search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்கள்"

    • ஒருவருக்கு 80 சதவீதக்கு மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்ற முத்துசாமி. இவரது வெல்ல ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் சிலர் சிமெண்டு அட்டையை உடைத்தனர்.

    பின்னர் அதன் வழியாக தாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகி என்ற ராகேஷ் (வயது 19), சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 பேர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவருக்கு 80 சதவீதக்கு மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மநபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நேற்று இரவு தமிழக கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜேடர்பாளையத்திற்கு வந்தார். அவர், வடமாநில தொழிலாளர்கள் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜேடர்பாளையம் பகுதியில் இனி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இருதரப்பு மக்களும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன் (நாமக்கல்), சக்திகணேசன் (ஈரோடு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்தநிலையில் தனிப்படையினர் சந்தேகத்தின்பேரில் 5-க்கும் மேற்பட்டோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளனர். இதை அடுத்து தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் 2 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தேடி வந்தனர்.
    • போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொருவரான மணீஷ் காஷ்யப் என்பவரை பீகார் மாநிலம் பாட்னாவில் தமிழ்நாடு தனி படை போலீசார் கைது செய்தனர்.

    ஆலந்தூர்:

    தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு கொடுமைகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் பொய்யான வதந்தியை பரப்பியதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு போலீசார் விசாரணை நடத்தி வதந்தி பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் 2 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தேடி வந்தனர். இந்த நிலையில் அதில் ஒருவர் நீதிமன்றத்தில், முன் ஜாமின் பெற்று விட்டார்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொருவரான மணீஷ் காஷ்யப் என்பவரை பீகார் மாநிலம் பாட்னாவில் தமிழ்நாடு தனி படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு தனி படை போலீசார் மணீஷ் காஷ்யப்பை பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து விமானத்தில் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வநதனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    • வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.
    • திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம், அச்சமின்றி தங்கி பணியாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூரில் கடந்த மாதம் வடமாநிலத்தவர் குறித்தும் அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற பிரச்சினை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த போலீ சார், இச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூருக்கு வந்த, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்து, வடமாநிலத்தவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார். இம்மாதம் 5-ந் தேதி கோவை - பீகார் இடையே கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.இந்த சிறப்பு ரெயிலில் 1,350 வடமாநிலத்தவர் ஹோலி பண்டிகை கொண்டாட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணமாகினர்.

    பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததுடன், திருப்பூரில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல், இயல்பு நிலை நிலவுதால், சொந்த மாநிலம் சென்ற பலரும் ெரயிலில் திருப்பூர் திரும்பி வருகின்றனர். திருப்பூர் வழியாக பயணிக்கும் பல்வேறு தினசரி, வாராந்திர ெரயில்களில் அதிக அளவில் வடமாநிலத்தவர் திருப்பூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர். தொழிலாளர்கள் மீண்டும் திரும்புவதால் திருப்பூர் தொழில் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாநில தலைவர் காடஸ்வரா சுப்ரமணியம் பேசுகையில், திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம். அச்சமின்றி தங்கி பணியாற்றலாம். சமூக விரோதிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சிக்கு யாரும் இடமளிக்க கூடாது. பிரிவினைவாதிகளை கண்டு பயப்பட தேவையில்லை என்றார்.

    உத்திரபிரதேச இந்துமத் பொறுப்பாளர் சிவமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் மொழி ஒரு பிரச்சினை இல்லை. தமிழர்கள் காசிக்கு வருகின்றனர். காசியில் இருந்து ராமேஸ்வரம் வந்து வணங்குகிறோம். எப்போதும் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு வந்துவிடக்கூடாது என்றார்.

    • தமிழகத்தின் டாலர் சிட்டியாக திருப்பூர் மாநகர் உள்ளது.
    • வடமாநில தொழிலாளர்கள் வருகையால், தமிழகத்தில் மீண்டும் வழக்கம் போல பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    கோவை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்கள், கிராமங்கள் என எல்லா பகுதிகளிலுமே வடமாநிலத்தவர்கள் அதிகமாக வேலை பார்த்து வருகின்றனர்.

    குறிப்பாக பீகார், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் தமிழகம் முழுவதும் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

    கட்டிட வேலை, மோட்டார் பம்ப் உற்பத்தி, நூற்பாலைகள், ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள், கயிறு ஆலைகள், கோழிப்பண்ணை கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் பணி, ஜவுளி உற்பத்தி என அனைத்து தொழில்களிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலை பார்த்து வருகின்றனர்.

