search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • கல்பாக்கம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது28). பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை அவர், கல்பாக்கத்தில் இருந்து புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை வழியாக பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, செங்கல்பட்டில் இருந்து கல்பாக்கம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் பலியானார். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் மாணவர்களின் சட்டை பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அருளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ராகுல் (வயது 19), மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன் மகன் சபிக் (19). இருவரும் நண்பர்கள். ராகுல், சபிக் ஆகியோர் திருச்சி தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

    இந்நிலையில் இருவரும் இன்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி சாலை வழியாக வந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு பகுதியில் வந்தபோது வடசென்னையிலிருந்து பெண்ணாடத்திற்கு சிமெண்ட் லோடு ஏற்றிய 2 கண்டெய்னர் லாரிகள் வந்தது. 2 லாரிகளும் வலது, இடது புறமாக வந்துகொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ராகுல்,சபிக் ஆகியோர் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திசெல்ல முற்பட்டனர். இதில் லாரியின் நீளம் அதிகமாக இருந்ததால் எதிர்பாரதா விதமாக லாரி வாலிபர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ராகுல், சபிக் மீது லாரி ஏறி இறங்கியது.

    இந்த விபத்தில் ராகுல், சபிக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மாணவர்களின் சட்டை பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் அருளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாணவர்கள் திருச்சியிலிருந்து எங்கு சென்றார்கள் என்ற விபரம் தெரியவில்லை.

    • கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பஸ்சில் உரசியபடி பஸ்சின் பின்பக்க டயர் பகுதியில் மோதி அப்பளம்போல் நொறுங்கியது.
    • விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவில்பட்டிக்கு பஸ் புறப்பட்டது.

    வண்ணார்பேட்டையை கடந்து தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று பஸ்சின் முன்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பஸ்சில் உரசியபடி பஸ்சின் பின்பக்க டயர் பகுதியில் மோதி அப்பளம்போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கோர விபத்து தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாளை தீயணைப்பு துறையினர் மற்றும் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு வந்து காரில் சிக்கிய வாலிபர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் அங்கு விரைந்து வந்து காரை ஓட்டி வந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே போக்குவரத்து அதிகம் உள்ள வடக்கு புறவழிச் சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    ஆனாலும் தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக விபத்தில் சிக்கிய காரையும், இடிபாட்டில் சிக்கிய வாலிபர் உடலையும் சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது தச்சநல்லூர் சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்த நீர் காத்தலிங்கம்(வயது 39) என்பது தெரியவந்தது.

    இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இன்று காலை வண்ணார்பேட்டை செல்வதற்காக காரில் அவர் புறப்பட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் மோட்டார் சைக்கிள் புகுந்து வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). வியாபாரி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றார்.

    ஆலங்குளத்தை அடுத்த சிவலார்குளம் விலக்கு பகுதியில் அவர்கள் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஆலங்குளம் அருகே கீழகரும்புளியூத்து கிராமத்தை சேர்ந்த அன்புராஜ் என்ற நுங்கு வியாபாரி தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    சிவலார்குளம் விலக்கு பகுதியில் அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் சங்கர் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதி அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார்.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • டிராக்டரில் செல்லும் போது வயல்வெளியில் டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி வரதராஜன் கீழே விழுந்தான்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திட்டக்குடி:

    அரியலூர் மாவட்டம் டி. கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் . இவருக்கும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வரதராஜன் (10) என்ற ஒரு மகன்இருந்தான். பழனிவேல் கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    ரேகா தனது மகனுடன் தனது தாய் வீடான கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் வசித்து வந்த வருகிறார். ரேகாவின் தம்பி மணிகண்டன் தாட்கோவில் கடன் பெற்று புதிய டிராக்டர் வாங்கியுள்ளார்.

    இந்த டாக்டரை மணிகண்டனின் உறவினர், அரியலூர் மாவட்டம் குழுமூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்தான். இவன் சிறுவன் வரதராஜனை ஏற்றிக் கொண்டு விவசாய பணிக்காக டிராக்டரில் செல்லும் போது வயல்வெளியில் டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி வரதராஜன் கீழே விழுந்தான்.

    டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . நேற்று திட்டக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக வரதராஜனை சேர்த்துள்ளனர் .மேலும் அவன் வீட்டுக்கு ஒரே ஆண் குழந்தை ஆவான். அவன் உயிர் இழந்த சம்பவம் பெற்றோர் மட்டுமின்றி அப்பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிகிச்சை பலனின்றி கார்த்திக், அவரது தாயார் லட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி, பிரவீன்குமார், வினோத் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திருமங்கலம்:

    திருப்பூர் ராசய்யா காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கார்த்திக் என்ற கருப்பசாமி. மாரிமுத்து மனைவி லட்சுமி(43). மற்றொரு மகன் வினோத்(24). உறவினர்கள் ஆனந்த் மனைவி நாகலட்சுமி (37), கருப்பசாமி மகன் பிரவின்குமார்(16).

    விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை கோவில் திரு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு மாரிமுத்து குடும்பத்தினர் காரில் புறப்பட்டனர். காரை கார்த்திக் ஓட்டினார். இன்று அதிகாலை திருமங்கலம்-விருதுநகர் 4 வழிச்சாலையில் உள்ள கரிசல்பட்டி மேம்பாலத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக பக்கவாட்டு சுவரில் கார் மோதியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக், அவரது தாயார் லட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி, பிரவீன்குமார், வினோத் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது64). இவரது மகன் பிரகாஷ். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தவாசியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தந்தை-மகன் இருவரும் வந்தவாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    கோவூர் அருகே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்வராஜிம், அவரது மகன் பிரகாசும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

    அவரது மகன் பிரகாஷ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான செல்வராஜின் மகள் தீபா என்பவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இந்த விபத்தால் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரேக்கில் ஏற்பட்ட பலுதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்திலிருந்து நெய்வேலி நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை வந்தது. இந்த பஸ்சை திண்டிவனம் அருகே சித்தனி பகுதியை சேர்ந்த சபரிநாதன் (வயது 31) டிரைவர் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் 30-க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிகொண்டு சென்னை-கும்பகோணம் சாலையில் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில் பஸ் வந்தபோது பஸ் எதிரே மோட்டார் சைக்கிள், கார் வந்தது. அப்போது பஸ்சை மோட்டார் சைக்கிள், கார் மீது மோதாமல் இருக்க பஸ்சின் டிரைவர் சபரிநாதன் சடன் பிரேக் போட்டுள்ளார்.

    அப்போது பிரேக்கில் ஏற்பட்ட பலுதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது, பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். மேலும் 30 பயணிகள் காயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சாலை விபத்தில் காயமடைந்த பயணிகளை அமைச்சர் பொன்முடிடி நேரில் சென்று பார்வையிட்டார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பரபரபாக உள்ளது.

    • சாலை விபத்தில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    தூத்துக்குடி தனியார் ரசாயன நிறுவனத்தில் இருந்து இன்று காலை 8.30 மணி அளவில் டாரஸ் லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பேப்பர் மில்லுக்கு சுண்ணாம்பு கல் பாரம் ஏற்றிக் கொண்டு வந்தது. அந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வாரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பெத்தான்கோட்டை பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் மொபட்டில் முன்னால் சென்றவர் திடீரென பெத்தான் கோட்டை வலது பகுதியில் திரும்பினார். இதனால் எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த மொபட் மீது டாரஸ் லாரி மோதியது. இதில் மொபட் சுக்குநூறாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் மொபட்டை ஓட்டி வந்த பெத்தான்கோட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (80) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த அவரது பேரன் கார்த்தி (14) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தடுப்பு வேலி இருப்பதை அறியாமல் வளைவில் திரும்பும் போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு கூட்டுச்சாலையில் கடந்த 24-ந் தேதி இரவு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் வாரச்சந்தையை முடித்துக் கொண்டு அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதிைய சேர்ந்த கூலி தொழிலாளிகள் 5 பெண்கள் உட்பட 7 பேர் ஒரே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். புதுப்பட்டு அருகே வந்த போது தடுப்பு வேலி இருப்பதை அறியாமல் வளைவில் திரும்பும் போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சிவகாமி, தேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயம் அடைந்த பூங்கொடி(50) அரசு ஆஸ் பத்திரியிலும் கஜலட்சுமி (55) சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி, கஜலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கவலைக்கிடமான நிலையில் கலைவாணி, செல்வம், மனோகரன் உட்பட 4 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்த ரமேஷ், தம்பிரான் ஆகிய 2பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரை வரை தேடி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர், மசூதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது45). இறைச்சி கடை வைத்து உள்ளார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த தம்பிரான் (61) என்பவர் வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டு இருந்தனர். செங்கல்பட்டு அருேக பழவேலி வந்போது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரமேஷ், தம்பிரான் ஆகிய 2பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தம்பிரானை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பிரானும் இறந்து போனார்.

    விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரை வரை தேடி வருகின்றனர்.

    • விபத்தில் லாரியின் பின்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளர்கள் மீது கட்டுமான கற்கள் விழுந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மாச்சர்லாவில் இருந்து கட்டுமான பணிக்கு தேவைப்படும் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ரேப்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தது.

    ரவி அனந்தபுரம் என்ற இடத்தில் சென்றபோது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியின் பின்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளர்கள் மீது கட்டுமான கற்கள் விழுந்தது.

    இதில் கற்களுக்கு அடியில் சிக்கி சிந்தர்லா பாசர்ல பாடு பகுதியை சேர்ந்த சென்ன கேசவல்லு (வயது 48), சாம்பைய்யா (60), வாலி (41) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ரேப் பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×