபத்தில் இறந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடி அமாவாசை வழிபாடு முடிந்து திரும்பிய 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பஸ்சில் 60 பேர் பயணம் செய்தனர்.
    • விபத்தில் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் இன்று அதிகாலை ரேபரேலியில் இருந்து டெல்லியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 60 பேர் பயணம் செய்தனர். அப்போது லக்னோவில் இருந்து ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தவறான பாதையில் வந்தது.

    இதில் கார் மீது பஸ் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பேரும், காரில் பயணம் செய்த 3 பேரும் பலியானார்கள். 25 பேர் காயம் அடைந்தனர்.

    • வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த சுந்தராம்பாள் (வயது 56) என்பவர் குடியிருப்பு அருகில் செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென பறந்து வந்த மர்ம பொருள் ஒன்று காலின் மீது விழுந்து காயம் ஏற்படுத்தியது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து பறந்து வந்து விழுந்த பொருள் எதுவென தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    குடியிருப்பு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சுந்தராம்பாள் மீது பறந்து வந்து விழுந்த கருப்பு நிற பொருள் எதுவென்று தெரியவந்தது.

    அப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தனியார் நிறுவனத்தின் கியாஸ் திட்டத்தில் எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு ள்ளது. வாவிபாளையம் பகுதியில் அதற்கான செக்கிங் பாயிண்ட் அமைந்துள்ளது. செக்கிங் பாயிண்டில் அதிக அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் குழாய் பதிப்பில் இருந்த உபகரணம் பறந்து வந்து மூதாட்டியின் மீது விழுந்து காயத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

    தொடர்ந்து எரிவாயு குழாய் பராமரிப்பு பணியில் உள்ள ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுந்தராம்பாள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கியாஸ் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி., காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    குடியிருப்புக்கு அருகாமையில் இது போன்ற தரை வழியாக எரிவாயு கொண்டு செல்லும்போது அதற்காக பதிக்கப்படும் குழாய்களைச் சுற்றி பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாததே விபத்திற்கு காரணம் . எனவே செக்கிங் பாயிண்ட் பகுதியை சுற்றி கம்பி வேலி அல்லது தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுபவர் சுந்தரவடிவேல். இவரது கார் நேற்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது. காரில் போலீஸ் சூப்பிரண்டின் மனைவி மற்றும் உறவினர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. காரை தமிழ்குடிமகன் என்ற போலீஸ்காரர் ஓட்டி வந்தார்.

    கார் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் போலீஸ் சூப்பிரண்டின் கார் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை தடுத்து அணைத்தனர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அல்தாப் (21), அவரது நண்பர் முகமது ஜூனைத் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அல்தாப் நேற்று மரணம் அடைந்தார்.

    முகமது ஜூனைத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் தமிழ்குடிமகனிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    பலியான அல்தாப் தனியார் காட்டேஜில் ஊழியராக பணியாற்றி வந்தார். முகமது ஜூனைத் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அன்சார் எனபவரின் மகன் ஆவார்.

    காந்தல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரும், வாலிபரும் இறந்ததால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கி உள்ளது. அவர்களது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தனர்.

    • வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
    • விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 19) ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்தவர் டிராவிட் (21). ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்வதி (21) மற்றும் சக்தி (21).

    இதில் விஷ்ணுவும், அஸ்வதியும் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர்.

    வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு கம்பியில் மோதியது. இதில் கார் உருண்டு சென்று லாரியின் மீது மோதியது. காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது.

    காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • காரில் பயணித்த மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
    • போதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ராஜபாளையம்:

    தென்காசி மாவட்டம் சிவகிரி இந்திரா தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 25). இவர் மற்றும் இவரது நண்பர்களான வனராஜ், சுப்புராஜ், மகேஷ் ஆகிய 4 பேரும் சொந்த வேலை காரணமாக சிவகிரியில் இருந்து ராஜபாளையம் வந்திருந்தனர்.

    இதையடுத்து மீண்டும் ஊருக்கு புறப்படும் முன்பாக ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ள நட்சத்திர பாரில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சிவகிரிக்கு நள்ளிரவு சுமார் 1 மணிக்கு காரில் புறப்பட்டனர். காரில் பயணித்த 4 பேருமே மதுபோதையில் நிதானமின்றி இருந்துள்ளனர்.

    இந்தநிலையில் அவர்களது கார் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தேவதானம் ஊருக்குள் சென்றது. வழியெங்கும் சாலையின் இருபுறமும் அலசியவாறு தாறுமாறாகவே கார் சென்றது. இதற்கிடையே சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய கோவில் எனப்படும் பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் மீது மின்னல் வேகத்தில் சென்ற கார் பயங்கரமாக மோதியது.

    இதில் காரை ஓட்டிச் சென்ற ஜெய்கணேஷ் காருக்கு உள்ளேயே இடிபாடுகளுக்குள் சிக்கி முகம் சிதைந்து பரிதாபமாக உயரிழந்தார். மேலும் காரில் பயணித்த மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு தேவதானம் பகுதியை சேர்ந்தவர்கள் தூக்கத்தில் இருந்து பதறியடித்துக்கொண்டு எழுந்து ஓடி வந்தனர்.

    மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு நிலை வீரர்கள் விரைந்து வந்து தேருக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்து காயம் அடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் வனராஜ், மகேஷ் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அளவுக்கு அதிகமான போதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை திருநகரில் வசித்து வருபவர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட வேளாண்மை விற்பனை பிரிவு இணை இயக்குனர்.

    இவரது மனைவி மனைவி ஜெனுவா இவாஞ்சலின், மதுரை அமெரிக்கன் கல்லுாரி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. இவர் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி கிறிஸ்டோபரின் தங்கை ஆவர்.

    நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூருக்கு குடும்பத்துடன் சென்றனர். நேற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    மதியம் 2:30 மணிக்கு திருச்சுழி அருகே கமுதி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, காரின் முன் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஜெனோவா இவாஞ்சலின் பலியானார்.

    இவருடன் காரில் பயணித்த கணவர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 3 பேரை மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான ஜெனோவா இவாஞ்சலின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது

    தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளித்து முடித்து விட்டு ஒரே காரில் சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    சென்னை ஆவடி அருகே அன்னனூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 65). இவரது மனைவி ஹேமலதா (60). இவர்களது மகன் மாதவன்(29).

    அதே பகுதியில் வசந்தம் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர்கள் தங்கராஜன்(35), அவரது மனைவி பூங்கொடி(30), மகன்கள் வெற்றிச்செல்வன்(7), மோகித்தம்(5), வெங்கடேசன் மனைவி சசிகலா (48), அவரது மகள் காவியா (24) ஆகிய 6 பேரும் மாதவன், அவரது தாயார் ஹேமலதாவுடன் சேர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி நேற்று தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வந்துள்ளனர்.

    அவர்கள் 8 பேரும் ஒரே காரில் வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளித்து முடித்துவிட்டு ஒரே காரில் சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

    கடையநல்லூரை அடுத்த புன்னையாபுரத்தில் தென்காசி- ராஜபாளையம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தவிடு ஏற்றி வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 8 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காரின் இடிபாட்டில் சிக்கி கத்தி கூச்சலிட்டனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இடிபாட்டுக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த குருசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மற்றொரு சம்பவம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்ரகார தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் பாஸ்கர் என்ற பாஸ்கரன் (வயது 36). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவர் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க செல்ல முடிவு செய்தார். அவர் தனது நண்பர்களான விருதுநகர் மாவட்டம் சேத்தூரை சேர்ந்த மாரிமுத்து (33), தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த கிருஷ்ணராஜா (35) ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று இரவு காரில் குற்றாலத்திற்கு வந்தார்.

    பின்னர் அங்கு குளித்து முடித்து விட்டு இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் 3 பேரும் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். காரை கிருஷ்ணராஜா ஓட்டி வந்தார்.

    புளியங்குடியை அடுத்த நவாச்சாலை பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தின் மீது கார் மோதியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கிருஷ்ணராஜா, ராணுவ வீரரான பாஸ்கர் ஆகிய 2 பேரும் காரின் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது நண்பரான மாரிமுத்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற புளியங்குடி போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரி

    சோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த மாரிமுத்துக்கு தென்காசி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போளூர்:

    ஆந்திர மாநிலம், குண்டூர் பெண் குறையாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சசிதருர் (வயது 39). இவரது மனைவி கல்யாணி (33). இவர்களுக்கு பின்கா ராமச்சந்திரன் (11) என்ற மகனும், ஸ்ரீ ரித்திஷா என்ற மகளும் உள்ளனர்.

    இவரது உறவினர்கள் பெங்களுருவை சேர்ந்த ரவி (24), ஈஸ்வரி (62).

    இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை குண்டூரில் இருந்து இவர்கள் 6 பேரும் காரில் புறப்பட்டனர்.

    காரை சசிதருர் ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலை அருகே வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுக்கியது.

    காரில் பயணம் செய்த கல்யாணி, ரவி, சிறுமி ஸ்ரீ ரித்திஷா ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    மனைவி, மகள் தனது கண்முன்பே இறந்ததால் சசிதருர் கதறி அழுதார். இதனை பார்த்தவர்களின் கண்களில் கண்ணீரை வர வழைத்தது. ஈஸ்வரி, பின்கா ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போளூர் போலீசார் கல்யாணி, ரவி, ஸ்ரீ ரித்திஷா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

    • பேருந்தின் மீது திடீரென சாய்ந்த மின்கம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அரண்மனை பகுதியிலிருந்து இன்று வழக்கம் போல அரசு பேருந்து ஆற்றங்கரை என்ற பகுதி சென்று விட்டு ராமநாதபுரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    இந்த நிலையில் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனது.

    விபத்தின் போது பேருந்தின் மீது திடீரென சாய்ந்த மின்கம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் காரில் 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
    • போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து தீயணைப்பு துறையினரை அனுப்பி வைத்தனர்.

    மணப்பாறை:

    காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் (வயது 41). இவரது மனைவி ராஜஸ்ரீ (40), இவர்களது மகள் ருதிஷ் (13). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் பழனிக்கு புறப்பட்டுச் சென்றனர். காரை சசிதரன் ஓட்டினார். கார் இன்று காலை திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அன்புமேடு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பாலத்தடுப்பு கட்டையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் காரில் 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தாய் - மகள் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சசிதரன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதால் அவரை உடனே மீட்க முடியவில்லை. இதையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

    மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் இருந்த அவரச கால மருத்துவ நிபுணர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சசிதரனுக்கு குளுகோஸ் போட்டு அவசர சிகிச்சையை தொடர்ந்தார். இருப்பினும் சசிதரனை மீட்க முடியாத நிலை ஏற்பட்டதால் கிரேன் உதவியுடன் காரை பள்ளத்தில் இருந்து சாலை பகுதிக்கு கொண்டு வந்தனர்.

    இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி காரை உடைத்து சசிதரனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதே போல் அங்கு சிகிச்சை பெற்ற ராஜஸ்ரீயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து இறந்த இருவரின் உடல்களையும் மணப்பாறை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்விற்கான மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ருதிஷ தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சம்பவம் குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தும் நீண்ட நேரத்திற்கு பின்னரே தீயணைப்பு துறையினர் வந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் தீயணைப்பு துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து தீயணைப்பு துறையினரை அனுப்பி வைத்தனர்.

    ×