    குறைந்த கூலி, அதிக நேர உழைப்பு என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும், வடமாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வடமாநில தொழிலாளர்களை தமிழக தொழிலாளர்கள் தாக்குவது போன்று சித்தரித்து போலி வீடியோக்களை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    இதனால் தமிழகத்தில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்களிடையே பதற்றம் நிலவியது. தமிழகம் முழுவதும் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பம் குடும்பமாக செல்ல தொடங்கினர்.

    இதனால் தொழில்கள் பாதிக்கும் நிலை உருவானது.

    இந்த வதந்தியை பரப்பியவர்களை கண்டுபிடிக்கவும், வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    தமிழகம் முழுவதும் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர்கள், போலீசார், தொழில்துறையினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு உரிய பாதுகாப்புகளும் வழங்கப்பட்டது.

    இதற்கிடையே இந்த விவகாரம் பீகார், ஜார்க்கண்ட் சட்டசபையில் எதிரொலித்தது. இருமாநில அரசும் ஒரு குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது. அந்த குழுவினர் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்தும் விசாரித்தனர். அப்போது வடமாநில தொழிலாளர்கள் தாங்கள் இங்கு நலமாக இருப்பதாகவும், எங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும், தமிழர்கள் தங்களிடம் குடும்பத்தில் ஒருவராக பாவித்து பழகுவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து தமிழக அரசு மற்றும் போலீசார் போலி வீடியோ பரப்பியவர்களை கண்டறிய தனிப்படை அமைத்தது. தனிப்படையினர் பீகார் மாநிலத்தில் முகாமிட்டு, தீவிர விசாரணை நடத்தி போலி வீடியோ பரப்பிய சிலரை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் நிலவி வந்த பதற்றமும் தணிந்தது. இதன் காரணமாக சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக தமிழகத்திற்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் சிறு குறு தொழிற்சாலைகளான மோட்டார் பம்ப் உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள், கிரைண்டர் தொழிற்சாலை, நூற்பாலைகள், ஓட்டல்கள் என பல்வேறு விதமான தொழில்கள் நடக்கிறது. இந்த பணிகளில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

    குறிப்பாக மூன்றரை லட்சம் வடமாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியால், இங்கு பணியாற்றிய ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

    தற்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் நிலவி வந்த அச்சம் முழுவதும் விலகியதையடுத்து, கோவையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் கோவைக்கு வர தொடங்கி உள்ளனர்.

    கடந்த ஒருவார காலமாகவே ரெயில்கள், பஸ்கள் மூலமாக அவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சிலர் ரெயில்களில் கோவைக்கு நேரடியாக வருகின்றனர். ரெயில் கிடைக்காதவர்கள் சென்னை வந்து, அங்கிருந்து பஸ் மூலமாக கோவைக்கு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பிளாஸ்டிக் கம்பெனி, கெமிக்கல் கம்பெனிகள், கட்டுமான தொழில்களிலும், பெருந்துறை சிப்காட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    ஹோலி பண்டிகை மற்றும் தமிழகத்தில் பரவிய போலி வீடியோ காரணமாக இங்கு பணியாற்றி வந்த ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இந்த நிலையில் பண்டிகை முடிந்ததும், நேற்று மாலை முதல் வடமாநில தொழிலாளர்கள் ஈரோட்டிற்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர். இவர்கள் ரெயில்கள், பஸ்கள் மூலமாக வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் ஈரோட்டில் வழக்கம் போல் பணிகள் மீண்டும் மும்முரமாக நடந்து வருகிறது.

    தமிழகத்தின் டாலர் சிட்டியாக திருப்பூர் மாநகர் உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வேலை தேடி இங்குதான் வருகிறார்கள். வேலை தேடி வரும் அனைவருக்கும் இங்கு ஏதாவது ஒரு வேலை கிடைத்துவிடும். திருப்பூரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடும்பம் குடும்பமாக திருப்பூரில் இருந்து ஏராளமான வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

    தற்போது சொந்த ஊர் சென்றவர்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டும் திருப்பூர் நோக்கி வருகின்றனர். வரும் நாட்களில் இன்னும் பலர் வருவார்கள் என்பதால் வழக்கமான பணி தொடங்க ஒரு மாதமாகும் என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    கரூரில் கொசுவலை உற்பத்தி, வீட்டு உபயோக பொருட்கள், ஜவுளி, பஸ் பாடி கட்டு தொழில்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களில் 2 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு சென்றனர். மற்றவர்கள் இங்கேயே பணியாற்றினர். இந்த நிலையில் சொந்த ஊர் சென்றவர்களில் 1200 பேர் மீண்டும் கரூர் வந்து தங்களது பணியை தொடங்கி விட்டனர். குறைவான அளவிலேயே சொந்த ஊர் சென்றதால் கரூரில் தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை எனவும், வரும் நாட்களில் அனைவரும் வந்து விடுவார்கள் என்பதால் பணிகள் முழு வீச்சில் நடக்கும் என கொசுவலை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    வடமாநில தொழிலாளர்கள் வருகையால், தமிழகத்தில் மீண்டும் வழக்கம் போல பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். ஏன் இதுபோன்ற வீடியோவை பார்வர்ட் செய்தார்? இதன் தீவிரத்தன்மை அவருக்கு தெரியாதா?
    • ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கூறினார்.

