search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்துறை"

    • ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.
    • ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மூன்று நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடை பெறுகிறது. குருபூஜை விழாவை முன்னிட்டு ராம நாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி யில் இருக்கும் வகை யில் பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு சுமார் 12,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப டுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரிவு 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வரும் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் காவல்துறையில் உரிய அனுமதி பெற்று தங்க ளது சொந்த வாகனங்க ளில் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டும், வாடகை வாகனங்கள் மற் றும் இருசக்கர வாகனங்க ளில் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    குருபூஜைக்கு வருபவர்க ளின் வசதிக்கென தேவைப் படும் கிராமங்களிலி ருந்து தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவ்வாறு வந்து செல்பவர்கள் விபத்து களை தவிர்க்கும் பொருட்டு, வாகனத்தின் வெளிப்பு றத்தில் தொங்குவது, மேற்கூ ரையில் அமர்வது, வெடி வெடிப்பது போன்ற விதி மீறல்களிலும் ஈடுபடக் கூடாது. குருபூஜைக்கு வந்து செல்பவர்கள் தேவையில் லாத பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு, சமு தாய ரீதியிலான கோஷங் களை எழுப்பக்கூடாது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நடைபெற உள்ள தேவர் குருபூஜையை முன் னிட்டு கலந்து கொள்ள வரும் நபர்கள் 144 தடை உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள் ளப்படுகிறது. மேலும் விதி மீறல்களில் ஈடுபடும் நபர் களை கண்காணித்து நடவ டிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 37 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கூடுதல் பேருந்துகளில் வருபவர்களின் நடவடிக்கை களை கண்காணிக்க ஒவ் வொரு கூடுதல் பேருந்திலும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு பயணம் செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்கா ணிக்கும் வகையில் 300 உடையில் அணிந்து கொள் ளும் பிரத்யேக கேமராக்கள், பேருந்துகளில் பாது காப்பு பணியில் இருக்கும் அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

    பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளில் முக்கிய இடங்களில் குருபூஜைக்கு வந்து செல்லும் நபர்களின் விதிமீறல் செயல்களை கண் காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, டிரோன் கேமராக்கள் 3, மொபைல் கேமரா வாக னங்கள் 5, மொபைல் கேமராக்கள் 9 இடங்களிலும் மற்றும் கமுதி மற்றும் பசும் பொன் பகுதிகளில் முக்கிய இடங்களில் 100 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.

    அத்துடன் மாவட்டம் முழுவதிலும் 57 இருசக்கரம் மற்றும் 53 நான்கு சக்கர வாகன ரோந்து தனிப்படை கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விதிமீ றல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த வருடங்களில் நடை பெற்ற தேவர் குருபூஜையில் விதிமீறலில் ஈடுபட்டோர்மீது 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி
    • பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சியானது சங்ககிரி ஆர்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமை வகித்தார்.

    இதில் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை ஆகியவற்றை குறித்து எடுத்துக்கூறி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு சிலம்பு போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கொள்ளை சம்பவம் முழுக்க சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
    • ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. ஹாலிவுட் திரைப்பட சீரிஸ் fast and furious-இல் வரும் காட்சியை போன்று, ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கட்டி, அதனை கார் கொண்டு இழுத்துச் செல்ல முகமூடி அணிந்த கும்பல் முயற்சித்து இருக்கிறது.

    இந்த கொள்ளை சம்பவம் முழுக்க முழுக்க அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோவை வைத்துக் கொண்டு போலீசார் கயவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் செப்டம்பர் 6-ம் தேதி அகிகாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.

    அப்போது முகமூடி அணிந்த நிலையில், இருவர் ஏ.டி.எம். மையத்தை அடைந்தனர். வழக்கமாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், இவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர். இவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு உபகரணங்கள் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுக்க, காவலர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்தனர். எனினும், காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    • 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
    • கல் வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வடக்கு மண்டலத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் சுமார் 90 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நெய்வேலி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    2 இளம்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பா.ம.க. தலைவர் கைதை தொடர்ந்து 4 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. கடந்த 26, 28-ந்தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல் வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    • என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    • பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம்.

    சிதம்பரம்:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீட்சிதர்கள் சார்பில் ஜெராம தீட்சிதர் வரவேற்பு அளித்து பிரசாதம் வழங்கினார். பின்னர் அவர் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியிலும் தரிசனம் செய்தார்.

    அதனை தொடர்ந்து தில்லை காளியம்மன் கோவிலுக்கு சென்று அங்கும் அம்மனை வழிபட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்காலில் நிர்வாக ரீதியான ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் வழியில் சிதம்பரம் நட ராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன். ஆன்மிகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. தமிழை வளர்த்தது ஆன்மிகம்தான்.

    என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம். ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் ஏற்கனவே நிலத்தை கையகப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறது. இங்கு இடைவெளி எப்படி வந்தது? என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
    • சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று என்எல்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

    அன்புமணி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், பாமக போராட்டம் மற்றும் நடவடிக்கை குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. என்.எல்.சி. முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26 மற்றும் 28ம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    சுமார் 900 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முயன்ற 2000 பாமகவினர் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கடலூர் காவல்துறை கூறியுள்ளது.

    • கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம் செலுத்தப்பட்டது.
    • டி.ஜி.பி.அருண் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. மறைந்தவிஜயகுமார். திரு உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்ட ஒழுங்கு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.அருண் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி , அவர் கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம் செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ,விழுப்புரம் டி.ஜி.பி. ஜியாஉல்ஹக், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. பகலவன். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்க் சாய், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் ,திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண்உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த டி.ஐ. ஜி விஜயகுமாருக்குஅஞ்சலி செலுத்தினார்கள். விழுப்புரம் சரகம் மற்றும் காஞ்சிபுரம் சரக போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி.அருண் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் நீர், மோர் பந்தல் நடத்தி வரும் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு குவிந்தன.
    • ஆர்.எஸ். மங்கலத் தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது வழக்கம்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ். மங்கலத் தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது வழக்கம். இங்கு நடைபெறும் வார சந்தைக்கு ஆர்.எஸ்.மங் கலத்தை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சந்தையில் தங்களது வீட்டில் உள்ள நெல், மிளகாய், நவதானிய பொருட்களை விற்று விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு வீட்டுக்கு தேவை யான சாமான்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு தற்போது கோடை காலத்தில் வழக்கத்துக்கு மாறாக கடுமை யான வெயில் சுட்டெரிப்ப தால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகை யில் நீண்ட விடுமுறையில் சென்று வந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையம் இன்ஸ் பெக்டர் பாஸ்கரன் முயற்சியால் அவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் இணைந்து சந்தை அருகே சனிக்கிழமை தோறும் நீர், மோர்பந்தல் நடத்தி வருவது குறிப் பிடத்தக்கது.

    காவல் துறையினரின் இச்செயலை கண்டு சமூக ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலவரக்காரர்கள் உடன் நடைபெற்ற மோதலில் சுமார் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • பயங்கரவாதிகள் M-16 மற்றும் AK-47 ரக அசால்ட் ரைஃபிள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி போலீசார் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் பலத்த காயமுற்றனர். கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு வருகிறது.

    முன்னதாக கலவரக்காரர்கள் உடன் நடைபெற்ற மோதலில் சுமார் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்தார். இது பற்றி மேலும் பேசிய அவர் கூறியதாவது,

    "பயங்கரவாதிகள் M-16 மற்றும் AK-47 ரக அசால்ட் ரைஃபிள் மற்றும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தினர். அவர்கள் ஏராளமான கிராமங்களுக்குள் புகுந்து, வீடுகளுக்கு தீ வைத்தனர். ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் மூலம், அவர்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க துவங்கி விட்டோம். கிட்டத்தட்ட 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டஎனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன," என்று தெரிவித்தார்.

    கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பயணம் செய்கிறார். அமைதியை நிலைநாட்ட சமூகங்கள் அமைதி காக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். முன்னதாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே மணிப்பூருக்கு விரைந்து, அங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தார்.

    • உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தி இருந்தது.
    • உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை நடை திறந்தபோது அங்கு உள்ள 63 நாயன்மார் சாமி சிலைகளின் துணிகளை அகற்றியும், அதன் மேலிருந்த சிமெண்டால் கட்டப்பட்ட கலசம் போன்ற அமைப்புகளை உடைத்தும், உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தியும் இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோவில் செயல் அதிகாரி மருதுபாண்டியன் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ராஜகோபுரத்தில் பதுங்கி இருந்த சேவூர் அருகே சாவக்காட்டுப்பாளையம் அரவங்காடு தத்தனூரை சேர்ந்த தையல் தொழிலாளி சரவணபாரதி (வயது 32) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு பணம் தேவைப்பட்டதால் குறுக்கு வழியில் திருடலாம் என நினைத்து அவினாசி வந்த அவர், கடந்த 22-ந் தேதி மாலை கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, அங்கேயே அமர்ந்து அவர் உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

    பின்னர் இரவு 11 மணிக்கு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி கோவிலுக்குள் இருந்த பித்தளை வேலை எடுத்து உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளார். இரவு முழுவதும் கோவிலுக்குள் இருந்தவர் அவ்வப்போது மனநிலைக்கு ஏற்ப இவ்வாறு செய்துள்ளார். கோவிலில் சாமி சிலைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. எந்த அரசியல் அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை. இந்த வழக்கை துரிதமான முறையில் விசாரித்து சம்பவம் நடந்த அன்றே வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

    இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

    ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.

    • போக்குவரத்து விதிமீறலுக்கு காவல்துறை விதிக்கும் அபராத கட்டணத்தையும் பாடலுடன் கூறி அசத்தி வருகிறார்.
    • கடும் வெயிலில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    விருத்தாசலம்:

    போக்குவரத்து போலீஸ்காரர்கள் என்றால் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் வாகனங்களை போக்குவரத்து நெரில் இன்றி அனுப்புவது தான் வழக்கம். ஆனால் ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் பாட்டு பாடி சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில் சென்னை-கன்னியாகுமரி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் அதிசிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் விருத்தாசலம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வரும் சிவபெருமாள் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது சாலை விழிப்புணர்வு பற்றி பாடல்கள் மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். பஸ்நிலையம், பாலக்கரை, கடைவீதி ஆகிய பகுதிகளில் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது சிவபெருமாள் ஒலி பெருக்கி மூலம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க கூடாது. பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டகூடாது. இன்சூரன்ஸ், லைசன்ஸ் உள்ளிட்ட வாகன ஆவணங்களை வாகனங்களில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும், நகர பகுதியில் வாகனத்தில் அதிவேகமாக செல்லக் கூடாது உள்ளிட்ட சாலை விழிப்புணர்வு பாடல் மூலம் அறிவுறுத்தி வருகிறார்.

    மேலும் போக்குவரத்து விதிமீறலுக்கு காவல்துறை விதிக்கும் அபராத கட்டணத்தையும் பாடலுடன் கூறி அசத்தி வருகிறார். அதோடு கடும் வெயிலில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறார்.

    கோடைகாலத்தில் கடும் வெயிலிலும், வாகன ஓட்டிகளுக்கு பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் போலீஸ்காரர் சிவ பெருமாளை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    ×