search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேபி நட்டா"

    • ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்.
    • முத்ரா கடன் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியானது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பா.ஜ.க. கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

    ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்.

    நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும்.

    பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் வழங்கப்படும்.

    அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.

    பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

    முத்ரா கடன் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

    இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.

    திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

    • பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பா.ஜ.க கட்சி இன்று வெளியிட்டது.
    • பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்காக நாடுமுழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    பல்வேறு மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

    இந்நிலையில், பா.ஜ.க. இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியானது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பா.ஜ.க. கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.

    பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது குறித்த பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.
    • நமோ செயலி மூலம் 4 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி டெல்லி பா.ஜ.க தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜே.பி.நட்டா பேசியதாவது:

    பாரத ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளில் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர் சமூக நீதிக்காக போராடியவர் என்பதை அனைவரும் அறிவோம். அவரது வழியைப் பின்பற்றி பா.ஜ.க. எப்போதும் சமூக நீதிக்காகப் போராடுகிறது.

    டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.

    நமோ செயலி மூலம் 4 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • தில்லைநகர் சாலை முதல் உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை வரை பேரணி.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிற்பகலில் உத்தரவிட்டுள்ளது.

    மேலும்,"கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கியும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

    அதன்படி, நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாற்றுப் பாதையில் பேரணி தொடங்கியுள்ளார்.

    அதன்படி, தில்லைநகர் சாலை முதல் உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை வரை பேரணியை ஜே.பி.நட்டா நடத்தி வருகிறார்.

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு.
    • இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார்.

    இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.

    அதற்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர். அதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும்,"கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    • திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார்.

    இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.

    அதற்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்து உள்ளனர். அதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    • நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
    • சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி தனது காரை தென்கிழக்கு டெல்லியில் உள்ள கோவிந்த புரியில் இருக்கும் பழுது பார்க்கும் மையத்தில் சோதனைக்காக கொடுத்திருந்தார்.

    அந்த காரை அவரது டிரைவர் ஜோகிந்தர் திரும்ப பெற்று வந்தார். அந்த சமயத்தில் அந்த கார் திருட்டு போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த கார் குருகிராம் நகரை நோக்கி சென்றதாக சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

    அந்த காரை மீட்டு தருமாறு நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

    • கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
    • டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தலையொட்டி, பா.ஜ.க. வேட்பாளா்களை தோ்வு செய்வது குறித்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளிடமும், கடந்த 5-ந்தேதி மூத்த நிா்வாகிகளிடமும் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்டு பட்டியல் தயாரித்தனா்.

    இந்தப் பட்டியல் குறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

    மூத்த நிா்வாகிகள் முன்னிலையில் தயாரிக்கப்பட்ட பட்டியலுடன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாஆகியோரை சந்தித்து ஆலோசிக்க போவதாக கூறிவிட்டு அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    தமிழக வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லியில் அமித்ஷா, நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்தித்தார். இதையடுத்து அமித்ஷாவும், நட்டாவும் தமிழக குழுவினருடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


    டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.

    இன்னும் எந்த கூட்டணியும் முழுமை அடையாமல் இழுபறியான நிலையே நீடிப்பதால் பா.ஜனதா தரப்பிலும் வேட்பாளர் அறிவிப்பில் குறைந்த எண்ணிக்கையில் அதாவது பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை முதலில் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    அதன்படி 8 தொகுதிகள் வரை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    தமிழகத்தில் வேட்பாளர்கள் தேர்வில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகை குஷ்பு, டாக்டர் ஆனந்த பிரியா, டாக்டர் காயத்ரி, சுமதி வெங்கடேஷ், மகா லெட்சுமி, கார்த்தியாயினி, உமாரதி ஆகிய பெண் நிர்வாகிகள் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    பெரிய அளவில் கூட்டணி அமையாமல் பா.ஜனதா தேர்தலை சந்தித்தால் குறைந்த பட்சம் 7 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, 'மோடியுடன் நீங்கள், உங்களுடன் மோடி' என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.
    • இன்று இந்திய தேசம் முழுவதும் உரத்த குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் தங்களது X கணக்கில், 'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை இணைத்துள்ளனர்.

    முன்னதாக தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, 'மோடியுடன் நீங்கள், உங்களுடன் மோடி' என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் இன்று இந்திய தேசம் முழுவதும் உரத்த குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

    இதே போல் 2019 மக்களவை தேர்தலிலும் சவுக்கிதார் மோடி என்ற வாசகத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பாஜகவினர் சேர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அதில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ்,"நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் இல்லை. ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது. அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது" என தெரிவித்திருந்தார்;

    பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்த நிலையில், நான் மோடியின் குடும்பம் என்ற வாசகத்தை பாஜகவினர் இன்று தனது X கணக்கில் இணைத்துள்ளனர்.


    • குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.
    • மத்தியபிரதேசத்தில் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தேர்வானார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    இதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தில் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்

    இந்நிலையில், ஜே.பி.நட்டா இன்று குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மதன் ரத்தோர், சுனிலால் காசியா ஆகியோரும் எம்.பி. ஆக போட்டியின்றி ராஜஸ்தானில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மகேந்திரஜீத் சிங் மாளவியா இன்று பாஜகவில் சேர்ந்தார்.
    • அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி மறுத்ததால் தான் வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மகேந்திரஜீத் சிங் மாளவியா இன்று பாஜகவில் சேர்ந்தார்.

    நேற்று (பிப் 18) டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த மாளவியா, இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

    இன்று ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில், ராஜஸ்தான் பாஜக பொறுப்பாளர் அருண் சிங், மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

    பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தெற்கு ராஜஸ்தானின் முக்கிய பழங்குடி தலைவராக இருந்த மாளவியா பாஜகவில் சேர்ந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    பாஜகவில் இணைந்த பின்னர் பேசிய மாளவியா, "பழங்குடியினர் பகுதியில் பாஜக மற்றும் மோடியைத் தவிர வேறு யாரும் வேலை செய்ய முடியாது. மோடி அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதால்தான் பாஜகவில் சேர முடிவு செய்தேன்" என்று கூறியுள்ளார்.

    மேலும், "அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி மறுத்ததால் தான் வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    மாளவியா 2008 முதல் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் 2008 முதல் 2013 வரையிலும், மீண்டும் 2021 முதல் 2023 வரையிலும் கேபினட் அமைச்சராக இருந்துள்ளார். 1998-ல் பன்ஸ்வாரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்தது பாஜக.
    • மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவானும் போட்டியிட வாய்ப்பு.

    குஜராத், மகாராஷ்டிராவில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க., வெளியிட்டது.

    இதில், குஜராத்தில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாநிலங்களவை எம்.பி., ஆகிறார்.

    இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த அசோக் சவான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார்.   

    ×