    மதுரை:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

    இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தியதில், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோவை வெளியிட்டது டெல்லியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரசாந்த்குமார் உம்ராவ் என தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க பிரசாந்த்குமார் உம்ராவ் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அதில், நான் டெல்லியில் பா.ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளேன். டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறேன். குறிப்பிட்ட வீடியோவை நான் தயாரிக்கவில்லை. எனக்கு வந்த வீடியோவை பார்வர்ட் மட்டும் செய்தேன். இதில் எந்தவித உட்கருத்தும் இல்லை.

    ஆனால் நான் அரசியல் கட்சியில் இருப்பதால் பழிவாங்கும் நோக்கோடு என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரசாந்த்குமார் உம்ராவ் வெளியிட்ட வீடியோவால் தமிழகத்தில் அசாதாரண சூழல் உருவானது.

    இருமாநில தொழிலாளர்களுக்கு இடையில் பிரச்சினை உருவாக்கும் விதமாக இவர் டுவிட் செய்துள்ளார். இது இவரின் முதல் டுவிட் கிடையாது. இது போன்ற பல சட்ட விரோதமான பொய்யான தகவல்களை டுவிட் செய்துள்ளார். எனவே இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நீதிபதி கூறுகையில், பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். ஏன் இதுபோன்ற வீடியோவை பார்வர்ட் செய்தார்? இதன் தீவிரத்தன்மை அவருக்கு தெரியாதா? இதனால் எவ்வளவு பிரச்சினை ஏற்படும்? அவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். சமூக பொறுப்பு அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கூறினார்.

    • தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஒரு பதட்டமான சூழல் நிலவியது.
    • தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    டெல்லியைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார் உம்ராவ். இவர் டெல்லி பா.ஜ.க. பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த 3-ந்தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    மேலும் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோ தான் தயாரித்தது இல்லை என்றும், வந்த தகவலை பதிவேற்றம் செய்ததாகவும், இதில் எந்த உட்கருத்தும் இல்லை.

    நான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கத்தோடு என் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பிரசாந்த் குமார் உம்ராவ் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஒரு பதட்டமான சூழல் நிலவியது. இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஆகையால் முன் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி இது போன்ற வீடியோக்களை பதிவு செய்வதை பார்க்கும்போது, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போன்ற பதட்டமான சூழலும் நிலவியது என கருத்து தெரிவித்தார். மேலும் நீதிபதி மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்து விட்டார். இந்த மனு குறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • போலி வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியான ராகேஷ் ரஞ்சன்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் மணீசின் பெயரையும் கூறி இருக்கிறார்.
    • போலி வீடியோக்களை எடுத்து கொடுத்தால் பணம் தருவதாக மணீஷ் உறுதி அளித்திருந்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களே அதிக அளவில் தாக்கப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டதில் 12 பேர் உயிரிழந்து விட்டதாகவும் பீதியை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.

    இந்த விவகாரம் பீகார் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அம்மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இந்த பிரச்சினையை எழுப்பினார்கள்.

    இதையடுத்து பீகார் மற்றும் தமிழக அரசுகள் ஒன்றிணைந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டன. இதில் தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் எந்த பிரச்சினையும் இன்றி பாதுகாப்புடன் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

    இதையடுத்து போலி வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருப்பூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தலைமறைவாக உள்ள 8 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். போலி வீடியோ வெளியிட்டவர்களை பிடிக்க டெல்லி, பீகார், காஷ்மீர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தமிழக போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் போலி வீடியோக்கள் திட்டமிட்டே தயாரிக்கப்பட்டு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வேண்டுமென்றே வெளியிடப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    பீகாரில் இந்த வீடி யோவை தயாரித்து வெளியிட்ட 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    பீகார் மாநிலம் பாட்னாவில் பெங்காலி டோலா என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் பிரசாத் குப்தா. பழ வியாபாரியான இவரது வீட்டை சிலர் வாடகைக்கு கேட்டுள்ளனர். ஸ்டூடியோ வைக்கப்போவதாக ராகேஷ் ரஞ்சன் குமார்சிங் என்பவரும் அவரது நண்பர்கள் சிலரும் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரசாத் குப்தா தனது வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

    இந்த வீட்டில் உள்ள ஒரு அறையை ஸ்டூடியோ போல மாற்றி சினிமா சூட்டிங் எடுப்பது போல் ராகேஷ் ரஞ்சன் குமார் சிங் என்பவரும் அவரது கூட்டாளிகள் இருவரும் திட்டம் போட்டு வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை தயாரித்துள்ளனர்.

