search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனி உத்திரம்"

    • சிவபெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகமே ஆனி திருமஞ்சனம்.
    • ஆனி உத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    அனைத்திற்கும் ஆதியாக கருதப்படும் சிவபெருமானின் மிக உகந்த நாட்களில் ஒன்று ஆனி உத்திரம் ஆகும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜப் பெருமானாகிய சிவபெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகமே ஆனி திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஆனி உத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    நடப்பாண்டிற்கான ஆனி உத்திரம் வரும் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. உத்திர நட்சத்திரமான இன்று மதியம் 1.47 மணிக்கு தொடங்குகிறது. மறுநாள் மாலை 4.20 மணிக்கு உத்திர நட்சத்திரம் முடிவடைகிறது.

    ஆனி உத்திரம் வந்தாலே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களும் களைகட்டும். குறிப்பாக, நடராஜப் பெருமானுக்கு உகந்த நாளான ஆனித் திருமஞ்சனம் இருப்பதால் தில்லை நடராஜனாக சிவபெருமான் காட்சி தரும் சிதம்பரம் கோவிலில் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். இதனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்படுவது வழக்கம்.

    தனிச்சிறப்பு:

    நடப்பு ஆனி உத்திரத்தில் வளர்பிறை சஷ்டியும் சேர்ந்து வருகிறது. சஷ்டியானது முருகப்பெருமானுக்கும் உகந்த நாள் ஆகும். ஆனி உத்திர தினத்திலே வளர்பிறை சஷ்டியும் சேர்ந்து வருவதால் சிவபெருமான் – முருகப்பெருமான் இருவரையும் வணங்குவது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

    வழிபடுவது எப்படி?

    ஆனித் திருமஞ்சன தினத்தில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு நேரில் சென்று, சிவபெருமானை வழிபடலாம். பெரும்பாலான சிவாலயங்களிலே முருகப்பெருமானுக்கும் கோவில் இருப்பதால் இருவரையும் வணங்குவதால் பலன் உண்டாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் சுத்தமான நீர், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வீட்டிலே சிவபெருமானின் படத்திற்கு பூஜை செய்து வழிபடலாம். வில்வ இலை கொண்டு பூஜை செய்வதும் தனிச்சிறப்பு ஆகும்.

    ஆனி திருமஞ்ச தினத்தில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், சிதம்பரம் நடராஜர் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பிற சிவாலயங்களிலும் சிவ பக்தர்கள் குவிவார்கள்.

    • அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடி பட்டம் திருவீதி உலா நடைபெற்றது.
    • விழா நாட்களில் தினசரி சப்பர பவனி, பக்தி சொற்பொழிவு, உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று காலையில் மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    மாலையில் நால்வர் சுவாமிகளின் பல்லக்கு பவனி நடந்தது.இன்று அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடி பட்டம் திருவீதி உலா நடைபெற்றது. இதன் நிறைவாக கொடியேற்றம் நடந்தது.ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் மற்றும் சண்முக பட்டர் குழுவினர் வைபவங்களை நடத்தினர்.

    நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை சார்பில் அரிகிருஷ்ணன், பூபால் ராஜன், தெரிசை அய்யப்பன், சுப்பிரமணியன், தவமணி, அமிர்தராஜ், சைவ சித்தாந்தக் கழக தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் கற்பகவிநாயகம், அரிமா சங்க தலைவர் நடராஜன் மற்றும் திருமுறை பன்னிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று மாலை திருநாவுக்கரசர் உழவாரபணி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது. நாளை 2-வது நாள் திருவிழாவில் காலையில் யாகசாலை பூஜையும், சுவாமி அம்பாள் சப்பர பவனியும் நடக்கின்றன. மாலையில் விசேஷ அலங்கார பூஜையும் சப்பரபவனியும் நடக்கின்றன.

    இதேபோல் விழா நாட்களில் தினசரி காலையிலும் மாலையிலும் சப்பர பவனி, பக்தி சொற்பொழிவு, இன்னிசை, மாறுவேடப் போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    7-ஆம் திருநாளான ஜூலை 2-ந் தேதி மாலை சிவப்பு சாத்தி சப்பர பவனியும், 8-வது நாள் காலையில் வெள்ளை சாத்தியும் மாலையில் பச்சை சாத்தியும் சப்பர பவனி நடக்கிறது. 9-வது நாளில் பூஞ்சப்பர பவனியும் நிறைவு நாளான ஜூலை 5-ந் தேதி மாலையில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.

    ×