search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"

    • வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    • சங்க துணை தலைவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசி ஊராட்சி ஒன்றியம் புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி தலைவராக உள்ளவர் சரவணக்குமார். வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்து, சமூக வலைதளத்தில் வந்த ஒரு பதிவை பரப்பியதாக, அக்கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் இவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இதை காரணம் காட்டி வடுகபாளையம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவியில் இருந்து சரவணக்குமார் தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். சங்க துணை தலைவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஜாமீனில் வந்த சரவணக்குமார், சஸ்பெண்டு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடுத்ததில், சஸ்பெண்டு நடவடிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சரவணகுமார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'என் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால், பொறுப்பு தலைவரை உடனடியாக விலக உத்தரவிட்டு என்னை மீண்டும் தலைவராக பணியாற்றிட வழிவகை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஸ்மார்ட் கார்டு வடிவிலான, 37 ஆர்.சி., புத்தகங்கள் திடீரென மாயமானது.
    • புத்தகம் மாயமான சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஸ்மார்ட் கார்டு வடிவிலான, 37 ஆர்.சி., புத்தகங்கள் திடீரென மாயமானது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ் அலுவலகத்துக்கு நேரில் வந்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரணை நடத்தினார். மேலும் இது தொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆர்.சி. புத்தகம் மாயமானது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களான வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர்கள் பாலாஜி காளத்தி, இளநிலை உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் ஆகிய 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேசன் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் என்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேசன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர் ஆகிய பகுதிகள் தமிழக கர்நாடக எல்லை பகுதியில் அமைந்து உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து சிலர் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அருகில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

    போலீஸ் சோதனையை மீறியும் ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோவில் ஒரு கும்பல் ரேசன் அரிசியை கடத்தியது. இந்த ஆட்டோவை ஆசனூர் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேசன் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் என்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேசன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    இதை ரேசன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானது. போலீசார் மத்தியில் இது பரபரப்பாக பேசப்பட்டது.

    இது பற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ரேசன் அரிசி கடத்தல் கும்பலிடம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்டது உறுதியானது. இது குறித்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கையாக கொடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஆசனூர் தனிப்பிரிவு ஏட்டு ஜெகநாதனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மின் கட்டணத்தை கையாடல் செய்தார்
    • அதிகாரிகள் நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் மின்வாரிய அலுவலகத்தில் வாடிக்கை யாளர்களின் மின்சார கட்டணத்தை வசூலிக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் பணத்தை பெற்றுக் கொண்டு பணத்தை வரவு வைக்காமல் இருந்தார்.

    காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் பணம் செலுத்தும் போது கம்ப்யூட்டரில் சர்வேயர் வேலை செய்யவில்லை என கூறி பணத்தை பெற்றுக் கொண்டு வெங்கடேசன் வரவு வைக்காமல் இருந்து உள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர் மின் இணைப்பு துண்டிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது காவேரிப்பட்டு பகுதியில் மின்சாரம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர் வீட்டிற்கு சென்று மின் இணைப்பு துண்டிக்க சென்றனர்.

    அப்போது தான் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு வீட்டின் உரிமையாளர் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பணம் கட்டியுள்ளதாக தெரிவித்தார். அதற்கான ரசீது தரவில்லை என வீட்டின் உரிமையாளர் கூறினார்.

    இதனால் வீட்டின் உரிமையாளர் மின் வாரிய ஊழியர் முறைகேடு செய்தது குறித்து புகார் தெரிவித்தார். விசாரணையில் மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் வாடிக்கை யாளர் பணத்தை பெற்றுக் கொண்டு வரவு வைத்து ரசீது வழங்கவில்லை என தெரியவந்தது.

    இதனையெடுத்து வாணியம்பாடி செயற்பொ றியாளர் பாஷா முகமது உடனடியாக வெங்க டேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • முறைகேடு புகார்கள் எதிரொலி
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள முகிலன் குடியிருப்பைச் சேர்ந்தவர் கோபால் (வயது 39).

    இவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி யாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக போலீஸ் ஏட்டு கோபால் மீது பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக விசா ரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார். அதன்படி ஏட்டு கோபால் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் புகார்கள் உறுதி செய்யப்பட்டதால் அவரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார். ஏட்டு கோபால் மீது துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு விவகாரம் குமரி மாவட்ட போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணக்கில் வராத ரூ.35 லட்சம் மற்றும் அவரது வரவு-செலவு கணக்கு ஆகியவற்றை குறிப்பிட்ட டைரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    • தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி, நடராஜனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    நெல்லை:

    தமிழக போக்குவரத்து துறை சென்னை துணை ஆணையராக இருந்தவர் நடராஜன். இவரது அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத ரூ.35 லட்சம் மற்றும் அவரது வரவு-செலவு கணக்கு ஆகியவற்றை குறிப்பிட்ட டைரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து துணை ஆணையர் நடராஜன் மற்றும்அவரது உதவியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து அந்த மாதத்தில் 19-ந்தேதி நடராஜன் நெல்லை மாவட்ட போக்குவரத்து ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தொடர்ந்து அவர் பணியில் இருக்க முடியாது என்பதை காரணம் காட்டி தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி, நடராஜனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளதோடு, முன் அனுமதியின்றி நெல்லையில் இருந்து வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

    • பாண்டி விஸ்வநாதனின் ஒப்புதலுடன் பஸ்சில் டிரைவர் சீட்டில் அமர்ந்த சரவணன் கைலியுடனே சுமார் 7 கி.மீ தூரம் வரை பஸ்சை ஓட்டி உள்ளார்.
    • தேனி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சத்தியமூர்த்திக்கு புகார் வந்தது.