    வடமாநில தொழிலாளர்களாக நடிப்பதற்கு அனில் யாதவ், ஆதித்ய குமார் ஆகிய 2 பேர் உள்பட சிலரை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த 1-ந்தேதி அன்று இந்த வீடியோக்களை ராகேஷ் ரஞ்சன்குமார் சிங்கும் அவருடன் சேர்ந்தவர்களும் எடுத்துள்ளனர். நடிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர்களுக்கு ரத்தம் வருவது போல மேக்கப் போட்டு அதன் மேல் கட்டு போட்டுள்ளனர். இதற்கு தேவையான காட்டன் துணி, கத்திரிகோல் உள்ளிட்ட பொருட்களை பாட்னாவில் உள்ள மருந்து கடையில் வாங்கி பயன்படுத்தி உள்ளனர்.

    இந்த வீடியோக்களை செல்போனிலேயே ராகேஷ் ரஞ்சன்குமார் சிங் எடுத்துள்ளார். பின்னர் கடந்த 6-ந்தேதி இந்த போலி வீடியோக்களை யூடியூப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொடுத்துள்ளனர்.

    இதன் பின்னரே போலி வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பீகாரில் எதிர்க்கட்சியாக உள்ள பாரதிய ஜனதாவும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பீகார் அரசை குற்றம் சாட்டிய சம்பவங்களும் அரங்கேறின.

    இந்த நிலையில்தான் போலி வீடியோக்கள் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டவை என்பதை பீகார் போலீசார் கண்டுபிடித்து இந்த விவகாரத்துக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

    போலி வீடியோ விவகாரம் தொடர்பாக ராகேஷ் ரஞ்சன்குமார் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான அமன்குமார், ராகேஷ் திவாரி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பீகார் மாநில கூடுதல் டி.ஜி.பி. ஜிஜேந்திர சிங் கங்வார் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக 50 போலி வீடியோக்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இது தொடர்பாக 42 சமூக வலைதளங்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர்.

    போலி வீடியோக்களை வெளியிட்டவர்களில் மணீஷ் என்பவரும் ஒருவர். இவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் என்று அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மணீஷ் ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருக்கும் போட்டோக்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே போலி வீடியோ விவகாரத்தில் இவரும் முக்கிய பங்காற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை தயாரித்து கொடுத்தால் தனது யூ டியூப்பில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடலாம் என்று அவர் கூறி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    போலி வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியான ராகேஷ் ரஞ்சன்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் மணீசின் பெயரையும் கூறி இருக்கிறார். போலி வீடியோக்களை எடுத்து கொடுத்தால் பணம் தருவதாக மணீஷ் உறுதி அளித்திருந்தார்.

    பணத்துக்கு ஆசைப்பட்டே நாங்கள் வீடியோவை எடுத்தோம் என்றும் ராகேஷ் ரஞ்சன் குமார்சிங் கூறியிருப்பதாக பரபரப்பான தகவல்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து மணீசை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான மணீஷ் 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார். அங்குள்ள சான்பாடியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்துள்ளார்.

    இதையடுத்து பீகார் அரசியலில் மணீஷ் எந்தெந்த அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பில் உள்ளார்? அவரது அரசியல் பின்புலம் என்ன? என்பது பற்றிய விசாரணையிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.

    யாருடைய தூண்டுதலின் பேரிலாவது மணீஷ் செயல்பட்டாரா? என்பது பற்றிய விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் முடிவில் போலி வீடியோ விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் ஆய்வு செய்த பீகார் அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்ததை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
    • தமிழகத்தில் 3 அதிகாரிகள் குழு நடத்திய ஆய்வு முடிவுகளை வைத்துக்கொண்டு அரசு சும்மா இருக்க முடியாது.

    பாட்னா:

    தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமீபத்தில் போலி செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பீகாரை சேர்ந்த குழுவினரும் இங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் பீகார் சட்டசபையில் நேற்று இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான பா.ஜனதா எழுப்பியது. இது தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித்தலைவர் விஜய் குமார் சின்கா, தமிழகத்தில் ஆய்வு செய்த பீகார் அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்ததை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

    பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, 'தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடந்ததாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பினேன். இந்த தகவல்கள் உண்மையாக இருக்கலாம் அல்லது உண்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது தொடர்பாக தமிழகத்தில் 3 அதிகாரிகள் குழு நடத்திய ஆய்வு முடிவுகளை வைத்துக்கொண்டு அரசு சும்மா இருக்க முடியாது' எனக்கூறினார்.

    இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அரசு ஒரு அறிக்கையை சபையில் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
    • வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    திருமங்கலம்

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் பரவியதால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்றனர். இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டது. வதந்தி பரப்பி யவர்கள் கைது செய்யப்ப ட்டனர்.

    இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலா ளர்களை வரவழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பி ரண்டு வசந்தகுமார் தலைமை தாங்கி பேசும்போது கூறுகையில், ''வட மாநில தொழி லாளர்களுக்கு பாது காப்பான சூழ்நிலை உருவாக்கிட வேண்டும். அவர்களின் குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்'' என்றார்.

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி பரவியது. இதனைப் பரப்பிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில் அமைதியாக நடைபெற வேண்டும். இதற்காக தொழிலதிபர்கள் மற்றும் வட மாநில தொழிலா ளர்களை அழைத்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    இதன் ஒரு பகுதியாக கப்பலூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை அழைத்து அறிவுரை வழங்கினோம். வட மாநில தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். சம்பளம் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்க தலைவர் ரகுநாத ராஜா பேசியதாவது:-

    கப்பலூர் தொழிற்பேட்டையில் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 2500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழி லாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடு க்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் தொழிலா ளர்களை விட அவர்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வதந்திகளால் வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
    • திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவரை கைது செய்தனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக தமிழகத்தின் கோவை, திருப்பூர் மற்றும் சென்னையில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

    இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து மாநகரில் மூன்று பேர் மீதும் திருப்பூர் மாவட்ட போலீசார் இரண்டு பேர் மீது என 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஸ்குமார் (25) என்பவருடைய ட்விட்டர் கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவரை கைது செய்தனர்.

    திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய நபர்கள் மீது திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலியாக வீடியோ வெளியிட்டது தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத் குமார் (23) என்பவரை திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபரை திருப்பூர் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமாநில தொழிலாளர்களிடம் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் இருப்பதாக வெளியான தகவல் வதந்தி. பொய்யான இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்

    பொன்னேரி:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல் நடைபெறுவதாக பரவிய வதந்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வடமாநில தொழிலாளர்களிடம் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சந்தித்து குறைகள், பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் கலெக்டர் கூறும்போது, தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் இருப்பதாக வெளியான தகவல் வதந்தி. பொய்யான இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். வடமாநில தொழிலாளர்கள் சிறிய புகார்களாக இருந்தாலும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தற்போது 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை எந்தவிதமான பிரச்சினைகளும் வடமாநில தொழிலாளர்களுக்கு இல்லை என்றார்.

    அப்போது துணை ஆணையர் மணிவண்ணன், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் உடன் இருந்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் நலன் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கோட்டாட்சியர் சரவணகண்ணன், தொழிற்சாலை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ஹோலி பண்டிகை கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • வழக்கமாக ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை கொண்டாட 50 சதவீத வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் ஜவுளி, கட்டுமானம், வார்ப்படம், பம்ப் செட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் அச்சம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் இருந்தனர்.

    இதனால் தமிழக அரசு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. வடமாநில தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை. உங்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இங்கு இல்லை. எதாவது பிரச்சினை என்றால் போலீசை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி செல்போன் எண்களும் வழங்கப்பட்டது. போலீசார் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று வடமாநில தொழிலாளர்களிடம் பேசி நம்பிக்கை ஊட்டினர்.

    இதன் பலனாக வடமாநில தொழிலாளர்கள் கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில் நேற்று ஹோலி பண்டிகை கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வண்ணப் பொடிகளை முகத்தில் ஒருவருக்கொருவர் பூசி மகிழ்ந்தனர். ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் அவர்களுக்கு அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.

    இதையொட்டி நேற்று பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதுபற்றி நூற்பாலை சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய பீதி குறைந்து விட்டது.

    வழக்கமாக ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை கொண்டாட 50 சதவீத வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு வதந்தியால் கூடுதலாக 15 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் குடும்பத்தினரிடம் உண்மை நிலவரத்தை கூறி பண்டிகை முடிந்து 10 நாட்களில் கோவைக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றார்.

    ×