    தேனி:

    தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக இருப்பவர் பாண்டி விஸ்வநாதன். கண்டக்டராக இருப்பவர் வினோத் குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி - வீரபாண்டி சுற்றுச்சாலை நகர பஸ்சை இயக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது வீரபாண்டியில் அரசு பஸ் டிரைவரின் நண்பரான ஆட்டோ டிரைவர் சரவணன் என்பவர் கைலி அணிந்து பஸ்சில் ஏறினார். அவர் தான் அரசு பஸ்சை ஓட்ட வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

    அதன்படி பாண்டி விஸ்வநாதனின் ஒப்புதலுடன் பஸ்சில் டிரைவர் சீட்டில் அமர்ந்த சரவணன் கைலியுடனே சுமார் 7 கி.மீ தூரம் வரை பஸ்சை ஓட்டி மகிழ்ச்சியடைந்தனர். இந்த காட்சியை பஸ்சில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    இதுகுறித்து தேனி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சத்தியமூர்த்திக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து அரசு பஸ்சை வேறு ஒரு நபருக்கு ஓட்ட அனுமதி அளித்தது ஏன்? என பாண்டி விஸ்வநாதனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தனது நண்பரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

    இதனையடுத்து அரசு பஸ்சின் டிரைவர் பாண்டி விஸ்வநாதன், கண்டக்டர் வினோத்குமார் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பள்ளியின் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதால் மாணவ-மாணவிகள் தடம் மாறிச் செல்கின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் சிலர் கோஷ்டியாக செயல்பட்டு உள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடந்து வந்தன. நேற்றும் 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

    காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்ததும் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    மோதல் சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சந்திரகுமார், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்துப் பேசினர்.

    இதற்கிடையில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி அல்போன்சாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மேகலிங்கம் மற்றும் மேலாண்மைக் குழுவினரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 12 மாணவர்களை ஒரு மாத காலத்திற்கு சஸ்பெண்டு செய்தும், ஒரு மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களது பெற்றோருக்கும் அறிவுரை விடுக்கப்பட்டது.

    மாணவர்கள் மோதல் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பள்ளியின் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் தடம் மாறிச் செல்கின்றனர்.

    அரசு பள்ளியின் அருகே உள்ள கோவில் மைதானம் மற்றும் தெருக்களில் பள்ளிக்கூட மாணவர்கள் மட்டுமல்ல வெளியில் உள்ள இளைஞர்களும் பைக் ரோமியோக்களாக மாறி நாளுக்கு நாள் அட்டகாசம் செய்கின்றனர்.

    எனவே இந்தப் பகுதியில் காலை, மாலை வேளைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.

    • முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில் மீது பணத்தை திருப்பி செலுத்தவில்லை.
    • வெங்கடேசை சஸ்பெண்டு செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளரிவெள்ளி தொடக்க வேளான் கூட்டுறவு கடன் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பயிர்க்கடனில் ரூ.3.50 கோடி முறைகேடு நடந்தது 6 மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சங்க செயலாளர் மோகன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில் மீது பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இந்த முறைகேடுக்கு மத்திய கூட்டுறவு வங்கியை சேர்ந்த ஆய்வாளர் வெங்கடேஷ் (வயது 40)என்பவர் உடந்தையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதனால் முறைகேடு நிதியில் பாதியை அவரிடம் வசூலிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து வெங்கடேசிடம் நடத்திய விசாரணையில் அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து வெங்கடேசை சஸ்பெண்டு செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • முறைகேடு செய்த ரேசன்கடை விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டது.
    • முறைகேடு செய்த கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளை ஜூன் மாதத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும்படையினர் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது வேலை நேரத்தில் கடை திறக்காமல், ரேசன் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமலும், இருப்புக் குறைவு மற்றும் இருப்பு கூடுதல் இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. இவற்றில் கடுமையான முறைகேடு செய்த அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குடிமைப்பொருள் குற்றப்புல னாய்வுத்துறையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது போன்று நியாயவிலைக் கடையை குறித்த நேரத்தில் திறக்காமல் இருப்பது, ரேசன் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலைக்கடையின் விற்பனையாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லூரிகளில் ராக்கிங் செய்வது நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
    • காக்கிநாடா என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை தொடர்ந்து ராக்கிங் செய்து வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி சிலர் தற்கொலைக்கு ஆளாகின்றனர்.

    எனவே கல்லூரிகளில் ராக்கிங் செய்வது நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் காக்கிநாடா என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை தொடர்ந்து ராக்கிங் செய்து வந்தனர். இதனால் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் ஜூனியர் மாணவர்கள் புகார் செய்தனர்.

    இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட 11 மாணவர்களை 15 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×